TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


TET - தமிழ் - II ஆறாம் வகுப்பு - இயல் 2

2 posters

Go down

TET - தமிழ் - II ஆறாம் வகுப்பு - இயல் 2 Empty TET - தமிழ் - II ஆறாம் வகுப்பு - இயல் 2

Post by JOHN888 Tue Mar 19, 2013 5:10 am

TET - தமிழ் - II ஆறாம் வகுப்பு - இயல் 2
செய்யுள்: நாலடியார்

* நாலடியாரை பாடியவர்கள் - சமண முனிவர்கள்.

* நாலடியார் 400 பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களை கூறுவது.

* நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.

* நாலடி நானூறு என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நூல் - நாலடியார்.

* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்கள்.

* பதினெண்கீழ்க்கணக்கு எத்தனை நூல்களை உள்ளடக்கியது - 18

* பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சேர்ந்து மேல்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகிறது.

* சங்க இலக்கியகளுக்கு பின் தோன்றிய நூல்களின் தொகுப்பிற்கு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என பெயர்.

* பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் - சங்க நூல்கள் என அழைக்கப்படுகின்றன.
செய்யுள்: பாரத தேசம்
* பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38)

* பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.

* பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்

* பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.

* பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.

* பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.

* பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் - வ.ரா(ராமசாமி அய்யங்கார்)

* பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.

* பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.

* பாரதியின் முதல் பாடல் "தனிமை இரக்கம்" வெளியிட்ட பத்திரிக்கை - மதுரையிலிருந்து வெளிவந்த "விவேக பானு" என்ற பத்திரிக்கை.

* பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி(1904)

* பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப் பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)

* பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.

* பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.

* பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

* பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.

பாரதியாரின் பாடல் வரிகள்:

"வெள்ளிப்பனிமலையின்மீது உலாவுவோம்"

"ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்"

"சாதி இரண்டொழிய வேறில்லை"

"உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்" உரைநடை: பறவைகள் பலவிதம்
* பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்

* உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.

* நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.

* சமவெளி மரங்களில் வாழும் பறவைகள் - மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில், பனங்காடை, தூக்குணாங்குருவி.

* நீர் நிலைகளில் வாழும் பறவைகள் - கொக்கு, தாழைக்கோழி, பவளக்காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.

* மலைகளில் வாழும் பறவைகள் - கிருவாச்சி, செந்தைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைக்காலி, பொன் முதுகு, மரங்கொத்தி, சின்னங்குறுவான், கொண்டை உழவாரன், இராசாளிப்பருந்து, பூமன் ஆந்தை.

* பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என அழைப்பர்.

* வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலை மாற்றம் என அழைப்பர்.

* அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.

* அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.

* நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.

* தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்: வேடந்தாங்கல், கரிக்கிளி(காஞ்சிபுரம் மாவட்டம்), கஞ்சிரால்குளம், சித்திரஸ்குடி, மேலக் செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்), பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்), உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர் மாவட்டம்), வடுவூர் (தஞ்சை மாவட்டம்) கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்), வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்), வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்), கூந்தன்குளம் (திருவெல்வேலி மாவட்டம்), கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்).

* தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம்.
துணைப்பாடம்: பாம்புகள்
* விவசாயிகளின் நண்பன் - பாம்பு.

* உலகில் மனித இனம் தோன்றும் முன் பத்துகோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இனம் - பாம்புகள்.

* பாம்புப் பண்ணை அமைந்துள்ள இடம் - சென்னைக்கு அருகே கிண்டி.

* பெரும்பாலான பாம்புகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பன. சில பாம்புகள் குட்டிப்போடும்.

* உலகிலேயே மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு - ராஜநாகம்(இந்தியா). இதன் நீளம் 15 அடி. கூடுகட்டி வாழும் ஒரே வகைப்பாம்பு. இவை மற்ற பாம்புகளை கூட உணவாக்கிக் கொள்ளும்.

* பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருக்கும் - இரையை விழுங்கும், மென்று தின்பதில்லை.

* பாம்பு தான் பிடிக்கும் இறையை கொல்லவும், செரிமானத்திற்காகவும் தன்னுடைய எச்சில் நஞ்சு வைத்திருக்கிறது.

* பாம்பிற்கு காது கேட்காது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து செய்லபடும்.

* 52 வகையான பாம்புகளுக்கு நச்சுத்தன்மை உண்டு.

* பாம்பைக் கொண்றால் அதன் உடல் பிளந்து வெளிவரும் வாசனை மற்ற பாம்புகளை அந்த இடத்திற்கு வரவைக்கிறது.

* சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்து கொள்ள பாம்புகள் அடிக்கடி நாக்கை வெளியே நீட்டும்.

* நல்ல பாம்பின் நஞ்சு கோப்ராக்சின்(Cobrozin) என்ற வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

* பாம்பின் தோலுக்காகப் பாம்புகள் கொல்லப்படுவதைத் தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டம் - இந்திய அரசின் வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் - 1972.

* மஞ்சள் சிட்டு எந்த பகுதியில் வாழும் - சமவெளி பகுதியில்.

* தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்களின் எண்ணிக்கை - 13

* சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் - ஒளவையார்.

* தமிழில் உள்ள முதல் எழுத்துக்கள் - 30

* தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் - 12

* தமிழில் உள்ள மெய் எழுத்துக்கள் - 18

* உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் சேர்ந்து எத்தனை உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன - 216

இலக்கணம்:

* உடனிலை மெய் மயக்கம்:

தன் எழுத்துடன் மட்டும் சேர்ந்து வரும் - க், ச், த், ப்.

(எ.கா) பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.

* வேற்றுநிலை மெய்மயக்கம்:

தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேர்ந்து வரும் - ர், ழ்

எ.கா: சார்பு, வாழ்க்கை

* எழுத்து பிற எழுத்து இரண்டுடன் சேர்ந்து வரும் எழுத்துக்கள் - ற், ன்.

எ.கா: குற்றம், மேற்கு -ற், அன்னம், அன்பு - ன்.


* உலகம் வெப்பமடையக் காரணம் - வாகனப்புகை.

* ஆறுகள் மாசடையக் காரணம் - தொழிற்சாலைக்கழிவு.

* மழை குறையக் காரணம் - காடுகள் அழிப்பு.

* மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தந்தம்

* வண்மை - கொடைத்தன்மை, வன்மை - கொடுமை.
JOHN888
JOHN888
உதய நிலா
உதய நிலா

Posts : 29
Join date : 27/11/2011
Location : THANJAVUR

http://www.tnptf.blogspot.com

Back to top Go down

TET - தமிழ் - II ஆறாம் வகுப்பு - இயல் 2 Empty Re: TET - தமிழ் - II ஆறாம் வகுப்பு - இயல் 2

Post by மாலதி Tue Mar 19, 2013 7:22 pm

நன்றி ஜான் TET - தமிழ் - II ஆறாம் வகுப்பு - இயல் 2 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மின்தட்டுப்பாட்டைக் குறைக்க, ஒரு புது வழியைக் கண்டுபிடித்து இருக்கிறார் ஆறாம் வகுப்பு மாணவி ஹர்சதா.
» கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?
» 12ம் வகுப்பு ,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி அறிவிப்பு
» ஆறாம் விரலை விட்டவர்களுக்கு ஆரோக்கிய உணவு!
» ஒன்று, ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum