TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கொஞ்சம் அழலாம் வாங்க பகுதி-1

2 posters

Go down

கொஞ்சம் அழலாம் வாங்க பகுதி-1 Empty கொஞ்சம் அழலாம் வாங்க பகுதி-1

Post by sakthy Sat Jun 25, 2011 1:38 am

விரும்பினால் படியுங்கள் - 4

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.

ஆடு மாடு பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருப்பீர்கள் என்று தெரியும். நீண்ட நேரம் புல்லை மேயும் இவை, பின்னர் ஒரு இடத்தில் இருந்து உணவை அசை போடும்.இதை இரை மீட்பது என்று சொல்வார்கள்.அதே போல் உங்களுக்கு தெரிந்தவற்றை, மீண்டும் வெளியே கொண்டு வந்து சிந்திக்க வைக்க வேண்டும் என்பதே என் எண்ணமாகும். சிந்திக்க தெரிந்த மனிதன் சிந்திக்காமல் இருந்தால் அதை விட கேவலம் என்ன இருக்க முடியும்.

5000 வருடங்களுக்கு முன்னர் 70,000 மக்களை சாட்சியமின்றி இழந்தோம். இன்று 250,000 மக்களை அதே போல் சாட்சியமின்றி இழந்துள்ளோம். இனிமேலுமா சிந்திக்கமாட்டோம்? சிங்களத்தினதும்,CIA யினதும் கணக்கை வைத்து ஐ.நா. 40,000 மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது. ஆனால் ஈழம் இழந்ததோ 250,000 மக்களை. இந்த நிலையில் நீங்கள் தூங்கவும் மாட்டீர்கள் சிறிதாவது சிந்திக்காமல் இருக்கவும் உங்களால் முடியாது என்று எனக்கு நன்றாகவே தெரியும்.ஆனால் இந்த கிறுக்கன் மீண்டும் வந்து நம் கழுத்தை அறுக்க வந்து விட்டானே என்று திட்டுவீர்கள் என்று மட்டும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் உங்களை விடப் போவதில்லை.

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்து வந்து இடைவழியில் மறைந்து விடும் ஏஜென்சிகாரர்களைப் போல்,விமான நிலையத்தில் இறக்கி விட்டு ஓடி மறைந்து விட்டேனா? இன்றைய பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுக்கூர் என்ற இடத்தில் இருந்து 80 கி.மீ. தூரத்திலும் டாடு ல் இருந்து 75 கி.மீ தூரத்திலும், லர்கானா நகரில் வில் இருந்து 27 கி.மீ தூரத்திலும் உள்ளது மொகெஞ்சதாரோ, (The Mound of the Death என்று பொருள்) லர்கானா நகரை வசிப்பிடமாக கொண்ட கலீல் என்ற வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் மாணவன் எமக்கு உதவியாக வந்தான்.அவன் பள்ளிக் காலத்தில் 12 தடவைகள் அந்த பழைய நாகரீக சின்னங்களை பார்த்திருப்பதாக சொன்னான்.

அந்த ஆதி தமிழனின் நகரைக் கண்டதும் கதறி அழத் தோன்றியது. அந்த நகரில் 40,000 மக்களுக்கு மேல் (ஹரப்பாவில் 23,500 வரை) வாழ்ந்திருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நீங்கள் பாடசாலையிலும், புத்தகங்களிலும்,இணையத்தளங்களிலும் பார்த்து படித்த அனைத்தையும் மீண்டும் எழுதி உங்களை வெறுப்படைய வைக்க விரும்பவில்லை. ஆனாலும் சில கேள்விகளுடன், கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் மூதாதையர்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? போன இடமும் தெரியவில்லை. கண்டெடுக்கப்பட்ட 37 வரையிலான எலும்புக் கூடுகளில் இருந்து எதையும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.

அங்கே என்ன இல்லை? 850 ஹெக்டயர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த நகரில், நீண்ட தெருக்கள்,குளியல் அறை,பெண்கள் குளிப்பதற்கு தனியான நீர்த் தடாகங்கள்,கிணறுகள்,வடிகால் அமைப்புக்கள்,தியான மண்டபம், கழிவறைகள்,குழந்தைகளுக்கான விளையாடுமிடங்கள், குழந்தைகளுக்கான பல விதமான விளையாட்டுப் பொருட்கள்,சிறந்த எவராலும் எண்ணிப் பார்க்க முடியாத முறையில் அமைந்த வடிகால் அமைப்புக்கள், வீட்டிற்கு ஒரு கிணறு,குளியல் அறை,வீதிகளில் குடி தண்ணீர் கிணறுகள்,விற்பனைக்கடைகள் என்று எல்லாம் இருந்திருக்கின்றன. வீடுகள் மாடிவீடுகளாகவும் அழகான படிகளைக் கொண்டதாகவும் இருந்திருக்கின்றன.

இதைவிட முக்கியமானது என்னவெனில் எல்லா மக்களும் சாதி,வகுப்பு,தொழில் ரீதியாக எந்த வேறுபாடும் இன்றி ஒன்றாக வாழ்ந்தது தான். பொருட்களை, தானியங்களை நிறுத்து வாங்க படிக் கற்கள் வெவ்வேறு அளவுகளில் அழகாக செதுக்கப்பட்டு வைத்திருக்கிறார்கள். பட எழுத்துக்களால் எழுதப்பட்ட செய்திகள் தமிழ் எழுத்துக்களின் ஆரம்பமோ என எண்ணத் தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஆதாரமாக திருநெல்வேலியில்,உங்களுக்கு அப்படி ஒரு இடம் தமிழ் நாட்டில் இருப்பது தெரிந்திருந்தால்,அங்கு கிடைத்த பானை போன்ற பாத்திரங்களிலும்,நீலகிரிப் பகுதியில் உள்ள சில கல்வெட்டுகளிலும் இந்த மாதிரியான எழுத்துக்களைக் காணலாம்.

இந்த இந்துநதி நாகரீகம் கி.மு.3000 - 1900 வரை இருக்கலாம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்த போதும்,ஹெரஸ் பாதிரியார் Radio Carbon Dating அடிப்படையில் கி.மு.5610 ற்கு முற்பட்டது என்று திட்டவட்டமாக கூறுகிறார். அத்தோடு நின்று விடாது இந்தியாவில் இருந்த தமிழர்களே இந்து நதியை நோக்கி பெயர்ந்து மொகெஞ்சதாரோ,கரப்பா நகர்களை உருவாக்கினார்கள் என்றும் கூறுகிறார்.
அந்த மக்கள் சிவ வழிபாடும்,சக்தி வழிபாடும் கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது. அந்த நகரங்களை தலைமை தாங்கி நடத்தியவர்கள் மதத் தலைவர்களாகவோ, வணிகர்களாகவோ இருந்திருக்கலாம் என்றும் போர் செய்வதற்குரிய எந்த நிலையிலும் அவர்கள் இருந்திருக்கவில்லை எனவும் தெரிகிறது. அங்கு காணப்பட்ட சிறிய ஆயுதங்கள் மிருகங்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதுகிறார்கள். நிராயுதபாணிகளாக இருந்த அவர்களை அழித்தவர்கள் யார்? விடை தெரியாத கேள்வி. அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஆரியர்களின் மத கலாச்சாரம் அவர்களிடம் இருக்கவில்லை எனவும், அவர்கள் அழிவிற்குப் பின்னரே ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகிறார்கள். இந்த இரண்டு சிறந்த மனித நாகரீகத்தை தந்த நகரங்கள் அழிக்கப்பட்ட பின்னரே ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்திருப்பது உறுதியாக உள்ளது என்றும் அது கி.மு.2000 அளவில் நடந்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
எந்த காரணத்தால் அந்த நகரமும்,மக்களும் அழிக்கப்பட்டாலும் கூட,அழிக்கப்பட்ட மக்களின் எச்சங்கள் எப்படி இல்லாமல் முற்றாக மறைந்தன, மறைக்கப்பட்டன என்பது இன்றும் கேள்விக்குறியாக நிற்கிறது. சாட்சியங்கள் அழிந்த மொகெஞ்சதாரோ, சாட்சியங்கள் அழிக்கப்பட்ட ஈழத்து வன்னி?
கி.மு. 2200 அளவில் ஏற்பட்ட பெரும் வரட்சியும் அதை தொடர்ந்து உண்டான உணவுப் பஞ்சமுமே ஆரியர்களை இந்தியா நோக்கி நகர வைத்தது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.ஆரியர்கள் கி.மு.2000 அளவில் கஸ்பியன் கடலை அடுத்துள்ள பகுதிகள் மற்றும் கிர்கிஸ்தான், Kirghizstan, ல் இருந்தும் ஈரான் - இந்துக்குஸ்,கைபர் கணவாய் வழியாகவும்,இந்து நதி ஊடாகவும் இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளார்கள். ஒரு கூட்டம் ரஸ்சியாவிற்கும்,இன்னொரு கூட்டம் ஆப்கானிஸ்தானிற்கும் சென்றிருக்கிறது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். வேறொரு கூட்டம் அராபிய நாடுகள் ஊடாக இஸ்ரயேல் பகுதிகளுக்கும்,வேறு சிலர் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்கள். இஸ்ரயேல் பகுதிகளுக்கு சென்றவர்களே பைபிளில் சொல்லப்படும் ஆதி சிறு தெய்வ வழிபாடுடையவர்கள் என்று கருதப்படுகிறது.
மொகென்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை வைத்து, ஆரிய படையெடுப்பினால் அந்த நகரம் அழிக்கப்பட்டு இருக்க முடியாது என்று சிலரால் கூறப்பட்டாலும்,ஏதோ மர்மம் இருப்பதாக வரலாற்று ஆராச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட காலத்தில் அத்தனை ஆயிரம் மக்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர். மோகஞ்செதரோ- ஹரப்பா வின் அற்புதமானதும், வியப்புக்குரியதுமான மனித நாகரீகத்தை தந்த 70,000 மக்களும் நதிப் பெருக்கெடுப்பால் அள்ளிச் சென்றிருக்க முடியுமா என்ற சந்தேகத்தையும் வைக்கிறார்கள் ஆய்வாளர்கள். போரினால் கொல்லப்பட்டு பின் அழிக்கப்படிருக்கலாம் என்ற சந்தேகமும் சிலருக்கு ஏற்பட்டதை எண்ணிப் பார்க்க வேண்டி உள்ளது. இறந்தவர்களை எரிக்கும் நடைமுறையும் அன்று இருந்திருக்கிறது.அதற்கு தனியான இடத்தையும் அவர்கள் அமைத்திருக்கிறார்கள். இது நகர் புறத்தில் இருந்து வேறாகி தனிமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதைவிட நகரின் வெளிப்புறத்தில் உணவுத் தானியங்கள் பயிரிடும் விளை நிலங்களையும் நாம் காண முடியும்.
இந்த நகர் உயர்ந்த பகுதியாகவும்,சிறிது தாழ்ந்த பகுதியாகவும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகர் எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? இந்த நகரங்கள் பற்றிய குறிப்புக்கள் முதலில் 1800ல் பிரித்தானியரால் பதிவு செய்யப்பட்டிருந்தது.இருப்பினும் 1826 ல் பிரித்தானிய இராணுவத்தை சேர்ந்த ஜேம்ஸ் லுவிஸ் என்பாரால் ஹரப்பா என்ற நகர் கண்டு பிடிக்கப்பட்டது. 1853,1856 வருடங்களில் அலெக்ஸாண்டர் கண்ணிங்கம் என்ற இந்தியாவில் ஆராய்ச்சியை அப்போது நடத்திக் கொண்டிருந்த தொல்பொருள் ஆய்வாளர் அந்த நகருக்கு சென்றிருந்தார். ஆனாலும் அப்போது அந்த பழம் பெரும் நகரங்க்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் அருகே அமைந்திருந்த கிராம மக்கள் அங்கிருந்து செங்கற்களை திருடி, வீடுகளை அமைக்க கொண்டு சென்றனர் என்றும் அத்துடன் ரயில்வேயினரும் பாதைகளை அமைக்க செங்கற்களை கொண்டு சென்றனர் என்றும் சொல்லப்படுகிறது. யாருமற்ற அனாதையாய் முக்கியமற்ற நகராய் விளங்கிய அந்த நகரங்கள், 1920 அளவில் ஜோன் மார்ஷல்,பானர்ஜி என்பவர்களால் அகழ்வு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் கூட 40 ஆண்டுகள் வரை பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. 1986 ளில் HARP என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கொஞ்சம் அழலாம் வாங்க பகுதி-1 Empty Re: கொஞ்சம் அழலாம் வாங்க பகுதி-1

Post by மாலதி Sat Jun 25, 2011 7:26 am

கண்டிப்பாக இந்த கட்டுரை படித்த பின் சிந்திக்க வேண்டும் நல்ல இருக்கு நல்ல இருக்கு


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum