TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சீனாவின் இராணுவ பயிற்சியும்,இலங்கையின் தேசிய மாணவர் படையணியும்.

2 posters

Go down

சீனாவின் இராணுவ பயிற்சியும்,இலங்கையின் தேசிய மாணவர் படையணியும். Empty சீனாவின் இராணுவ பயிற்சியும்,இலங்கையின் தேசிய மாணவர் படையணியும்.

Post by sakthy Thu Oct 11, 2012 1:25 am

சீனாவின் இராணுவ பயிற்சியும்,இலங்கையின் தேசிய மாணவர் படையணியும்.

சமீப காலமாக இலங்கை இராணுவம் முன்னாள் விடுதலைப்புலி சந்தேக நபர்களுக்கும்,தமிழ் மாணவர்களுக்கும் தேசிய மாணவர் படையணி என்ற பெயரில், இராணுவப் பயிற்சி கொடுத்து வருகிறது.இதற்கு பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,மற்றைய பாடசாலை மாணவர்களுக்கு, பெற்றோர் ஆதரவுடன் பயிற்சி தந்து வருகிறது என்பதை அறிந்திருப்பீர்கள்.இப்படியான பயிற்சி அமெரிக்கா ஐரோப்பா போன்ற பல நாடுகளில் 18 வயதிற்குப் பின் கட்டாயமாக கொடுக்கப்பட்டு வருகிறது.இராணுவ பயிற்சி பெற விரும்பாதவர்கள்,சிவில் பயிற்சியை,அதாவது மருத்துவ நிலையங்கள்,முதியோர் இல்லம் போன்றவற்றில் எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவில் முன்னாள் குத்துச்சண்டை வீரர் முகமது அலி இந்தப் பயிற்சி எடுக்க மறுத்தது நினைவிருக்கலாம்.

ஆனால் சீனாவில், Law of the People's Republic of China on National Defense Education,இராணுவப் பயிற்சி மாணவர்களுக்கு கட்டாயமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு, அரசியல் ஸ்திரத்தை ஏற்படுத்தவும், பொருளாதார அபிவிருத்திக்கும் அவசியம் என கூறப்பட்டு,1955 ஜூலையில் இந்த சட்டம் அமுலுக்கு வந்தது. 2012 ல் முழு சீனாவிலும் அனைத்து பள்ளிகள்,பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு,கல்வி அமைச்சின் கீழும்,அரசியல் திணைக்கழகத்தின் கீழும், Peoples Liberation Army (PLA)ஆல் , கொண்டு வரப்பட்டது.இதன்படி 18 – 22 வயதிற்கு உட்பட்டவர்கள் 24 மாத காலப் பயிற்சியை எடுத்தல் வேண்டும். PLA,மாணவர் படையணியை ஒரு குறுகிய படையணி போல செயற்படக் கூடிய முறையில் அமைத்தாலும், அரசியலை திடப்படுத்தும் நோக்குடனேயே அமைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம்,தொடர்ந்து சீனாவில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த மாணவர் புரட்சிகள் தான்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு இராணுவப் பொறுப்பாளர்,கல்வி அமைச்சை சேர்ந்த அதிகாரி ஒருவருடன் இருந்து இவற்றைக் கவனிப்பார்.இந்தப் பயிற்சி பள்ளி மதிப்பீட்டுடன் சேர்த்துக் கொள்ளப்படுவதால்,இது கட்டாயமாக்கப்படுள்ளது.இதற்கான செலவை அரசும்,PLA யும் இணைந்து ஏற்றுக் கொள்வதுடன், ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மீள் பயிற்சியும் கொடுக்கப்படும்.

2005 ல் ம சே துங்கின் பிறந்த இடமான ஹுனானில் Amerikan Idol,போன்று,Super Girls என்ற ஒரு நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நடத்தியது.120,000 பெண்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், Li Yuchun from Sichuan என்பவர் வெற்றி பெற்றார்.400 மில்லியன் மக்கள் கலந்து கொண்டதுடன்,8 மில்லியன் பேர் SMS போன்றவை மூலம் வாக்களித்தனர்.இதை ஏன் சொல்கிறேன் என்றால்,இந்த நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தும் CCTV, இது ஒரு மோசமான சூழ்ச்சி என்று வர்னித்ததுடன், சீன ஆட்சியினரும் இதை,ஒரு ஆபத்தான போக்கு என்று கூறினர்.இந்த வகையான நிகழ்ச்சிகளும்,பல்கலைக்கழக மாணவர்களின் போக்கும், ஆட்சியினருக்கு எதிரான மாணவர் போராட்டங்களும், மாணவர்களிடம் ஏற்பட்டு வரும் புதிய அரசியல் பார்வையினால், மற்றைய வேலையாட்கள் இடையேயும் பரவி விடலாமென்ற என்ற அச்சமும் பீக்கிங்கிடம் அதிகரித்து வருகிறது.காரணம் 1919 மே 4 ல் மாணவர் எழுச்சியும், ரஷ்ய புரட்சியும், இப்படியான நிலையில் தான் நடந்தது என்ற பயமும் ஆட்சியினரிடம் இருக்கவே செய்கிறது.

1989 ல் Tiananmen Square ல் நடந்த மாணவர்- தொழிலாளர்களின் இணைந்த,ஜனநாயக உரிமைகள்,வாழ்க்கை செலவு போன்றவற்றுக்காக, நடத்தப்பட்ட போராட்டமும்,அதை அடக்க PLA கனரக ஆயுதங்களை பாவித்ததையும் ஆட்சியினர் நினைவில் கொண்டு, அந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இந்த நிலைமையை சரி செய்ய அயல் நாடுகளுடனான விரோதப் போக்கை ஏற்படுத்தி, மக்களை திசை திருப்ப பீக்கிங்க் முயற்சி செய்து வருவதையும் காண முடிகிறது. இதற்கு பாகிஸ்தான்,பங்களாதேஷ்,இலங்கை போன்ற நாடுகளை தன் வசம் திருப்பி வைத்துள்ளது. சரிந்து வரும் சீனாவின் பொருளாதாரம்,விலைவாசி அதிகரிப்பு, அதிகரித்து வரும் மக்களின் எதிர்ப்பு,அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் இவற்றை சரி செய்ய வேண்டிய கட்டாயம், சீனாவின் மத்திய ஆட்சியினருக்கு இருப்பதால்,மாணவர் படையணி பயிற்சிகளை கட்டாயப் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,சீனாவின் செல்லப் பிள்ளையான இலங்கை,சீனாவின் வழி நடத்தலில்,சமிபத்தில் வந்த பாதுகாப்பு அமைச்சரும்,அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைகளையும் சரிவர செயல்படுத்த தொடங்கி உள்ளது.அதாவது,புணர்வாழ்வு என்ற பெயரில், முன்னாள் விடுதலைப் புலிகளையும்,மற்றும் பள்ளி மாணவர்களையும் இணைத்து மாணவர் படையணியை அமைத்து பயிற்சி அளித்து வருகிறது.சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் மிக பெரிய முறையில் அணிவகுப்புகளும் கொண்டாட்டங்களும் நடந்தன. இதன் உள் நோக்கம் புரியாத,புரிந்து கொள்ள விரும்பாத பெற்றோர்களும் இதற்கு உடந்தையாக இருந்து வருகின்றனர்.

உண்மையிலேயே, 1989 ல் சீன மாணவர்கள் - தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக இராணுவம் செயல் பட்டது போல்,தமிழ் ஈழப் பகுதிகளில் இனிமேல் வரும் போராட்டங்களை சீர் குலைக்கவும்,அதே சமயம் போராடும் மக்களுக்கு எதிராக, மக்களில் இருந்தே உருவான படையணியை பயன்படுத்தி அடக்கி விடவும் திட்டமிட்ட செயலாகும். முன்னர் விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படியான ஊர்காவல்படை ஒன்றை அமைத்து தமிழ் மக்கள் மேல் தாக்குதல்களை நடத்தியதை நினைவில் கொள்ளலாம். ஆக இந்தப் படையணி தமிழ் மக்கள் மேல், தமிழ் மக்களை வைத்தே அடக்கும் எண்ணம் கொண்ட ஒரு செயலாகும்.இது முற்றாக சீனாவின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. சில நேரம் ஒரு தீர்வுத் திட்டம் ஒன்று வந்து இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்பட்டாலும் கூட,இந்த படையணி இராணுவத்தின் செயல்களை தொடரும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கூட சீனாவோ அல்லது இலங்கையோ ஒன்றை மறந்து போனது ஏன்? சீன மத்திய அரசும்,PLA உம் ,உளவுப் பிரிவினரும் சூழ்ந்து நின்று உளவு பார்த்த நிலையிலும் கூட, Tiananmen Square போராட்டத்தை முன்னரே கண்டு கொள்ள முடியாமல் போனதும்,தடுத்து நிறுத்த முடியாமல் போனதும் எப்படி? அன்று அதி பயங்கர ஆயுதங்கள் பாவிக்கப்படாது இருந்திருந்தால், இன்று சீன கம்யுனிஸ்ட் ஆட்சி, ரஸ்யா போல் இருந்த இடம் தெரியாது போயிருக்கும்.அதே போல் ஏழு நாடுகளின் ஆதரவும்,தடை செய்யப்பட்ட ஆயுதங்களும் இல்லாதிருந்திருந்தால்,மனவலிமை பெற்றிருந்த விடுதலைப் புலிகளின் முன்னால், சிங்களம் என்ற நாடே கேள்விக்குறியாகி இருந்திருக்கும். மக்களின் போராட்டங்களை எந்த சக்தியாலும் தடுக்கவோ அழிக்கவோ முடியாது என்பதையும்,எந்த விதமான சதி வேலைகளாலோ,திட்டமிட்ட செயல்களாலோ சுதந்திர உணர்வை பாலம் போட்டு தடுத்துவிட முடியாது என்பதையும் சீனா மட்டுமல்ல,இலங்கையும் விரைவில் உணரத்தான் போகின்றன.

சக்தி.



avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சீனாவின் இராணுவ பயிற்சியும்,இலங்கையின் தேசிய மாணவர் படையணியும். Empty Re: சீனாவின் இராணுவ பயிற்சியும்,இலங்கையின் தேசிய மாணவர் படையணியும்.

Post by மாலதி Thu Oct 11, 2012 8:48 am

சீனாவின் இராணுவ பயிற்சியும்,இலங்கையின் தேசிய மாணவர் படையணியும். 336442 சீனாவின் இராணுவ பயிற்சியும்,இலங்கையின் தேசிய மாணவர் படையணியும். 336442 சீனாவின் இராணுவ பயிற்சியும்,இலங்கையின் தேசிய மாணவர் படையணியும். 336442


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியாவில் இலங்கையின் தேசிய கொடியை அகற்றி ஆர்ப்பாட்டம்
» இலங்கையின் அரச மற்றும் இராணுவ தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை!- ஜெனிவாவில் பிரித்தானியா யோசனை முன்வைக்கும்?
»  இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட இணைப்பு)
» இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டும் என்று ஜனாதிபதியும் அமைச்சரவையும் மேற்கொண்டுள்ள தீர்மானத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
» 1943ஜூலை 6ஆம் தேதி ஜப்பான் பிரதமரும் இராணுவ அமைச்சருமான ஜெனரல் ஹிடெக்கி டோஜோ, நேதாஜியுடன் இந்திய தேசிய இராணுவத்தின் அணிவகுப்பைப் பார்வை இட்டார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum