TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விலைவாசி உயர்வு -ஒரு ஆய்வு

3 posters

Go down

விலைவாசி உயர்வு -ஒரு ஆய்வு Empty விலைவாசி உயர்வு -ஒரு ஆய்வு

Post by sakthy Sun Nov 20, 2011 7:31 pm

விலைவாசி உயர்வு -ஒரு ஆய்வு

தமிழகத்தை சில தினங்களாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த விலை ஏற்றத்தைப் பற்றிய சிறிய ஆய்வே இது. அதிகமான புள்ளி விபரங்களை வைத்து உங்களை வெறுப்பேற்றாது முக்கிய எனது கருத்துக்களுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

கருத்துக்கள்,எழுத்துக்கள்,ஆய்வுகள்,போராட்டங்கள்,அறிக்கைகள் என்று பலவற்றை அரசியல் கட்சிகள், மக்கள் முன் வைத்து,மக்களின் மேல் உள்ள போலிப் பாசத்தைக் காட்டி வருகின்றன. நேர்மையான முறையில் நல்லதையும் கெட்டதையும், சரியானவற்றையும்,தவறானவற்றையும் அரசியல் கட்சிகள் வைக்காது,ஒரு தலைப் பட்சமான கருத்துக்களை மக்கள் முன் வைத்து அரசியல் இலாபம் பெற முயற்சித்து வருவது நன்றாக தெரிகிறது.

மத்திய அரசு அள்ளி வழங்கியதாக காங்கிரசும்,அதன் புதிய தலைவரும்,எங்கள் ஆட்சியில் விலையை ஒரு முறை கூட ஏற்றவில்லை என கருணாநிதியும் கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றனர்.அதே சமயம் ஜெயலலிதாவோ கஜானா காலியென்றும்,கடன் சுமை என்றும்,சென்ற திமுக ஆட்சி காரணம் என்றும்,சில நிறுவனங்களை காப்பாற்றவே என்றும்,மத்திய அரசு உதவி செய்யாது பாரபட்சமாக நடந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

உண்மை என்ன? கடந்த தேர்தலில் காங்கிரஸை ஜெயலலிதா புறம் தள்ளியது,ராஜீவ் வழக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடயத்தில் அவரின் கருத்து,கூடங்குள விவகாரம்,சிறீலங்காவிற்கு எதிரான ஜெயலலிதாவின் கருத்து இப்படியான சில வெறுப்பை தரும் செயல்களால், சோனியா காங்கிரஸ் மத்திய அரசு தமிழகத்தை புறன் தள்ளி மானியங்களையும்,கடன் உதவிகளையும் இல்லை என்ற அளவிற்கு குறைத்ததை மறுக்க முடியாது.
இரண்டாவது குற்றச்சாட்டு சென்ற திமுக ஆட்சியின் தவறான செயல்கள், திட்டங்கள்,லஞ்சம் உழலுமாகும். சென்ற ஆட்சி மத்திய அரசின் பங்காளி என்பதாலும்,ஈழத் தமிழர்கள் விடயத்தில் சோனியா காங்கிரசுக்கு கருணாநிதி செய்த உதவி,படுகொலையின் போது கண்களை மூடிக் கொண்டது போன்றவை மத்திய அரசை குளிர்வித்த காரணத்தாலும் அதிக மானியங்களும்,கடன் உதவியும் தாராளமாகவே கிடைத்து வந்தன.
ஆனால் 2009/2010 மாநிலங்களுக்கான நிதி நிலவர அறிக்கையை மத்திய அரசு நிபுணர் குழு வெளியிட்ட போது, சில முக்கிய தகவல்களை குறிப்பிட்டு இருந்தது. அதில தமிழகத்திற்கு அதிக மானியங்களும்,கடன் உதவியும்,நிதி உதவிகளும் வழங்கப்பட்டு இருந்தும் கூட, மற்றைய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது,தமிழகத்தின் வளர்ச்சி மிகக் குறைவாகவே உள்ளது என்றும், மத்திய அரசு அது விடயத்தில் எந்த வித அக்கறையும் காட்டவில்லை என்பதுமாகும்.
அதற்கு காரணம் என்ன? 2G விவகாரத்தில் காங்கிரசும் சிக்கி உள்ளதும்,பங்காளிக் கட்சி என்பதும் மற்றும் மேலே உள்ள சில காரணங்களும் காரணமாகி விட்டன. உண்மையில் மத்திய அரசின் உதவிகளை, மோசமான சில திட்டங்களும்,இலவசங்களும் லஞ்சம், உழலும் ருசி பார்த்து விட்டன என்பதை மறைக்க முடியாது. இலவச தொலைக்காட்சி பெட்டிகள் கேரளப் பகுதிகள் விற்பனை செய்யப்பட்டதும்,பல மின்சாரம்,இலவச கேபிள் தொடர்பு இன்மையால் வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பதும், வேறு சில ஏழைகள் வீடுகளில் அட்டைப் பெட்டிக்குள்ளேயே தூங்கிக் கொண்டதானாலும், இந்த இலவசங்களால் ஏழைகள்,மத்தியதரப்பினர் எதுவித பலனையும் பெறவில்லை என்பது உண்மையே.
இந்த இலவசங்கள் கிடைக்காது போனாலும், மக்கள் எந்தவித அசௌகரியங்களையும் அடைந்திருக்கப் போவதில்லை என்பதை கருணாநிதியே ஏற்றுக் கொண்டிருந்தார். அதாவது இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் கொடுத்தும் கூட அதைப் பார்க்காது, சென்ற தேர்தலில் ஊழலையும்,முறைகேடுகளையும் பற்றி மற்றவர்கள் சொன்னதை கேட்டு தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று வருத்தத்துடன் கூறி இருந்தார்.

ஆக மத்திய அரசின் உதவிகள் சென்ற ஆட்சியில், மக்களுக்கு தேவையற்ற இலவசங்களுக்கு சென்று விட்டதால், நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதும் கஜானா காலியானதுமே மிச்சமாகி விட்டிருந்தது. எனவே ஜெயலலிதா தனது வானொலி உரையில் கூறியது அனைத்தும் உண்மை என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

ஆனால்.............விலை ஏற்றம் என்பது பற்றி நடுநிலை பொருளாதார நிபுணர்கள் என்ன கூறூகிறார்கள்? அநேகமாக எல்லோருமே விலையேற்றத்தை சரியானது என்று ஏற்றுக் கொள்ளும் அதே வேளை,எங்கே அரசு கைவைத்திருக்க வேண்டும் என்ற கருத்தில் சிலர் மாறுபடுகிறார்கள். மக்களை நேரடியாக பாதித்த விடயத்தில், ஏழைகளையும் மத்திய தரப்பினரையும் குற்றுயிராக்காத விடயத்தில் கைவைத்திருக்க வேண்டும் என்பதில் நிபுணர்கள் பலரும் ஒரே கருத்தையே வைத்துள்ளனர்.
ஜெயலலிதா விட்ட தவறு என்ன?

தனக்கு சார்பான அதிகாரிகளை மட்டுமே வைத்து எடுத்த அவசர முடிவு,சில அதிகாரிகளையும், நிபுணர்களையும், ஒரு சமயம் மாற்றுக் கட்சியாக இருப்பார்களோ என்ற அச்சத்தில் கலந்தாலோசிக்காது விட்டது,சரியான வரவு செலவு கணக்கு விபரங்களை பெறாது தனது ஆலோசகர்களின் கருத்தை மட்டுமே வைத்து, சரியென்ற முடிவுடன் நடந்து கொண்டது போன்ற சிலவற்றை சொல்லலாம்.கொடுக்கப்பட்ட கணக்கு விபரங்கள் சரியானது தானா,மக்களை பாதிக்காத எந்த விடயத்தில் முதலில் நுழைய வேண்டும் என்பதை ஒரு நிபுணர் குழுவைக் வைத்து சரி பார்த்து இருந்திருந்தால் நல்ல முடிவை அவர் எடுத்திருக்க முடியும். வடிவேல் சொல்வது போல் சிறுபிள்ளைத்தனமான முடிவொன்றை அவசரமாக எடுத்து விட்டார் என்பதை இப்போது மட்டுமல்ல நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
சட்டசபை கட்டிடம்,சமச்சீர்க்கல்வி, அண்ணா நூல்நிலைய மாற்றம்,ராஜீவ் கொலை வழக்கு தூக்குத் தண்டனையில் திடீர் பல்டி,அதைத் தொடர்ந்து வந்த வழக்குகளில் ஏற்பட்ட தோல்விகள் இப்படி பல, இந்த சிறிய காலத்தில் அவ்ருக்கு பல கரும் புள்ளிகளை கொடுத்து விட்டது.
சமச்சீர்க்கல்வியைப் போல் விலைவாசி ஏற்றத்தையும் மீளப் பெறல் வேண்டும். வேறு வழிகளை பயன்படுத்தி கஜானாவையும்,கடனையும்,நிறுவனங்களையும் காப்பாற்ற வேண்டும்.இந்த சமயத்தில் அவர் சொன்ன ஒரு கருத்தை இங்கு வைக்கிறேன்.

இலவச‌ங்களை ம‌க்க‌ள் எ‌தி‌ர்பா‌ர்‌க்காத ‌நிலையை உருவா‌க்குவே‌ன்- ஜெயல‌லிதா சூளுரை.

சென்ற தேர்தல் காலத்தில் அறிவித்த இலவசங்களையும் தற்போது அமுல் படுத்தி வரும் இலவசங்களையும் மறந்துவிட வேண்டும். இலவசங்கள் விடயத்தில் மக்களை,பொதுநல ஆர்வலர்களை அணுகி எது அவசியம் என்பதை கண்டறிந்து செயலாக்க வேண்டும். ஐரோப்பிய மற்றும் பல நாடுகளில் கல்வி,மருத்துவம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விடயத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவை எல்லா மக்களுக்கும் கிடைக்க திட்டம் தீட்டுகிறார்கள், செயல்படுத்துகிறார்கள். அது போல கல்வி,மருத்துவம்,அத்தியாவசியப் பொருட்கள் விடயத்தில்,அவற்றை வியாபாரமாக்காது, முக்கிய கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை தமிழக அரசியல் புரிந்து கொண்டு திட்டங்களை வகுக்க வேண்டும்.

தமிழ்நாட்டைப் போன்ற இலவசங்கள் எதுவும் வேறு நாடுகளில் கிடையாது. இங்கு செயல்படுத்தப்படும் இலவசங்களால், தொலைக்காட்சி பெட்டிகள் போல், ஏழை மத்தியதரப்பினருக்கு எந்த பலனும் கிடைக்காது என்பதையும், அதே சமயம் கொடுக்காது போனால் எந்த பாதிப்பும், லஞ்சம் ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கும் முதலாளிகளுக்கும் தவிர, வேறு எவருக்கும் வரப் போவதில்லை என்பதையும் தெரிந்து கொண்டு செயல்படல் வேண்டும்.
இலவசங்களால்,மத்திய அரசு நிபுணர்குழு அறிக்கை சுட்டிக் காட்டியது போல், சென்ற ஆட்சியின் மேக்கப் போட்டு நாட்டின் வளர்ச்சியின்மையை மறைத்து அவசியமற்ற திட்டங்களை செயலாக்கியதையும்,கடனுதவிக்கு ஏற்ப வளர்ச்சி ஏற்படாததையும் கவனத்தில் கொண்டு, தேவையற்ற இலவசங்களை நீக்கி வளர்ச்சியையும்,மக்களின் அடிப்படைத் தேவைகளையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அவ்சியம்.
எப்படி?
சமீபத்தைய வரவு செலவுத் திட்ட அறிக்கையை ஒரு முறை திரும்பிப் பாருங்கள்.முக்கிய விபரங்கள் மட்டுமே தந்துள்ளேன்.அனைத்தும் கோடிகளில்.

2011-2012 வரவு 85,685 கோடி; செலவு 85,511 கோடி

இதில் இலவசங்களுக்கு ஒதுக்கப்பட்டது 8900 கோடி

கிரைண்டர் மிக்சி 1250
பசுமை வீட்டுத் திட்டம் 1081
மடிக்கணனி 912
திருமண உதவி 514
ஆடு மாடு கோழி 191
இலவச நாப்கின் 25
புதிய மருத்துவ காப்புறுதி திட்டம் 150
10-12 மாணவர் ஊக்கத் தொகை 394,04

இதைவிட ஏற்கனவே உள்ள சிலவற்றுக்கு,முதியோர்உதவித் திட்டம்-2842,மகப்பேறு - 596,மாணவர் சீருடை - 202,கிராம கட்டமைப்பு - 680,மின்சாரம்,பஸ் பாஸ்,உணவு மானியம் - 9381 மேலதிகத் தொகையாக காட்டப்பட்டுள்ளது.

இந்த இலவசங்களுக்கு ஒதுக்கப்பட தொகையில், சில இலவசங்கள் ஏழைகளுக்கோ மத்திய தரப்பினருக்கோ எதுவித பலனையும் தராதது மட்டுமல்ல, கொடுக்காது விடுவதால் எவரும் பாதிக்கப்படப் போவதும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதனால் இந்த இலவ்சங்களுக்கான தொகையை, நிறுவனங்களை காக்கவும், மத்திய அரசு மானிய உதவியில்,மத்திய அரசு மனம் மாறும் வரை, இருந்து தற்காலிகமாக காத்துக் கொள்ளவும் முடியும். கூடவே ஏழைகளை நேரடியாக தாக்காத விலை உயர்வையோ,வரிகளையோ செயல்படுத்துவதனால் மக்களின் சுமையையும்,மன சுமையையும் தற்காலிகமாகவாவது மருந்து தடவி குணப்படுத்த முடியும். வேறு விலையேற்றங்களால்,வரிகளால் கொள்ளை லாபம் ஈட்ட முயல்வோரை சட்ட மூலம் நடவடிக்கையும் எடுக்க முடியும்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினையே அழித்திடுவோம். கல்வி,மருத்துவம் அத்தியாவசிய உணவுகளில் கைவைத்து ஏழைகளின் தலையில் உட்காருவது எந்த விதத்தில் நியாயம் என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.
எண்ணிப் பார்க்குமா?

மீண்டும் அடுத்த வாரம்..................................சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

விலைவாசி உயர்வு -ஒரு ஆய்வு Empty Re: விலைவாசி உயர்வு -ஒரு ஆய்வு

Post by jaikavi Fri Sep 14, 2012 9:07 pm

உண்மைதான்... விலைவாசிக்கென தனி வெப்சைட் பார்தேன்... நாம் அங்கேயும் நம் கருத்துக்களை பதியலாம்... விலைவாசி.com
jaikavi
jaikavi
உதய நிலா
உதய நிலா

Posts : 10
Join date : 14/09/2012

Back to top Go down

விலைவாசி உயர்வு -ஒரு ஆய்வு Empty Re: விலைவாசி உயர்வு -ஒரு ஆய்வு

Post by ஜனனி Fri Sep 14, 2012 9:38 pm

jaikavi wrote:உண்மைதான்... விலைவாசிக்கென தனி வெப்சைட் பார்தேன்... நாம் அங்கேயும் நம் கருத்துக்களை பதியலாம்... விலைவாசி.com
விலைவாசி உயர்வு -ஒரு ஆய்வு 917304 விலைவாசி உயர்வு -ஒரு ஆய்வு 917304 விலைவாசி உயர்வு -ஒரு ஆய்வு 917304 விலைவாசி உயர்வு -ஒரு ஆய்வு 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

விலைவாசி உயர்வு -ஒரு ஆய்வு Empty Re: விலைவாசி உயர்வு -ஒரு ஆய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum