TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நார்வேயில் வசிக்கும் ஈழத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம், அவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு பல முறை அழைத்தும் தற்போதுதான் நேரம் வாய்த்தது.

Go down

நார்வேயில் வசிக்கும் ஈழத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம், அவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு பல முறை அழைத்தும் தற்போதுதான் நேரம் வாய்த்தது.  Empty நார்வேயில் வசிக்கும் ஈழத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம், அவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு பல முறை அழைத்தும் தற்போதுதான் நேரம் வாய்த்தது.

Post by ஜனனி Sat Jul 28, 2012 11:33 am

நார்வேயில் வசிக்கும் ஈழத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம், அவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு பல முறை அழைத்தும் தற்போதுதான் நேரம் வாய்த்தது.  Ee10நார்வேயில் வசிக்கும் ஈழத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்
குடும்பம், அவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு பல முறை அழைத்தும்
தற்போதுதான் நேரம் வாய்த்தது. வீட்டிற்குள் நுழைந்ததும் முதலில்
தென்பட்டது, தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் சிரித்த முகத்துடன் கூடிய
நாட்காட்டி. பெரும்பாலான தமிழ் வீடுகளில் கடவுள் படம் இருக்கிறதோ இல்லையோ
அவர்கள் கடவுளாகப் போற்றும் தலைவரது படத்தை கட்டாயம் வைத்துள்ளனர். அவரும்
அவரது துணைவியாரும், ஒரு தாயின் பரிவுடன் அன்போடு வரவேற்று உபசரித்து உணவு
பரிமாறி மகிழ்ந்தனர். ஆறு பேர் சாப்பிடுவதற்கு பத்திற்கும் மேற்பட்ட
பதார்த்தங்களை செய்திருந்தனர். விருந்தோம்பல் என்றால் என்ன என நமது ஈழத்து
தமிழர்களிடம் தான் கற்க வேண்டும். அவர்களின் ஒவ்வொரு உபசரிப்பும் சங்க
இலக்கியத்தின் ஒவ்வொரு பக்கத்தை வாசித்தது போல் இருந்தது. விருந்து
முடிந்ததும் நீண்ட நேரம் அவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவற்றில் என்
மனதை பாதித்த சில .

அவரது சொந்த ஊர் வல்வட்டித்துறை. மாவீரர்
திலகம் பிரபாகரன் அவர்களின் சொந்த ஊர். மேலும் அவர் தலைவர் பிரபாகரன்
அவர்களது பள்ளி வகுப்புத் தோழன் ஆவார். அவர் பிரபாகரன் அவர்களது பள்ளிப்
பருவத்தை விவரிக்கும் பொழுது அவர் மீது கொண்டிருந்த பாசத்தையும்
மரியாதையையும் உணர முடிந்தது. ´´ இங்க பல பேர் அவர் திறமைகளை இப்போதுதான்
புகழ் பாடுகின்றனர்.. ஆனால் அவர் பள்ளிப் பருவம் முதலே தனித்துவம்
வாய்ந்தவர் என்பதை நான் கண்டிருக்கிறேன். நாங்கள் ஐந்தாம் வகுப்பு
படிக்கும் பொழுதே ரசியப் புரட்சி, மாவோ புரட்சி பற்றிய புத்தங்களைப்
படிப்பார்.. படித்துவிட்டு எங்களுக்கு விவரிப்பார், அவருக்குப் புரிந்தது
எங்களுக்கு அப்பருவத்தில் ஏதும் புரிவதில்லை.... உலக வரலாற்றில் ஒரு
மாவீரன் உருவாகிறான் என்றால் அவன் திடீரென உருவாவதில்லை. அது பிறவியில்
இருந்தே.. மழலைப் பருவத்தில் இருந்தே உருவாக வேண்டும் என்பார்கள். அதுபோல
அவர் தானாக உருவான தன்னிகரற்ற தலைவர் ´´ என்றார்.

அவரது
தனிப்பட்ட வரலாற்றை சொன்ன போது இதயம் கனமாயிற்று. அவர் 1989 ஆம் ஆண்டு
நோர்வே வந்துள்ளார். அதற்கு முன் வளைகுடா நாட்டில் நல்ல ஒரு பணியில் கை
நிறைய சம்பாதித்து வந்துள்ளார். யுத்தத்தால் குடும்பத்துடன் நோர்வே
நாட்டில் அடைக்கலம் அடைந்துள்ளார். அவர் வந்த சில ஆண்டுகளில் ஈழத்தில்
இருந்த அவரது தாயாரின் கால் முறிந்துவிட்டது. தாயைப் பார்க்க சென்றுள்ளார்.
மறுநாள், அவரது மூத்த சகோதரியும் அவரது மகனும் பேருந்தில் பயணித்துக்
கொண்டிருந்த பொழுது இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாகி அதே இடத்திலேயே
பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பின், அவர்களது
உடலை பெற்று நல்லடக்கம் செய்துவிட்டு வந்துள்ளார். அடுத்த ஆண்டில் ஈழத்தில்
உள்ள அவரது வீட்டிற்கு 50 மீட்டர் தொலைவில், ராணுவ செல்லட்டித்
தாக்குதலில் அவரது தந்தை பலியாகிவிட்டார். அவரால் நோர்வேயை விட்டுச் செல்ல
இயலவில்லை. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நடந்த இடப்பெயர்வின் பொழுது
அவரது தாயார், நடக்க முடியாத நிலையில், உறவினரது உதவியுடன்
இடம்பெயர்ந்துள்ளார். உடல் நலம் குன்றி அவர் வந்தடைந்த முகாமிலேயே
இறந்துவிட்டார். தாயின் முகத்தைக் கூட கடைசி நேரத்தில் பார்க்க இயலவில்லை.


அடுத்த ஆண்டில், குடல் புண் (அல்சர்) என உள்ளூர் வைத்தியம்
செய்து வந்த தனது தங்கையை மருத்துவரிடம் அனுப்பியுள்ளார். அப்போது அவருக்கு
கான்செர் இருப்பது தெரியவந்துள்ளது. அவரை இந்தியாவிற்கு அழைத்துவந்து
அவரும் நோர்வேயில் இருந்து இந்தியா வந்து அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துவிட்டார். தற்போது எஞ்சி இருப்பது
மற்றொரு தங்கையும் அவரது மகனும்தான். பாலகனாக இருந்த அவரது தங்கை
மகனுக்கும் ஒருமுறை குண்டடி பட்டுவிட்டது. ஒருவழியாக சரியான நேரத்தில்
மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர். பின்னர் நடந்த
இடப்பெயர்வின் பொழுது அவரது தங்கை தமிழகத்திற்கு அகதியாக வந்துள்ளார்.
இவர்தான் தான் பெரும் முயற்சி எடுத்து அவருக்கு ஒரு வாழ்வாதாரத்தை
ஏற்படுதிக்கொடுதுள்ளார். தற்போது அவர் எதோ ஒரு நாட்டில் ஓரளவு நிம்மதியாக
இருப்பதாகச் சொன்னார். இது போன்ற சோகக் கதையை சுமந்து கொண்டுதான் புலம்
பெயர்ந்த நாட்டில் ஒவ்வொரு ஈழத்துக் குடும்பமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
அந்தச் சூழலிலும், நார்வேயிலேயே பிறந்து வளர்ந்த தனது பிள்ளைகளுக்கு தமிழ்
மொழி, இசை , நாட்டியம் , அரசியல் ஆர்வம் என அனைத்தையும் ஊட்டி
வளர்த்துள்ளனர். அவர்களை ஒப்பிடுகையில் நமது தமிழ்நாட்டில் உள்ளவர்கள்தான்
எதோ வெளிநாட்டினர் போல எனக்குத் தோன்றியது!

ஈழத்தில் அவரது ஊரின்
தற்போதைய நிலைமை என்ன என வினவினேன். எம் ஜி ஆர் இன் சிலையைக் கூட உடைத்து
விட்டார்களாமே எனக் கேட்டேன். அவர் சொன்னார். ´´ எம் ஜி ஆரின் பாட்டைக் கூட
இப்போது யாரும் பாட முடியாது. சமீபத்தில் ஒரு கோவில் திருவிழாவில் எம் ஜி
ஆர் பாடலைப் பாடிய ஒருவரை அரசாங்கத்தார் தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள்.
ஐந்து மீட்டருக்கு ஒரு ராணுவ வீரனை நிறுத்தியுள்ளனர். வேறு இடங்களில்
இருந்து ஆட்களைக் கொண்டு வந்து குடி அமர்த்தியுள்ளனர். அவர்களில் யார்
நல்லவன் யார் உளவாளி எனத் தெரியவில்லை. வாய் திறந்து பேசுவதற்கே
பயந்துகொண்டு மக்கள் நிம்மதி இன்றி காலத்தைக் கழித்துக்கொண்டு
இருக்கின்றனர்.

நான் இங்கே வந்து இருபது ஆண்டுகளுக்கு மேல்
ஆகிவிட்டது. நான் வந்த புதிதில் எனக்கு நார்வே நாட்டில் மேற்ப்படிப்பு
பயின்று பெரிய பணிக்குச் செல்ல வாய்ப்பு இருந்தது. இருப்பினும் ஊரில் உள்ள
குடும்பத்தைக் காப்பாற்ற கிடைத்த சிறிய வேலைகளைச் செய்து என் போன்றோரின்
தலைமுறை கழிந்துவிட்டது. அங்கே நாட்டில் போராட்டத்தில் அடுத்த தலைமுறை
அழிந்துவிட்டது. தற்போது இருக்கும் தலைமுறையாவது நல்ல வாழ்க்கை வாழுமா
என்றால் இல்லை. பள்ளிக்கூடடில் ராணுவம் உள்ளது. மேலும் பள்ளிக்கு அருகிலேயே
மது , போதைப் பொருள், ஆபாசப் படங்கள் என இளம் தலைமுறையினரை திட்டமிட்டு
சீரழிக்கின்றனர். 2009 இற்கு முன்பு வரை ஈழத்தில் இரவில் எந்த நேரமும் ஒரு
பெண் தனியே நடந்து போகலாம். இதைச் சொன்ன காந்தியின் தேசத்தில் கூட இந்த
நிலை இருந்ததில்லை எங்கள் ஈழத்தில் இருந்தது. மது, போதைப் பொருள் என்றால்
என்ன என்றே தெரியாது அப்போது. தற்போதைய நிலைமை மிக மோசமாக உள்ளது. நாங்கள்
ஒரு பாவப்பட்ட இனம்தான் போலும். அதனால் தான் எத்தனையோ சூழ்ச்சிகளுக்கு
ஆளாகி இந்த நிலையில் நிற்கிறோம் என்றார். அந்த வருத்தம் தோய்ந்த குரலில்
ஆயிரம் வலிகள் இருந்ததை உணர முடிந்தது.

தமிழக அரசியல்
நிலவரங்களைப் பற்றி பேசுகையில் அவர், தமிழகத்தில் நெடுமாறன் அய்யா வைகோ
அய்யா போன்றோர் எங்களது கடைசி நம்பிக்கை. வைகோ அவர்கள் நோர்வே வந்த பொழுது,
திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட அவரது பேச்சைக் கேட்க , ஒரு மணி
நேரத்திற்குள் ஓராயிரம் பேர் அரங்கத்தில் திரண்டனர். அதுவே அவர் மீது
வைத்துள்ள நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு என்றார். நான் ஆதரிக்கும் ,
பெரிதும் மதிக்கும் தலைவர் வைகோ அவர்கள் என்றதும் மகிழ்ந்தார். இறுதியில்,
நம்பிக்கையோடு இருக்கிறோம், பார்ப்போம் என்ன நடக்கிறது என்று என சொல்லி
முடித்தார்.

பி.கு. தமிழினத் தலைவர் கருணாநிதி அவர்களைப் பற்றிய
அவரது கருத்துக்களை, நாகரீகம் கருதியும் , உண்மை திமுகவினரின் உணர்வு
கருதியும் இங்கே எழுத விரும்பவில்லை
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ராடியா வீட்டிற்கு சென்று சி.பி.ஐ., 3 மணி நேரம் துருவித்துருவி கேள்வி
» தமிழ் கற்போம் - 31 - தமிழ் எழுத்து வடிவம் தோன்றிய முறை.
» முள்ளிவாய்க்கால் சாட்சியம் - கட்டாயம் பார்க்கவும்.. எம் இனத்திற்கு நேர்ந்த கொடுமையை பாருங்கள்.. தமிழ் தொலைக்காட்சியில் இது முதல் முறை.ஜி தமிழ் தொலைகாட்சி..
» சூரியன் ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் என்ன?
» தமிழ் நாட்டின் முதல் M.B.BS.,.பெண் டாக்டர். முத்துலட்சுமி அவர்கள்,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum