TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காவிரி நதி நீர்ப் பிரச்சினை: தமிழகத்துடன் “மல்யுத்தம்” நடத்தும் கர்நாடகம்(ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரி) By எம். காசி நாதன்!

Go down

SOLVED காவிரி நதி நீர்ப் பிரச்சினை: தமிழகத்துடன் “மல்யுத்தம்” நடத்தும் கர்நாடகம்(ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரி) By எம். காசி நாதன்!

Post by மாலதி Wed Oct 10, 2012 10:05 am

தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர்
பகிர்வு பிரச்சினை இரு புறமும் உள்ள மக்களை ஏகத்திற்கும் பதற்றத்தில் மூழ்க
வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நடைபெறும்
போராட்டங்கள், பந்த் எல்லாமே அங்குள்ள தமிழர்களை அச்சத்தில் வாழ
வைத்துள்ளது.


தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே தீர்வு என்ற
அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்க, கர்நாடக மாநில முதல்வர்
ஜெகதீஷ் ஷட்டரோ, “காவிரியில் தண்ணீர் திறந்து விட பிரதமர் மன்மோகன்சிங்
போட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று காவிரி நதி நீர் ஆணையம், உச்ச
நீதிமன்றம் என்று வேகமாக நடையைக் கட்டி பயணித்துக் கொண்டிருக்கிறது.


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா,
இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருப்பவர். அவரே, “தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் உத்தரவை ரத்து செய்ய
வேண்டும்” என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதும், தமிழகத்தில் அவருக்கு
கடும் எதிர்ப்பு கிளம்பியது. “தமிழக மத்திய அமைச்சர்கள் (திராவிட
முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்) ஏன் இதனை கண்டிக்காமல்
இருக்கிறார்கள்” என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், “தன் சொந்த
மாநிலத்திற்கு ஆதரவாகப் பேசிய கிருஷ்ணா மத்திய அமைச்சராக நீடிக்கும்
தகுதியை இழந்துவிட்டார். ஆகவே அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்” என்று
டொக்டர் ராமதாஸும் கோரிக்கை வைத்துள்ளனர், கண்டித்துள்ளனர். ஆனால்
தி.மு.க.வோ, ஆளும் அ.தி.மு.க.வோ இதுபற்றி கருத்துக் கூறாமல் அமைதி
காக்கின்றன.

காவிரி நதி நீர்ப் பிரச்சினை: தமிழகத்துடன் “மல்யுத்தம்” நடத்தும் கர்நாடகம்(ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரி) By எம். காசி நாதன்! Cauvery-river-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D

இந்நிலையில் காவிரி நதிநீர் பகிர்வு பிரச்சினையில் தண்ணீரை திறந்து விட
வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியதால், கர்நாடக மாநில அரசு
மேட்டூர் அணைக்கு 9000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டது. பிறகு திடீரென்று
அதை 5000 கன அடியாக குறைத்தது. இதற்கிடையில் கர்நாடகாவில் உள்ள
கிருஷ்ணசாஹர் அணையை கர்நாட விவசாயிகள் முற்றுகையிட்டார்கள். “பிரதமருக்கு
நல்ல புத்தி வழங்கு” என்று தங்கள் மாநிலத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோயில்
முன்பு வித்தியாசமாக வழிபட்டார்கள்.


இந்நிலையில் இன்னும் அதை உஷ்ணப்படுத்தும் விதமாக கர்நாடக முன்னாள்
முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்த கவுடா போன்றவர்களும் களத்தில்
குதித்தார்கள். அதிலும் குறிப்பாக சதானந்த கவுடா, “உச்சநீதிமன்ற தீர்ப்பு
நம் மாநிலத்திற்கு விரோதமாக வருமேயானால் இங்குள்ள அமைச்சர்கள், முதலமைச்சர்
அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்” என்றே கொந்தளித்தார். கர்நாடக
மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா – பிரதமர் மன்மோகன் சிங்கை
சந்தித்து காவிரி பிரச்சினை பற்றி பேசிவிட்டு வந்தார். “பேச்சுவார்த்தை
மூலம் தீர்ப்போம்” என்பது கர்நாடகாவின் வாதம். ஆனால் “பேசிப் பார்த்து
விட்டோம். நீங்கள் கேட்கவில்லை. அதனால் கோர்ட் மூலமே தீர்த்துக் கொள்வோம்”
என்பது தமிழகத்தின் வாதம். இப்படி இரு மாநிலங்களுக்கும் இடையேயான காவிரி
நீர் பிரச்சினை கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.


தமிழக காவிரி டெல்டா மாவட்டங்கள், குறிப்பாக தமிழகத்தின்
“நெற்களஞ்சியம்” என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம் குறுவை
சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. மத்திய அரசிலிருந்து ஒரு
குழு இரு மாநிலங்களுக்கும் சென்று விசாரித்துவிட்டுச் சென்றிருக்கிறது.
கர்நாடகாவின் அணைகளில் தண்ணீர் ததும்புவதையும், தமிழக அணைகளில் தண்ணீரின்
கொள்ளளவு குறைந்து சுருங்கிக் கிடப்பதையும் பார்த்து விட்டுத் திரும்பிச்
சென்றிருக்கிறது.

காவிரி நதி நீர்ப் பிரச்சினை: தமிழகத்துடன் “மல்யுத்தம்” நடத்தும் கர்நாடகம்(ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரி) By எம். காசி நாதன்! Cauvery-CWC-Team-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D


மெட்ராஸ் ஸ்டேட்- மைசூர் ஸ்டேட்!


காவிரி நீர் கர்நாடக மாநிலம் குடகு மலையில்தான் உருவாகிறது. ஆனால் அது
பாய்ந்து ஓடும் பகுதிகள் பெரும்பாலானவை தமிழகத்திற்குள் உள்ளன. அப்போது
இருந்த “மெட்ராஸ் ஸ்டேட்டிற்கும், மைசூர் ஸ்டேட்டிற்கும்” இடையே முதலில்
இந்த காவிரி நதிநீர் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளப்பட்டது. அதை 1892ஆம் வருட
ஒப்பந்தம் என்று அழைக்கிறோம்.


இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் மெட்ராஸ் ஸ்டேட்டின்
(தமிழகம்) அனுமதியின்றி பாசன வசதிகளை பெருக்கிக் கொள்ளக்கூடாது என்பதுதான்.
அதாவது விவசாய நிலங்களை தமிழகத்தின் அனுமதியில்லாமல் அதிகரித்துக்
கொள்ளாதீர்கள் என்பதுதான் முக்கிய ஷரத்து. ஆனால் இதில் பிரச்சினையை முதலில் கிளப்பியது மைசூர் ஸ்டேட்தான்.


முதன் முதலில் எங்கள் மாநிலத்திற்குள் கிருஷ்ணசாஹர் அணையைக் கட்டுவோம்
என்று அடம்பிடித்து “காவிரி சர்ச்சையை” முதலில் தொடக்கி வைத்தது மைசூர்
அரசுதான். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு இங்கிலாந்தில் காணப்பட்டது.
அந்நாட்டில் உள்ள “மினிஸ்ட்ரி ஒஃப் இந்தியன் எபையர்ஸ்” என்ற துறையின்
முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது இரு மாநிலத்திற்கும்
பலனளிக்கும் விதத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுதான் கிருஷ்ண சாஹர்
அணையை மைசூர் ஸ்டேட் (கர்நாடகா) கட்டிக் கொள்ளும். அதற்கு இணையாக மேட்டூர்
அணையை மெட்ராஸ் மாநிலம் கட்டிக் கொள்ளும் என்ற தீர்ப்பு. அப்படித்தான்
1924ஆம் வருட காவிரி ஒப்பந்தம் உருவானது. இதன் படி மைசூர் ஸ்டேட் புதிதாக
1.10 லட்சம் ஏக்கர் நிலம் வரை பாசன வசதிகளை பெருக்கிக் கொள்ளலாம் என்று
அனுமதி வழங்கப்பட்டது.


1924 ஒப்பந்தமும் நடுவர் மன்ற கோரிக்கையும்!


1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் அமைதியாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், 1959
வாக்கில் கர்நாடக மாநிலம் சர்ச்சைக் கொடியை தூக்கிப் பிடித்தது. “காவிரி
நதிநீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தது.
குறிப்பாக “கிருஷ்ணராஜ சாஹர் அணையைத் தொடர்ந்து ஹேமாவதி, கபினி அணைகள் கட்ட
வேண்டும், 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்ட
ஒப்பந்தம். அது எங்களை கட்டுப்படுத்தாது” என்பது கர்நாடக மாநிலத்தின்
வாதம். அடுத்த சுற்றுத் தகராறுக்கான அஸ்திவாரம் போடப்பட்டது. இதைத் தீர்க்க
அப்போதே ஐந்து முறை இரு மாநிலங்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தை
நடத்தப்பட்டது. ஆனால் எந்த தீர்வும் கிட்டவில்லை.

காவிரி நதி நீர்ப் பிரச்சினை: தமிழகத்துடன் “மல்யுத்தம்” நடத்தும் கர்நாடகம்(ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரி) By எம். காசி நாதன்! Cauvery-river-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D

சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள
முடியாது என்ற கர்நாடகாவின் வாதம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஏன் தஞ்சை விவசாயிகள் தங்கள் வயிற்றில் அடிக்க கர்நாடக மாநிலம் முயற்சி
செய்கிறதே என்று கோபத்தின் உச்சிக்கே போனார்கள். அப்போது தமிழக முதல்வராக
இருந்த கருணாநிதி, தஞ்சாவூர் காரர். ஆகவே விவசாயிகளின் உணர்வுகளை
எதிரொலித்த அவர் 1971இல் ஒரு முக்கிய கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்தார்.
அதுதான் காவிரி நதி நீர் பங்கீடு பற்றி தீர்ப்பு வழங்க ஒரு நடுவர் மன்றம்
அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை. இரு மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பங்கீடு
பற்றி பிரச்சினை எழுந்தால், அதைத் தீர்த்து வைக்க இது மாதிரி நடுவர்
மன்றங்களை அமைக்கும் அதிகாரம் இந்திய அரசியல் சட்டப்படியே மத்திய அரசுக்கு
இருக்கிறது.


வந்தது காவிரி நடுவர் மன்றம்!


தமிழகத்தின் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு,
சுப்ரீம் கோர்ட்டிற்கு போனார்கள். “எங்களுக்கு நடுவர் மன்றத்தை அமைக்க
உத்தரவிடுங்கள்” என்று கோரிக்கை வைத்தார்கள். இதுபோன்ற காலகட்டத்தில்
அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, “இன்னொரு முறை இரு மாநில
முதல்வர்களும் இப்பிரச்சினை குறித்து பேசிப் பாருங்கள்” என்று ஆலோசனை
வழங்கினார். இந்த ஆலோசனையை அன்று இந்திரா காங்கிரஸுடன் கூட்டணியாக இருந்த
தி.மு.க. தலைவர் கருணாநிதி கேட்டார். அதனால் சுப்ரீம் கோர்ட்டில் நடுவர்
மன்றம் கோரி போட்ட வழக்கை வாபஸ் வாங்க தமிழக முதல்வராக இருந்த அவர்
உத்தரவிட்டார். அதன்படி அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.


இதற்குள் மூன்று வருடங்கள் உருண்டோடின. 1974ஆம் வருடமும் வந்தது.
இப்போது கர்நாடக மாநிலம் வேதாளம் போல் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது.
இந்தமுறை “காவிரி நதி நீர் ஒப்பந்தம் 1924இல் போடப்பட்டது. 50 வருடம்
முடிந்து விட்டது. ஆகவே அந்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது” என்று புதுக்
கரடி விட்டது. அந்த ஒப்பந்தம் மூலம் காவிரி நீரை தமிழகத்துடன்
பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று அறிவித்தது. இச்சிக்கலைத் தீர்க்க “உண்மை
கண்டறியும் குழு” அமைக்கப்பட்டது. இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப்
பேசிக் கொண்டார்கள். இப்பிரச்சினையைத் தீர்க்க “காவிரி ரிவர் வோட்டர்
ஒத்தோரிட்டி” ஒன்றை அமைக்கலாம் என்றெல்லாம் அக்கூட்டங்களில் ஆலோசனை
செய்யப்பட்டது. ஆனால் உருப்படியான தீர்வு ஏதும் எட்டப்படவில்லை. இப்படியொரு
சூழ்நிலையில், 1990 வாக்கில் முதல்வர்களின் பேச்சில் எந்த முன்னேற்றமும்
இல்லை. ஆகவே நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில்
முறையீடு செய்யப்பட்டது. அதன்படி வி.பி.சிங் இந்தியப் பிரதமராக இருந்த போது
1990இல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.


இடைக்காலத் தீர்ப்பும் தமிழகத்திற்கு எதிரான கலரவமும்!


நடுவர் மன்றத்தின் முன்பு தமிழகம் தண்ணீர் கேட்டு நின்றது. அதற்கு வந்த
தலைவர்கள் அடிக்கடி மாறினார்கள் என்பது வேறு கதை. ஆனால் நடுவர் மன்றமோ,
“இடைக்கால தீர்ப்பு வழங்க எங்களுக்கு அதிகாரமில்லை” என்ற நிலைப்பாட்டை
எடுத்து விட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற எண்ணிய
தமிழகம் மீண்டும் இந்திய உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டியது. “இடைக்கால
தீர்ப்பு வழங்க அதிகாரம் இருக்கிறது” என்று உச்சநீதிமன்றம் சொல்ல,
தமிழகத்திற்கு இறுதி தீர்ப்பு வரும் வரை 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்க
வேண்டும் என்று கர்நாட மாநிலத்திற்கு உத்தரவிட்டது. வருடம் முழுவதும்
எந்தெந்த மாதங்களில் எத்தனை டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும்
வரையறுத்தது.


இந்திய நதிநீர் பிரச்சினைகள் வரலாற்றில் அமைக்கப்பட்ட நடுவர்
மன்றங்களில், இடைக்கால தீர்ப்பு வழங்கிய ஒரே நடுவர் மன்றம் காவிரிக்காக
அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் மட்டுமே என்றால் மிகையாகாது.
அப்போது
இன்னொரு உத்தரவையும் நடுவர் மன்றம் கர்நாடக மாநிலத்திற்கு போட்டது.
“இப்போது உங்கள் வசம் இருக்கின்ற 11.2 லட்சம் நீர்பாசன நிலங்களுக்கு மேல்
விஸ்தரிக்கக் கூடாது” என்பதுதான் அந்த உத்தரவு. இந்த உத்தரவுகளையும் ஏற்க
மறுத்து கர்நாடக மாநிலம் வம்பு பண்ண, இறுதியில் உச்சநீதிமன்றத்தின்
உத்தரவுப்படியே ஊர்ஜிதம் செய்யப்பட்டது. பிறகு இடைக்கால தீர்ப்பை அரசிதழில்
(கெஜட் நோட்டிபிகேஷன்) வெளியிடக்கூடாது என்று இந்திய அரசுக்கு சிக்கலை
ஏற்படுத்தியது கர்நாடக மாநிலம்.


அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இதற்காக நான்கு நாள் உண்ணாவிரதம் இருந்தார். அது குறித்த சில் விவரங்கள் இதோ::


காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக, தமிழக முதல்_அமைச்சர் ஜெயலலிதா 4
நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக
தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை
இருந்து வருகிறது. இது தொடர்பாக விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.


இந்த நடுவர் மன்றம் 1991_ம் ஆண்டு ஜுன் மாதம் 25_ந்தேதி இடைக்கால
உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. “ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி.
தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவேண்டும்” என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டு
இருந்தது. (1 டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி). சுப்ரீம் கோர்ட்டும் இந்த
இடைக்கால தீர்ப்பை உறுதிபடுத்தியது.


ஆனாலும், கர்நாடகம் போதுமான அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து
விடவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் காவிரி நடுவர் மன்ற இடைக்கால
தீர்ப்பு நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதனால் தமிழக முதல்_அமைச்சர்
ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சியினர், “பிரதமர் நரசிம்மராவ் உடனடியாக
தலையிட்டு கர்நாடக அரசை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி
செய்யவேண்டும்” என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.


இந்த பிரச்சினையில் பிரதமர் நரசிம்மராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று மீண்டும் வற்புறுத்துவதற்காக முதல்_ அமைச்சர் ஜெயலலிதா 18_7_1993
அன்று `திடீர்’ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். காலை 9_15 மணிக்கு
முதல்_அமைச்சர் ஜெயலலிதா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர். சமாதிக்கு சென்று
மலர் வளையம் வைத்து வணங்கினார்.


பின்னர் அவர் சமாதியின் முன் பகுதியில் நாற்காலியில் அமர்ந்து
கொளுத்தும் வெயிலில் உண்ணாவிரதம் தொடங்கினார். முதல்_அமைச்சர் உண்ணாவிரதம்
இருக்கப்போகிறார் என்ற செய்தி, அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்,
கட்சி தொண்டர்கள் உள்பட யாருக்குமே தெரியாமல் இருந்தது.


ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் உண்ணாவிரதத்தை தொடங்கியது
எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. அதன் பிறகுதான் அமைச்சர்கள்,
அதிகாரிகள் அவசரம் அவசரமாக அங்கு சென்றனர். அமைச்சர்களும், அதிகாரிகளும்
வரும் வரைக்கும் ஜெயலலிதா சுட்டெரிக்கும் வெயிலில் உட்கார்ந்து இருந்தார்.
பகல் 11 மணி அளவில் அங்கு பந்தல் போடப்பட்டது.


பின்னர் அந்த பந்தலில் அமைக்கப்பட்ட தனி மேடையில் ஜெயலலிதா அமர்ந்தார்.
அனைத்து அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமான தொண்டர்கள்
கூடினார்கள். உண்ணாவிரத பந்தலில் அமர்ந்திருந்த முதல்_அமைச்சர் ஜெயலலிதா
அங்கு இருந்தபடியே அரசு “பைல்”களை பார்த்தார்.


அவ்வப்போது தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன், உள்துறை செயலாளர்
மலைச்சாமி, சுகாதாரத்துறை செயலாளர் இன்பசாகரன் மற்றும் அதிகாரிகளை
முதல்_அமைச்சர் அழைத்துப் பேசினார். தமிழக கவர்னர் சென்னா ரெட்டி
புதுச்சேரி சென்று இருந்தார். ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பதை அறிந்ததும்,
அவர் அவசர அவசரமாக சென்னை திரும்பினார்.


கடற்கரைக்குச் சென்று ஜெயலலிதாவை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம்
பேசினார். உண்ணாவிரதம் இருப்பதற்கான காரணத்தை கவர்னரிடம் ஜெயலலிதா
விளக்கினார். இருப்பினும் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கவர்னர் வேண்டுகோள்
விடுத்தார். அதற்கு ஜெயலலிதா பதில் அளிக்கையில், “காவிரி
நடுவர்மன்றத்தீர்ப்பை அமல்படுத்தும்படி அரசியல் சட்டத்தின் 256_வது
விதியின் கீழ், கர்நாடக அரசுக்கு பிரதமர் நரசிம்மராவ்
உத்தரவிடவேண்டும்.அவ்வாறு பிரதமர் உத்தரவிடும் வரை நான் எனது உண்ணாவிரத
போராட்டத்தை கைவிடமாட்டேன்”
என்று கூறினார்.


தி.க.தலைவர் வீரமணி, வாழப்பாடி ராமமூர்த்தி, பழ.நெடுமாறன் மற்றும்
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்
ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.


முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் கவர்னர் சி.சுப்பிரமணியம்
ஆகியோர் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள்.
முதல்_அமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க வந்த ஏராளமான தொண்டர்களும் தார்
ரோட்டில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.


ஜெயலலிதாவை பார்க்க வந்த கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனதால் போலீசார்
அவர்களை ஒழுங்குபடுத்தி “கிï” வரிசையில் நிற்க ஏற்பாடு செய்தனர். “கியூ”
வரிசை 2 பர்லாங் தூரத்துக்கு அதாவது போர் நினைவுச் சின்னம் வரை இருந்தது.
இரவு 9 மணிக்கு மேலும் “கியூ” வரிசையில் மக்கள் சென்று ஜெயலலிதாவை
பார்த்தனர்.


நள்ளிரவு ஆனதும் உண்ணாவிரத மேடையிலேயே ஜெயலலிதா படுத்துத் தூங்கினார்.
சென்னையில் பல இடங்களில் பஸ் மறியல் நடந்தது. இதனால் வெளியூர் செல்லும்
பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. ரெயில் மறியல் சம்பவங்கள் நடந்ததால் பல
இடங்களில் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.


19_ந்தேதி அதிகாலை நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் நடந்த
இடத்துக்குச் சென்று முதல்_அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது
ரஜினிகாந்த், “தண்ணீர் மிக முக்கியமானது. அப்படிப்பட்ட நல்ல பிரச்சினைக்காக
உண்ணாவிரதம் இருக்கும் உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.


உங்கள் போராட்டம் மகத்தானது. அதே சமயத்தில் உங்கள் உடல் நிலையை கவனித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.
நடிகர் கமலஹாசன் மனைவி சரிகாவுடன் வந்து சந்தித்தார். அவர்கள் இருவரும்
உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறினார்கள். அதற்கு ஜெயலலிதா சம்மதிக்கவில்லை.
“உங்கள் எல்லோருக்காகவும் நான் உண்ணாவிரதம் இருக்கிறேன்.நீங்கள்
இருக்கவேண்டாம்” என்று கூறினார். அதன்படி கமலஹாசனும், சரிகாவும்
உண்ணாவிரதம் இருப்பதை கைவிட்டனர்.


நடிகர்கள் ஜெமினிகணேசன், விஜயகாந்த், சரத்குமார், ராஜ்கிரண்,
சிவக்குமார், வீரப்பா, சத்யராஜ், பாக்யராஜ், எம்.என்.நம்பியார்,
நிழல்கள்ரவி, கண்ணன், பிரசாந்த், ராமராஜன், பிரபு, விஜயகுமார், கார்த்திக்,
பாண்டியராஜன், நடிகைகள் ஸ்ரீதேவி, சுகன்யா, குஷ்பு, மஞ்சுளா, ரூபிணி, கோவை
சரளா, கஸ்தூரி, தேவிகா, கனகா, ஸ்ரீவித்யா, சினிமா அதிபர்கள்
ஏவி.எம்.சரவணன், கோவை செழியன், டைரக்டர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா,
ஸ்ரீதர் மற்றும் தொழில் அதிபர்கள், முன்னணி பிரமுகர்கள் நேரில் வந்து
ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.


நடிகர் சரத்குமார் தன் மனைவி மூலம் பூச்செண்டு அனுப்பினார். சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த வயலெட், பராசக்தி என்ற 2 பெண்கள் தீக்குளித்து உயிர்விட்டனர்.
ஜெயலலிதா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் ஒருநாள்
சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. 20_ந்தேதியன்று உண்ணாவிரதம் 3_வது நாளாக
நீடித்தது. அன்று காலை ஜெயலலிதா பலவீனம் அடைந்து சோர்வாக காணப்பட்டார்.


அதுவரையில் உண்ணாவிரத மேடையில் சோபாவில் அமர்ந்து இருந்தார். உட்கார
முடியாத அளவுக்கு அவர் களைப்படைந்ததால், கட்டிலில் படுத்தபடியே
உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். டாக்டர்கள் குழுவினர் அவருடைய உடல் நிலையை
பரிசோதித்தனர். பின்னர் டாக்டர்கள் குழு வெளியிட்ட அறிக்கையில், “முதல்_அமைச்சர்
உடல் நிலை மிகவும் பலவீனம் அடைந்துள்ளது.லேசான மயக்க நிலையில்
இருக்கிறார். தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவரது உடலில் சர்க்கரை
சத்து வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. சர்க்கரை சத்து சீர்அற்ற நிலையில்
உள்ளது. தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தால் அவரது உடல் நிலை அச்சமூட்டும்
வகையில் மோசமடையும்”
” என்று அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. 21_ந்தேதி 4_வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது.


இந்த நிலையில் காவிரி பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக மத்திய நீர்வள
துறை மந்திரி வி.சி.சுக்லாவை பிரதமர் நரசிம்மராவ் அனுப்பி வைத்தார்.
வி.சி.சுக்லா 20_ந்தேதி இரவு பெங்களூர் சென்று கர்நாடக முதல்_மந்திரி
வீரப்பமொய்லியுடன் பேச்சு நடத்தினார். பிறகு மறுநாள் காலை சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் இருந்து அவர் நேராக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கும்
இடத்துக்கு சென்றார்.

காவிரி நதி நீர்ப் பிரச்சினை: தமிழகத்துடன் “மல்யுத்தம்” நடத்தும் கர்நாடகம்(ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரி) By எம். காசி நாதன்! Cauvery-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF

ஜெயலலிதாவுடன் வி.சி.சுக்லா பேச்சு நடத்தினார். இந்த பேச்சு
வார்த்தையின்போது அமைச்சர்கள் நெடுஞ்செழியன், எஸ்.டி.சோம சுந்தரம்,
முத்துசாமி, செங்கோட்டையன், கண்ணப்பன், தலைமைச் செயலாளர்
டி.வி.வெங்கடராமன், அட்வகேட் ஜெனரல் கே.சுப் பிரமணியம் ஆகியோர் அருகில்
இருந்தனர்.


10_15 மணி முதல் 10_35 மணி வரை மத்திய மந்திரி சுக்லா, ஜெயலலிதாவுடன்
பேசிக்கொண்டு இருந்தார். பிறகு கவர்னர் சென்னாரெட்டியை சந்தித்து 30
நிமிடம் பேசினார். அதன்பிறகு காவிரி நீர் தொடர்பாக 2 கமிட்டிகள் அமைத்து கண்காணிக்கப்படும் என்று மத்திய மந்திரி உறுதி அளித்தார். இதனை முதல்_அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.


மாலை 5_30 மணி அளவில் மத்திய மந்திரி வி.சி.சுக்லா பழச்சாறு எடுத்து
முதல்_அமைச்சரிடம் கொடுக்க அதை ஜெயலலிதா வாங்கி பருகி உண்ணாவிரதத்தை
நிறுத்தினார். பிறகு அண்ணா சமாதிக்கும், எம்.ஜி.ஆர். சமாதிக்கும் சென்று
அஞ்சலி செலுத்தினார்.


அதன்பிறகே காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு அரசிதழில்
வெளியிடப்பட்டது. பங்காரப்பா கர்நாடக முதல்வராக இருந்த இதே நேரத்தில்
இதையொட்டி அம்மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்கு எதிராக பெரும்கலவரம்
வெடித்தது.


காவிரி நதி நீர் ஆணையமும் வரைவு திட்டமும்!


ஆனால் இயற்கைத்தாய் தமிழகத்தின் பக்கம் நின்றாள். 1991 முதல் 1994 வரை
காவிரி நதி பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால், தமிழகத்திற்கு வர
வேண்டிய தண்ணீல் தட்டுப்பாடு வரவில்லை. நடுவர் மன்றம் அளித்த 205
டி.எம்.சி.க்கும் மேலாகவே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்தது. 1994இல்
ஏறக்குறைய 394 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி மூலம் கிடைத்தது.
1995இல் மழை பொய்க்கவே நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பும் பொய்த்துப்
போகுமோ என்ற அச்சம் தமிழகத்திற்கு ஏற்பட்டது. இதனால் நடுவர் மன்ற
இடைக்காலத் தீர்ப்பு கச்சிதமாக நிறைவேற்ற ஒரு தனி ஆணையம் வேண்டும் என்று
உணரப்பட்டது. இந்திய பிரதமராக ஐ.கே.குஜ்ரால் இருந்த போது இதன்
அடிப்படையில்தான் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க முயற்சி
மேற்கொள்ளப்பட்டது. அதற்கு தலைவராக இருப்பவர் பிரதமர்.


காவிரி நதி நீரில் பங்கு பெறும் கர்நாடகம், தமிழகம், கேரளம்,
பாண்டிச்சேரி உள்ளிட்ட நான்கு மாநில முதல்வர்களும் உறுப்பினர்கள். இந்த
ஆணையம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்காக “குஜ்ரால் வரைவு திட்டம்”
ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் எந்த மாநிலமாவது காவிரி நதி நீர் ஆணைய
உத்தரவை மதிக்கத் தவறினால், அந்த மாநிலத்தின் அணைக்கட்டுகளை அந்த உத்தரவை
நிறைவேற்றுவதற்காக காவிரி நதி நீர் ஆணையம் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்
கொள்ளலாம் என்று ஒரு அதிகாரமிக்க ஷரத்து இருந்தது. ஆனால் மாநிலத்திற்குள்
உள்ள அணையை மத்திய அரசு எடுத்துக் கொள்வதா என்று கேள்வி எழுப்பப்பட்டு, இது
மாநில சுயாட்சிக்கு எதிரானது என்ற குரல் கிளம்பியது. அதனால் அந்த ஷரத்தை
நீக்கி விட்டு, இந்திய பிரதமராக வாஜ்பாய் இருந்த போது காவிரி நதி நீர்
ஆணையத்தின் “வரைவுத் திட்டம்” வெளியிடப்பட்டது. காவிரி நதி நீர் ஆணையம் “பல் இல்லாத ஆணையமாக” உருவானது இப்படித்தான்!


மன்னிப்புக் கேட்ட எஸ்.எம்.கிருஷ்ணா!


புதிதாக அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் ஆணையத்தின் முதல் கூட்டம்
28.10.1998இல் பிரதமராக இருந்த வாஜ்பாய் தலைமையில்தான் நடைபெற்றது என்பது
குறிப்பிடத்தக்கது. அதில் தமிழக முதல்வராக கருணாநிதியும், கர்நாடக
முதல்வராக ஜே.எச்.பாட்டீலும் பங்கேற்றார்கள். அங்கு வித்தியாசமான பிரச்சினை
எழுந்தது. தமிழகத்திற்கு தண்ணீர் எவ்வளவு திறந்து விடப்படுகிறது என்பதை
மேட்டூர் அணை பாயின்டில் அளப்பதா அல்லது பில்லிக்குண்டுவில் அளப்பதா என்ற
சர்ச்சை உருவானது. தமிழகம் மேட்டூரில்தான் இருக்க வேண்டும் என்றது.
கர்நாடகமோ பில்லிக்குண்டுவில்தான் இருக்க வேண்டும் என்றது. இரு மாநிலமும்
இப்படி முஷ்டியை முறுக்கிக் கொண்டது.

காவிரி நதி நீர்ப் பிரச்சினை: தமிழகத்துடன் “மல்யுத்தம்” நடத்தும் கர்நாடகம்(ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரி) By எம். காசி நாதன்! Cauvery-S-M_KRISHNA_-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81

பிறகு வறட்சி காலங்களில் தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்வது என்ற கேள்வியும்
எழுந்தது. இப்படியே கேள்வி எழுப்பியே காவிரி நதி நீர் ஆணையத்தை
கொச்சைப்படித்தியது கர்நாடக அரசு. கர்நாடகாவில் யார் முதல்வராக வந்தாலும்
காவிரி நதிநீர் பங்கீட்டை எந்த நிலையிலும் மதிப்பதில்லை என்பதில் உறுதியாக
இருந்தார்கள். இந்நிலையில் 2002 வாக்கில் வெறும் எட்டாயிரம் கன அடி தண்ணீரை
திறந்து விட மறுத்து கர்நாடக அரசு முரண்டு பிடித்தது. இந்த விவகாரம்
உச்சநீதிமன்றத்திற்கு போனவுடன், “கோர்ட் உத்தரவை அமல்படுத்தாத கர்நாடக அரசு
பதவி விலக வேண்டும்” என்று கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க, அப்போது
கர்நாடக மாநில முதல்வராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா (தற்போது இந்திய
வெளியுறவுத்துறை அமைச்சர்) இந்திய உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற
மன்னிப்புக் கேட்டார். கோர்ட் உத்தரவுப்படி 8000 கன அடி தண்ணீரை திறந்து
விட்டார்.


காவிரி நதி நீர் இறுதி தீர்ப்பு!


இப்படி தமிழகம், கர்நாடக மாநிலத்துடன் நடத்திய போராட்டங்கள்
கணக்கிலடங்காது. இது மாதிரி சூழ்நிலையில்தான் காவிரி நடுவர் மன்றத்தின்
இறுதித் தீர்ப்பு 2007ஆம் வருடம் பெப்ரவரி 5ஆம் திகதி வெளியிடப்பட்டது.
குறிப்பாக பிளானிங் கமிஷன் கூட்டத்திற்காக அப்போது தமிழக முதல்வராக இருந்த
கருணாநிதி டெல்லி சென்றிருந்த நேரத்தில் இந்தத் தீர்ப்பு வெளிவந்தது
குறிப்பிடத்தக்கது. 577 சிட்டிங்குள், ஏழு வருடங்கள் சாட்சிகள் விசாரணை
நடந்தது. ஸ்டார் சாட்சிகளாக பிரபல விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்
போன்றோர் எல்லாம் இந்த நடுவர் மன்றத்தின் முன்பு சாட்சி அளித்தவர்கள். இந்த
தீர்ப்பில் தமிழகத்தின் பல்வேறு வாதங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன.


காவிரி நதி நீர் பங்கீட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் போர்வெல் போட்டு
எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் காவிரி நதிநீர் பங்கீட்டில் சேர்த்து
கணக்கிட வேண்டும் என்று கர்நாடக அரசு வைத்த கோரிக்கையை நிராகரித்தது நடுவர்
மன்றம். “நாங்கள் கொடுக்கும் தண்ணீரில் 200 டி.எம்.சி.யை (வெள்ள
காலங்களில்) தமிழகம் கடலில் கலக்க விட்டு விடுகிறது. அதை அணை கட்டி
சேமித்து வைத்துக்கொள்ள வேண்டியதுதானே” என்று ஒரு கருத்தைச் சொன்னது
கர்நாடகம். அந்த கோரிக்கையையும் நடுவர் மன்றம் நிராகரித்தது.


1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என்று ஒரு சொத்தை வாதத்தை
தூக்கிப் பிடித்தது கர்நாடக மாநிலம். அதையும் நிராகரித்த காவிரி நடுவர்
மன்றம், “1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் சில ஷரத்துக்களின் அடிப்படையில்
கிடைக்கும் அனுபவத்தை வைத்து 50 வருடங்கள் கழித்து இந்த ஒப்பந்தத்தை
ரிவியூவ் பண்ணிக் கொள்ளலாம் என்றுதான் ஒப்பந்தம் கூறுகிறதே தவிர, அந்த
ஒப்பந்தம் 50 வருடம் கழித்து காலாவதியாகிவிடும் என்று கூறவில்லை. ஆகவே அந்த
சட்டங்களின் படி “ரிவியூவ்” பண்ணியே இப்போது இறுதி தீர்ப்பு வழங்குகிறோம்”
என்று கூறியது நடுவர் மன்றம்.

காவிரி நதி நீர்ப் பிரச்சினை: தமிழகத்துடன் “மல்யுத்தம்” நடத்தும் கர்நாடகம்(ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரி) By எம். காசி நாதன்! Cauvery-%E0%AE%8E-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D

கடைசியாக, “சரி, தண்ணீர் கொடுக்கிறோம். அதாவது நவம்பர், டிசம்பர்
மாதங்களில் கொடுக்கிறோம்” என்று நடுவர் மன்றத்திடம் கூறியது கர்நாடகம்.
அதாவது கர்நாடகத்தில் கிடைக்கும் சர்ப்ளஸ் தண்ணீரைக் கொடுக்கிறோம் என்பது
இதன் பொருள். ஆனால் நடுவர் மன்றமோ, “தமிழகத்திற்கு ஜூன் முதல் செப்டெம்பர்
வரைதான் சாகுபடிக்கு நீர் தேவை. அதனால் இந்த மாதங்களில் தமிழகத்திற்கு 134
டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று இறுதித் தீர்ப்பில் கூறியது”
நடுவர் மன்றம்! கர்நாடகத்தின் எல்லா வாதங்களையும் தவிடு பொடியாக்கிய நடுவர்
மன்றம், காவிரியில் கிடைக்கும் மொத்த தண்ணார் 740 டி.எம்.சி. என்றும்,
அதில் 419 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று
உத்தரவிட்டது காவிரி நடுவர் மன்றம். இதில் கர்நாடக எல்லையில் உள்ள
பில்லிக்குண்டு அளவீட்டுப்படி 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம்
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும். மீதியுள்ள 227 டி.எம்.சி.
பில்லிக்குண்டுவிலிருந்து- காவிரி டெல்டா வரை கிடைக்கும் நீர்.


தேசியக் கட்சிகளுக்கும் தலை தூக்கிய “பிராந்திய பார்வை”!


இறுதி தீர்ப்பு வந்த பிறகும் கர்நாடக மாநிலம் அதை மதிக்கவில்லை. காவிரி
நதி நீர் ஆணையம் அளிக்கும் உத்தரவுகளையும் நிறைவேற்றுவதில்லை. இன்னும்
சொல்லப் போனால் உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் உடனடியாக நிறைவேற்றுவதில்லை.
இடைக்காலத் தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் கர்நாடகாவில் முதல்வராக இருந்தவர்
பங்காரப்பா. அப்போது தமிழர்களுக்கு எதிராக பெரும் கலவரம் பெங்களூரில்
அரங்கேறியது. பிறகு எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது கோர்ட்
அவமதிப்பு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றத்திலேயே நிபந்தனையற்ற மன்னிப்புக்
கேட்டு பிறகு தண்ணீரை திறந்து விட்டார். இப்போது முதல்வராக இருக்கும்
ஜெகதீஷ் ஷட்டரோ அப்படியொரு சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே
உச்சநீதிமன்ற உத்தரவை அரைகுறை மனதுடன் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.


இத்தனைக்கும் இந்த 120 ஆண்டு கால காவிரி நதி நீர் பங்கீட்டுப்
போராட்டத்தில் நடுவர் மன்றம், இடைக்காலத் தீர்ப்பு, காவிரி நதிநீர் ஆணையம்,
இறுதித் தீர்ப்பு என்று எவற்றையுமே ஒப்புக்க



மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காவிரி விவகாரம்: பிரதமரிடம் முறையிட கர்நாடகம் முடிவு
» 2 நாள்களுக்கு மட்டுமே காவிரி நீர்: கர்நாடகம் பிடிவாதம்
» சாக்ஸ் பிகசர்ஸ் அதிபர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா -ஒரு ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்!
» ’சிலம்புச் செல்வர் ம. பொ. சி பிறந்த தினமின்று!- சில பிளாஷ் பேக் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா
» காவிரி நீர் பாசனப் பகுதி: 8 லட்சம் ஏக்கரை 11 லட்சம் ஏக்கராக அதிகரித்துக் கொண்ட கர்நாடகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum