TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முதியோர் பென்சன் உயர்வு: திருமண உதவி தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம்; ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

Go down

முதியோர் பென்சன் உயர்வு: திருமண உதவி தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம்; ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Empty முதியோர் பென்சன் உயர்வு: திருமண உதவி தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம்; ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

Post by மாலதி Mon Jun 06, 2011 9:59 pm

சென்னை, ஜூன். 6-

முதியோர் பென்சன் உயர்வு: திருமண உதவி தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம்; ஜெயலலிதா தொடங்கி வைத்தார் E0daaa15-c8bf-4324-882a-3f1b9898bf9e_S_secvpf
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர்
ஜெயலலிதா மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவாகவும்,
செம்மையாகவும் நிறை வேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், பதவி யேற்ற
அன்றே ஏழு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில்
கையெழுத்திட்டார். முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட
பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை 1000
ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு
மேற்காணும் ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு
தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஓய்வூதியத்தை 1000 ரூபாயாக உயர்த்தி
வழங்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா 16.5.2011 அன்று ஆணையிட்டார்.

ஆதரவற்ற
முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவையர், கணவனால் கைவிடப்பட்ட
ஆதரவற்ற பெண்கள், ஆதரவற்ற வோளண்மை தொழிலாளர்கள், 50 வயது எய்தியும்
வாய்ப்பு வசதியின்றி திருமணமாகாத உழைக்கும் திறனற்ற ஏழைப் பெண்கள்
ஆகியோருக்கு சமூகப் பாதுகாப்பு அளித்து, அவர்களும் தங்கள் வாழ்வில் வளம்
காண வேண்டும், அனைத்து நலன்களையும் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள
முதல்- அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ஓய்வூதிய
தொகையை, 500 ரூபாயி லிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் சமூகப்
பாதுகாப்பு ஓய்வூதியங்கள் வழங்கும் திட்டத்தினை இன்று தொடங்கி வைத்து, ஏழு
பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையை வழங்கி வாழ்த்தினார்.

முதல்
- அமைச்சர் ஜெயலலிதா உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்ட இந்த ஓய்வூதியத்தை இந்த
மாதம் முதலே அனை வரும் பெறலாம். ஜெயலலிதாவின் இந்த ஆணையினால் ஏறத்தாழ
23.65 லட்சம் பயனாளிகள் பயன் பெறுவார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம்
இருந்து ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவதற்கான ஒப்பளிப்பு ஆணைகளை பெற்றுக்
கொண்ட ஏழு பயனாளிகளும் தங்கள் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்
கொண்டனர்.

இந்த திட்டத்தின்கீழ் இன்று ரூ. 1000 உதவித் தொகை பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

1. ரபியா-கொருக்குப் பேட்டை

2. மீனா-பிராட்வே

3. சுதாகர்-திருவான்மியூர்.

4. பச்சையம்மாள்- கீழ் அயனம்பாக்கம்.

5. விஜயலட்சுமி- பட்டா பிராம்.

6. அஞ்சலி-ஆலந்தூர்

7. நாகம்மாள்-சோழிங்க நல்லூர்.

முதல்-அமைச்சர்
ஜெயலலிதா, சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறையின் மூலம் தற்போது
செயல்படுத்தப்படும், ஐந்து திருமணத்திட்டங்களின் கீழ் பெண்களுக்கு திருமண
நிதி உதவி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் கீழ்
வழங்கப்படும் 25,000 ரூபாய் நிதி உதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம்
செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும், இளம்பெண்கள் கல்வி
கற்பதை ஊக்குவிப்ப தற்காக, இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற
பெண்களுக்கு திருமண உதவித்தொகையை 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக
உயர்த்தி வழங்குவதோடு மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம்
இலவசமாக வழங்கவும் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தப்படி
முதல்-அமைச்சர் ஜெயலலிதா 16.5.2011 அன்று ஆணையிட்டார்.

திருமண
வயதை அடைந்த பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் தங்கள் பெண்களுக்கு திருமணம்
செய்வதற்கும், அத்திருமணத்திற்கு தங்கம் வாங்கவும், போதிய நிதி வசதியின்றி
சிரமப்படு வதையும் அறிந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ஏழை பெற்றோர்கள் மனம்
குளிரும் வண்ணம் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி திருமண நிதி
உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டத்தை இன்று தலைமைச்
செயலகத்தில் தொடங்கி வைத்து, ஏழு ஏழைப் பெண்களுக்கு 25,000- ரூபாய் நிதி
உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய நான்கு கிராம், தங்க நாணயம் வழங்கி
வாழ்த்தினார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா,
இளம்பெண்கள் கல்வி கற்பதை ஊக்கு விப்பதற்காக, இளநிலைப்பட்டம் அல்லது
டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை ஏற்கனவே
வழங்கப்பட்ட ரூபாய் 25,000-த்தை, 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்க
ஆணையிட்டிருந்தார்கள். அதன்படி, இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம்
பெற்ற ஏழு பெண்களுக்கு, திருமண நிதி உதவியாக ரூபாய் 50,000-க்கான
காசோலையுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணய மும் வழங்கி
வாழ்த்தினார்.

முதல்-அமைச்சர்
ஜெயலலிதாவிடமிருந்து திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கமும்
பெற்றுக்கொண்ட பெண்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை முதல்-அமைச்சருக்கு
தெரிவித்துக் கொண்டார்கள்.

ரூ.25 ஆயிரம் திருமண உதவி தொகையும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

ராஜாத்தி
- (சென்னை), கன்னிகா - (காஞ்சீபுரம்), சித்ரா - (காஞ்சீபுரம்), பார்வதி
-(காஞ்சீபுரம்), ஷர்மிளா - (திருவள்ளூர்), சரண்யா - (திருவள்ளூர்),
கிறிஸ்டினா பிரியதர்ஷினி- (திருவள்ளூர்).

ரூ.50 ஆயிரம் திருமண உதவிதொகையும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

நித்யா, அமலா, அனிதா, கே. புவனேஸ்வரி - (சென்னை), டி. புவனேஸ் வரி, உமா, கவிதா - (திருவள்ளூர்).


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் வளர்ச்சித் துறைக்கு தனி வலைதளம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» எஸ்.எம்.எஸ்சில் மின் கட்டண விவரம்: தொடங்கி வைத்தார் ஜெயலலிதா!
» ரூ.50 கட்டணத்தில் பத்திர பதிவை சி.டி.யில் வழங்கும் புதிய திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்..
» தேர்தல் அறிக்கையில்"தாலிக்கு தங்கம்'
» தாலிக்கு தங்கம் திட்டம் : வங்கிகள் முலம் தங்க நாணயங்கள் பெற முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum