Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
முல்லைவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!
Page 1 of 1
முல்லைவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!
முல்லைவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!
சிங்களனும்
உடன் சங்கறுக்கும் துரோகிகளும்
தந்திரத்தால் செய்த
நச்சு குண்டுகள் வீசப் பட்டன;
அதை உள்ளிழுத்து
போரில் -
உமிழ்ந்து துப்பியதில்
இறந்தது
கோழைத்தனம்!
-------------------------------------------
முல்லைவாய்க்கால் பகுதியில்
வீட்டிற்கு வீடு ஒருவர்
போரில் மரணம்.
வீட்டின் -
அத்தனை பேரும்
சிங்களன் வீசிய
நச்சு குண்டிற்கு
நரபலி தகனம்!
-------------------------------------------
விடுதலை என்னும்
ஒற்றை வார்த்தைக்கு
எத்தனை மரணம்?
எத்தனையோ மரணங்கள்
நேர்ந்த பின்னும்
சிங்கள குண்டுவெடி சப்தத்தில்
கேட்கவேயில்லை
விடுதலை என்னும்
ஒற்றை சொல்!!
-------------------------------------------
ஈழத்தின்
வருடங்களை கடந்த
இருட்டு,
ஜெயிப்போ தோற்ப்போ
என்பதான
பயம்,
இரண்டிலொன்றை
பார்ப்போமென்ற
நம்பிக்கை..
எதையுமே பார்க்கவில்லை
சிங்களன் வீசிய
நச்சுகுண்டு;
நியாயத்தை
விழுங்கிக் கொண்டதில்
நச்சு -
பிணங்களாய்
கொப்பளித்தன!
-------------------------------------------
மயான கிடங்காய்
நீண்டது -
முல்லைவாய்க்கால்,
வெறும் செய்தியாக
மட்டுமே -
காண்பிக்கப் பட்டது
தமிழரின் மரணம்!
-------------------------------------------
பசுமை வளர்த்த
இனம் -
பிறப்பு இறப்பு பதிவின்றி
பிணங்களாய் குவிந்தது
வரலாற்றில்!
-------------------------------------------
ஒரு இனத்தின்
பிணவாடை -
உலகமெலாம் வீசியும்
மூக்கை மூடிக் கொண்டு
சேனல் மாற்றியது
அதே சுயநல இனம்!
-------------------------------------------
போரில்
விடுதலைக்காய்
உயிர்விட்டவர்கள்
போர்வீரர்கள் ஆனார்கள்.
அருகில் இருந்தும்
வேடிக்கை மட்டுமே
பார்த்தவர்கள் -
கோழைகளா??
கல்நெஞ்சக் காரர்களா??
எதிர்க்கும் திராணி போதாதவர்களா???
அவரவரே -
முடிவு செய்துக் கொள்ளட்டும்!
-------------------------------------------
வன்னித் தீவில்
ஒரு -
குழந்தை கதறி அழுதது.
போருக்குப் போன
அப்பா இறந்திருக்கலாம்..
அம்மா போருக்குப் போகும்
வழியில் கூட
இறந்திருக்கலாம்..
குழந்தை -
தானும் சென்று
ஒரு சிங்களனையாவது சுட்டு
என்னிரு -
தமிழரை காக்கவில்லையே - யென
அழுதது போல்!
-------------------------------------------
காட்டிக் கொடுத்தவன்
திருடித் தின்றவன்
அண்டிப் பிழைத்தவன்
இறந்த -
சகோதரிகளின்
சவத்தின் மீதேறி ஓடிய
ஒருசில துரோகிகள்
சிங்கள இனமானான்.
கைகால் இழந்து
ஈழத்தையே சுவாசித்து
பட்டினி, போர், துக்கத்தால்
இறந்தவன் -
ஈழ விடுதலை வெல்லும்
வெற்றிக் கொடியை
நாளை -
விண்ணில் பறக்கவிக்கும்
காற்றாயினான்!
-------------------------------------------
மொழி
இனம்
மதம்
யாராகவேனும்
எதுவாகவேணும்
இருந்துவிட்டுப் போகட்டும்
ஒரு மனிதராகக் கூட
என்னாது -
சுட்டு சுட்டு எறிந்த சிங்களனக்கு
துணைபோன தேசத்தில் தான்
நானும் குடிமகன்;
தமிழன் வேறு;
மனிதன் என்று சொல்லத் தான்
எனக்கே வெட்கம்!
-------------------------------------------
வித்யாசாகர்
சிங்களனும்
உடன் சங்கறுக்கும் துரோகிகளும்
தந்திரத்தால் செய்த
நச்சு குண்டுகள் வீசப் பட்டன;
அதை உள்ளிழுத்து
போரில் -
உமிழ்ந்து துப்பியதில்
இறந்தது
கோழைத்தனம்!
-------------------------------------------
முல்லைவாய்க்கால் பகுதியில்
வீட்டிற்கு வீடு ஒருவர்
போரில் மரணம்.
வீட்டின் -
அத்தனை பேரும்
சிங்களன் வீசிய
நச்சு குண்டிற்கு
நரபலி தகனம்!
-------------------------------------------
விடுதலை என்னும்
ஒற்றை வார்த்தைக்கு
எத்தனை மரணம்?
எத்தனையோ மரணங்கள்
நேர்ந்த பின்னும்
சிங்கள குண்டுவெடி சப்தத்தில்
கேட்கவேயில்லை
விடுதலை என்னும்
ஒற்றை சொல்!!
-------------------------------------------
ஈழத்தின்
வருடங்களை கடந்த
இருட்டு,
ஜெயிப்போ தோற்ப்போ
என்பதான
பயம்,
இரண்டிலொன்றை
பார்ப்போமென்ற
நம்பிக்கை..
எதையுமே பார்க்கவில்லை
சிங்களன் வீசிய
நச்சுகுண்டு;
நியாயத்தை
விழுங்கிக் கொண்டதில்
நச்சு -
பிணங்களாய்
கொப்பளித்தன!
-------------------------------------------
மயான கிடங்காய்
நீண்டது -
முல்லைவாய்க்கால்,
வெறும் செய்தியாக
மட்டுமே -
காண்பிக்கப் பட்டது
தமிழரின் மரணம்!
-------------------------------------------
பசுமை வளர்த்த
இனம் -
பிறப்பு இறப்பு பதிவின்றி
பிணங்களாய் குவிந்தது
வரலாற்றில்!
-------------------------------------------
ஒரு இனத்தின்
பிணவாடை -
உலகமெலாம் வீசியும்
மூக்கை மூடிக் கொண்டு
சேனல் மாற்றியது
அதே சுயநல இனம்!
-------------------------------------------
போரில்
விடுதலைக்காய்
உயிர்விட்டவர்கள்
போர்வீரர்கள் ஆனார்கள்.
அருகில் இருந்தும்
வேடிக்கை மட்டுமே
பார்த்தவர்கள் -
கோழைகளா??
கல்நெஞ்சக் காரர்களா??
எதிர்க்கும் திராணி போதாதவர்களா???
அவரவரே -
முடிவு செய்துக் கொள்ளட்டும்!
-------------------------------------------
வன்னித் தீவில்
ஒரு -
குழந்தை கதறி அழுதது.
போருக்குப் போன
அப்பா இறந்திருக்கலாம்..
அம்மா போருக்குப் போகும்
வழியில் கூட
இறந்திருக்கலாம்..
குழந்தை -
தானும் சென்று
ஒரு சிங்களனையாவது சுட்டு
என்னிரு -
தமிழரை காக்கவில்லையே - யென
அழுதது போல்!
-------------------------------------------
காட்டிக் கொடுத்தவன்
திருடித் தின்றவன்
அண்டிப் பிழைத்தவன்
இறந்த -
சகோதரிகளின்
சவத்தின் மீதேறி ஓடிய
ஒருசில துரோகிகள்
சிங்கள இனமானான்.
கைகால் இழந்து
ஈழத்தையே சுவாசித்து
பட்டினி, போர், துக்கத்தால்
இறந்தவன் -
ஈழ விடுதலை வெல்லும்
வெற்றிக் கொடியை
நாளை -
விண்ணில் பறக்கவிக்கும்
காற்றாயினான்!
-------------------------------------------
மொழி
இனம்
மதம்
யாராகவேனும்
எதுவாகவேணும்
இருந்துவிட்டுப் போகட்டும்
ஒரு மனிதராகக் கூட
என்னாது -
சுட்டு சுட்டு எறிந்த சிங்களனக்கு
துணைபோன தேசத்தில் தான்
நானும் குடிமகன்;
தமிழன் வேறு;
மனிதன் என்று சொல்லத் தான்
எனக்கே வெட்கம்!
-------------------------------------------
வித்யாசாகர்
Similar topics
» தொழிலாளர் தினக் கவிதை
» கவிதைகள்
» விக்ரமாதித்யன் கவிதைகள்.
» தபு சங்கர் கவிதைகள் ..
» குறட்கூ கவிதைகள்
» கவிதைகள்
» விக்ரமாதித்யன் கவிதைகள்.
» தபு சங்கர் கவிதைகள் ..
» குறட்கூ கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|