TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பர்னிங் மேன் Burning Man

Go down

பர்னிங் மேன்  Burning Man Empty பர்னிங் மேன் Burning Man

Post by sakthy Tue Oct 18, 2011 10:23 am

Burning Man.

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

முன்னர் போரின் போது பொதுவான இடத்தை, மக்கள் நடமாட்டமில்லாத இடத்தை தெரிந்தெடுத்து அங்கே போர் நடக்கும்.ஆனால் இன்று மக்கள் மீதே இராசயண,கொத்துக் குண்டுகளை வீசி கொலை செய்வது தான் நாகரீகமாக கருதப் படுகிறது. எது நாகரீகம்,எது மனித நேயம்,எது சுதந்திரம் என்பது தெரியாது போய் விட்டது.?

சமீபத்தில் அமெரிக்க நாட்டில் தன் பக்க நியாயத்தை எடுத்து சொல்ல அவகாசம் கேட்ட, ஒரு குற்றம் சாட்டப்பட்ட நிரபராதி, போலீஸ்காரரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு விச ஊசி மூலம் மரண தணடனையை தழுவிக் கொண்டார் .

புளோரிடாவில் 12 வயதுப் பையன் தன் 2 வயது தம்பியுடன் விளயாடிக் கொண்டிருந்தான். விளையாட்டு வேகம் தலையில் அடிபட,மாலையில் அம்மா வீட்டிற்கு வந்த போது 2 வயது குழந்தையை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. ஆனால் அமெரிக்க நீதி அந்த சிறுவனை பெரியவனாக கருதி கடுமையான ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
சமீபத்தய கலவரத்தில் லண்டனில் கடையை கொள்ளையிட்டதாக கூறி 12 வயது சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை வழங்கப்பட்டது. 16 வயதிற்கு குறைந்தவர்களுக்கு குறைந்த சிறுவர்களுக்கான தண்டனையோ அல்லது சீர்திருத்த பள்ளிகளுக்கோ அனுப்புவதே மற்றைய பல நாடுகளில் கடைப் பிடிக்கப்படும் போதும் கூட அமெரிக்க, பிரிடிஷ் நீதி இந்த கொடுமையான தண்டனையை ஒன்றும் அறியாத சிறுவர்களுக்கு வழங்கி உள்ளது. நாகரீக மிக்க நாடுகள் கொடுத்த இந்த தண்டனை தான் இந்த நூற்றாண்டு நாகரீகமா?
பள்ளியில் அடிக்கக் கூடாது என்று குரல் எழுப்பும் மனித உரிமையாளர்கள் கண்ணை மூடிக் கொண்டது ஏன்
அரசியல்வாதிகள் அதிகாரிகள் செய்யும் ஊழல்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது.அது கொள்ளை இல்லையா.பதவி விலகளுடன் தப்பித்துக் கொள்கிறார்கள்.சட்டமும் நீதியும் கண்களை மூடிக் கொள்ளுகிறது.
பயங்கர ஆயுதங்கள் இருப்பதாக கூறி ஈராக் நாட்டுக்குள் நுழைந்து சதாமை தூக்கில் ஏற்றிய அமெரிக்கா,கியூபா தீவொன்றில் சிறைக்கைதிகளை அடைத்து வைத்து மிருகத்தனமான மனித உரிமை மீறல்களை செய்து வரும் அமெரிக்காவிடம் எந்த நூற்றாண்டு நாகரீகத்தை எதிர்பார்க்கலாம்? பணமும் பலமும் இருந்தால் எதையும் செய்யலாம் என்று எண்ணும் நாகரீகம் இந்த நூற்றாண்டில் இல்லாமல் வேறெந்த நூற்றாண்டில் இருந்தது?
ஈழத்து போரில் காயம் பட்டவர்களுக்கு யாரும் துணை இல்லை.எவரின் உதவியும் இல்லை.அடித்தவனே நன்றாக அடிபட்டதா என்று பார்த்து விட்டு சென்றான்.ஆனால் லிபியாவில் காயம் பட்டவர்களை யாரும் கேட்காமலேயே, பல நாடுகள் ஓடி சென்று தங்கள் நாடுகளுக்கு கூட்டி சென்று சிகிச்சை செய்கிறார்கள். இது தான் இந்த நூற்றாண்டின் நாகரீகமா இல்லை மனிதநேயமா?

சோவியத்தின் போலிவேசத்தை கோபட்ஷோ தகர்த்தார்.லண்டனின் வேடத்தை சமீபத்தய கலவரம் கலைத்தது. அமெரிக்காவின் கையாலாகாத்தனம், போலிவேடம், முதலாளிகளின் ஏகபோக உரிமை ஆதிக்கம், கடன்சுமை இவற்றை வெளியே கொண்டு வரும் வால் ஸ்ட்ரீட் போராட்டம், ஒரு நாள் கம்மியூனிச திசை நோக்கி அமெரிக்காவை கொண்டு செல்லுமா?

இந்த செய்திகளை எல்லாம் படித்து விட்டு நாம் அடுத்து சென்றது, நாகரீகம் என்று போற்றி மகிழும் புதிய உலகம் இல்லை எனக்கு மட்டுமே அது அப்படி தெரிந்தது. மற்றவர்களுக்கோ அது சொர்க்கபுரியாக காட்சி கொடுத்தது.
படித்து விட்டால் பட்டம் கிடைக்கும்.அதன் பின் வீட்டில் திருமண பட்டம் கொடுக்க பெற்றோர் முயற்சிப்பார்கள்,இது நம்மிடம் உள்ள பொதுவான வழக்கம். இந்த திருமண பந்தத்தில் இருந்து சில நாள் ஒதுங்க ஒரு சந்தர்ப்பத்தை நம் பல்கலைக்கழகம் எனக்கு தந்தது. திறமைசித்தி பெற்ற முதல் ஐந்து பட்டதாரிகளுக்கு முதல் முறையாக பல்கலைக்கழக நிர்வாகம் தங்கள் செலவில் ஒரு சுற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்தது. அவர்களாகவே ஏற்பாடு செய்யும் ஒரு இடத்திற்கு அழைத்து செல்வார்கள். இந்தக் குழுவில் எனக்கும் இடம் கிடைக்கவே நாம் ஐவரும் தயாரானோம். சான் பிரான்சிஸ்கோ - நெவேடா ஊடாக ரெனோவிற்கு சென்றோம். ரெனோவில் பெரிய வாகனம் ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்ட நிர்வாகம் சில ஆயிரம் லீற்றர் தண்ணீர் உட்பட அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் வண்டியில் நிரப்பியது. இருப்பதற்கே இடமில்லாமல் 115 மைல்களுக்கு அப்பாலுள்ள பிளாக் ரோக் சிடி (BlackRockCity) சென்றோம். அங்கே சிறிது தூரம் சென்றதும் பர்னிங் மான் (Burning man city) தென்பட ஆரம்பித்தது. Black Rock City ல் உள்ள Burning man ஒரு பாலைவனமாக புழுதி மண்டலமாக காட்சி தந்தது.
நகருக்குள் வாகனங்கள் போக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நகருக்கு வெகு தொலைவில் நிறுத்திய போது காவலர்களால் வண்டி சோதனைக்குள்ளானது. ஆயுதங்கள் இருக்கிறதா என சோதித்ததாக சொன்னார்கள்.வாகனங்களுக்கு அருகிலேயே கூடாரங்கள் அடித்து தங்க முடிந்தது.ஒன்றா இரண்டா ஆயிராக் கணக்கான கூடாரங்கள். பின் நகரை நோக்கி சென்றோம்.தொலைவிலேயே burningman சில மீற்றர் உயரத்தில் நின்று எங்களை பார்த்து சிரிப்பது போல் தோன்றியது. எட்டாம் நாள் நான் எரியப் போகிறேன்,நீங்களும் ஒரு நாள் என்னைப் போல் எரியப் போபவர்கள் தானே என்று சொல்வது போல் தோன்றியது. நுழைவாயிலை அணுகிய போது இரண்டு அழகிகள் அரை குறை ஆடைகளுடன் எங்களை வரவேற்றார்கள்.முதலில் temple என்று அவர்களால் சொல்லப்பட்ட கோயிலுக்கு சென்றோம். அந்தக் கோயில் ஒரு சிறிய வரவேற்பறை போல் இருந்தது. அங்கே கடவுள் இல்லை. ஆனாலும் கலை வேலைபாடுடன் காணப்பட்டது. இனி உங்கள் சுதந்திரம் என்று சொல்லி அழகிகள் மறைந்து விட்டனர்.

1986 ளில் Larry Harvey யினால் ஆரம்பிக்கப்பட்டு பல இடங்களிலும் கொண்டாடப்பட்டு 1990 முதல் black rock city ல் நடந்து வருகிற ஒரு கலை கொண்டாட்டம்,வருடம் தோறும் ஆகஸ்ட் இறுதியில் தொடங்கி செப்டம்பர் முதல் திங்களில் வரும் labour day என்று சொல்லப்படும் விடுமுறை நாளிற்கு முதல் வரும் வார இறுதி நாளில் burning man எரிவதுடன் முடிவடைகிறது. எட்டு மணி வேலை நேரம் கேட்டு போராடிய தொழிலாளர்களின் தினம் இந்த labour day (may day),அமெரிக்கா மற்றும் சில அமெரிக்க நாடுகளிலும் விடுமுறை தினமாக உள்ளது.

நகருக்குள் நுழைந்ததும் பல இடங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பல கலைக் கூடங்கள் அழகாக கலை நுட்பங்களை காட்டி நின்றது. இது ஒரு புதுமையான நகர். எங்கும் கட்டிடங்கள்,கடைகள், உணவு விடுதிகள்,தெருக்கள் எதையும் காண முடியாது. ஒரே பாலைவன வெளி,புழுதி மண்டலம். வாகனங்கள் ஓட்ட முடியாது.நடப்பது இல்லையேல் சயிக்கிள் மட்டுமே. நாம் சுதந்திரமாக எங்கும் போகலாம்,எதையும் செய்யலாம். சிறிய காப்பி கடை,ஐஸ் கடை மன்னிக்கவும் அது கடை அல்ல தெருவில் தள்ளி செல்வது போன்ற சிறு விற்பனை நிலையம், சரியாக சொல்லப் போனால் நம் நாட்டு ரயில்,பஸ் நிலையங்களில் காப்பி விற்பனை செய்வது போன்ற ஒன்று, நகர் மத்தியில் இருந்தது.
மக்கள் கூட்டம் அலை மோதவில்லை!.யாரும் யாரையும் சட்டை செய்யவில்லை.ஆனாலும் சிரித்துக் கொள்கிறார்கள்.தெரிந்தவர்கள் போல் நலம் விசாரிக்கிறார்கள். அந்த நகரில் ஐம்பது ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூடி இருந்தும் பெரிய பாலைவனப் பகுதியில் நெருக்கடி இல்லை,திருட்டு இல்லை.சுத்தமோ சொல்ல முடியாது.ஒரு சிறு பேப்பர் துண்டைக் கூட தெருவில் அந்தப் பெரு வெளியில் காண முடியாது.போலீசார் எவரும் இல்லை என்பதால் நகர் தொண்டர்கள் சிலரிடம் பேசினோம். வரும் மக்களே சுத்தமாக இருக்கிறார்கள்.எங்கும் எதையும் வீசாது தங்களுடனேயே எடுத்து சென்று விடுகிறார்கள் என்றார்கள்.சுதந்திரமுள்ள எதுவித கட்டுப் பாடுகளும் இல்லாத இந்த பாலைவன வெளியில் இப்படி ஒரு ஒழுங்கா,கட்டுப்பாடா?
ஆச்சரியத்துடன் மேலே செல்கிறோம். ஆங்காங்கே உள்ள தற்காலிக கழிவறைகள்,தலையை நுழைத்துப் பார்க்கிறோம். ஆகா எவ்வளவு சுத்தம், நம்ப முடியவில்லை. கழிவறையை பாவிப்பவர்களே உடன் சுத்தமும் செய்து விடுகிறார்கள்.இடையிடையே வரும் தொண்டுக் காவலர்கள் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்து செல்கிறார்கள். இரவு எல்லா கலைக் கூடங்களும் வண்ண விளக்கில் அழகு கொஞ்சுகிறது அவ்வளவு அழகு.நவீன ஓவியங்களில் உள்ளது போல் சிறிய, பாரிசின் சாய்ந்த கோபுரம் போல் நவீன கலைநுட்பங்கள் கண்ணைக் கவருகிறது.கலை விழாவாக காட்சி தரும் இங்கு குழந்தைகள் விளையாடும் அற்புத பொருட்கள்,கோபுரங்கள்,சிறியர் பெரியவர்கள் எந்த வேறுபாடுகளும் இன்றி விளையாடுகிறார்கள்.பந்தங்கள் சுற்றுகிறார்கள்,பெரு நெருப்பை மூட்டி சுற்றி இருந்து இன்பமாக பொழுதைக் கழிக்கிறார்கள். எழுத்தில் சொல்ல முடியாத சொர்க்கபுரியாக காட்சி தரும் இங்கு வாண வேடிக்கைகள் கூட அற்புதம் தான்.எல்லாம் எட்டு நாட்களுக்கு மட்டுமே. பின் அவை கலைந்து விடும்,அப்புறம் அடுத்த ஆண்டு வரை தேடப் படாத பாலைவன வெளி தான்.

பகலில் 40 C க்கு மேல் வெய்யில் சென்னையை விட அகோரமாக கொதிக்கிறது.இரவிலோ 7 பாகைக்கு கீழ் வந்து குளிர் வாட்டுகிறது. ஆனாலும் அனைவரின் மனத்திலும் ஒரு நிறைவு, மகிழ்ச்சி . நீதி,சட்டம், போலீசார்,சாலை விதிகள், அலுவலகம், வேலை இப்படியான எல்லா கட்டுப் பாடுகளையும் மறந்து,அவசர இயந்திர உலகை மறந்து சுதந்திரமாக தங்கள் இஷ்டம் போல் சுற்றும் மனித கூட்டம். போலீசார் இல்லை,சாலை விதிகள் இல்லை,சட்டம் இல்லை,துரத்தும் தெரு நாய்கள் இல்லை,அரசியல்வாதிகள் சாமியார்கள் இல்லவே இல்லை. ஆடுகிறார்கள் பாடுகிறார்கள். நாமும் சென்று பாட முடியும். அன்புடன் அணைத்துக் கொள்கிறார்கள்.
பக்கத்தில் வந்த வெள்ளை ரோஜா என் முதுகில் இடிக்கிறாள். திரும்பிப் பார்க்கிறேன்.கண்ணால் ஒரு திசையை காட்டுகிறாள். நம்ப முடியவில்லை. இது தான் சுதந்திரமா?
சிலர் சையிக்கிள் வண்டியிலும் வேறு சிலர் கால் நடையாகவும் சென்று கொண்டிருக்கிறார்கள். கண்ணை கசக்கிக் கொண்டு பார்க்கிறேன்.உண்மையா,கனவா?
எந்த வித உடையும் இன்றி முழு நிர்வாணமாக, பிறந்த மேனியாக பெண்கள். ஆடுகிறார்கள்,பாடுகிறார்கள்,நிலத்தில் மண்ணில் உருளுகிறார்கள்.மூக்கினுள் புழுதி நுழையக் கூடாது என்று பலர் பன்றிக் காச்சல்,பறவைக் காச்சலுக்கு வாயையும் மூக்கையும் மூடிக் கொண்டு செல்வது போல், சென்று கொண்டிருக்கும் போது, இவர்கள் முழு நிர்வாணமாக நிலத்தில் உருளுகிறார்களே! வெள்ளை ரோஜா என்னை இழுத்துக் கொண்டு மறு புறம் அழைத்து செல்கிறாள். ஆனாலும் ஒரு சிலர் நம்மையும் உருள வைத்து விட்டார்கள். இப்படி மண் புழுதியில் உருளுகிறார்களே எங்கே எப்படி குளிப்பது என்று ஒருவரிடம் கேள்வியை எழுப்புகிறேன். அவர் எதுவும் பேசாது தன் கையில் இருந்த ஒரு லீற்றர் தண்ணீரை தலையில் ஊற்றிக் கொள்கிறார். குளித்து விட்டேன் என்று சொல்லி போய்க் கொண்டிருக்கிறார். சிரித்தபடி வந்த ஒரு பெண் சொன்னாள், எட்டு நாள் முடிந்ததும் ஹோட்டலில் சென்று குளிப்போம் என்றாள்.இது அவளுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் உள்ள நடை முறை தான்.
இதை விட சிலர் ஒரு இடத்தில் இருந்து பிரார்த்தனை செய்கிறார்கள். கடவுளை தேடுகிறோம் என்ற இவர்கள், எங்களையும் இருக்கும் படி சொல்கிறார்கள். சிறிது நேர பிரார்த்தனையின் பின் விடை பெறுகிறோம். ஒரு வெள்ளைஜோடி திருமண உடையுடன் வழி மறிக்கிறது.நாம் திருமணம் செய்ய இருக்கிறோம்.வந்து வாழ்த்துங்கள் என்கிறது. வாழ்த்தி விட்டு விடை பெறுகிறோம்.ஆனாலும் பின் சந்தித்த ஒரு சிலர் இங்கு வருபவர்கள் எல்லாம் நாகரீகம் தெரியாத ஹிப்பிகளின் கூட்டம் என்று சொல்லி சிரிக்கிறார்கள்.
பசி வாட்டியது கூடாரம் நோக்கி செல்கிறோம்.
பூச்சி புளுக்களை(மீன்,இறைச்சி போன்ற மாமிச உணவுகளை) தவிர்த்துக் கொள்ளும் எனக்காக பேராசிரியர் சில மரக்கறி உணவு அடைக்கப்பட்ட ரின்களை எடுத்து வந்ததால் தப்பித்துக் கொண்டேன்.இல்லையேல் எட்டு நாட்களும் பாலைவன வெய்யிலில் என்னவாகி இருப்பேனோ?

சனிக்கிழமை இரவு burningman எரிந்து தன்னை அழித்துக் கொண்டு நம்மை வழி அனுப்ப தயாராகிறான்.ஒவ்வொரு மனிதனும் தன்னை அழித்துக் கொண்டு தன் வாரீசுகளை விட்டு செல்கிறான்.இது தொடருகிறது.பிறப்பையும் இறப்பையும் தெரிந்து கொள்ள முடியாத மனிதனின் இந்த வாழ்வு தொடக்கமா முடிவா?மனிதனால் தன் பிறப்பையும் தெரிந்து கொள்ள முடியவில்லை.இறப்பையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் நாகரீகம் என்கிறான்,ஒருவனை ஒருவன் அழித்துக் கொள்கிறான், இறக்கும் போது தன்னுடன் கொண்டு போக முடியாத பணத்தை எல்லாம் உண்மை என்றெண்ணி எத்தனை தில்லு முல்லுகளை செய்து,ஏமாற்றி,மற்றவர்களின் கண்ணீருக்கு காரணமாகி,சேர்த்த அந்தப் பணத்தை அனுபவிக்காமலேயே இறந்தும் விடுகிறான்.
பாலைவன வெயிலும் குளிரும் வாட்டினாலும்,எட்டு நாட்கள் குளியலை மறந்தாலும்,மண் புழுதியில் உருண்டாலும், கலைப் படைப்புக்கள் கொண்ட கலை விழாவானாலும் மனத்தில் எங்கோ முள்ளால் குத்தியது. சுதந்திரம், கட்டுப்பாடுகளற்ற வாழ்வைக் கூட ஏற்றுக் கொண்டாலும் கூட கி.மு. 21 க்கு முந்தைய காலத்திற்கு கொண்டு செல்லும் நிர்வாண உலகம் தேவையா? நிர்வாணமாக திரிவது தான் சுதந்திரமா?
ராஜபக்சேயின் சிங்கள ஆட்சி சொல்லும் சுதந்திரமோ வேறொரு சுதந்திரமாக உள்ளது.
சிலர் இன மொழி சுதந்திரம் கேட்கிறார்கள்,வேறு சிலரோ எழுத்து,பேச்சு,ஊடக சுதந்திரம் கேட்கிறார்கள.அணு உலைகளை சிலர் மூட நினைக்கிறார்கள்.சிலர் அதையே தொடங்க நினைக்கிறார்கள். சுதந்திரம் என்ற போர்வையில் மக்கள் அதிகார,பணம் படைத்த வர்க்கத்திடமும்,பைத்தியக்காரர்களிடமும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.எது சுதந்திரம்?என்னைப் போல் கிடைக்கும் ஏதோ ஒரு இடத்தில் எழுதிக் கிழிப்பது தான் சுதந்திரமா?
சமீபத்தில் நடந்து வரும் லண்டன்,ஆஸ்திரேலியா,நியூசீலாந்து சம்பவங்களை நோக்கும் போதும்,இணையத்தளங்கள்,சினிமாக்களைப் பார்க்கும் போதும் பலர் நிர்வாணமாக சுற்றும் சுதந்திரத்தை கேட்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏன்?
இமயமலை சாரலில் வாழும் அகோரிகள்,சாதுக்கள் போன்று மனத்தை நிர்வாணமாக்காது, உடலை நிர்வாணமாக்கும் வாழ்வு தான் சுதந்திரமா, ஆன்மீகமா, இறைவனை அடையும் வழியா போன்ற பல விடை காண முடியாத கேள்விகளுடன் திரும்புகிறேன்.
நாம் எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம்? அறிவியல் வளர்ந்து விருட்சமாகிறது. எத்தனை விஞ்ஞான வெற்றிகள்,சாதனங்கள்,அறிவியல் உலகை வெற்றி கொண்டு வான் வெளியை ஆட்சி கொள்ள, கடவுள் வாழும் H855126b கிரகத்திற்கு செல்லத் துடிக்கும் இந்த நாளில் மனிதநேயம் முன் நோக்கி போகிறதா இல்லை பின் நோக்கி போகிறதா?இது தான் நாகரீகமா?சுதந்திரமா?விடுதலையா?

மீண்டும் ஒரு சிந்தனையுடன்.....................சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum