Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:55 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:47 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு -Rajaji's Biography
TamilYes :: சிறுவர் பூங்கா :: கதைகள்
Page 1 of 1
ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு -Rajaji's Biography
காந்தியின் தமிழ்ப்பற்று!
ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை ராஜ்மோகன் காந்தி எழுதியிருக்கிறார். அது ஆயிரம் பக்க அளவில் வானதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
ராஜாஜி அன்றும் இன்றும் வாதப் பிரதிவாதங்களின் மையமாக இருப்பவர். அவரைப் பற்றி நிறைய சர்ச்சைகளும் கடுமையான விமர்சனங்களும் இருக்கின்றன. அதில் எது உண்மை, எது பொய் என அறிந்து கொள்வதற்காவே இந்த நூலைப் படிக்கத் துவங்கினேன்.
காந்தியின் மகன் தேவதாஸ், ராஜாஜியின் மகள் லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார், அவர்களது பிள்ளைதான் ராஜ்மோகன் காந்தி, அந்தவகையில் அவர் ராஜாஜியின் பேரன், தனது தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறோம், எந்த சார்புநிலையும் வந்துவிடக்கூடாது என்று முடிவு செய்து கொண்டு துல்லியமாக, நேர்மையாக, ராஜாஜியின் அகபுற உலகின் முக்கிய நிகழ்வுகளை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கி எழுதியிருக்கிறார் ராஜ்மோகன் காந்தி, அதற்கு ஓர் உதாரணம் எல்லா இடங்களிலும் ராஜாஜியை சி. ஆர். என்றே சுட்டி எழுதியிருப்பது. அப்படித்தான் அன்று ராஜாஜி அழைக்கப்பட்டார், ராஜாஜியின் குடும்ப விஷயங்களைப் பற்றி எழுதும்போதுகூட ராஜ்மோகன் காந்தி உணர்ச்சிவசப்படாமல் நடந்த உண்மைகளை, தான் அறிந்த விதத்தில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூலை கல்கி ராஜேந்திரன் மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ராஜாஜியின் முக்கிய சீடர்களில் ஒருவர் கல்கி என்பதால், கல்கி ராஜேந்திரன் இதை மிகவும் உணர்ச்சிபூர்வமாக, தான் செய்ய வேண்டிய முக்கியக் கடமை என்பதைப் போல முழுமையான அக்கறை எடுத்து செழுமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
ஆயிரம் பக்க நூல் என்றாலும் ஒரு நாவல் படிப்பது போல அத்தனை சுவாரஸ்யமாகவும், வியப்பூட்டும் தகவல்கள், ஆளுமைகள், நிகழ்ச்சிகள் என இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தின் குறுக்குவெட்டு தோற்றம் போல இந்த நூல் அமைந்துள்ளது.
காந்தியின் மீதான ஈடுபாடுதான் ராஜாஜியை சுதந்திரப் போராட்ட களத்தினுள் இழுத்துக்கொண்டு வருகிறது. காந்தியின் கட்டுரைகளை அவர் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். காந்தியின் மகத்துவத்தை ஆரம்ப காலங்களிலே உணர்ந்து கொண்டவர் ராஜாஜி.
இந்த நூலில் என்னை உலுக்கிய பகுதி தனது மகனுக்கு ராஜாஜி ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுகிறார் என்று தெரிந்த மகாத்மா காந்தி மிகுந்த மனவருத்ததுடன் தமிழன்னையின் மிகச்சிறந்த புதல்வர்களே அவளை கைவிடுவார்களேயானால் பெருவாரியான தமிழ் மக்கள் என்ன செய்வது, பொது ஜனங்களிடையே ஊழியம் புரிய வேண்டியவர்கள் எதிர்காலம் என்ன ஆகும், இனி உங்கள் மகனுடன் நீங்கள் தமிழில்தான் கடித தொடர்பு கொள்வேன் என எனக்கு சத்தியம் செய்து தரவும், உங்களை நினைத்து என்னால் தூங்க முடியவில்லை, இது சம்பந்தமாக எனக்கு விளக்கம் தரவும் என ராஜாஜிக்கு கண்டனக் கடிதம் எழுதியிருக்கிறார் காந்தி.
அத்தோடு ராஜாஜி மகனையும் தனது தந்தைக்கு தமிழில் கடிதம் எழுதச் செய்திருக்கிறார். தமிழ் மீது காந்திக்கு இருந்த பற்றும், தாய்மொழியை புறக்கணித்துவிட்டு பொதுவாழ்க்கையில் ஈடுபடக்கூடாது என்ற உண்மையும் முகத்தில் அறைவது போல கூறப்பட்டுள்ளது.
ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு தமிழக சுதந்திரப் போராட்ட காலத்தின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக எழுதப்பட்டுள்ளது. இந்த நூலை வரவேற்றுக் கொண்டாட வேண்டியது நமது கையில்தானிருக்கிறது.
‘ராஜாஜி வாழ்க்கை வரலாறு’
ஆசிரியர்: ராஜ்மோகன் காந்தி
தமிழில்: கல்கி ராஜேந்திரன்,
விலை: 475,
வெளியீடு:
வானதி பதிப்பகம்,
தீனதயாளு சாலை,
சென்னை - 17
ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை ராஜ்மோகன் காந்தி எழுதியிருக்கிறார். அது ஆயிரம் பக்க அளவில் வானதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
ராஜாஜி அன்றும் இன்றும் வாதப் பிரதிவாதங்களின் மையமாக இருப்பவர். அவரைப் பற்றி நிறைய சர்ச்சைகளும் கடுமையான விமர்சனங்களும் இருக்கின்றன. அதில் எது உண்மை, எது பொய் என அறிந்து கொள்வதற்காவே இந்த நூலைப் படிக்கத் துவங்கினேன்.
காந்தியின் மகன் தேவதாஸ், ராஜாஜியின் மகள் லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார், அவர்களது பிள்ளைதான் ராஜ்மோகன் காந்தி, அந்தவகையில் அவர் ராஜாஜியின் பேரன், தனது தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறோம், எந்த சார்புநிலையும் வந்துவிடக்கூடாது என்று முடிவு செய்து கொண்டு துல்லியமாக, நேர்மையாக, ராஜாஜியின் அகபுற உலகின் முக்கிய நிகழ்வுகளை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கி எழுதியிருக்கிறார் ராஜ்மோகன் காந்தி, அதற்கு ஓர் உதாரணம் எல்லா இடங்களிலும் ராஜாஜியை சி. ஆர். என்றே சுட்டி எழுதியிருப்பது. அப்படித்தான் அன்று ராஜாஜி அழைக்கப்பட்டார், ராஜாஜியின் குடும்ப விஷயங்களைப் பற்றி எழுதும்போதுகூட ராஜ்மோகன் காந்தி உணர்ச்சிவசப்படாமல் நடந்த உண்மைகளை, தான் அறிந்த விதத்தில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூலை கல்கி ராஜேந்திரன் மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ராஜாஜியின் முக்கிய சீடர்களில் ஒருவர் கல்கி என்பதால், கல்கி ராஜேந்திரன் இதை மிகவும் உணர்ச்சிபூர்வமாக, தான் செய்ய வேண்டிய முக்கியக் கடமை என்பதைப் போல முழுமையான அக்கறை எடுத்து செழுமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
ஆயிரம் பக்க நூல் என்றாலும் ஒரு நாவல் படிப்பது போல அத்தனை சுவாரஸ்யமாகவும், வியப்பூட்டும் தகவல்கள், ஆளுமைகள், நிகழ்ச்சிகள் என இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தின் குறுக்குவெட்டு தோற்றம் போல இந்த நூல் அமைந்துள்ளது.
காந்தியின் மீதான ஈடுபாடுதான் ராஜாஜியை சுதந்திரப் போராட்ட களத்தினுள் இழுத்துக்கொண்டு வருகிறது. காந்தியின் கட்டுரைகளை அவர் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். காந்தியின் மகத்துவத்தை ஆரம்ப காலங்களிலே உணர்ந்து கொண்டவர் ராஜாஜி.
இந்த நூலில் என்னை உலுக்கிய பகுதி தனது மகனுக்கு ராஜாஜி ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுகிறார் என்று தெரிந்த மகாத்மா காந்தி மிகுந்த மனவருத்ததுடன் தமிழன்னையின் மிகச்சிறந்த புதல்வர்களே அவளை கைவிடுவார்களேயானால் பெருவாரியான தமிழ் மக்கள் என்ன செய்வது, பொது ஜனங்களிடையே ஊழியம் புரிய வேண்டியவர்கள் எதிர்காலம் என்ன ஆகும், இனி உங்கள் மகனுடன் நீங்கள் தமிழில்தான் கடித தொடர்பு கொள்வேன் என எனக்கு சத்தியம் செய்து தரவும், உங்களை நினைத்து என்னால் தூங்க முடியவில்லை, இது சம்பந்தமாக எனக்கு விளக்கம் தரவும் என ராஜாஜிக்கு கண்டனக் கடிதம் எழுதியிருக்கிறார் காந்தி.
அத்தோடு ராஜாஜி மகனையும் தனது தந்தைக்கு தமிழில் கடிதம் எழுதச் செய்திருக்கிறார். தமிழ் மீது காந்திக்கு இருந்த பற்றும், தாய்மொழியை புறக்கணித்துவிட்டு பொதுவாழ்க்கையில் ஈடுபடக்கூடாது என்ற உண்மையும் முகத்தில் அறைவது போல கூறப்பட்டுள்ளது.
ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு தமிழக சுதந்திரப் போராட்ட காலத்தின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக எழுதப்பட்டுள்ளது. இந்த நூலை வரவேற்றுக் கொண்டாட வேண்டியது நமது கையில்தானிருக்கிறது.
‘ராஜாஜி வாழ்க்கை வரலாறு’
ஆசிரியர்: ராஜ்மோகன் காந்தி
தமிழில்: கல்கி ராஜேந்திரன்,
விலை: 475,
வெளியீடு:
வானதி பதிப்பகம்,
தீனதயாளு சாலை,
சென்னை - 17
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010

» பாலச்சநதரின் வாழ்க்கை வரலாறு
» "பாரதியாரின் வாழ்க்கை வரலாறு"
» ஜோதிபாசுவின் வாழ்க்கை வரலாறு
» விடுதலைப்போராளி இசைப்பிரியா…வாழ்க்கை வரலாறு
» புத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...
» "பாரதியாரின் வாழ்க்கை வரலாறு"
» ஜோதிபாசுவின் வாழ்க்கை வரலாறு
» விடுதலைப்போராளி இசைப்பிரியா…வாழ்க்கை வரலாறு
» புத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...
TamilYes :: சிறுவர் பூங்கா :: கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|