TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:20 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 07, 2024 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 07, 2024 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உப்பு, மிளகு,உலக வரலாறு!

Go down

உப்பு, மிளகு,உலக வரலாறு! Empty உப்பு, மிளகு,உலக வரலாறு!

Post by logu Wed Apr 16, 2014 7:38 am

உப்பு, மிளகு,உலக வரலாறு!
உப்பு, மிளகு,உலக வரலாறு! 10270440_10151982014442377_8144915483423691942_n
ஆம்ப்லேட்டுக்கு மிளகு இடித்துக் கொண்டிருந்த பொழுது தோன்றியது ..
காய்ந்து போய் கையில் உருண்டோடும் இந்த சின்னச் சிறு தானியம் உலகையே தன்னைச் சுற்றி உருண்டோட வைத்துள்ளது. இன்றைய யுகத்தில் பெட்ரோல் போல, கடந்த காலத்தில் உலக வரலாற்றையே மாற்றிய பண்டம் இது. 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை, அராபிய வணிகர்களால் வங்கிச் செல்லப் பட்டு ஐரோப்பிய நாடுகளில் விற்கப் பட்டுக் கொண்டிருந்தது. உணவில் சேர்க்கும் காரம் என்பது மிளகு என்கிற ஒற்றைப் பண்டத்தில் இருந்துதான் வர முடியும். அப்போது மிளகாய் எல்லாம் கிடையாது. போர்த்துகீசியர்கள் தென் அமெரிக்காவைக் கைப்பற்றி அங்கே ஒரு காய் மிளகைப் போலக் காரமாக இருக்கிறது எனக் கண்டறிந்து அதற்கு மிளகு காய் = மிளகாய் எனப் பெயர் சூட்டி சந்தைப் படுத்தும் வரை நம் நாட்டின் கரு மிளகுதான் கிங்!!

அராபியர்கள் வசம் இருந்த வணிகம், கடல் மார்கமாக வழி கண்டுபிடிக்க முனைந்து வெற்றி கண்ட ஐரோப்பியர் வசம் வந்தது. ஆரம்ப காலத்தில் போர்த்துகீசியர்கள், டச்சுகாரர்கள், டேனிஷ் காரரர்கள்தான் கடல் பயணங்களை துணிகரமாக நடத்துபவர்களாக இருந்தனர். டச்சுக்காரர்களிடம் இருந்து தான் இங்கிலாந்து மிளகு மற்றும் இதர கறிச் சரக்குளை வாங்கி வந்துள்ளது. அப்போதெல்லாம் கடல் பயணம் மிகவும் ஆபத்தானது. 10 பேரில் 8 பேர் இறந்து விடுவர் அல்லது நோய்வாய்ப் பட்டுவிடுவர். ஒரு கட்டத்தில் டச்சுக்காரர்கள் மிளகின் விலையை ஏற்றிவிட்டனர். மேலும் தரம் குறைந்த மிளகையே இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கடலோடி குழு ஒன்று ராணியிடம் உரிமம் கோரி, இந்தியா நோக்கி பயணித்தது. அதுதான் முதன் முதலாக இங்கிலாந்து இந்தியாவில் காலடி பதிக்கக் காரணம். மன்னர் ஜஹாங்கிர் அவர்களுக்கு வியாபார உரிமம் வழங்கினார்.

வெறும் மிளகு மட்டுமே ஏற்றுமதியான அத்தியாவசியப் பண்டம் அல்ல. அதைக் காட்டிலும் மிக முக்கியமான பண்டம் ´உப்பு ´. கடல் நீரில் விளைகிறது உப்பு..அவர்கள் நாட்டிலும் கடல் உள்ளது... அங்கே கிடைக்காதா என சற்றே வியப்பாக இருக்கக் கூடும். ஐரோப்பிய நாடுகளில் கடல் நீரில் உப்பு எடுக்க இயலாது. நிலத்தில் சில இடங்களில் உள்ள உப்புச் சுரங்கம் (salt domes) வாயிலாகக் கிடைத்தால் தான் உண்டு (கனிமம் போல ). அதைவிடுத்து, இங்குள்ள தட்ப வெட்பத்திற்கு கடல் நீரை ஆவியாக்க இயலாது. இது குறித்து பல சந்தர்ப்பங்களில் யோசித்திருக்கிறேன். அதாவது வைக்கிங் காலம் தொட்டு நார்வே நாட்டில் தயாரிக்கப் படும் ஒருவித உலர்ந்த மீன் தான் போர்துகீசியர்களுக்கு தேசிய உணவு. அது உப்பு அதிகம் கொண்டது(நம் கருவாடு போல). அடுத்ததாக இங்கே கிருஸ்துமஸ் காலத்தில் தயாரிக்கப் படும் பன்றி இறைச்சியில் மிளகு உப்பு அதிகம் சேர்க்கப் படுகிறது. அதனோடு சேர்த்து உண்ணப்படும் வேகவைத்த முட்டைகோஸ் உணவில் சீரகம் அதிகம் இடம்பெற்றுள்ளது. அப்படியானால், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கிடையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கறிச் சரக்கு கடல் வாணிபம் மூலம் நடந்திருக்கிறது.

போர்த்துகல் போலவே நார்வேயும் கடலோடி பாரம்பரியம் கொண்ட, கடல் சார்ந்த தொழில் செய்த நாடு. 1000 ஆண்டுகளுக்கு முன்பே (நம் நாட்டில் சோழர்கள் காலம்) நார்வேகிய வைகிங்கள் கடல் வழியாகவே கான்ஸ்டான்டினோபில், துருக்கி வரை வந்து சூறையாடிச் சென்றுள்ளனர். வைகிங்கள் நேர்த்தியான படகுளைச் செய்தவர்கள். திமிங்கல மீன் கொழுப்பை, தோல் மீது பூசி பாய்மரங்கள் செய்துள்ளனர். கடல் காற்று அரிக்காமல் பாய்மரங்கள் நெடுநாள் தாக்குப் பிடிக்க இதுஒரு யுக்தி. மேலும் அவர்கள் பெரிய கப்பல்கள் செய்யவில்லை. மாறாக ஒடுக்கமான நீளமான படகுகளையே செய்துள்ளனர். அதற்கான படைப்பூக்கத்தை (inspiration ) கோழி முட்டையில் இருந்து எடுத்துக் கொண்டதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். முட்டையை நெட்டுவசமாக எவ்வளவு அழுத்தினாலும் உடையாது. ஏனெனில் அழுத்தம் தரும் விசைகள் சமசீராக பகிரப்பட்டு பாதிப்பு ஏற்படா வண்ணம் கழிந்துவிடுமாம். எனவே முட்டை நுனி போல கூரான ஒடுக்கமான முனை கொண்ட படகுகளை செய்துள்ளனர். அவை சீற்றம் மிக்க கடலின் அலைகள் ஏற்படுத்தும் விசையை எதிர்கொள்ள உதவியுள்ளது.

அகலம் குறைவு என்பதால், அதைக் கொண்டு அவர்கள் கடலில் மட்டுமல்ல, கடல் வாயிலாக நதிகளுக்கு நுழைந்து நாட்டின் உள்ளே வரை ஊடுருவ முடிந்திருக்கிறது. அவர்கள் தயாரித்த மேற்கூறிய உலர்ந்த மீன் புரதச் சத்து அதிகம் கொண்டது. எடை குறைவு, கெடாமல் நெடுநாள் இருக்கக் கூடியது. எனவே அவர்களால் நெடுந்தூரக் கடல் பயணம் செய்ய முடிந்திருக்கிறது. அமெரிக்கவை முதலில் அடைந்தவர்கள் வைகிங் தான். கடல் வழியாக கிரீன்லாந்து, பாரோ தீவு, ஐஸ்லாந்துக்குச் சென்றவர்கள் அவர்களே.

சரி இப்போது உணவிற்கு வருவோம். அடுத்ததாக இங்கே கோடைக் காலத்தில் மேய்ந்து வளரும் ஆடுகளை வெட்டி அதன் இறைச்சியை குளிர்காலதிற்குப் பயன்படுத்துகின்றனர். இறைச்சியை உப்புக் கண்டம் போட்டுக் காய வைத்து உலர்த்தி தேக்கி வைத்துக் கொள்கின்றனர். இந்த உணவில் உப்பு மிக அதிகம். ஒரு நாள் ஊற வைத்து மறுநாள் சமைத்தாலும் உப்பின் நெடி அதிகம் இருக்கும். இந்த ஆட்டிறைச்சி உண்கையில் தான் எனக்கு இந்தச் சந்தேகமே எழுந்தது. இங்குள்ள சில நார்வேகியர்களிடம் கேட்டேன். பலருக்கும் தெரியவில்லை. ஒருவர் சொன்னார், நிலத்தில் உள்ள உப்புச் சுரங்களில் கொஞ்சம் கிடைத்ததுள்ளது மற்றபடி வணிகத்தின் மூலமாகவே பல நூற்றாண்டுகளாக் கிடைத்ததுள்ளது. டென்மார்க்கில் உப்பு தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை இருந்துள்ளது. அங்கே மரங்களை வெட்டி எரித்து கடல் நீரில் இருந்து உப்பைப் பிரித்துள்ளனர். இதற்காக ஒரு பெரும் நிலப்பரப்பில் உள்ள காட்டையே அழித்துள்ளனர் என்றார்.

இங்கே உப்புச் சுரங்கங்கள் என நான் குறிப்பிட்டது உங்களளுக்கு புதிதாக இருக்கக் கூடும். அது சார்ந்த ஒரு தொழில்நுட்பத் தகவல். எனது பணியில், எண்ணை கண்டுபிடிப்பிற்கான ஆய்வு செய்யும் பொழுது, கடலுக்கடியில் 5 கிலோமீட்டர் ஆழம் வரை உள்ள பாறைப் படிமங்களை அராய்ந்து முப்பரிமான படம் உருவாக்குவோம். சில இடங்களில் உப்பு மலைத்தொடர்கள் இருக்கும். அவை இருந்தால் அந்த சுற்றளவில் ஆய்வு செய்வது சவாலான காரியம். ஏனெனில், பாறைப் படிமங்களின் தன்மையை மேலே இருந்து நாம் அனுப்பும் ஒலி/அதிர்வு அலைகள் பாறைகளில் பட்டு மாறுபட்ட வேகத்தில், தன்மையில் பிரதிபலிப்புகளாக வெளிவரும். அவற்றைக் கொண்டுதான் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு, 7-8 கிலோமீட்டர் ஆழம் வரை படிமங்களை படமாக்க இயலும். இந்த உப்பு மலைகள் இருந்தால், ஒலி/அதிர்வு அலைகளை சிதறச் செய்துவிடும் (unusual and undesired refraction and diffraction).

உப்பு என்பது ருசிக்கு மட்டும் பயன்படுத்தப் படுவது அல்ல. உணவைப் பதப் படுத்த அத்தியாவசியத் தேவை. அடுத்ததாக மனித உடலில் உப்பு என்பது அத்தியாவசிய தாதுப் பொருள். அமேசான் காடுகளுக்குள் எக்ஸ்பெடிசன் சென்றவர்கள்/பவர்கள் கையில் பிரத்தியேகமாக உப்பை எடுத்துச் செல்வர். உப்பு உட்கொள்ளாமல் நெடுநாள் மனிதன் வாழ இயலாது! அப்படியானால் உப்பு எத்தகைய மகத்தான் வணிகப் பொருள் என யூகித்துக் கொள்ளுங்கள். இதைக் குறிப்பிடுகையில் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. ஷாஜஹான் ஆட்சி செய்த பொழுது, வங்காளத்தில் போர்த்துகீசியர்கள் பெருமளவில் உப்பு வணிகத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். அவர்கள் ஒரு கட்டத்தில் அருகமையில் இருந்த கிராமங்களை சூறையாடுவதும், மிரட்டிப் பணம் பறிப்பதுமாக இருந்துள்ளனர். பொறுத்துப் பார்த்த மன்னர் ஷாஜஹான் , திடீரென ஒரு அதிரடிப் படையை அனுப்பி போர்துகீசியர்களை துவம்சம் செய்துவிட்டார். பிறகு அபாரதம் கட்டி, வாலைச் சுருட்டிக் கொண்டு வியாபாரத்தைத் தொடர்ந்துள்ளனர்.

எண்ணிப் பார்க்கிறேன். பள்ளியில் படிக்கும் பொழுது, சுதந்திரப் போராட்டம் குறித்த பாடத்தில், உப்புச் சத்தியாகிரகம் குறித்து எனது ஆசிரியர் விளக்கிய பாங்கினை. கடலில் இருந்து கிடைக்கிற உப்பு, அதன் மீதும் வரியைச் சுமத்தினான் ஆங்கிலேயன். அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட காந்தி சத்தியாகிரகம் நடத்தினார் என உணர்ச்சி பொங்கக் கூறினார். போயும் போயும் இந்த உப்புக்காகவா இவ்வளவு பெரிய போராட்டம்? அதுவரை ஆங்கிலேயன் மற்ற பண்டங்களின் மீது வரியே போடவில்லையா? என வியந்ததுண்டு. இப்போது புரிகிறது. ஆங்கிலேய அரசு, உப்பு வணிகத்தின் மீது வரியை உயர்த்தி இருக்கிறது. உப்பு என்பது அவர்களுக்கு வேண்டுமானால் கிடைப்பதர்க்கரிய பண்டமாக இருக்கலாம், நமக்கு அது நாமே கடலில் சென்று எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்கிற அடிப்படையில், உப்புச் சத்தியாகிரகம் நடத்தி இருக்க வேண்டும்.

ஆங்கிலேய அரசுக்கோ, இது வெறும் உப்பு என்கிற பண்டத்தின் மீது எழுந்த சிக்கல் அல்ல. ஒரு வாழ்வாதாரச் சிக்கல். தமிழகத்திற்கு முல்லைபெரியாறு நீரையும், காவிரி நீரையும் மறிக்கும் பொழுது நமக்கு என்ன உணர்வு ஏற்படுகிறதோ அதைப் போன்றதொரு உணர்வுதான் அவனுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். இதன் காரணமாகக் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நாம் எண்ணியதைக் கட்டிலும், புரிந்துகொண்டதைக் காட்டிலும் மிகுந்த மகத்துவம் வாய்ந்த போராட்டமாக , இந்திய - பிரிட்டிஷ் வரலாற்றில் மட்டுமின்றி, உலக வரலாற்றிலும் இடம் பெற்றுவிட்டது.

எந்த உணவு மேசையில் அமர்ந்தாலும், அங்கே உப்பு, மிளகு திருகல் ஒன்று வைத்திருப்பார்கள். அவற்றைக் கையில் எடுத்துப் பயன்படுத்தும் பொழுதெல்லாம் ஒரு மகத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருளைக் கையாள்கிறோம் என்கிற மரியாதை கலந்த பயபக்தி ஏற்படுகிறது!!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum