TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கச்சத்தீவு... இலங்கைக்கு யார் தாரை வார்த்தது..? கலைஞர் மீது ஜெயா சொல்லும் குற்றச்சாட்டு சரியா..?

Go down

கச்சத்தீவு...  இலங்கைக்கு யார் தாரை வார்த்தது..?  கலைஞர் மீது ஜெயா சொல்லும் குற்றச்சாட்டு சரியா..? Empty கச்சத்தீவு... இலங்கைக்கு யார் தாரை வார்த்தது..? கலைஞர் மீது ஜெயா சொல்லும் குற்றச்சாட்டு சரியா..?

Post by Tamil Sun May 05, 2013 8:44 am

கச்சத்தீவு...

இலங்கைக்கு யார் தாரை வார்த்தது..?

கலைஞர் மீது ஜெயா சொல்லும் குற்றச்சாட்டு சரியா..?

[You must be registered and logged in to see this image.]
1967ல் காங்கிரசு கட்சி தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட்டு, திமுக ஆட்சி
அமைந்தது முதல், தமிழ்நாட்டை அழித்துவிட வேண்டும் என்று கொள்கையோடு
இந்திராகாந்தி செயல்பட்டார்.

இலங்கை தமிழர்களும், தமிழகத்தில்
உள்ள தமிழர்களும் ஒன்று சேர்ந்து இந்தியாவில் காங்கிரசு எதிரான அணி
ஏற்படுத்திவிடுவார்களோ என்று இலங்கையில் உள்ள தமிழர்களை அழிக்கும் முயற்சி
1974ல் காங்கிரசு கட்சி தொடங்கிவிட்டது.

காங்கிரசு ஆட்சியில்
பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை
வார்ப்பதற்கு முன்பு, தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்தை அறிய
விரும்பவில்லை.

மற்றும்,

அன்றைய முதல்வர் கருணாநிதி கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்..

ஆனால்,

அப்போது காங்கிரசு கட்சியின் தமிழக பொறுப்பில் இருந்தவர்கள், தமிழ்நாட்டிற்கு, தமிழ் மக்களுக்கும் எதிராக செயல்பட்டார்கள்..

இந்த ஒப்பந்தம் இந்திரா காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை காட்டுகிறது”
என்று பாராளுமன்றத்தின் மக்களவைஇல் பூபேஷ்குப்தா (வ.கம்.) பேசி, பிரதமர்
இந்திராகாந்தியின் பாராட்டை பெற்றார்.

வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகள் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க, பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தார்கள்..

தமிழ்நாட்டுக் கடற்கரையில் இருந்து 12 மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை, இலங்கைக்கு இந்தியா தானமாகக் கொடுத்தது.


இதற்கான ஒப்பந்தத்தில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கைப்
பிரதமர் திருமதி பண்டாரநாயகாவும் 1974-ம் ஆண்டு ஜுன் 28-ந்தேதி
கையெழுத்திட்டனர்.தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு.

ராமேசுவரத்தில் இருந்து ஏறத்தாழ 12 மைல் தூரத்தில் இருக்கிறது. முன்பு
இந்தத் தீவு, ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.

ஆனால்,

இது தங்களுக்கே சொந்தம் என்று, சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை உரிமை
கொண்டாடியது. இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயகா கடந்த ஜனவரி மாதம் டெல்லி
வந்திருந்தபோது பிரதமர் இந்திராகாந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார்.

கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று, அப்போது தீர்மானிக்கப்பட்டது.

“கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம். அதை இலங்கைக்கு தரக்கூடாது” என்று தமிழக அரசு வற்புறுத்தி வந்தது.

அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தபோது இதை வலியுறுத்தினார்.

இப்போது கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது என்று இந்திய அரசு முடிவு
செய்துவிட்டது. 28-6-1974 அன்று, கச்சத்தீவு பற்றிய ஒப்பந்தத்தை இலங்கையில்
இருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி ஜெயசிங்கே டெல்லிக்கு விமானத்தில்
கொண்டு வந்தார்.

அதில் இந்திரா கையெழுத்திட்டார்.

அதேபோல, டெல்லியில் இருந்து வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல்சிங், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கைக்கு கொண்டு போனார்.

அதில் இலங்கை பிரதமர் திருமதி பண்டார நாயகா கையெழுத்திட்டார்.

இரண்டு பிரதமர்களும் ஒரே நேரத்தில் கையெழுத்து போடுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

கச்சத்தீவு 280 ஏக்கர் பரப்புள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் உள்ளது.

அங்கு கிறிஸ்தவ கோவில் ஒன்று இருக்கிறது. ஆண்டுதோறும் கச்சத்தீவில்
திருவிழா நடைபெறும்போது, இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும்
கிறிஸ்தவர்கள் படகுகளில் செல்வார்கள்.

இருதேசங்களையும் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவுக்கு சென்றுமீன் பிடிப்பது உண்டு.

அங்கு குடிதண்ணீர் இல்லையாதலால், மக்கள் நிரந்தரமாக வசிக்கவில்லை.

தமிழ்நாட்டுக்கு அருகே உள்ளதும், முன்பு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு
உட்பட்டு இருந்ததுமான கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு கொடுத்தது.

இதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தத்தின் நகலை, பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் தாக்கல் செய்தார்.

அப்போது அதன் மீது காரசாரமான விவாதம் நடந்தது.

இரா.செழியன் (தி.மு.க.) பேசுகையில்,

“தமிழ்நாட்டுக்கு உரிய கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சட்ட விரோதமானது.

இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்கமாட்டோம்” என்றார்.

மூக்கையா தேவர் (பார்வர்டு பிளாக்) பேசியதாவது:-

“என்னுடைய ராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியது கச்சத்தீவு. அதை இலங்கைக்கு கொடுத்தது தவறானது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

ஏற்கனவே, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு தொல்லை கொடுத்து வருகிறது.

எதிர்காலத்தில் போர் மூண்டால், இந்தத் தீவை இந்தியாவுக்கு எதிரான தளமாக
பயன்படுத்தும் அபாயம் உள்ளது.” இவ்வாறு மூக்கையா தேவர் கூறினார்.

ஜனசங்க தலைவர் வாஜ்பாய் பேசுகையில்,

“இலங்கைக்கு கச்சத்தீவை தானம் செய்யும் பேரம், ரகசியமாக நடந்து
இருக்கிறது. இலங்கையின் நட்பைப் பெறுவதற்காக கச்சத்தீவை தூக்கிக் கொடுப்பது
கேவலம்!” என்று கூறினார்.

மதுலிமாயி (சோசலிஸ்டு),

பி.கே.தேவ் (சுதந்திரா),

முகமது செரீப் (முஸ்லீம் லீக்),

நாஞ்சில் மனோகரன் (அ.தி.மு.க.)

ஆகியோரும் ஒப்பந்தத்தை கண்டித்துப் பேசினார்கள்.

வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் பதில் அளிக்கையில்,

“இந்தியா – இலங்கை நட்பு வளர, இந்த ஒப்பந்தம் உதவும்.

இரு தேசங்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது” என்று கூறினார்.

ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.கழகம், சுதந்திரா,
பழைய காங்கிரஸ், சோசலிஸ்டு, முஸ்லிம் லீக், ஜனசங்கம், அ.தி.மு.க. ஆகிய
கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சிகளில் வலது கம்ïனிஸ்டு, இடது கம்ïனிஸ்டு கட்சிகள் மட்டும் வெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை.

சபையை விட்டு வெளியேறும் போது கச்வாய் என்ற ஜனசங்க உறுப்பினர், கச்சத்தீவு ஒப்பந்த நகலை கிழித்து, சபையில் வீசி எறிந்தார்.

இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி மேல்-சபையிலும், கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

விவாதத்தின்போது,

எஸ்.எஸ்.மாரிசாமி (தி.மு.க.) பேசுகையில்,

“கச்சத்தீவு பற்றி தமிழக முதல்-அமைச்சருடன் கலந்து பேசாமலேயே, ஒப்பந்தத்தில் டெல்லி சர்க்கார் கையெழுத்திட்டு இருக்கிறது.

இது ஜனநாயகத்துக்கு விரோதமான போக்கு” என்று கூறினார்.

ராஜ்நாராயணன் (சோசலிஸ்டு) பேசுகையில்,

“ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கு முன்,

தமிழ் மக்களின் கருத்தை அறிந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

”ஒப்பந்தத்தை தமிழகம் ஒருபோதும் ஏற்காது” என்று அப்துல் சமது (முஸ்லிம் லீக்) கூறினார்.

கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

“இந்த ஒப்பந்தம் இந்திரா காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை காட்டுகிறது” என்று பூபேஷ்குப்தா (வ.கம்.) கூறினார்.

முடிவில்,

வ.கம்ïனிஸ்டு, இ.கம்யூனிஸ்டு கட்சிகள் நீங்கலாக மற்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இலங்கை பாராளுமன்றம் கூடியது.

கச்சத்தீவை இலங்கைக்கு பெற்றுத்தந்ததற்காக பிரதமர் திருமதி பண்டாரநாயகாவை உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.

திருமதி பண்டாரநாயகா பேசுகையில், கச்சத்தீவு பிரச்சினைக்கு தீர்வு கண்டதற்காக இந்திரா காந்தியை பாராட்டுவதாக தெரிவித்தார்.

சமரசம் ஏற்பட இந்திய வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் மிகவும் உதவியதாக அவர் சொன்னார்.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கலாமா, கூடாதா என்பது குறித்து இந்திரா காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

“இலங்கைக்கு கச்சத்தீவை இந்தியா கொடுத்தது சரி. அதை ஆதரிக்கிறோம்” என்று
தமிழ்நாடு இ.காங்கிரஸ் தலைவர் ராமையா நிருபர்களிடம் கூறினார்.

கச்சத்தீவை கொடுக்கக்கூடாது என்று கூறுவது வெறும் அரசியல் ஸ்டண்ட் என்று அவர் சொன்னார்.

இ.காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவரான பழைய முதல்-மந்திரி பக்தவச்சலமும்
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஆனால்,

சட்டசபை இ.காங்கிரஸ் தலைவரான ஏ.ஆர்.மாரிமுத்து, முதல்-அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு,

“கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது” என்ற தீர்மானத்தில் கையெழுத்து போட்டார்.

இதேபோல் மேல்-சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமியும், தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டார்.

இப்படி அவர்கள் கையெழுத்துப் போட்டதற்கு ராமையா எதிர்ப்பு தெரிவித்தார்.

“அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மாரிமுத்துவும், ஆறுமுகசாமியும்
கலந்து கொண்டது தவறு. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என்பதே
எங்கள் கட்சியின் கொள்கை.

அதற்கு எதிரான தீர்மானத்தில் அவர்கள் கையெழுத்திட்டது தவறு” என்று அவர் சொன்னார்.

சட்டசபை இ.காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த அனந்தநாயகியும் ராமையாவின் கருத்தை ஆதரித்தார்.

ராமையாவுக்கு, மேல்-சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

“முதல்-அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நானும், மாரிமுத்துவும் கலந்து கொண்டது சரிதான்.

மக்களின் உணர்ச்சிகளை எதிரொலிப்பது சட்டசபை உறுப்பினர்களின் கடமை.

நாங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த
பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு இ.காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது
என்றுதான் நினைப்பார்கள்.

அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு எதிரானது அல்ல.

மிக முக்கியமான இந்த பிரச்சினையில் நாங்கள் ஓடி ஒளிய விரும்பவில்லை.

அதனால் நாங்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டோம்.” மேற்கண்டவாறு ஆறுமுகசாமி கூறினார்.

கச்சத்தீவு தானத்தைக் கண்டித்து, ஜுலை 14-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன கூட்டங்கள் நடத்தப்பட்டன.

முதல்-அமைச்சர் கருணாநிதி தஞ்சை, பாபநாசம் ஆகிய நகரங்களில் நடந்த கூட்டங்களில் பேசினார்.

கச்சத்தீவை தானம் செய்வது சட்ட விரோதம் என்றும், இந்திரா காந்தியும்,
திருமதி பண்டாரநாயகாவும் செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது என்றும், சென்னை
ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.

தமிழ்நாடு ஜனசங்கத் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி இந்த வழக்கைத் தொடர்ந்தார்.

விசாரணைக்குப் பிறகு, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

பலத்த எதிர்ப்பு இருந்தாலும், கச்சத்தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைத்தது.

கச்சத்தீவு...

1974 ஆம் ஆண்டு தி.மு.க.ஆட்சியில் இருந்தபோதுதான் தி.மு.கவின்
எதிர்ப்பையும் மீறி இந்திராகாந்தியால் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை
வார்க்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டு தி.மு.க.ஆட்சியில் இருந்தபோதே தி.மு.கவின் பொதுக்குழுவில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"இந்தியாவுக்கு சொந்தமானதும்,தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதுமான
கச்சத்தீவின் மீது இலங்கைக்கு அரசுரிமை வழங்கும் வகையில் இந்திய அரசு
செய்துள்ள ஓப்பந்தத்தை கழகப் பொதுக்குழு மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சிகளுக்கு எதிராக இந்த ஒப்பந்தம்'
அமைந்துவிடக்கூடாது என்று தமிழக அரசு பலமுறை ஆதரங்களுடன் மத்திய அரசை
அணுகித் தடுத்தும் கூட,அதனை அலட்சியப்படுத்திவிட்டு மத்திய அரசு கச்சத்தீவை
இலங்கைக்கு அளித்த செயல் மிகவும் வேதனை தருவதாகும்.

கச்சத்தீவு
பிரச்சினையை முடிந்துவிட்ட பிரச்சினையாகக் கருதாமல்,மத்திய அரசு
மறுபரீசிலனை செய்து அந்தத் தீவின் மீது இந்திய அரசுக்கு அரசுரிமை
இருக்குமாறு ஒப்பந்தத்தை திருத்த வழிவகை காண வேண்டுமாறு பாரதப் பிரதமர்
இந்திராகாந்தியை இந்தப் பொதுக்குழு வலியுறுத்திறது.."...


தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாது 14.07.1974 ஆம் நாளில் திமுக தமிழகம்
முழுவதும் "கச்சத்தீவு ஒப்பந்தக் கண்டன நாள்"நடத்தப்பட்டது.


கச்சத்தீவு ஒப்பந்தம் கூடாது என்றும்,கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே
என்றும் பல்வேறு ஆதரங்களோடு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி 06.01.1974
ஆம் ஆண்டே அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவருக்கு கடிதம் எழுதியும்
இருந்தார்.

அன்றைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள்
வெளியறவுத்துறை அமைச்சர் அவர்களையும்.அதிகாரிகளையும் தமிழகத்திற்கு அனுப்பி
இந்த விசயம் பற்றி அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் விவாதிக்க
அனுப்பி இருந்தார்கள்.

அந்த விவாதத்தில் தமிழக அரசு
எக்காரணத்தையும் கொண்டும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க கூடாது என்று
கடும் ஆட்சேபனைகளை அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறித்தான் என்று கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு வழங்கியது.
இந்த கச்சத்தீவு பிரச்னை 23.01.1974 ஆம் நாள் அன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது,

"கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்"
என்று கழத்தின் சார்பாக மக்களவையில் இரா.செழியன்
அவர்களும்,மாநிலங்களவையில் எஸ்.எஸ்.மாரிசாமியும் கருத்து தெரிவித்தார்கள்.

அதன் பிறகு ஜெயலலிதா ஒரு முறை விடுத்த அறிக்கையில்"கச்சத்தீவு பிரச்னை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்னை.

அதை மீட்கக் கூடிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கின்றது.

மாநில முதல் அமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்து இருந்தால் அன்றைக்கே
கச்சத்தீவு மீட்கப்பட்டிஇருக்கும்"என்று அவரே தனது அறிக்கையில் தன்னையும்
மறந்து சொல்லி இருக்கின்றார்.

கச்சத்தீவைப் பொறுத்தவரை மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று சொல்லிய ஜெயலலிதா,

"கச்சத்தீவை கருணாநிதிதான் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்"என்று திரும்ப திரும்ப சொல்லும் ஜெயலலிதா,

அப்போது எல்லாம் இது மத்திய அரசுக்கான அதிகாரம் என்ற நினைவு வரவில்லையா?

1991 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றிவைத்துப் பேசும் போது,

"கச்சத்தீவை மீட்பேன்" என்று சபதமிட்ட ஜெயலிலதா,அந்த சபதத்தை நிறைவேற்ற
அதன்பின் ஆட்சி செய்த அந்த ஐந்தாண்டு காலமும் அதற்காக ஒரு சிறிய
துரும்பையாவது கிள்ளிப்போட்டு இருப்பாரா?..

அதற்குப்பின்,

20.04.1992 ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா பேசும்போது"கச்சத்தீவை மீட்க
வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு
அனுப்பினோம்.

ஆனால்,

கச்சத்தீவை மீட்பது என்பது விரைவில் நடக்க கூடிய ஒன்றாகத் தெரியவில்லை' என்று கூறியிருகிறார்.

இதற்கு அடுத்து 30.09.1994இல் அப்போது தமிழக முதல்வராக இருந்த
ஜெயலலிதா,அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களுக்கு ஒரு கடிதம்
எழுதுகிறார்.

அதில்,

"The ceding of this tiny island to
the Island Nation had been done by the Government of India in the
interest of better bilateral relations"..

அதாவது,

"தீவு நாடான இலங்கைக்கு,இந்த சின்னஞ்சிறிய தீவினை(கச்சத்தீவு) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது,இந்தியாவிற்கும்,இலங்கைக்கும் இடையே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான்" என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இவர் அன்று சொன்ன பாடத்தைத்தான் இன்னமும் மத்தியிலே உள்ள பெரிய மனிதர்களும் சொல்லி வருகின்றார்கள்.

இன்னும் ஒரு ஆதாரத்தோடு சொல்வது என்றால் தமிழக சட்டமன்றத்தில் 29.03.1972
ஆம் நாள் அன்று கச்சத்தீவு பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கு அன்றைய
முதல்வர் கருணாநிதி சொன்ன பதிலில்..

"நாம் கச்சத்தீவை குறித்த
நியாமான விவகாரங்களை மத்திய அரசுக்கு தெரிவித்து உள்ளோம். கச்சத்தீவு
பிரச்னை இந்திய அரசு தலையிட்டு ஒரு நல்ல நிலைமையை எடுத்து.பிரச்னையை
சுமுகமாக தீர்த்து வைக்க வேண்டும்.." என்று சொன்னார்.

இதில் ஒரு
வேடிக்கை என்னவென்றால் இன்று கச்சத்தீவு பற்றி வாய் கிழியும் பேசும்
ஜெயலலிதாவின் கட்சியான அதிமுக,கழக ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவை திரும்ப
பெறுவதற்கான தீர்மானத்தை அன்றைய ஆளும்கட்சியான திமுக கொண்டு வந்தபோது அதனை
ஆதரிக்காமல் வெளி நடப்பு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது..

1974 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27ஆம் தேதிதான் அப்படியொரு அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வந்தது.

அதாவது,

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது என்று.அதே ஜுன் 29 ஆம் தேதி அன்று அன்றைய
முதல்வர் கருணாநிதி அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தலைமை
செயலகத்தில் கூட்டி,அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் ஒரு
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால்,

அப்போதும் அந்த கூட்டத்தில் அதிமுக கலந்து கொண்டு தன் கருத்தை பதிவு செய்யவில்லை.

அந்த தீர்மானத்தின் அடைப்படையில் அன்றைய முதல்வர் கருணாநிதி,பிரதமருக்கு எழுதிய கடிதம் வருமாறு...

"On behalf of the Government of TamilNadu and behalf of the people of
Tamilnadu,I am constrained to express of our deep sense of
dis-appointmnet over the resent indo-Sri Lanka Agreement,according to
which sri-Lanka's claim to Kachativu has been conceded by the Government
of India.May I express the hope that you will take into consideration
the decision contained in the Resolution and take appropriate
action.."..

ஆனால் ,

23.07.2003 ஆம் நாள் அன்று ஜெயலலிதா அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்,

இந்தியா,இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நல்லுறைவை பேணவும்,தமிழக
மீனவர்கள் பாரம்பரியாக அனுபவித்து வரும் உரிமைகளைக் காப்பற்றவும் உள்ள ஒரே
வழி என்று சொல்லிவிட்டு மேலும் சொல்கிறார்..

"The best posssible
solution is to get the island of Katcha theevu and adjacent seas on
lease in perpertutity solely for fishing,drying of nets and
pilgrimage.Sri Lanka's Sovereignty over Katcha theevu could be upheld at
the same time.."

(அதாவது "கச்சத்தீவையும் அதற்கு அருகிலே உள்ள
கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும்,வலைகளைக் காய
வைப்பதற்கும்,யாத்திரை செல்வதற்கும் நிரந்திர குத்தகைக்கு பெறலாம்:

அதே நேரத்தில் கச்சத்தீவில் இலங்கைக்கு உள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்,,)

இப்படி எல்லாம் எழுதியும்,பேசியும் வந்தவர்தான் இந்த ஜெயலலிதா..

இறுதியாக ஜெயலலிதாவின் விசுவாசிகளிடம் ஒரு கேள்வி..

1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இது வரையிலும் இந்த அம்மா தானே ஆட்சியில் இருந்தார்கள்.?

இது வரையிலும் என்ன செய்துவிட்டார்..?

கச்சத்தீவை வாங்கித்தந்து விட்டாரா?

"கச்சத்தீவை மீட்கும் அதிகாரம் மத்திய அரச்க்குதான் உண்டு என்றும்,இந்தியாவிற்கும்,இலங்கைக்கும்
இடையே நல்லுறவு வேண்டும் என்பதற்குத்தான் கச்சத்தீவு இலங்கைக்கு
வழங்கப்பட்டது" என்றும்,கச்சத்தீவில் இலங்கைக்கு உள்ள இறையாண்மையை நாம்
ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று பேசிய.அறிக்கை கொடுத்த ஜெயலலிதா,

கச்சத்தீவை கருணாநிதிதான் தாரை வார்த்துவிட்டார் என்றும்,
அதை நான் மீட்பேன் என்பது எப்பிடிப்பட்ட "கபட நாடகம்" என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா என்ன..?

கச்சத்தீவு பற்றி ஜெயலலிதா உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது 2008 ஆம் ஆண்டு.

ஆனால்,

அதற்கு முன்பே திராவிட கழக பொது செயலாளர் திரு.கீ.வீரமணி அவர்கள் இதே
கச்சத்தீவு பிரச்சனைக்காக 1997 ஆம் ஆண்டே ஒரு வழக்கினைத் தாக்கல்செய்து
உள்ளார்.

ஆனால்,

பல ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் ஒரு முடிவும் காணப்படவில்லை என்பதுதான் உண்மை..
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழல் வழக்குக்கு பயந்து கச்சத்தீவை கருணாநிதி தாரை வார்த்தார்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்- மீனவர்கள் மீது கல்வீச்சு
» எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதித்தது அரசியல் சட்டப்படி சரியா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum