TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"மடுத் தேவாலயப் படுகொலை"

Go down

"மடுத் தேவாலயப் படுகொலை" Empty "மடுத் தேவாலயப் படுகொலை"

Post by ஜனனி Thu Nov 21, 2013 9:19 pm

"மடுத் தேவாலயப் படுகொலை"
[You must be registered and logged in to see this image.]
சிங்களப் பயங்கர வாதம் ஒன்றின் பதினான்காம் ஆண்டு நினைவு 20.11.1999 மடுத் திருப்பதிப் படுகொலை

புனித மடுமாதா தேவாலயத்தில் கடந்த 20.11.1999 அன்று இரவு திட்டமிட்ட வகையில் சிறீலங்கா இராணுவத்தால் கோரப்படுகொலைகள் நடத்தி முடிக்கபட்டன. இச்சம்பவத்தில் ஸ்தலத்திலேயே 37பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அது 44 ஆக அதிகரித்தது. 60 பேர் வரையானோர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இச்சம்பவமானது உலகெங்கிலுமுள்ள மடுமாதாவினது பக்தர்களுக்கும் மற்றும் பலருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

சந்திரிக்கா தலைமையிலான சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் ஆரம்பமான காலத்தில் இருந்து இற்றை வரைக்கும் தமிழர் தாயகம் எங்கும் 1800ற்கும் அதிகமான வழிபாட்டு தளங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன. தேவாலயங்கள் கோயில்கள் என்பன பெரும் படுகொலைகளை நடாத்தும் சிறீலங்கா அரச படைகளின் கொலைக்களங்களாக மாற்றப்பட்டுள்ளன. யாழ் யாகப்பர் ஆலயத்தில், நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்திலும் நடந்த பெரும் படுகொலைகள் வரிசையில் மடுத்திருப்பதியில் நடந்த கோரமும் இணைந்து கொண்டது.

சிறீலங்கா இராணுவம் தமிழீழத்தில் உள்ள இந்து, கிறிஸ்தவ ஆலயங்களை அழிப்பதும் மாசுபடுத்துவதும், கோவில் தேவாலயங்களை இடித்துத் தள்ளுவதும் வழமையான ஒன்றே. வழிபாட்டுத் தளங்களைப் படைத்தங்ககங்களாகப் பாவிப்பதும், விக்கிரகங்கள், சொரூபங்களை அகற்றுவதும் யாவரும் அறிந்ததே. இவையாவும் இனவாத அடக்குமுறையின் ஒரு வடிவமே.

கடந்த 22.03,1999 அன்று ரணகோச - 02 நடவடிக்கை மூலம் இராணுவம் மடுத்திருப்பதியைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்ட சமயம் மடுத்திருப்பதி வளாகத்திற்குள் இராணுவம் நுழைவதைத் தடுக்குமாறு ஜனாதிபதியிடம் மன்னார் ஆயரினால் தொடர்சியாக கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அது செவிமடுக்கப்படடாததோடு அங்கு தங்கியிருந்த மக்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

அதன் பிற்பாடு மடுப்பிரதேசம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக மட்டுமல்ல, இராணுவத்தின் பிரசன்னமான பகுதியாகவும் இருந்தது. மடுத்திருப்பதியின் புனிதத்தைப் பேண சிறீலங்கா அரசு தயாராக இருக்கவில்லை. இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் இது இராணுவ நலன் கருதி நிராகரிக்கப்பட்ட ஒன்றல்ல ஏனெனில் மடுத்திருப்பதிப் பிரதேசம் அன்றைய நிலையில் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்கவில்லை. எல்லாவற்றையும்விட இப்பிரதேசத்தை புனித வலயமாக மதித்த விடுதலைப் புலிகள் அமைதி வலயமாகப் பேணி படை நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதில்லை. மடுப்பிரதேசத்தை இராணுவ ஆக்கிரமிற்குள் கொண்டு வந்தமையும், யுத்தமின்றிப் பெறப்பட்ட அப்பிரதேசத்தைப் பெரும் இராணுவ வெற்றியாகக் காட்ட முற்பட்டமையும் பெளத்த பேரினவாதத்தின் வெளிப்பாடுகளே ஆகும். அத்தோடு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா மடுத்திருப்பதியை பின்னணியாகக் கொண்ட தனது நிழற்படத்தை தேர்தலில் பயன்படுத்தியமையும் பெளத்த பேரினவாத வெறித்தனத்தின் கண்ணியமற்ற செயலின் குறிகாட்டி என்றே கொள்ளலாம்.

17.11.1999 திகதி மன்னார் பெருநிலப்பரப்பில் வீசிய புலிவீரரின் ஓயாத அலைகள் - 03 ன் அனல் பட்டு மதுவை விட்டுப் பின்வாங்கிய இராணுவம், கொலை வெறியோடு 20ற்கு மேற்ப்பட்ட கவசவாகனங்களோடு 20.11.1999 அன்று காலை 10.00 மணிக்கு மடுத்திருப்பதிக்குத் திரும்பியது. மடுத்திருப்பதியைச் சூழ வசித்த மகள் அனைவரையும் தேவாலயத்திற்குள் இரவு தங்கவேண்டும் எனக் கட்டளை போட்டது. ஆண்டாண்டு காலமாக தொடர் சிங்களப் பயங்கரவாதத்தின் கோர வீச்சினை தாங்கமுடியாமல் அன்னையின் மடியில் தஞ்சமடைந்திருந்த மக்கள் கூட்டம் கலக்கத்துடன் ஆலயத்தில் முடங்கியது. தமிழீழத்தின் பல பாகங்களிலும் காலகாலமாக சொத்து சுக நலன்களோடு உற்றார் உறவினர்களோடு வாழ்ந்த மக்களை நிர்க்கதியாக்கியது சிங்களப் பேரினவாதம். இனிவரும் இன்னல்களிலிருந்து மடுமாதா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் உயிரை மட்டுமே கையில் வைத்திருந்த மக்களை வேட்டையாட நேரம் குறித்தனர் சிங்கள வெறியர். 20.11.1999 அன்று முன்னிரவு 11.00 மணிக்கு இராணுவத்தின் யுத்த தாங்கிகளில் இருந்த பீரங்கிகளின் சுடுவாய்கள் அப்பாவிகள் படுத்திருந்த தேவாலய முன்னரங்க மண்டபத்தின் மீது இலக்கு வைத்து நிரத்தப்பட்டு குண்டுமாரி பொழிந்தன. ஏதுமறியா எதிலிகளின் அவலக்குரல் பரலோகத்தை எட்டுமாற்போல் ஆலயத்தில் எழுந்தது.

இராணுவம் படுகொலை நோக்கத்தை திட்டமிட்ட வகையில் மடுத்திருப்பதிக்குள் அத்துமீறி நுழைந்து புரிந்துவிட்டுச் சென்றிருக்கிறது. படுகொலைக்கான காரணிகள் பல இருந்துள்ளன. சிங்கள பெளத்த வணக்கஸ்தலங்களைத் தவிர இலங்கைத் தீவில் வேறு வணக்கஸ்தலங்களுக்கு அவற்றின் புனிதத்தன்மைக்கு மதிப்பளித்தல் கூடாது என்ற சிங்களப் பேரினவாதத்தின் குறுகிய எண்ணமே மடுத்திருத்தலத்தின் மீது தாக்குதல் நடத்தத் தூண்டியது. இதைவிட இலங்கைத்தீவில் தமிழரை அழிப்பதையே நோக்கமாகக் கொண்ட சிங்கள அரசும், அரச படைகளும் கிடைத்த சர்ந்தப்பத்தைப் பயன்படுத்தி அப்பாவித் தமிழர்களை ஈனத்தனமான முறையில் கொன்றுள்ளனர்.

இதற்கு மடுத்திருப்பதி திறந்த களமாய் இருந்துள்ளது. மாதாவின் கருவறையில் ஒதுங்கிய தமிழர் வேட்டைப் பொருளாயினர். ஏனெனில் மடுத்திருப்பதியின் புனிதத்தை மதிக்கும் புலிகள் அப்பகுதிக்கு வந்து தம் மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை என்பதை சிங்களப்படை நன்குணர்ந்திருந்தது. இந்நிலையிலே நிராயுத பாணிகளாக ஏதுமறியாதவர்களாக மடுத்திருப்பதியின் உள்ளே தஞ்சமடைந்த மக்கள் மீது வாளேந்திய சிங்கங்கள் மரண விளையாட்டில் ஈடுபட்டன. தனது சரீரமாகிய அப்பத்தையும் இரத்தமாகிய பானத்தையும் யாருடைய மீட்பின் தீர்வாக இறைமகன் பங்கிட்டாரோ அவர்களின் சரீரமும் இரத்தமும் அழிந்து புனித முற்றத்தில் பழி படிந்தது. 13 சிறுவர்கள் உட்பட 44 பொதுமக்களின் குருதியில் மாதாவின் திருமுடி சூடிய ஒளிவட்டம் உருகி வழிந்து இருழ்மண்டியது. 400 வருடகாலப் பாரம்பரியம் மிக்க மடுத்திருப்பதியில் இரத்தச் சகதியை தோற்றுவித்து மகிழ்ந்தனர் இரு குழந்தைகளின் தாயான சந்திரிக்காவின் சிப்பாய்கள். மடுத்திருப்பதியில் ஒரே தடவையில் தன் நான்கு குஞ்சுகளைப் பறிகொடுத்து கதறிய தாயின் கூக்குரலுக்கு 5,110 நாட்கள் கடந்துவிட்டன.

தறுக்கர் தறித்த உறவுகளின் நினைவுத்துயரில் தோய்ந்து இலக்கு நோக்கிய எம் பயணம் தொடரும்.

சிங்களத்தின் இரக்கமற்ற கோரத்தாக்குதலில் பலியான உறவுகளுக்கு எம் இதய அஞ்சலிகள் நாளும் உங்கள் நினைவு எம்மை விடியலின் பாதையில் வேகத்துடன் பயணிக்க செய்யும்.

- வரலாற்றுத் தொகுப்பிலிருந்து தேசக்காற்று இணைய தட்டச்சு உரிமத்துடன்

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

"மடுத் தேவாலயப் படுகொலை" Empty Re: "மடுத் தேவாலயப் படுகொலை"

Post by ஜனனி Thu Nov 21, 2013 9:25 pm

மடுமாதா தேவாலயத்தில் 20.11.1999 அன்று சிறிலங்காப் படையினரின் தாக்குதலில் குஞ்சுகளைப் பிரிந்த தாய் பறவையின் கதறல்...


[You must be registered and logged in to see this image.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

"மடுத் தேவாலயப் படுகொலை" Empty Re: "மடுத் தேவாலயப் படுகொலை"

Post by ஜனனி Thu Nov 21, 2013 9:26 pm

மடுமாதா தேவாலயத்தில் 20.11.1999 அன்று சிறிலங்காப் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளைப் பிரிந்த துயிரின் கதறல்கள்...


[You must be registered and logged in to see this image.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

"மடுத் தேவாலயப் படுகொலை" Empty Re: "மடுத் தேவாலயப் படுகொலை"

Post by ஜனனி Thu Nov 21, 2013 9:26 pm

மடுமாதா தேவாலயத்தில் 20.11.1999 அன்று சிறிலங்காப் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவர்களின் உடல்கள்...




[You must be registered and logged in to see this image.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

"மடுத் தேவாலயப் படுகொலை" Empty Re: "மடுத் தேவாலயப் படுகொலை"

Post by ஜனனி Thu Nov 21, 2013 9:27 pm

மடுமாதா தேவாலயத்தில் 20.11.1999 அன்று சிறிலங்காப் படைகளின் எறிகணையால் சிதைக்கப்பட்ட தேவாலயத்தின் உட்பகுதி...


[You must be registered and logged in to see this image.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

"மடுத் தேவாலயப் படுகொலை" Empty Re: "மடுத் தேவாலயப் படுகொலை"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum