TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சட்டவிரோத ஆயுதங்களுடன் இலங்கை படகொன்றை இந்திய கடலோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்!-

Go down

சட்டவிரோத ஆயுதங்களுடன் இலங்கை படகொன்றை இந்திய கடலோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்!- Empty சட்டவிரோத ஆயுதங்களுடன் இலங்கை படகொன்றை இந்திய கடலோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்!-

Post by piraba Thu Jan 23, 2014 7:03 am

சட்டவிரோத ஆயுதங்களுடன் இலங்கை படகொன்றை இந்திய கடலோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்!-
சட்டவிரோத ஆயுதங்களுடன் இலங்கை படகொன்றை இந்திய கடலோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்!- 1620714_526856407413047_1945719419_n
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் சட்டவிரோத ஆயுதங்களை ஏற்றிச் சென்ற படகொன்று இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மீனவர்களை விடுதலை செய்யும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாக கூறி, இந்த படகை விடுவிக்கும் விசேடமான நோக்கிலேயே அமைச்சர் ராஜித சேனாரட்ன அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்தாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து மேற்கு திசையில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான படகொன்றை இந்திய கடலோர காவற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

படகில் வெளிநாட்டு கொடி பறந்த போதிலும் அந்த படகு சில காலங்களுக்கு முன்னர் இலங்கையின் கடலோர பாதுகாப்பு பணிகளுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட அதிவேக படகு என்பதை அறிந்து கொண்ட இந்திய கடலோர காவற்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்திய கடலோர காவற்படையினர், அந்த படகுடன் தொடர்பு கொண்டு எந்த நாட்டு கடற்படை என விசாரித்துள்ளனர். அப்போது படகில் 8 பேர் இருப்பதாகவும் படகு மன்னார் நோக்கி பயணிப்பதாகவும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக விழிப்புடன் இருந்து வந்த இந்திய கடலோர காவற்படையினர் 16 மணிநேரத்திற்கு பின்னர் மன்னாரில் இருந்து மேற்கு திசை நோக்கி சர்வதேச கடற்பரப்புக்குள் செல்வதை அவதானித்துள்ளனர்.

சர்வதேச கடல் எல்லைக்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் இந்திய கடல் எல்லையூடாகவே பிரவேசிக்க வேண்டும்.

இந்திய கடல் எல்லைக்குள் வந்த படகுடன் தொடர்புக்கொண்ட இந்திய கடலோர காவற்படையினர் படகில் எத்தனை பேர் இருக்கின்றனர் என வினவியுள்ளனர். 16 பேர் இருப்பதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து படகை நிறுத்துமாறு கூறி, இந்திய கடலோர காவற்படையினர் படகில் ஏறி சோதனையிட்டுள்ளனர்.

படகில் ஏறி சோதனையிட்ட போது அதில் இலங்கையர்கள் எவரும் இருக்கவில்லை எனவும் அனைவரும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த வெள்ளையர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்களிடம் சர்வதேச கடலில் பயணிக்க தேவையான அனுமதிப்பத்திரங்கள் இருக்கவில்லை. இந்தியாவினால் வழங்கப்பட்ட படகில் இலங்கையர்கள் எவரும் இல்லாததால் மேலும் சந்தேககம் ஏற்பட்டதை அடுத்து இந்திய கடலோர காவற்படையினர் மீண்டும் படகை சோதனையிட்டுள்ளனர்.

அப்போது படகில் இருந்து 45 ஏகே 47 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து படகை கைப்பற்றிய கடலோர காவற்படையினர் அதில் இருந்து 16 பேரை மேலதிக விசாரணைகளுக்காக இந்திய மத்திய பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐரோப்பிய நாட்டின் பிரஜைகள் அந்நாட்டில் பாதுகாப்பு படைகளில் இருந்து விலகி சம்பளத்திற்காக தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

படகில் இருந்த துப்பாக்கிகள இலங்கையில் உள்ள ரகசியமான களஞ்சியம் ஒன்றில் இருந்து படகில் ஏற்றப்பட்டுள்ளன. அத்துடன் கைப்பற்றப்பட்ட ஏ.கே.47 ரகத்தை சேர்ந்த “களாஸ்” என்ற துப்பாக்கி இலங்கை படையினர் பயன்படுத்துவதில்லை.

இந்த துப்பாக்கி ரஷ்யாவில் தயாரிக்கப்படுகிறது. இலங்கை படையினர் ரி.56 , ரி.81 ஆகிய துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

ஏ.கே. 47 துப்பாக்கிகளை ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகளிடம் சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்யும் சட்டவிரோத ஆயுத விற்பனையாளர்களிடம் இருந்து பெறும் பயங்கரவாத அமைப்புகளே பயன்படுத்தி வருகின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பும் ஏ.கே. 47 துப்பாக்கியையே அதிகளவில் பயன்படுத்தி வந்ததது.

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் சட்டவிரோத ஆயுதங்களுடன் வெளிநாட்டவர்கள் இலங்கையின் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் படகை எப்படி பயன்படுத்தினர் என்பதாகும்.

அத்துடன் தமது நாட்டு படகு காணாமல் போனதாகவோ, எவரும் கைப்பற்றியதாகவோ இதுவரை இலங்கை அரசாங்கம் அறிவிக்கவில்லை. அப்படியானால் இலங்கையின் பொறுப்புக் கூறகூடியவர்கள் அறிந்த நிலையிலேயே இந்த துப்பாக்கிகள் படகில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இலங்கையின் கடலோர பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரியாக கடற்படையை சேர்ந்த ரியர் அத்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன கடமையாற்றி வருகிறார்.

இந்த படைப் பிரிவு மீன்பிடி அமைச்சின் கீழ் இருந்து வந்ததுடன் 2010 ஆம் ஆண்டு புதிய சட்டமூலத்தின் ஊடாக எந்த அமைச்சின் கட்டுப்பாட்டிலும் இல்லாத சிவில் பாதுகாப்பு சேவையாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு இலங்கையில் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

சிவில் பாதுகாப்பு சேவை ஒன்றுக்கு எவ்வாறு கடற்படை அதிகாரி ஒருவர் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட முடியும் என்பதே கேள்வியாகும். கடலோர பாதுகாப்பு படை எந்த அமைச்சின் கீழ் இல்லை என்றாலும் அது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.

இலங்கையின் படகொன்றை இந்திய அதிகாரிகள் கைது செய்திருப்பதை இலங்கையின் கடற்படை மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் தமது செய்தி சேவையிடம் உறுதிப்படுத்தியதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கடற்டை தளபதி மற்றும் கடலோர காவற்படையின் கட்டளை அதிகாரி ஆகியோர் இந்த சம்பவத்தை மறைக்க முயற்சித்த போதிலும் அது கைக் கூடாமல் போயுள்ளது.

இந்த படகை மீட்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரட்னவை இந்தியாவுக்கு அனுப்பிய போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. இந்தியா படகை விடுவிக்க இணங்கவில்லை.

அத்துடன் அமைச்சர் ராஜிதவின் இந்திய விஜயம் குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை எதனையும் வெளியிடவுமில்லை.

எவ்வாறாயினும் கோத்தபாய ராஜபக்ச சட்டவிரோத ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வருவது குறித்து போதுமான நம்பிக்கையான தகவல்கள் சர்வதேச புலனாய்வு பிரிவுகளுக்கு கிடைத்துள்ளன.

ஏற்கனவே கோத்தபாயவின் சட்டவிரோத ஆயுதங்களை ஏற்றிய கப்பல் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் பிடிப்பட்டது. அத்துடன் கோத்தபாய அண்மையில் ஆயுத வர்த்தகர் ஒருவருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றிய தகவல்களை சர்வதேச புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நிலையில், கோத்தபாய, இந்திய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது இந்திய அதிகாரிகளுக்கு சாட்சியத்துடன் ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

பணப் பேராசையில் நாட்டை பணயம் வைத்து கோத்தபாய மேற்கொண்டு வரும் இவ்வாறான செயல்களின் பலனை முழு நாட்டு மக்களே அனுபவிக்க நேரிடும். சர்வதேச போதைப் பொருள் விற்பனை உதவும் நாடு என்ற பெயரையும் இலங்கை பெற்றுள்ளது.

இப்படியான சூழ்நிலையில், பயங்கரவாத்திற்கு உதவும் நாடு என்ற முத்திரையும் விரைவில் குத்தப்படும். இந்த பிரதிபலன்கள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என்பதுடன் அதனை அனுபவிக்க போகும் காலமும் வெகு தொலைவில் இல்லை என லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.


[You must be registered and logged in to see this link.]
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தான் கடலோர காவல்படை அட்டூழியம்: இந்திய மீனவர் சுட்டுக்கொலை - 30 மீனவர்கள் கடத்தல்
» இந்திய கடலோர காவல் படை கப்பல் மோதி கொல்கிறது.நாதியற்று போனதா தமிழினம்?நாங்கள் இந்தியரா?
» இலங்கை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 78 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
» இந்திய அரசை அலட்சியப்படுத்துகிறது இலங்கை
» இந்திய - இலங்கை மீனவர்கள் ஒப்பந்தத்தை சீர்குலைக்க சதி'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum