TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தெரிந்து கொள்ளலாம் வாங்க-செவ்வாய்க்கு பி.எஸ்.எல்.வி.-சி.25 மூலம் அனுப்பப்பட்ட, இந்திய விண்கலம் மங்கல்யான்.

2 posters

Go down

request தெரிந்து கொள்ளலாம் வாங்க-செவ்வாய்க்கு பி.எஸ்.எல்.வி.-சி.25 மூலம் அனுப்பப்பட்ட, இந்திய விண்கலம் மங்கல்யான்.

Post by sakthy Wed Jul 02, 2014 6:23 pm

செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் விண்கலத்தின் தற்போதய நிலை என்ன?

சிறிகரிகோட்டாவில் இருந்து 2013 நொவெம்பர் மாதம் ஐந்தாம் திகதி PSLV-XL C25 ராக்கெட் மூலம், மங்கல்யான் (Mars Orbiter Mission (MOM) -Mangalyaan- இந்தி- Mars Craft-) விண்ணில் செலுத்தப்பட்டது.

இதற்கு முன் சந்திரயான்-1 2008 அக்டோபர் 22 இல் நிலவுக்கு அனுப்பப்பட்டது தெரிந்ததே. சந்திரயான்-2 ஐ நிலவில் தரை இறக்க முயற்சி செய்யப்படுகிறது.இதற்கான moon rover ஐ Russia's Federal Space Agency (Roskosmos) வழங்குகிறது.
[You must be registered and logged in to see this image.]
இந்தியாவின் வானியல் வரலாறு, 1975 ஏப்ரல் 19 இல் C-1 Intercosmos மூலம் Aryabhata வை அனுப்பியதில் இருந்து தொடங்கியது.
[You must be registered and logged in to see this image.]
செவ்வாய் (Mars) என்ற சிவப்புக் கோள்-Red Planet_ சூரியக்குடும்பத்தில் நான்காவது கோள் என்பதால், பூமியை விட சுழற்சிக் காலம், தூரம்,வேகத்தைப் பொறுத்து கூடவாக இருக்கும்.(பூமி-365,25 ; செவ்வாய்-686,97 பூமி நாட்கள்-668,59 செவ்வாய் நாட்கள்)
[You must be registered and logged in to see this image.]
மங்கள்யான் விண்கலம் முதலில் நீள்வட்டப் பாதையில் பூமியை சுற்றத் தொடங்கி,பின்னர் செவ்வாயை நோக்கிப் பயணித்தது. 680 மில்லியன் கி.மீ. தூரத்தை பயணிக்க வேண்டிய இந்த விண்கலன்,தற்போது 466 மில்லியன் கிமீ.க்கு மேற்பட்ட தூரத்தை முடித்து, தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.இந்த ராக்கெட்டுக்கு  நான்கு அடுக்காக திட-திரவ எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.
[You must be registered and logged in to see this image.]
மங்கள்யானை உயரே செலுத்துவது,பூமியைச் சுற்றி வரச் செய்வது, செவ்வாய் நோக்கி செலுத்துவது, செவ்வாயின் பிடியில் வரச் செய்வது,  இறுதியாக செவ்வாயை சுற்ற வைப்பது என சுமார் 300 நாட்கள் திட்டமிட்ட பயணம் இதுவாகும்.
[You must be registered and logged in to see this image.]
முதல் பயணத்தின் போது பூமியில் இருந்து மங்கள்யானின் தூரத்தை மெல்ல மெல்ல   அதிகரிக்கச் செய்தார்கள்.பல தடவைகள் சுற்றுப்பாதையை அதிகரிக்கச் செய்து,பல நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுற்றி தனது வேகத்தை அதிகரித்துக் கொண்டு, பூமியிலிருந்து தொடக்கத்தில் உயரே கிளம்பிய போது இருந்த,27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து, 42 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலாக வேகத்தை அதிகரித்து, டிசெம்பரில் செவ்வாயை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது.
[You must be registered and logged in to see this image.]
இப்படி 40 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் சென்றால் மட்டுமே, பூமியை விட்டு வேற்றுக் கிரகத்தை நோக்கி ஒரு விண்கலம்  செல்ல முடியும்.இந்த வேகத்தில் செலுத்தக் கூடிய சக்தி வாய்ந்த ராக்கெட் இந்தியாவிடம் இல்லாத நிலையிலேயே,பூமியை பல தடவை சுற்ற வைத்து,பல தடவைகள் வேகத்தைக் கூட்டி, பின்னர் செவ்வாயை நோக்கி பயணிக்க வைத்தார்கள்.இந்த வேக அதிகரிப்புப் பற்றி முன்னர் சொல்லி இருந்தேன்.
[You must be registered and logged in to see this image.]
எப்படி என்றால்,ஒரு பந்தை மேலே எறியும் போது, போகும் வேகத்தை விட,திரும்பி அந்தப் பந்து கீழே வரும் போது, புவிஈர்ப்புக் காரணமாக அதிக வேகத்துடன் வரும். அது போல் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு சென்ற விண்கலத்தை திரும்பி வரச் செய்யும் போது, போன வேகத்தை விட அதிக வேகத்தில் புவிஈர்ப்பு காரணமாக வரும். வந்து கொண்டிருக்கும் விண்கலத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தடுத்து மீண்டும் திருப்பி அனுப்பும் போது இன்னும் வேகத்துடன் செல்லும். இப்படிப் சில முறை செய்து வேகத்தைக் கூட்டினார்கள்.
[You must be registered and logged in to see this image.]
மங்கள்யான் நொவெம்பர் 27 ஆம் தேதி அளவில், பூமிக்கு மிக அருகாமையில் வந்து விட்டுப் பிறகு தொலைவு நிலைக்குச் சென்று விட்டது. மறுபடி  30 ஆம் தேதி  நள்ளிரவு  பூமியை நெருங்கி, சுமார் 280 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கின்ற நேரத்தில், மங்கள்யானை 29 நிமிட நேரம் இயக்கினார்கள். இதனால் மங்கள்யான் மேலும் கூடுதல் வேகம் பெற்று, மணிக்கு 38 ஆயிரம் கிலோ மீட்டரிலிருந்து 42 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்து,செவ்வாயை நோக்கிப் பாய்ந்தது.

டென்னிஸ் விளையாட்டில் முதல் அடிக்கும் பந்தை விட, அடுத்து அடுத்து தொடராக அடிக்கும் போது பந்து போகும் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதை தொலைக்காட்சியில் நேரடி ஒலிபரப்பின் போது, பந்தின் வேகத்தைக் காட்டும் போது பார்க்கலாம். அது போலவே தொடராக சில முறை விண்கலத்தை சுற்ற வைத்து, வேகத்தை அதிகரிக்கிறார்கள்.புவி ஈர்ப்புக் காரணமாக இந்த வேகம் அதிகரிக்கிறது.

இவ்விதம் ( பூமி உட்பட) ஒரு கிரகத்தின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை அதிகரிக்கும் முறைக்கு, கிராவிடி அசிஸ்ட் (Gravity Assist) என்று சொல்கிறார்கள்.இந்த முறையை ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்புகள் போன்ற சக்தி வாய்ந்த ராக்கெட்டுக்கள் வைத்திருக்கும் நாடுகள் பயன்படுத்தாது,நேரடியாக செவ்வாயை நோக்கி செல்ல வைக்கிறார்கள்.

செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப பூமியின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்துவது என்பது இதுவே முதல் தடவை. அதனால் உலகில் பல நாடுகளில் உள்ள விண்வெளித் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், இந்தியாவின் மங்கள்யான் திட்டத்தை மிக ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.

பூமி தனது பாதையில் எப்போதும் ஒரே வேகத்தில் செல்வதில்லை. சூலை மாதத்துடன் ஒப்பிட்டால் சனவரி மாதத்தில் பூமியானது சூரியனுக்கு சற்று அருகில் இருக்கும். ஆகவே சனவரியில் பூமி அதிக வேகத்தில் பயணிக்கிறது. மங்கள்யான் சுமார் 250 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் போது தான் அதன் வேகம் மணிக்கு சுமார் 38 ஆயிரம் கிலோ மீட்டர். விண்கலம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் போது, வேகம் குறைவாகவே இருக்கும்.ஜேர்மன் விஞ்ஞானி ஜொகனஸ் கெப்ளர் சொன்ன இயற்கை விதிப்படி தொலைவில் இருந்தால் இயல்பாக வேகம் குறையும்.
[You must be registered and logged in to see this image.]
செவ்வாய் பூமியில் இருந்து அதிக பட்ச தூரம் 401 மில்லியன் கிமீ.ஆகவும், கிட்டே இருக்கும் போது 57.6 மில்லியன் கிமீ ஆகவும் இருக்கும்.

செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் உகந்த வாய்ப்பு கிடைக்கும். அதனால்தான் சக்தி வாய்ந்த ராக்கெட்டை தயாரிக்கும் வரை காத்திராமல், PSLV மூலம் அனுப்பினார்கள்.இல்லையேல் அடுத்த பயணம் 2016 ஜனவரி ஆக இருந்திருக்கும்.

விண்வெளியில் விவேகானந்தர் தெரு,குறுக்குச் சந்து என்றெல்லாம் பெயர்ப்பலகைகள் இருக்காது. அதனால் Star Sensor என்ற கருவியைப் பொருத்தி நட்சத்திரங்களின் ஒளி மூலம் இடத்தைக் கண்டறிந்து, சரியான பாதையில் செல்ல வைக்கிறார்கள். திருமணத்தின் போது அருந்ததி கண்டாயா என்று கேட்பது போல்,ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கண்டாயா என்று கேட்டுக் கொண்டே,அந்த நட்சத்திரங்களை வழிகாட்டியாக வைத்துக் கொண்டு,சரியான பாதையில் மங்கல்யான் செல்லும்.
[You must be registered and logged in to see this image.]
ஆனாலும் செவ்வாயை நோக்கிச் செல்லும் இந்த விண்கலம், செவ்வாயை நோக்கிச் செல்லாமல் வேறு பக்கம் பார்த்துச் செல்ல வைப்பார்கள்.அதன் வருகையைப் பார்த்து செவ்வாய் மனிதர்கள் ஏவுகளைகளை ஏவி அழித்து விடலாம் என்ற பயம் தான் போலும்.

ஆனால் காரணம் வேறு. சூரியனை சுற்றி வருகிற செவ்வாய் கிரகம், தனது பாதையில் மணிக்கு சுமார் 86 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ( வினாடிக்கு 24 கிலோ மீட்டர்) சென்று கொண்டிருக்கிறது. மங்கல்யான் செவ்வாயை அடைய கணிக்கப்பட்டிருக்கும் திகதி இந்த ஆண்டு-2014- செப்டெம்பர் 24 ஆம் திகதி ஆகும். இப்படி இருக்கும் போது,நேரடியாக செவ்வாயை நோக்கி பயணிக்க முடியாது.

எடுத்த முதல் படம்.
[You must be registered and logged in to see this image.]
குருவி சுடுவதை நினைத்துப் பாருங்கள். குருவி பறந்து கொண்டிருக்கும் போது, துப்பாக்கிக் குண்டு எப்படி போக வேண்டும்? குருவி செல்லும் திசை,பறக்கும் வேகம் இவற்றைப் பொறுத்து, துப்பாக்கி மூலம் சுட்டால் தான், குருவியை விழ வைக்க முடியும். இல்லையேல் குருவிக்கு முன்னால் அல்லது பின்னால் குண்டு சென்று விடும்.

அதே போல் செவ்வாய் சுற்றிக் கொண்டிருக்கும் போது, அதை ஒட்டி மங்கல்யான் செல்ல வேண்டும். அப்போதுதான் அந்த விண்கலம் குறிப்பிட்ட திகதியில் செவ்வாயை அடைய முடியும்.அதனால் செப்டெம்பர் 24 இல் செவ்வாய் எந்த இடத்திற்கு வருகிறதோ அந்த இடத்தை நோக்கி மங்கல்யான் பயணிக்க வேண்டும்.அப்படிப் பயணித்தால் மட்டுமே செவ்வாயை அடைய முடியும். இதுதான் கணக்கு.

அப்படிச் செல்லா விட்டால், கலன் செவ்வாயைக் கடந்து சென்று விடும்.

செவ்வாயை விட்டு வேறு பாதையில் மங்கல்யான் சென்றால் என்ன நடக்கும்? செவ்வாய்க்குப் போகாமல் நேரே சென்று சூரியனை சுற்ற ஆரம்பித்து விடும்.என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். மங்கல்யானின் எல்லாப் பக்கங்களிலும் சிறிய ரக ராக்கெட் போல் செயல்படும் உந்திகளைப் (Thrusters- Newton Thrusters ) பொருத்தினார்கள். இதை தேவைக்கேற்ப சில வினாடிகள் இயக்கி, செல்லும் பாதையில் மாற்றத்தை செய்வார்கள்.செவ்வாய் கோள் சுற்றிக் கொண்டிருப்பதாலும் பூமியிலிருந்து மேலும் விலகிச் செல்வதாலும்,வளைந்த பாதையில் செல்வதாலும் இந்த முறையைப் பயன்படுத்தி செல்ல வைக்கிறார்கள்.
[You must be registered and logged in to see this image.]
கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து விஞ்ஞானிகள் மங்கல்யானுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். இதற்கு சில நிமிடங்கள் எடுக்கும் என்பதால் அதற்கேற்ப முன் கூட்டியே உத்தரவுகளை அனுப்புவார்கள்.இந்த உத்தரவுகள் துல்லியமாக கணக்கிடப்படல் வேண்டும்.சில சமயம் தானியங்கி கணினிகள் சில வேலைகளை தானாக செய்து விடும்.தற்போது பூமியில் இருந்து 102 மில்லியன் கிமீ.தூரத்தில் மங்கல்யான் இருப்பதால்,வானொலி செய்திகள் (Radio signal) கட்டுப்பாட்டு நிலையத்தை வந்தடைய 340 வினாடிகள் எடுக்கிறது.இந்த நேரம், தூரத்தைப் பொறுத்து அதிகரிக்கும்.அதனால் இந்த நேரத்தைக் கணக்கிட்டு உத்தரவுகளை சரியான நேரத்தில் அனுப்பி,செயல்பட வைக்கிறார்கள்.

அடுத்து வர இருக்கும் பிரச்சனை செவ்வாயை அடையும் போது வேகத்தை குறைத்தாக வேண்டும். இல்லையேல் செவ்வாயின் ஈர்ப்பில் சிக்கிக் கொண்டு மோதி விடும் அல்லது செவ்வாயைக் கடந்து சென்று விடலாம்.இதற்காக கட்டுப்பாட்டு நிலையம் மிகக் கவனமாக கவனித்து உத்தரவுகளை சரியான நேரத்தில் அனுப்பிக் கொண்டிருக்கிறது.

விண்கலன்கள் பூமியின் ஈர்ப்பு விசையை கடந்து விண்வெளிக்கு சென்றதும், இயற்கை முறையில் கிடைக்கும் சக்தியைக் கொண்டு மேலே பயணிக்கிறது. பூமி மற்றும் கோள்கள் எப்படி எதுவித சக்தியும் இன்றி தன்னையும் சுற்றி சூரியனையும் சுற்றுகிறதோ அப்படி மங்கல்யானும் ராக்கெட்டில் இருந்து விடுபட்டதும்,இந்த முறையில் பயணிக்கிறது.இந்தப் பயணம் 300 நாட்கள் வரை எடுத்து, செப்டெம்பர் 24 இல் செவ்வாயின் சுற்றில் சுற்றத் தொடங்கி தகவல்களை எடுத்து அனுப்பத் தொடங்கும்.
…...........
[You must be registered and logged in to see this image.]
மங்கல்யான் அனுப்பப்பட்ட சில தினங்களின் பின்னர்,2013 நொவெம்பர் 18 இல் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம்-நாசா- மாவென் (MAVEN-Mars Atmosphere and Volatiles Evolution) என்ற விண்கலம் ஒன்றை செவ்வாய்க்கு அனுப்பியது. இது செப்டெம்பர் 22, 2014 இல் செவ்வாய் சுற்றில் பிரவேசிக்கும்.


Last edited by sakthy on Fri Jul 04, 2014 1:05 pm; edited 2 times in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

request Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க-செவ்வாய்க்கு பி.எஸ்.எல்.வி.-சி.25 மூலம் அனுப்பப்பட்ட, இந்திய விண்கலம் மங்கல்யான்.

Post by mmani Thu Jul 03, 2014 6:08 am

அமெரிக்க மற்றும் இந்திய விண்கலங்கள் அடுத்து அடுத்து செவ்வாய் கிரகத்துக்கு செல்கிறது
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

request Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க-செவ்வாய்க்கு பி.எஸ்.எல்.வி.-சி.25 மூலம் அனுப்பப்பட்ட, இந்திய விண்கலம் மங்கல்யான்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சூனோ விண்கலம்=தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-5
» வாங்க சில நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்..!
» தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை?
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 18
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -31

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum