TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழர்கள் மீது அபகரிப்பு யுத்தம் சிங்களத்துடன் முஸ்லீம்களும் கூட்டு

Go down

SOLVED தமிழர்கள் மீது அபகரிப்பு யுத்தம் சிங்களத்துடன் முஸ்லீம்களும் கூட்டு

Post by ஜனனி Wed Jan 02, 2013 7:50 am

தமிழர்கள் மீது அபகரிப்பு யுத்தம் சிங்களத்துடன் முஸ்லீம்களும் கூட்டு
******************************
தமிழர்கள் மீது அபகரிப்பு யுத்தம் சிங்களத்துடன் முஸ்லீம்களும் கூட்டு 538374_299513663503464_2140690531_n

சிங்களத் தரப்பு நடத்திய அழிவு யுத்தம் முடிவுக்கு
வந்துள்ள நிலையில் இன்று அபகரிப்பு யுத்தம் தொடங்கப்பட்டிருக்கிறது. அழிவு
யுத்தத்தில் எஞ்சியிருப்பதை அபகரித்துவிட்டு தமிழ் மக்களை நட்டாற்றில்
தள்ளிவிடுவதே சிங்களத் தரப்பின் நோக்கமாக இருக்கின்றது. இதற்காக மற்றொரு
சிறுபான்மை இனமான முஸ்லிம் இனமும் சிங்களத் தரப்புடன் இணைந்துள்ளது.

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட
தமிழ் மக்களுக்கு இந்திய அரசின் உதவியாக கிடைக்கவுள்ள வீடுகளை சிங்கள
மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கிதென்ற அபகரிப்புச் செய்தியை இன்று ஈழமுரசு
சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்துகிறது. இதனால், கடந்த 30 வருடங்களாக
இடம்பெற்ற யுத்தத்தால் தமது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான
தமிழ்க் குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறதென்பதையும்
ஈழமுரசு சுட்டிக்காட்ட விளைகின்றது.

வன்னியில் இறுதி யுத்தம்
இடம்பெற்ற பின்னர் அங்கு வாழ்ந்த தமிழ் மக்களின் இரண்டரை இலட்சம் வீடுகள்
அழிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு
ஐம்பதினாயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்திய அரசாங்கம் முன்வந்தது.
இந்த வீடுகளைப் பயனாளிகளான தமிழ் மக்களே கட்டிக்கொள்வார்கள் என்றும்
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் மேற்பார்வை செய்யுமென்றும் கூறப்பட்டது.

ஆனால், தமிழ் மக்களுக்காக என்று வழங்கப்பட்ட இந்த வீடுகளில் இன்று சிங்கள
முஸ்லிம் மக்களும் பங்குதாரர்களாக மாறியிருக்கின்றனர். சிறீலங்கா
அரசாங்கத்தினதும் அதில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களினதும்
திட்டமிட்ட செயற்பாடுகளால் இந்த பங்குதாரர் ஒப்பந்தம் அரங்கேற்றப்படுகிறது.
அதனைவிட வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவும்
இதில் பங்குதாரர்களாக மாறியிருக்கிறது.

தமிழர் தாயகத்தில்
சிறீலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கபட்ட சாட்சியமற்ற யுத்தத்தின் காரணமாக
இங்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல
இலட்சக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். அங்கவீனமாயினர். தமது சொத்துக்கள்
அனைத்தையும் இழந்தனர். ஆனால், இந்த இழப்புகளுக்கு எத்தகைய நட்டஈடுகளும்
வழங்கப்படவில்லை. மாறாக, இந்த மக்களுக்கென சர்வதேச நாடுகளால்
வழங்கப்படுகின்ற நிதியுதவி, பொருளுதவிகள் யாவற்றையும் சிறீலங்கா அரசாங்கம்
அபகரித்து தென்னிலங்கையின் அபிவிருத்திக்கே பயன்படுத்தி வருகின்றது.

நீண்ட சாலைகள், பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றினை
அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் மக்களின் நிதியே பயன்படுத்தப்படுகின்றது.
அதைவிட அமைச்சர்களின் சுகபோக வாழ்க்கைக்கும் தமிழ் மக்களுக்கென உலக நாடுகள்
வழங்குன்ற நிதி பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையிலேயே இந்திய அரசாங்கம்
தமிழ் மக்களுக்கென வழங்கிய ஐம்பதாயிரம் வீடுகளிலும் சிங்கள மக்களும்
முஸ்லிம் மக்களும் பயனடைகின்றனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்னர்
மீளக்குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான
வீட்டுத்திட்டத்திற்கு பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கு உள்நோக்மொன்றின்
அடிப்படையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குழுவொன்றை நியமித்திருக்கிறார்.

வடக்கு, கிழக்கு மீள்குடியேற்றத்திற்கான ஜனாதிபதி செயலணி என்ற இந்தக் குழு
புள்ளித்திட்ட மொன்றின் அடிப்படையில் வீட்டுத்திட்டப் பயனாளிகள் தெரிவை
மேற்கொள்ளுமாறு அதிகாரிகளைப் பணித்தது. இந்த புள்ளித்திட்ட நடைமுறையில்
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீளக்குடியமர்ந்தவர்களுக்கு 20 புள்ளிகள்
வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிகள் சிங்கள, முஸ்லிம் குடும்பங்களை
இலக்குவைத்து சிபார்சு செய்யப்பட்ட புள்ளிகளாகும்.

ஏனெனில்,
2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் பல
ஆயிரக்கணக்கான சிங்கள, முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு இந்திய வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொடுக்கும்
நோக்கத்துடனேயே இந்தப் புள்ளித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு
அடுத்தகட்டமாக காணி உறுதி என்ற ஆவணமும் இங்கு
முக்கியத்துவப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்திய வீட்டைப் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு நிரந்தரமாக காணி உறுதி
இருக்க வேண்டும். இதனாலும் தமிழ் மக்கள் இந்திய வீட்டைப் பெறும்
வாய்ப்புகளை இழந்திருக்கின்றனர். வன்னியில் முல்லைத்தீவின் கரையோரமாகவும்
கிளிநொச்சியிலும் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் தமிழ் மக்களின் காணிகளை
அபகரித்தே குடியேற்றப்பட்டிருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த
விடயம்.

இதில் குறித்த ஒரு பகுதியினர் காடுகளை வெட்டியும்
குடியேற்றப்பட்டிருக்கின்றனர். அத்துடன் அரச காணிகளிலும் சிங்கள மக்கள்
குடியேற்றப்பட்டிருக்கின்றனர். சிங்கள மக்களைப் போன்றே அரசில் அங்கம்
வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி
வடமாகாணத்தின் பல இடங்களிலும் முஸ்லிம் குடும்பங்களைக் குடியேற்றியுள்ளனர்.

மேற்படி குடியேற்றவாசிகள் அனைவருக்கும் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மிக
இரகசியமான முறையில் காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது. இந்த உறுதிகள்
மூல உறுதிகள் அற்ற நிலையில் புதிய உறுதிகளாக உள்ளன. இந்த உறுதிகளை
வழங்கியதன் மூலம் இவர்கள் வீட்டுத்திட்டத்தைப் பெறுவதற்கான தகுதியைப்
பெற்றவர்களென அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும்
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த தமிழ் மக்கள் யுத்தத்தின் போது தமது காணி
உறுதிகளைத் தவறவிட்டிருக்கின்றனர்.

பல ஆயிரக்கணக்கான தமிழ்
மக்களின் காணி உறுதிகள் சிங்களப் படையினரின் செல் தாக்குதல்களால்
வீடுகளுடன் எரிந்து சாம்பராகிவிட்டன. இந்த மக்களுக்கு மாற்று வழிகளை
ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கமோ அரசின் தமிழ் அதிகாரிகளோ தயாராக இல்லை.
உறுதி இல்லாத நிலையில் பரம்பரை பரம்பரையாகக் கோயில் நிலங்களில் வசித்த
மக்களுக்கும் இதே கதிதான் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவர்கள் வீட்டுத்திட்ட
உள்வாங்கலிலிருந்து நீக்கப்படுகின்றனர்.

ஆனால், யாழ்
குடாநாட்டில் நிலைமை இந்த அபகரிப்பு நிலை ஒரளவு மாறுபட்டதாக இருக்கிறது.
இங்கு வழங்கப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தில் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின்
ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. யுத்தத்தால் பாதிக்கப்படாத தமது கட்சி
ஆதரவாளர்களுக்கு கட்டாயம் வீட்டுத்திட்டங்களை வழங்க வேண்டுமென்று
ஈ.பி.டி.பி பிடிவாதமாக நிற்கின்றது. தனது உறுப்பினர்களில் வீடற்ற
அனைவருக்கும் கட்டாயம் இந்திய வீட்டுத்திட்டம் வழங்க வேண்டுமென்று
யாழ்ப்பாணத்திலுள்ள அரச அதிகாரிகளைப் பணித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, வீடு
வழங்கப்பட வேண்டியவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றையும் யாழ்
அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் வழங்கியுள்ளார்.

30
வருடங்கள் நடைபெற்ற கொடிய போரில் தமிழ் மக்கள் செத்துச்
சின்னாபின்னமாகியுள்ளனர். இவர்களுக்கு உதவி செய்வதற்கோ அழிந்த வீடுகளைக்
கட்டிக்கொடுப்பதற்கோ சிறீலங்கா அரசாங்கம் முன்வரவில்லை. யுத்தத்தில் அழிந்த
தமிழ் மக்களின் வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேட்டபோது,
‘வீடுகளைக் கட்டிக்கொடுக்க எங்களிடம் நிதி இல்லை.

வேண்டுமாயின்
விவசாயத்திற்கு உதவி செய்கின்றோம். விவசாயம் செய்து அவர்கள் வீடுகளைக்
கட்டிக்கொள்ளலாம்’ என்று ஏளனமாகப் பதிலளித்தார். இவ்வாறு பதிலளித்த மகிந்த,
இன்று இந்தியா தமிழ் மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை வழங்கியிருக்கின்ற போது
அதற்கென ஒரு குழுவை அமைத்து அந்த வீடுகளையும் அபரிக்க
முற்பட்டிருக்கின்றமை உண்மையில் வெக்கக்கேடானது. வேதனையானது. இதற்கு
அப்பால், முஸ்லிம் தலைமை படு மோசமான அபகரிப்புச் செயல்களில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

தமிழ் மக்களின் விடுதலைப்
போராட்டத்தில் குளிர் காயும் செயல்களிலேயே தொடர்ந்தும் முஸ்லிம் தலைமை
ஈடுபட்டு வருகின்றது. ஆளும் கட்சி அரசுகளுடன் ஒட்டுண்ணி அரசியல்
நடத்திவரும் முஸ்லிம் தலைமை அந்த ஒட்டுண்ணி அரசியல் மூலம் கடந்த காலங்களில்
எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளில்
ஈடுபட்டமை சகலரும் அறிந்த உண்மை. இந்தச் செயல்களாலேயே அவர்கள்
யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்பதும் யாவரும் அறிந்த
உண்மை.

ஆனால், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள்
வெளியேற்றப்பட்டமை தவறென்று வாதிடுகின்ற தமிழ் தலைவர்கள் இன்றைய யதார்த்த
நிலையைப் புரிந்துகொண்டாவது தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். அரசுடன்
ஒட்டியிருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள் விடுதலைப் போராட்டம் தவறென்று
வாதிட்டு வருவதுடன் இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு
வருகின்ற உதவிகளில் பங்குபோட முனைகின்றமை எந்த வகையில் நியாயமானது? தமிழ்
மக்களுடன் பேசினால் தங்களுடனும் பேச வேண்டும். தமிழ் மக்களுக்கென தீர்வு
ஒன்று வழங்கப்பட்டால் தமக்கும் தீர்வு வேண்டும்.

தமிழ் மக்களுக்கு
உலக நாடுகள் உதவி செய்தால் அதில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று
வெட்கமில்லாமல் கையேந்துகின்ற முஸ்லிம் தலைமைகள், தமிழ் மக்களுடன் இணைந்து
விடுதலைக்காகப் போராடியிருந்தால் அவர்களின் கோரிக்கைகள் நியாயமானதாக
இருந்திருக்கும். அதொன்றையும் செய்யாமல் இன்று தமிழ் மக்களுடைய உதவிகளில்
பங்கு கேட்பது எந்த வகையில் நியாயமென்பதை முஸ்லிம் தலைமை உணராமலிருப்பது
ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும்
வீடுகளில் தமது மக்களுக்கும் வழங்க வேண்டுமென்று முஸ்லிம் தலைவர்கள்
சிறீலங்கா அரசாங்கத்தை வற்புறுத்தியுள்ளனர். இதனால் அவர்களும் இதில்
உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உண்மையாகப் பாதிக்கப்பட்ட தமிழ்
மக்களுக்கு கிடைக்கவிருப்பது சொற்ப எண்ணிக்கையான வீடுகள் மாத்திரமே. இந்த
நிலை ஏற்புடையதல்ல. இந்த விடயத்திற்கு எதிராக இந்திய மக்கள், குறிப்பாக
தமிழ் நாட்டு மக்கள் கொதித்தெழ வேண்டும். யுத்தத்தால் அழிவுகளைக்
கண்டவர்கள் தமிழ் மக்கள் தான். சிங்கள மக்களுக்கோ முஸ்லிம் மக்களுக்குகோ
பெரும் அழிவுகள் நடக்கவில்லை. எனவே இந்திய அரசாங்கம் வழங்குகின்ற உதவிகள்
உண்மையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடைய வேண்டுமென்று
தமிழகத்திலுள்ள தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்த வேண்டும்.

இந்திய
அரசினால் வழங்கப்படுகின்ற இந்த வீட்டுத்திட்ட உதவியைப் பெறுவதற்கு
தகுதியானவர்கள் தமிழ் மக்கள் மாத்திரமே என்பது தமிழகத்திலுள்ள ஈழத் தமிழ்
உணர்வாளர்களுக்கு நிச்சயம் தெரியும். எனவே, அவர்கள் குரல்கொடுக்க வேண்டும்.
புலம்பெயர் தமிழ் மக்களும் இதில் காத்திரமான பங்கெடுக்க வேண்டும்.
முடியுமான வரையில் ஈழத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பது உங்கள்
கடமையென்பதை மறந்துவிடாதீர்கள்.

வீரமணி
நன்றி : ஈழமுரசு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சத்தமின்றி யுத்தம்! இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா: மீனவர்களை தூண்டி கடல் வளத்தை அழிக்கும் தந்திரம
» காங்கிரசார் தங்கபாலு மீது நில அபகரிப்பு புகார் செய்வார்கள்; இளங்கோவன் திடீர் எச்சரிக்கை
» ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார்
» வீரபாண்டி ஆறுமுகம் மீது மற்றொரு நில அபகரிப்பு புகார்
» சொத்து அபகரிப்பு: கே.என். நேரு உள்பட 11 பேர் மீது போலீஸில் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum