TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:19 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 28, 2024 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 28, 2024 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஈழத் தமிழர்களை இந்திய-திராவிடத் தமிழர்களால் காப்பாற்ற

Go down

ஈழத் தமிழர்களை இந்திய-திராவிடத் தமிழர்களால் காப்பாற்ற Empty ஈழத் தமிழர்களை இந்திய-திராவிடத் தமிழர்களால் காப்பாற்ற

Post by piraba Sun Apr 18, 2010 6:12 am

ஈழத் தமிழர்களை இந்திய-திராவிடத் தமிழர்களால் காப்பாற்ற முடியாமல்
போனது ஏன்? "நாம் தமிழர்" என இணைந்தால்
மட்டுமே முடியும்!



பேரா. சோழன்


நாம் தமிழர், சென்னை மாவட்டம்.





இந்திய யூனியனில் ஒரு அங்கமான மாநிலமாக இருக்கும்
தமிழ்நாடு
இலங்கைத் தீவில் இனக்ககலவரத்தாலும் பின்னர் இனப் போராலும் பாதிக்கப்பட்ட
தமது தமிழ் இன மக்களை காக்கத்தவறியது மட்டுமல்லாமல் ஒன்றுமே செய்யாதது ஏன் என்ற கேள்வி
தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான விடையில்லாத புதிராக இருக்கப் போகிறது.






உலகின் சமீபத்திய வரலாற்றில் கூட பல தேசிய இனங்கள்
ஒரு நாட்டாலேயோ அல்லது மற்றொரு இனத்தாலேயோ அடிமைப்பட்டு பின்னர் எதிர்த்து போரிட்டு
வெற்றி பெற்றிருக்கின்றன. குறிப்பாக, பாலஸ்த்தீன
அரேபியர் (இஸ்ரேலால் நாடற்றவராக்கப்பட்டோர்), எரித்திரியா (எத்தியோப்பியா நாட்டுக்குள்
காலனி இத்தாலிய அரசால் இணைக்கைப்பட்டோர்), கோஸோவோ அல்பேனியர் (செர்பியாவுக்குள் அடைபட்டுக்கிடந்தோர்),
கிழக்கு தைமூர் (இந்தோனேஷிய அரசால் அடிமைப்பட்டுக்கிடந்தோர்) சைப்ரஸ் துருக்கியர் (சைப்ரஸின் கிரேக்கப் பெரும்பான்மையினரால் பாதிக்கப்பட்டோர்). இந்த இனங்களுக்கெல்லாம் ஏதோ
ஒரு வடிவில் இன அடிப்படையில் அல்லது மத அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகள்
உதவிக்கரம் நீட்டி விடுதலைப் போரை அங்கீகரித்து ஐ நா ஆதரவோடு சுதந்திரத்திற்கு உதவியிருக்கின்றன.
பாலஸ்த்தீன பிரச்சனையும் சைப்ரஸ் பிரச்சனையும் தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கினறன.






ஆக, தந்தை பெரியார் சொன்ன, "ஓர் அடிமை மற்றோர்
அடிமைக்கு உதவ இயலாது" என்ற சொல் ஈழத்தமிழரைக் காப்பாற்றாத தமிழ் நாட்டுத் தமிழ்
இனத்திற்கு மிகவும் பொருத்தமானதாகவும் நாம் ஆய்வு செய்யும் வினாவிற்கு விடையாகவும்
தெரிகிறது. இதை நாம் முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டால் நாம் கையாலாகதவர்கள் என்று ஒத்துக்கொள்கிறோம்.
ஆயினும் நாம் செய்தது-தவிர்த்திருக்க வேண்டியது எவை எவை? செய்யத் தவறியவை எவை எவை?
என்று கண்டறிந்தால் மட்டுமே பழுத்த நாகரீகம் கண்ட தமிழினம் தலை நிமிர்ந்து நின்று ஈழத்
தமிழரின் விடுதலை வேட்கைக்கு உறு துணையாக இருக்க முடியும். அய்யா நெடுமாறன் போன்றோர் பேசி வருவது போல் தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்
அல்ல; தமிழரின் ராஜதந்திரமே!.






முதலில்
தமிழ் ஈழப் பிரச்சினையில் நடந்த நிகழ்வுகளைப் பார்க்களாம்.






நிகழ்வு
1: இலங்கைத்
தீவில் தமிழர்களும் சிங்களர்களும் பல்வேறு கால கட்டங்களில் குடியேறி தத்தம் அரசுகளை
நிறுவி வாழ்ந்து வருகிறார்கள். (சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர்)






நிகழ்வு
2: ஐரோப்பிய நாடுகள் இலங்கைத் தீவில் ஆண்டு
வந்த டமிழ் சிங்கள மன்னர்களை போரிலும் ராஜ தந்திரத்தாலும் வென்று 'இலங்கை' என்ற ஒருங்கிணைந்த
நாட்டை நிறுவினார்கள். இறுதியில் இலங்கை இங்கிலாந்து வசம் இருந்தது.



நிகழ்வு
3: இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1947 ஆம் ஆண்டில் ஈழம் சிங்களம் என இரண்டு நாடுகளாகப் பிரிக்காமல் ஒரே நாடாக இங்கிலாந்து
இலங்கைக்கு சுதந்திரம் வழங்குகிறது (இந்தியாவை இந்தியா பாக்கிஸ்த்தான் என இரண்டு நாடுகளாகப் பிரித்ததுபோலப் பிரிக்காமல்).






நிகழ்வு 4: இலங்கையின் சிங்கள தேசியவாதிகள் இலங்கையை
சிம்கள நாடாக கட்டி எழுப்பும் முயற்சியாக சிங்கள மொழியை ஆட்சி மொழியாகவும் சிங்களர் பின்பற்றும்
புத்த மதத்தை அரசு மதமாகவும் அறிவிக்கின்றனர். (1950 - 1976 ஆம் ஆண்டுகளில்)






நிகழ்வு 5: சிங்களர் நாடு என்று இலங்கை ஆன பிறகு தமிழர்கள் முதலில்
ஜனநாயக முறையிலும் பின்னர் ஆயுதம் ஏந்தியும்
போராடுகின்றனர். (1956 -1976 ஆண்டுகளில்)






நிகழ்வு
6: தமிழ்ப் போராளி அமைப்புக்களில் தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கம் பலம் பொருந்தியதாக மக்கள் ஆதரவோடு வளர்கிறது. (1976
-1986 ஆண்டுகளில்).






நிகழ்வு 7: தமிழர்
உரிமைப் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரு வழி முறையாக இந்தியாவும் இலங்கையும் ஓர் ஒப்பந்தம்
செய்து கொண்டு இந்திய அமைதிப் படை இலங்கைக்குச்
சென்று தமிழ்ப் போராளிக் குழுக்களை சரணடையச்
செய்யவும் பின்னர் ஒடுக்கவும் முயற்சி மேற்கொண்டு
தோல்வியுடன் நாடு திரும்புகிறது. (1985 -1989 ஆண்டுகளில்)






நிகழ்வு
8: இந்திய அமைதிப் படையுடன் நடந்த போரின்
போது இந்தியப் படை செய்த அத்து மீறல்களின் தாக்கமாக ராஜிவ் காந்தி படு கொலை செய்யப்படுகிறார்
(1991). அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றூம் விடுதலைப் புலிகள் மீதான பயத்தால், ஜெயலலிதா
தலைமையில் இயங்கிய தமிழ் நாட்டு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, விடுதலைப் புலிகள் இயக்கம்
இந்திய அரசால் தடை செய்யப் படுகிறது. படிப்படியாய்
இலங்கை அரசின் முயற்சியால் மேலை நாடுகளிலும்
விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப் படுகிறது. (1991 -2000 ஆண்டுகளில்)






நிகழ்வு
9: நார்வே நாட்டின் முயற்சியால் இலங்கை அரசுக்கும்
தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக விடுதலைப் புலிகளுக்கும் இடையே பல கட்டங்களில் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இந்தியாவிலும்
பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்குகிறது.
டாக்டர் ஆண்டன் பாலசிங்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகிக்கிறார்.






நிகழ்வு
10: பேச்சு
வார்த்தைகள் பலனின்றி முடிவடைகின்றன. விடுதலைப் புலிகள் பலம் பெற்று ஈழ நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றி
ஆட்சி நடத்தி வருகிறார்கள். தரைப்படை,
கடற்படை, வான்படை என இராணுவம், காவல் துறை நீதித் துறை, நிதித்துறை, கல்வித்துறை
என அரசின் அனைத்து அங்கங்களும் ஈழப் பகுதிகளில் ஏற்படுத்தப்படுகின்றன. ஈழ வங்கி, ஈழ
வானொலி, இஃஜத் தொலைக்காட்சிகள் நிறுவப்படுகின்றன.






நிகழ்வு
11: இதுவரை
அரசியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பயந்து பயந்து போரிட்டு வந்த சிங்கள இராணுவம்,
மகிந்த ராஜ பக்க்ஷ ஜனாதிபதியான பிறகு அவருடைய சகோதரர் - பாதுகாப்பு அமைச்சர் கொத்த பாய ராஜ பக்க்ஷ மீது
தற்கொலைத் தாக்குதல் நடந்து அவர் தப்பிய பின், தமிழீழ ராணுவத்துடன் போரிட ராஜ தந்திரமாகச்
செயல்படத் துவங்குகிறது.






நிகழ்வு
12: தமிழர்களுக்
கெதிரான போரில் சிங்கள அரசு இந்தியா, சீனா, பாக்கிஸ்த்தான், இஸ்ரேல், ஜப்பான் ஆகிய
நாடுகளின் முழு உதவியைப் பெருகிறது. உலக அரங்கில் ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவுக்கு
பின் விடுதலைப் புலிகள் இயக்கம் தனிமைப் படுத்தப்படுகிறது.






நிகழ்வு
13: தமிழ் நாட்டில் திமுக-அதிமுக; திமுக-மதிமுக
அரசியல் போரின் உச்ச கட்டமாகவும் தனிப்பட்ட அரசியல்வாதிகளின் அரசியள் ஆதாயத்திற்காகவும்
தமிழ் நாடு சட்ட மன்றமே விடுதலைப் புலிகளை தடை செய்யவும் தமிழீழத் தலைவர்களை இழிவுபடுத்தும்
வகையில் தீர்மானம் நிறைவேற்றுகிறது. காங்கிரஸ், அதிமுக, திமுக கட்சிகள் விடுதலைப் புலிகள்
இயக்கத்திற்கு அரசியல், இராணுவ இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததால்
புலிகளின் செயல்பாடுகள் பெருமளவுக்கு முடக்கப்படுகின்றன.






நிகழ்வு
14: சிங்கள
அரசு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருலாதார, அரசியல் மற்றும் இராணுவ ஆதரவையும்
உதவியையும் பெற்ற அதே வேளை, இந்தியத் தமிழ் நாடு தண்ணீர் பிரச்சனையில் தமது அண்டை மாநிலங்களுடன்
நட்பின்றி 'எதிறி' நிலைக்கு வருகிறது. கர் நாடகம் காவேரி-ஹொக்கேனக்கல் பிரச்சனையிலும்,
கேரளம் முல்லைப் பெரியாறிலும் ஆந்திரம் பாலாற்றிலும் தமிழகத்தை நட்பின்றிப் பார்க்கும்
நிலை ஏற்படுகிறது. அதாவது தமிழ் நாடு திராவிடத்திலேயே
தனிமைப் படுகிறது.






நிகழ்வு
15: தற்போது நடைபெற்ற நான்காம் ஈழ விடுதலைப்
போரின் போது திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ்
ஆட்சி இந்தியாவில் நடை பெறுவதைப் பயன்படுத்தி,
ராஜிவ் காந்தி கொலைக்கு வஞ்சம் தீர்க்கக் காத்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் - ராஜிவ்
குடும்பத்தார் திமுக அரசியல்வாதிகளை கேடயமாகப் பயன்படுத்தி சிங்கள ராஜ பக்க்ஷேவுடன்
கை கோர்த்து தமிழீழ விடுதலைப் போரில் தமிழர்களை தோல்வியுறச் செய்திருக்கிறார்கள்.






முதலில்
தமிழ் ஈழப் பிரச்சனையில் நடந்த தவறுகள் என்ன என்று பார்ப்போம்.






செய்தவை






தவறு 1:


ராஜீவ்
காந்தி கொலையில் தமிழீழத் தலைவர்களை குற்றவளிகளாக்கி
வழக்குதொடுத்தது



சிங்களர்-தமிழர் பேச்சு வார்த்தை; ராஜீய இலக்கணத்தை மீறி சிங்கள-தமிழர்
ஒப்பந்தத்தில் ராஜீவ் காந்தி கையெழுத்திடுதல்;
இந்திய அமைதிப் படை - விடுதலைப் புலிகள் சண்டை; அமைதிப் படையின் அத்து மீறல்கள்; பழி
வாங்கும் முகமாக ராஜீவ் காந்தி படு கொலை; இந்த வழக்கில் தமிழ் ஈழத் தேசியத் தலைவர்
பிரபாகரனை முதல் குற்றவாளியாக்கி புணைந்த பொய்
வழக்கு; (மாறாக சமீபத்திய மும்பை தாக்குதல் மற்றும் இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்ட
வழக்குகளில் பாக்கிஸ்தான் ஜனாதிபதியையோ ஐ எஸ் ஐ உளவு நிறுவனத் தலைவரையோ குற்றாவாளியாக்க
வில்லை). ராஜீவ்கொலை வழக்கில் விசாரனை மேற்கொண்டோர் திராவிடன் கார்த்திகேயன் தலைமையில்
இயங்கிய தமிழர்கள். அவர்களை வழி நடத்தியது காங்கிரஸ் மற்றும் அ தி மு க கட்சிகள். காங்கிரஸ்
கட்சியே மனம் மாறி ஏதாவது செய்ய நினைத்தாலும் முட்டுக்கட்டையாய் இருப்பது கார்த்திகேயன்
செய்த இந்த 'முதல் துரோகம்' தான்!






தவறு
2:



விடுதலைப்
புலிகளை தடை செய்ய வேண்டி ஜெயலலிதா தலைமையில் இயங்கிய தமிழக அரசு இந்திய அரசுக்குக்
கடிதம் எழுதியது






இலங்கை அரசே விடுதலைப் புலிகளை தடை செய்யாத நிலையில் விடுதலைப்
புலிகளால் தமிழ் நாட்டிற்கும் தமிழக அரசுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் விடுதலைப்
புலிகள் தமிழக நிகழ்வுகளில் தலையிடாக் கொள்கையைக்
கடை பிடித்து வந்த நிலையில், ராஜீவ் கொலையால் தமக்குக் கிடைத்த தேர்தல் வெற்றியைப்
பயன்படுத்தி ஜெயலலிதா செய்த இந்த 'இரண்டாவது துரோகம்' தான் ஈழத் தமிழர்களை இந்தியத் திராவிடத் தமிழர்களால்
காப்பாற்ற முடியாமல் போனதன் துவக்கமாகும்.
ஈழத் தமிழரின் போர் தோல்விக்கு
இந்திய அரசின் விடுதலைப் புலிகள் மீதான தடை ஒரு முக்கிய காரணமாகும்.






தவறு 3:


அகதிகளகவும்
போர்ப்ணியிலும் தமிழகத்தில் கரை ஒதுங்கிய ஈழப் போராளிகளை திமுக-அதிமுக அரசுகள் போட்டி
போட்டுக்கொண்டு சிறையில் அடைத்து போரில் ஈடுபட விடாமல் தடுத்து வைத்தது






சகோதர யுத்தம் பற்றிப் பேசும் தி மு க மற்றும் அ தி மு க கட்சிகளின்
குழாயடி அரசியல் சண்டையின் காரணமாக போட்டி போட்டு போராளிகளை சிறையில் அடைத்தார்கள்.
இதனால் போராளிகளின் லட்சியப் பயணம் சீர்கெட்டு சிறையில் அடைந்து கிடக்கிறர்கள். இந்த
செயளால் யாருக்கும் லாபம் இல்லை.






தவறு
4:



தமிழக
மீனவர்களைக் காப்பாற்றுவதாகக் கருதி இந்திய அரசின் கடற்படையை தமிழ் நாட்டு /ஈழக் கடற்கரையை
கண்காணிக்க-பாதுகாக்க தமிழக அரசும் பல அரசியல் கட்சிகளும் அழைத்தது






தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையான
ஆதங்கத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் இந்திய உளவு நிறுவனங்களும்
நன்கு பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகளை ஒடுக்கும் ஒழிக்கும் தமது நீண்ட காலத்
திட்டத்தில் நேரடியாகவும் சிங்கள அரசின் உதவியோடும் வெற்றி கண்டு விட்டார்கள்.






தவறு
5:






ஈழ
விடுதலைப் போரை எதிர்த்த / ஆதரிக்காத தமிழ் ஊடகங்கள் இந்திய (தமிழ் விரோத) ஊடகங்களோடு
இணைந்து போருக்கும் போராளிகளுக்கும் அவப் பெயரை ஏற்படுத்த தடையின்றி அனுமதித்தது






தமிழ்
நாட்டிலிருந்து வெளிவரும் தி ஹிந்து, தின மலர் போன்ற நாளிதழ்களும் முதலில் ஜெயா டி
வி பின்னர் சன் டி வி போன்றவை ஈழத் தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் அவர்களை
எதிர்க்கும் நிலையில் செயல் பட்டன. இதனால்
வட இந்திய ஊடகங்களுடன் கருது ஒற்றுமை ஏற்பட்டு இணைந்து செயல்படும் அளவுக்கு சென்றது,
தமிழ் ஈழப் போரை கொச்சைபடுத்தும் முயற்சியில் சிங்கள அரசுக்கும் காங்கிரஸ் போன்ற இந்திய
அரசியல் கட்சிகளுக்கும் பெரிதும் உதவியது.






செய்யத்
தவறியவை






தவறு
1:



ராஜீவ்
காந்தி கொலைக்கு முன்னும் பின்னும் ஈழ நாட்டில் நடப்பது விடுதலைப் போர்தான் என்பதை
முக்கிய தமிழக அரசியல் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஏற்றுக்கொள்ளாதது; பல கட்டங்களில்
எதிர்த்தது.






ஈழத்தில் நடப்பது விடுதலைப் போர்; அதை தமிழக
அரசு ஆதரிக்க வேண்டும் என்று எந்த ஒரு அமைப்பும் அதிகாரபூர்வமாக வேண்டியதாகத் தெரியவில்லை.
இது குறித்து தமிழக சட்ட மன்றமும் விவாதிக்கவில்லை. 'ஓர் விடுதலைப் போர்' எப்படி ஒரு
தனி மனிதனின் இறப்பால் அல்லது கொலையால் 'இல்லை'
என்று மாறமுடியும்? ஈழத் தமிழ் அரசியல் கட்சிகள் கூட பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும்
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுக்கும் கொடுக்கப்பட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை
வைக்கவில்லை.






தவறு
2:



தமிழ்
நாட்டின் கடலோர மாவட்டங்கள் நீங்களாக மற்ற மாவட்டங்களில் மக்களிடம் ஈழ மக்கள் போராட்டம்
நியாயமானது; நாம் உதவக் கடமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாதது.






தமிழக வரலாறு, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர சோழ பாண்டிய மன்னர்களோடு
முடிக்கப்பட்டு இன்றைய இந்திய எல்லைக்குள் அடைக்கப்பட்டு விட்டதால் ஈழ மன்னர்களும்
தமிழ் மன்னர்கள் தான்; ஈழ மக்களும் தமிழ் மக்கள் தான் என்ற உணர்வு ஏற்பட வழியில்லாமல்
போனது. இன்றைய இந்திய எல்லை மிக சமீபத்தில் வரையப்பட்டது; இந்திய எல்லையைத் தாண்டி
கூட தமிழ் நாடு ஒன்று இருக்கிறது என்ற வரலாறு முழுமையாக மக்களிடம் மறைக்கப்பட்டு வருகிறது.
அதனால் 'ஈழத்திலுள்ள தொப்புள் கொடி உறவு' என்று அரசியல் வாதிகள் பேசுவது பெரும்பாலான
மக்களுக்கு விளங்காமலேயே இருக்கிறது.






தவறு
3:



ஈழ
விடுதலைப் போரின் நியாயத்தை இந்திய யூனியனில் உள்ள மற்ற தேசிய இனங்களிடம் எடுத்துச்சென்று
ஆதரவு திரட்டாதது



தி மு க வும் அ தி மு க வும் ஈழ விடுதலைப் போரை ஆதரிக்காமல் எதிர்த்த
நிலையில் ம தி மு க, பா ம க மற்றும் விடுதலைச்
சிறுத்தைகள் அரசியல் முதிர்ச்சி மற்றும் தொலை நோக்குடன் செயல் பட்டு விடுதலைப் போரின்
நியாயத்தை எடுத்துச் சொல்லி இந்திய யூனியனில் உள்ள மற்ற மாநிலங்களில் ஆதரவு தேடும்
எந்த முயற்சியும் எடுக்கவில்லை. குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு தீவிர பிரச்சாரம்
செய்த வைகோ, ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக அரசியல்கட்சிகளோடும் மாநில அரசுகளோடும் அதிகாரப் பூர்வமாக பேசவில்லை;
ஆதரவு கோரவில்லை; பிரச்சாரம் செய்யவில்லை.






தவறு
4:






உலக
அரங்கில் தமது இயக்கம் தடை செய்யப்பட்ட நிலையிலும் ஈழ விடுதலைப்போருக்கு ஆதரவை தாமே
தேடிக்கொள்ள வேண்டிய நிலையிலும் ஈழத் தமிழ் மக்களுக்கு இறுதிவரை தமிழக அரசு கை கொடுக்காதது.






மேற்கண்டவாறு திராவிடக்கட்சிகள்
ஈழத் தமிழருக்கு ஆதரவு அளிக்காத நிலைப்பாட்டில் இருந்ததால் அவர்கள் தலைமையில் இயங்கிய
தமிழக அரசுகளும் ஈழத் தமிழரின் உரிமை காக்க முன் வரவில்லை; அதே வேளையில், ஈழ ஆதரவு
கட்சிகளும் சட்ட மன்ற வாயிலாக ஈழ ஆதரவு நிலைப்பாட்டிற்கு தமிழக அரசை நிர்ப்பந்திக்கவில்லை.






தவறு
5:



ஈழ
விடுதலைப் போரின் நியாயத்தை ஏற்றுக்கொண்ட தமிழ் ஊடகங்கள் தாமாக முன் வந்து ஒருங்கிணைந்து
விடுதலைப் போரை ஆதரித்து நடு நிலையாளர்களை ஆதரவாளர்களாக மாற்ற முன் வராதது.



ஊடகங்கள் ஈழ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்று பிரிந்த பின் ஈழ
ஆதரவு ஊடகங்கள் ஒருங்கிணந்து செயல் படவும் இல்லை; தாமாக முன் வந்து ஈழ ஆதரவுக்கென்று
எந்த செயலையும் செய்யவும் இல்லை.









இப்போது நாம் என்ன
செய்யலாம்?






விடுதலைப் புலிகள் என்ற இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்
முல்வேலிக்குள் பாதியும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் மீதியுமாய் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஜன நாயக முறைப்படி விடுதலைப் போரை முன்னெடுக்க 'நாடு
கடந்த தமிழீழ அரசு', 'வட்டுக்கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு' உட்பட பல ஆக்கபூர்வமான செயலில் இறங்கி இருக்கிறார்கள்.ஆனால்
சிங்கள அரசு தேசியத் தலைவரின் வாரிசாக அறிவிக்கப்பட்ட 'கேபி" பத்ம நாபனை சட்ட
விரோதமாக இஸ்ரேலிய ஸ்டைலில் கடத்தி கைது செய்து சித்ரவதை செய்வதோடு ஏனைய புலம்பெயர்
ஈழத் தமிழர்களை வேட்டையாடும் வேலையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது.






தமிழ் நாட்டிலோ தொடர்ந்தும் மக்கள் ஆதரவு தனி
ஈழத்திற்கும் ஈழ மக்களுக்கும் இருந்தும் அவர்கள் வீதியில் வந்து போராடத் தயாராய் இல்லை;
தாம் சார்ந்த அரசியல் கட்சியை விடத் தயாராய் இல்லை என்பதைப் பயன்படுத்தி ஆளும் தி மு
க 'குடும்ப சொத்து சேர்ப்பு' அரசியலிலும் அ தி மு க 'அம்மா' சார் அரசியலிலும் தமிழ்
உணர்வுக் கட்சிகள் 'தேர்தல்' சார் அரசியலிலும்
தமிழ் மக்களை அழுத்தி வைத்திருக்கின்றன. தமிழீழம்
மலரவும் தமிழ் நாடு அதற்கு துணை நிற்கவும் 'இந்தியத் தமிழர்களின்' வெளிப்படையான ஆதரவு
தேவை. தமிழக அரசு ஜெயலலிதா- கருணாநிதி தலைமையில் எடுத்த முடிவுகளை நிராகரித்து நீக்கிவிட்டு
ஈழ ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.






இதற்கு, இன்றைய இந்தியாவில் இந்தியனாய், திராவிடனாய் கட்சியாலும், மதத்தாலும், சாதியாலும் பிரிந்திருக்கும்
தமிழர்கள் அனைவரும் "நாம் தமிழர்" என்று ஒன்று சேரவேண்டும்; திக தி மு க,
அ தி மு க, ம தி மு க, தே மு தி க, பா ம க, வி சி க என்று பல்வேறு இயக்கங்களில் இருக்கும்
தமிழ் ஈழத் தேசியத் தலைவரின் ஆதரவாளர்கள், தந்தை பெரியார் வழி போற்றூவோர், அறிஞர் அண்ணாவின்
தமிழ் மாநில சுயாட்சி வேண்டுவோர், தமிழ் ஆள விரும்புவோர், தமிழர் நல் வாழ்வு வாழ விரும்புவோர்,
என அனைவரும் "நாம் தமிழர்" என்று இணைந்து செயல் படவேண்டும். இதுவே ஈழத் தமிழர்
மட்டுமின்றி உலகத் தமிழினம் வாழ, வெல்ல, உலகாள ஒரே வழியாகும்!
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழத் தமிழர்களை தவறாக சித்தரிக்கும் மெட்ராஸ் கபே படத்திற்கு தமிழகத்தில் தடை
» கண்டெய்னர்களில் வைத்து ஈழத் தமிழர்களை கடத்தும் கும்பல் ஆந்திராவில் !
» சோமாலியாவில் சிக்கியுள்ள ஈழத் தமிழர்களை மீட்டுத் தாருங்கள்: கதறும் உறவினர்கள்.
» ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரசுக்கு வக்காலத்து வாங்கும் திருமா
» ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் ‘Ghost Recon Predator’ கணணி விளையாட்டுக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum