TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகக் கட்டிடக் கலை வரலாற்றில் கணபதி ஸ்தபதியார்

Go down

உலகக் கட்டிடக் கலை வரலாற்றில் கணபதி ஸ்தபதியார் Empty உலகக் கட்டிடக் கலை வரலாற்றில் கணபதி ஸ்தபதியார்

Post by ஜனனி Fri Oct 21, 2011 3:16 pm

உலகக் கட்டிடக் கலை வரலாற்றில் கணபதி ஸ்தபதியார் 220px-Valluvar_Kottam


உலகக் கட்டிடக் கலை வரலாற்றில் கணபதி ஸ்தபதியார் Maravanpulavu_Sachithananthanஇலங்கையில் மன்னார் மாவட்டம், மாந்தை வட்டத்தில் அமைந்தது தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சரம் கோயில்.

1964 தை, மாசி மாதங்கள். சேர். கந்தையா
வைத்தியநாதன் அவர்கள் திருப்பணிச் சபைத் தலைவர். கொழும்பிலிருந்து திரு. ஆ.
கந்தையா அவர்கள் உதவிக்கு வருவார். திருக்கேதீச்சரத்திலேயே தங்கிச் சேர்.
கந்தையா வைத்தியநாதனின் உதவியாளராகப் புலவர் திருநாவுக்கரசு அவர்கள் பணி
புரிந்தார். திருவாசக மடத்தில் சரவணமுத்து அடிகளார் தொண்டு செய்து வந்தார்.
அக்காலங்களில் திரு. ஆ. கந்தையா அண்ணாருடன் கொழும்பிலிருந்து
திருக்கேதீச்சரம் சென்று மீள்வேன்.

திருவாசக மடத்துக்குக் கிழக்கே உள்ள திறந்த
வெளியில் சிறு சிறு கொட்டில்கள். அங்கே தமிழ்நாட்டிலிருந்து வந்த
சிற்பிகள் கருங்கல் திருப்பணியில் ஈடுபட்டு வந்தனர். பிள்ளையார்பட்டி திரு.
வைத்தியநாத ஸ்தபதியார், அவர் மகன் திரு. கணபதி ஸ்தபதியார் இருவரும் அங்கு
வந்து போவதும் பணிகளை மேற்பார்வை செய்வதும் வழமை.

அக்காலங்களில் பிள்ளையார்பட்டியிலிருந்தோ
சென்னையிலிருந்தோ தொடர்வண்டியில் இராமேச்சரம் வந்து கப்பலில் தலைமன்னார்
வந்து திருக்கேதீச்சரத்தில் இச் சிற்பிகளும் அவர்களின் உதவியாளரும் பணி
செய்வர்.



உலகக் கட்டிடக் கலை வரலாற்றில் கணபதி ஸ்தபதியார் Ganapathistapatiஅக்காலத்தில் திரு. கணபதி ஸ்தபதியாரைப் பார்த்துப் பேசி, கற்றுளிப் பணிகள் தொடர்பாக கேட்பேன். அவரும் விளக்கமான பதில்கள் சொல்வார்.

காலப்போக்கில் திரு. கணபதி ஸ்தபதியார் அவர்களின் நினைவுகள் நின்றன, தொடர்புகள் விட்டன.

200 ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழர் வாழும்
நாடு சீசெல்சு. தொடக்கக் குடியேறிகளுள் ஐவர் தமிழர். ஆனாலும் அங்கு கோயில்
எதையும் அவர்கள் கட்டவில்லை. 1984 இல் நான் அங்கு சென்ற பின்னர் தொடங்கிய
இந்துக் கோவில் சங்கத்தினரை நான் ஊக்குவித்து, நிலம் வாங்கிக் கோவில்
எழுப்ப முயன்றபொழுது மனத்தில் வந்தவர் கணபதி ஸ்தபதியார்.

1985 இல் விடுமுறையில் சென்னை வந்த பொழுது
திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபைத் தலைவர் இ. நமசிவாயம் அவர்கள்
சென்னையில் இருந்தார்கள். சீசெல்சில் கோவில் கட்டும் முயற்சியைச் சொன்னதும்
மாமல்லபுரத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். முதல்வராக இருந்த திரு.
கணபதி ஸ்தபதியாரைப் பார்த்து விவரம் சொன்னோம். அனைத்து ஒத்துழைப்பும்
தருவதாகச் சொன்னார்கள்.

1986இல் சென்னைக்குப் பெயர்ந்த பின்னர்,
திரு. இ. நமசிவாயம் அவர்களுடன் மாமல்லபுரம் செல்வதும் திரு. கணபதி
ஸ்தபதியாரைப் பார்ப்பதும் எனக்கு வழமையாகின. திரு. கணபதி ஸ்தபதியார்
சீசெல்சுக்குச் சென்று வந்தார்கள். வரைபடம் தயாரித்துக் கொடுத்தார்கள்.
1992இல் சீசெல்சுப் பிள்ளையார் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.

மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி முதல்வர்
பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் தன்
அலுவலகத்தை வைத்திருந்தார். அங்கும் சென்று வருவேன்.

உலகக் கட்டிடக் கலை வரலாற்றில் கணபதி ஸ்தபதியார் 250px-Tiruvalluvar_Statue_Kanyakumari-225x300அவரது வடிவமைப்பில் உருவான கன்னியாகுமரித் திருவள்ளுவர் சிலைத் திறப்புவிழாவில் 2000 தை 1இல் சென்று கலந்துகொண்டேன்.

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சிற்பியின்
மரபில் வந்தவர் திரு. கணபதி ஸ்தபதியார். திராவிடக் கட்டடக் கலை
நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்.

இறைவனை வழிபட எண்ணுவோர் கோயில் அமைக்க
விழைவர். அவ்வடியவர்களுக்குக் கோயில் அமைப்பின் வரன்முறைகளைக் காட்டுபவர்,
மனத்தை ஒடுக்கி, இறைவனை நோக்கிய வழிபாட்டுக்குத் தளமும் சூழமைவும்
படிக்கற்களாக்கித் தருபவர் திரு. கணபதி ஸ்தபதியார்.

தமிழர் மரபுவழி வாழ்விடங்களுள்ளும்
தென்னிந்தியாவிலுமாய் முடங்கிய திருக்கோயில் வடிவமைக்கும் இன்றைய
ஸ்தபதிகளின் முன்னோர்களைத் தென்கிழக்காசியாவெங்கும் அழைத்துச் சென்றவர்கள்
சோழப் பேரரசினர்.

ஆங்கிலேய ஆட்சியிலும் சிங்களப்
பேரினவாதத்தின் கொடுமை தாங்காமலும் கடந்த 200 ஆண்டுகளாகப் பூமிப்
பரப்பெங்கும் புலம்பெயர்ந்து வருவோர் இன்றைய ஸ்தபதிகளை உலகெங்கும்
அழைத்துச் செல்கின்றனர்.

தமிழ்ச் சைவ வைணவப் பண்பாட்டுப் பேணலின்
தேடல்களும் அடையாளத்தைத் தக்கவைக்கும் முயற்சிகளும் சூரியன் மறையா
நிலப்பரப்பெங்கும் தமிழ்க் கட்டடக் கலைப் பேரரசு அமைக்கத் துணை நின்றன.

நாள் மாறும் நெடுங்கோட்டின் மேற்குள்ள
பிசித் தீவில் தொடங்கி, சூரியனோடு பயணித்து, நாள் மாறும் நெடுங்கோட்டின்
கிழக்குள்ள அவாய்த் தீவு வரையாகப் பல நாடுகளில் சிவன் கோயில்களைத் தமிழர்
அமைத்துள்ளனர்.

திரு. கணபதி ஸ்தபதியாரின் கைவண்ணம் பிசித்
தீவு தொடக்கம் அவாய்த் தீவு வரை பூமிப் பந்தின் பல நாடுகளில் தமிழரின் கலை
வண்ணப் பேராட்சிக்கும் இறை வழிபாட்டுத் தளங்கள் அமையவும் காரணமாயின.

காலத்தின் கொடுமை கணபதி ஸ்தபதியாரின்
மறைவு. கன்னியாகுமரியில் நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை, ஆழிப்
பேரலையின் வீச்சையும் தாங்கிப் புகழுடன் நிறைவதைப் போல, காலத்தின் கொடு
வீச்சுகளையும் மீறித் திரு. கணபதி ஸ்தபதியாரின் புகழ் உலகக் கட்டடக் கலை
வரலாற்றில் நிலைக்கும்.



படங்களுக்கு நன்றி
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலகக் கட்டிடக் கலை வரலாற்றில் கணபதி ஸ்தபதியார் Empty Re: உலகக் கட்டிடக் கலை வரலாற்றில் கணபதி ஸ்தபதியார்

Post by ஜனனி Fri Oct 21, 2011 3:17 pm

ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum