TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:03 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிங்கள தேசத்தின் சீன உறவின் பின்னால் இந்திய எதிர்ப்பு இருக்கின்றது: வி.உருத்திரகுமாரன்

Go down

சிங்கள தேசத்தின் சீன உறவின் பின்னால் இந்திய எதிர்ப்பு இருக்கின்றது: வி.உருத்திரகுமாரன் Empty சிங்கள தேசத்தின் சீன உறவின் பின்னால் இந்திய எதிர்ப்பு இருக்கின்றது: வி.உருத்திரகுமாரன்

Post by அருள் Sat Feb 15, 2014 7:37 pm

சிங்கள தேசத்தின் சீன உறவின் பின்னால் இந்திய எதிர்ப்பு இருக்கின்றது: வி.உருத்திரகுமாரன்
[ சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2014, 01:12.17 PM GMT ]
சிங்கள தேசத்தின் சீன உறவின் பின்னால் இந்திய எதிர்ப்பு இருக்கின்றது: வி.உருத்திரகுமாரன் 1781996_655576464522237_1833200388_n
சிங்கள தேசம் வரலாற்று ரீதியாக கொண்டுள்ள இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்தே, தற்போதைய சீன உறவு உள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கின்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் தமிழக அரசியற் கட்சிகள் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொண்டிருக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியிருந்தது.

இத்தீர்மான செயலாக்கத்தின் தொடர்ச்சியாக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே நியூயோர்க்கில் இருந்தவாறு இணையவழி தொழில்நுட்ப காணொளி பரிவர்தனையூடாக இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.
சிங்கள தேசத்தின் சீன உறவின் பின்னால் இந்திய எதிர்ப்பு இருக்கின்றது: வி.உருத்திரகுமாரன் 1959464_655576534522230_282977123_n
ஈழத் தமிழ் மக்களுக்காக ஆதரவாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தமிழக முதல்வருக்கும் தமிழக அரசியற் கட்சித்தலைவர்களும் தனது நன்றியினைத் தெரிவித்த அவர், வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அமையப் போகும் இந்திய அரசாங்கத்தினை தமிழக அரசியற் கட்சிகள் தமது பேரம் பேசும் சக்தி மூலமாக சம்மதிக்க வைக்க முடியுமென தாம் கருதுவதாகத் குறிப்பிட்டார்.

ஈழத்தமிழர் தேசமானது இந்தியாவினை நட்பு நாடாகவே கொள்கின்றனெ இந்தியக் கொள்கை வகுப்பாளர்களை நோக்கி கருத்துரைத்துடன், தமிழீழம் ஒரு சிறிய தேசமாக இருந்தாலும் அது இந்திய நலன்களுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைவதோடு, அதனை நாம் தமிழீழ சுதந்திர சாசன பிரகடனத்தில் தெளிவாக குறித்திருக்கின்றோம் எனவும் கோடிட்டுக் காட்டினார்.
சிங்கள தேசத்தின் சீன உறவின் பின்னால் இந்திய எதிர்ப்பு இருக்கின்றது: வி.உருத்திரகுமாரன் 1912062_655576634522220_374495435_n
சிங்கள தேசம் வரலாற்றுரீதியாக இந்திய எதிர்ப்பினை தன்னகத்தே கொண்டது என்பதும் சிங்கள தேசத்தின் தற்போதைய சீன உறவுக்கு பின்னால் இந்திய எதிர்ப்பு இருக்கின்றது என்பதும் இரகியம் அல்ல என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

இதனால் தமிழீழ மக்களின் விடுதலைக்கு சாதகமான மாற்றமொன்று இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட வேண்டும்.இதற்கு நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தல் துணை செய்ய வேண்டும். தமிழக அரசியல் கட்சிகளும் மக்களும் வரக்கூடிய வாய்ப்புக்களை ஈழத்தமிழ் மக்கள் விடுதலைக்கு சாதகமாக்க வேண்டும். இவையே எமது எதிர்பார்ப்பெனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார்.
சிங்கள தேசத்தின் சீன உறவின் பின்னால் இந்திய எதிர்ப்பு இருக்கின்றது: வி.உருத்திரகுமாரன் 1499566_655576654522218_701720810_n
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் ஏற்பாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்களின் முன்னதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் வழங்கிய தொடக்கவுரையின் சுருக்கம்: 

நமது தமிழீழ தேசத்தின் விடியல், தமிழீழ மக்களின் விடுதலை சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு அமைவதற்கு சாத்தியத்திற்கான திறவுகோல், தமிழக மக்களின் கைகளில் இருக்கின்றது என்பது வரலாறு நமக்கு காட்டும் வழிகாட்டியாக உள்ளது.

2009ம் ஆண்டு மே மாதம் நிகழ்த்த முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நமக்கு சில படிப்பினைகளைத் தந்துள்ளது.

எம்மிடம் எவ்வளவுதான் நியாயம் இருந்தாலும், வீரம் இருந்தாலும், ஈகம் இருந்தாலும், எமது விடுதலைக்காக போராடும் உறுதிப்பாடு இருந்தாலும், அனைத்துல சமூகத்தின் ஆதரவினை எமது பக்கம் வென்றெடுக்காவிடின், நாம் நமது இலட்சியத்தினை வென்றெடுக்க முடியாது.

இங்கு அனைத்துலக சமூகம் எனும் போது அரசுகள் வகிக்கும் தலைமைப் பாத்திரத்தினை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இதனால் தமிழீழ மக்கள் தமது விடுதலையினை வென்றெடுப்பதற்கு, உலக ஒழுங்கினை தீர்மானிக்கும் சக்திமிக்க அரசுகளின் ஆதரவினைத் வென்றெடுப்பது அவசியமாக இருக்கின்றது.

இது மிகுந்த சவால் நிறைந்த விடயமாகும். அரசுகளால் தீர்மானிக்கப்படும் உலக ஒழுங்கு, நீதியின் அச்சு சுழலாமல், நலன்களின் அச்சாக சுழல்வதுதான் இதற்க முக்கிய காரணம்.

இங்கு இந்திய அரசின் பங்கு முக்கிய இடத்தினைப் பிடிக்கின்றது உலக ஒழுங்கலில் தென்னாசியப் பிராந்தியத்தினை பொறுத்தவரை, இந்தியாவின் முதன்மை பாத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசு என்னதான் முயற்சிகளை எடுத்தாலும், இந்திய அரசின் முடிவுகளை மீறி இலங்கைத்தீவு இயங்க முடியாது என்ற அரசியல் யதார்த்தம்.

இங்குள்ள சோகமான யதார்த்தம் என்னவென்றால், தமிழக மக்களும் - இந்திய மக்களும் ஈழத்தமிழ் மக்கள் மீது ஆதரவும் அக்கறையும் கொண்டிருந்தாலும், இந்திய அரசும் - இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் தமிழின அழிப்பினை மேற்கொள்ளும் சிறிலங்காவின் பக்கமே நெருங்கி நிற்கின்றார்கள்.

அதற்கு இவர்கள் மத்தியில் உள்ள மரபாந்த சிந்தனையும், தமிழீழத் தேசிய வாதம் குறித்த அச்சங்களும் முக்கிய காரணங்களாக அமைகின்றன.

மரபார்ந்த சிந்தனையின்பாற்பட்டு, சிறிலங்கா அரசுடன் நெருக்கமாக உறவுகளைப் பேணுவதன் மூலம், இந்தியாவின் தேசிய நலன்களை அடைந்து கொள்ளல் இலகு என கருதுகின்றார்கள்.

ஈழத்தமிழ் மக்கள், தேசத்திற்கான அங்கீகாரத்தினைப் பெற்று, தமக்கென ஒர் அரசினை அமைப்பது, தமிழகத்தில் தேசிய உணர்வுகளைத் தூண்டிவிடுமெனக் கருதுகின்றார்கள். இதில் இன்னுமொரு யதார்த்தமும் இருக்கின்றது.

தமிழகம் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளை தீர்மானிப்பதில் கேரளம் வகிப்பதனைப் போல், காத்திரமான பாத்திரத்தினை வகிக்கும் நிலையில் அரசியல் ரீதியில் தன்னை வளர்த்தெடுக்கவில்லை. இதற்கான காரணங்கள் தனியாக ஆராய வேண்டியவை.

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையினை தீர்மானிப்பதில், தமிழகம் வகிக்கும் குறைந்த பாத்திரமும், ஈழத்தமிழர் விடுதலையினை வென்றெடுப்பதில் பாதகமான தாக்கத்தினை செலுத்துகின்றது.

இதனால் இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கையில், ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு சாதகமான மாற்றத்தினை ஏற்படுத்த உழைத்தல் இன்று எம்முன் உள்ள முக்கிய பணியாக இருக்கின்றது.

இத்தகைய சூழலில் இவ்வாண்டு நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எமது மிகுந்த அக்கறையினைக் கொள்ளக்கூடியதாக அமைகின்றது. நாடாளுமன்றத் தேர்தலிலே இந்திய அரசின் ஆட்சியாளர்களை தீர்மானிக்கப் போகின்றது. இவர்களே இந்திய அரசாங்கத்தினை தலைமைதாங்கி நடத்தப் போகின்றார்கள்.

இந்திய அரசாங்கத்தின் சிறிலங்கா தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையினை தீர்மானிப்பதில் காத்திரமான பங்கினை வகிக்கப் போகின்றார்கள்.

வருகின்ற தேர்தலில் தமிழகம் கொண்டுள்ள 40 நாடாளுமன்ற ஆசனங்கள், இந்திய அரசாங்கத்தினை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய நிலைமைகள் உள்ளன.

இத்தகைய வாய்ப்பான சூழல் ஏற்படும் பட்சத்தில், அதனை ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் நல்வாழ்வுக்கும் பயன்படுத்த தக்க வகையில் தமிழக அரசியல் கட்சிகள் கையாள வேண்டும். அதற்கான அங்கீகாரமும் ஊக்கமும் தமிழக மக்கள் மத்தியில் இருந்து அரசியற் கட்சிகளுக்கு கிடைக்க வேண்டும்.

கட்சிகளும் மக்களுக்கு தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் தார்மீக பொறுப்போடு இயங்க வேண்டும்.

இதற்கெல்லாம் துணை செய்யக் கூடிய வகையில்தான், தமிழக அரசியல் கடசிகள் தமது நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையினை உள்ளடக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இவ்வாறு அமைந்திருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரனது தொடக்கவுரையினைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கியிருந்தார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கள தேசத்தின் வன்முறை குறைந்தபாடில்லை!- அனலை நிதிஸ் ச. குமாரன்
» சிங்கள மொழியில் நடிக்கும் பூஜாவிற்கு எதிர்ப்பு
» இந்திய - அமெரிக்க தூதரகத்தில் இலங்கை மக்கள் எதிர்ப்பு !
» ஈரான் செல்லும் இந்திய வர்த்தக குழுவுக்கு அமெரி்க்கா எதிர்ப்பு
» ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு வலுக்கிறது எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum