Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
விவகாரமா போயிடும் விவரமா இல்லன்னா...
Page 1 of 1
விவகாரமா போயிடும் விவரமா இல்லன்னா...
மனித வாழ்க்கையில் பல பருவங்கள் உண்டு. டீன்-ஏஜ்... அவற்றுள் பரவசமானது!
இந்தப்
பருவ வயதில் உடல், மன ரீதியாக நடைபெறும் பல்வேறு மாற்றங்களில்
முக்கியமானது, 'தனித்தன்மை' உருவாவது! அவரவரின் கேரக்டரைத் தீர்மானிக்கும்
அந்த 'தனித்தன்மை'... அழுத்தங்கள், ஏக்கங்கள், போராட்டங்கள், கவர்ச்சிகள்
என்று பலவிதமான படிக்கற்களையும் கடந்து அடைய வேண்டிய முக்கிய நிலை!
அதற்கான கனிவான, கவனமான வழிகாட்டல்தான்...
மொத்தத்தையும் நீங்கள் படித்து முடிப்பதோடு, மறக்காமல் படிக்கக் கொடுங்கள்... உங்கள் வீட்டு ஸ்வீட் டீன்களிடம்!
ரொம்ப 'ஷை'யா ஃபீல் பண்றீங்களா?
1.
முன்னேற்றத்தின் எதிரிகளில் முக்கியமானது, இந்தக் கூச்சம்! இந்தப்
பருவத்தில் மற்றவர்களிடம் சகஜமாக பேச முடியாதபடி ஒரு கூச்சம், தயக்கம்
எழும். அதை வளரவிடாமல், அப்போதே களைய வேண்டியது அவசியம். முதலில்
உங்களுக்கு நன்றாகத் தெரிந்த நண்பர்களுடன் பேசிப் பழக ஆரம்பியுங்கள்.
குறிப்பாக, கண்களைப் பார்த்துப் பேசுவது, கேள்விகள் கேட்பது, பயப்படாமல்
பதில் சொல்வது என ஆரம்பியுங்கள். பின் அந்த வட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக
விரிவடையச் செய்யுங்கள்.
2. தயக்கத்துக்கான முக்கிய காரணமே,
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் எண்ணம்தான். அடுத்தவர்களின்
நினைப்பை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். தைரியம்தான் முக்கியம்.
விமர்சனங்களைக் கண்டு பயப்படாமல் பேசுங்கள்.
3. சிலருக்கு எப்படி
பேச்சைத் துவங்குவது என்பது தெரியாது. முதல் வாக்கியத்துக்கே
சிரமப்படாமல், ''ஹாய்... எப்படி இருந்தது உங்க டிராவல்..?'', ''புது
டிரெஸ்ஸா... நைஸ்!'' - இதுபோல இயல்பாக ஆரம்பிக்கலாம்.
4. உரையாடலின் முடிவில் ஒரு கேள்வியை வையுங்கள். அப்போது அந்த உரையாடல் வளர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் தயக்கங்களும் விலகும்.
5.
கல்லூரி மேடையில், கிளாஸ் செமினாரில் என்று ஒரு கூட்டத்துக்கு முன் பேச
கூச்சம் அப்பிக்கொள்கிறதா? அதற்காக முன்கூட்டியே பயிற்சி எடுங்கள்.
கண்ணாடி முன் நின்று சத்தமாகப் பேசிப் பழகுவது ஒரு நல்ல வழி. நன்றாகப்
பயிற்சி எடுத்த பின், அங்கு தைரியமாக, தயங்காமல் பேசுங்கள். அப்படியும்
தப்பு வரலாம்... தப்பில்லை. அடுத்தடுத்த வாய்ப்புகளில் அவைஎல்லாம் தானாக
மறைந்து விடும்.
நன்றி - விகடன் ஆன்மிகம், பொதுநல சேவை, யோகா, தியானம் என ஏதாவது ஒரு சமூக குழுவில்
இணையுங்கள். அவை நல்ல குழுக்களாக இருக்கட்டும். அந்தக் குழு விஷயங்களில்,
ஆலோசனைகளில், கூட்டங்களில் பங்கெடுங்கள்... பேசுங்கள். எந்தக் குழுவில்
இணைந்தாலும் உங்கள் பெற்றோரிடம் சொல்லிவிட்டு இணைவது நல்லது.
7.
நிறைய படிப்பது, நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வது, நீங்கள் பேசுவதற்கான
கருப்பொருள் கொடுக்கும். நண்பர்கள் ஏதாவது பேசிக்கொண்டிருக்கும்போதே,
''ஆமா... இப்படித்தான் ஜப்பான் பிரதமர்கூட...'' என்று ஆரம்பித்து
கலக்கலாம்!
இந்தப்
பருவ வயதில் உடல், மன ரீதியாக நடைபெறும் பல்வேறு மாற்றங்களில்
முக்கியமானது, 'தனித்தன்மை' உருவாவது! அவரவரின் கேரக்டரைத் தீர்மானிக்கும்
அந்த 'தனித்தன்மை'... அழுத்தங்கள், ஏக்கங்கள், போராட்டங்கள், கவர்ச்சிகள்
என்று பலவிதமான படிக்கற்களையும் கடந்து அடைய வேண்டிய முக்கிய நிலை!
அதற்கான கனிவான, கவனமான வழிகாட்டல்தான்...
மொத்தத்தையும் நீங்கள் படித்து முடிப்பதோடு, மறக்காமல் படிக்கக் கொடுங்கள்... உங்கள் வீட்டு ஸ்வீட் டீன்களிடம்!
ரொம்ப 'ஷை'யா ஃபீல் பண்றீங்களா?
1.
முன்னேற்றத்தின் எதிரிகளில் முக்கியமானது, இந்தக் கூச்சம்! இந்தப்
பருவத்தில் மற்றவர்களிடம் சகஜமாக பேச முடியாதபடி ஒரு கூச்சம், தயக்கம்
எழும். அதை வளரவிடாமல், அப்போதே களைய வேண்டியது அவசியம். முதலில்
உங்களுக்கு நன்றாகத் தெரிந்த நண்பர்களுடன் பேசிப் பழக ஆரம்பியுங்கள்.
குறிப்பாக, கண்களைப் பார்த்துப் பேசுவது, கேள்விகள் கேட்பது, பயப்படாமல்
பதில் சொல்வது என ஆரம்பியுங்கள். பின் அந்த வட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக
விரிவடையச் செய்யுங்கள்.
2. தயக்கத்துக்கான முக்கிய காரணமே,
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் எண்ணம்தான். அடுத்தவர்களின்
நினைப்பை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். தைரியம்தான் முக்கியம்.
விமர்சனங்களைக் கண்டு பயப்படாமல் பேசுங்கள்.
3. சிலருக்கு எப்படி
பேச்சைத் துவங்குவது என்பது தெரியாது. முதல் வாக்கியத்துக்கே
சிரமப்படாமல், ''ஹாய்... எப்படி இருந்தது உங்க டிராவல்..?'', ''புது
டிரெஸ்ஸா... நைஸ்!'' - இதுபோல இயல்பாக ஆரம்பிக்கலாம்.
4. உரையாடலின் முடிவில் ஒரு கேள்வியை வையுங்கள். அப்போது அந்த உரையாடல் வளர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் தயக்கங்களும் விலகும்.
5.
கல்லூரி மேடையில், கிளாஸ் செமினாரில் என்று ஒரு கூட்டத்துக்கு முன் பேச
கூச்சம் அப்பிக்கொள்கிறதா? அதற்காக முன்கூட்டியே பயிற்சி எடுங்கள்.
கண்ணாடி முன் நின்று சத்தமாகப் பேசிப் பழகுவது ஒரு நல்ல வழி. நன்றாகப்
பயிற்சி எடுத்த பின், அங்கு தைரியமாக, தயங்காமல் பேசுங்கள். அப்படியும்
தப்பு வரலாம்... தப்பில்லை. அடுத்தடுத்த வாய்ப்புகளில் அவைஎல்லாம் தானாக
மறைந்து விடும்.
நன்றி - விகடன் ஆன்மிகம், பொதுநல சேவை, யோகா, தியானம் என ஏதாவது ஒரு சமூக குழுவில்
இணையுங்கள். அவை நல்ல குழுக்களாக இருக்கட்டும். அந்தக் குழு விஷயங்களில்,
ஆலோசனைகளில், கூட்டங்களில் பங்கெடுங்கள்... பேசுங்கள். எந்தக் குழுவில்
இணைந்தாலும் உங்கள் பெற்றோரிடம் சொல்லிவிட்டு இணைவது நல்லது.
7.
நிறைய படிப்பது, நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வது, நீங்கள் பேசுவதற்கான
கருப்பொருள் கொடுக்கும். நண்பர்கள் ஏதாவது பேசிக்கொண்டிருக்கும்போதே,
''ஆமா... இப்படித்தான் ஜப்பான் பிரதமர்கூட...'' என்று ஆரம்பித்து
கலக்கலாம்!
Re: விவகாரமா போயிடும் விவரமா இல்லன்னா...
8. உங்களுக்கான லட்சியம் ஒன்றை
உருவாக்குங்கள். அவை குறுகிய கால லட்சியங்களாகவும் இருக்கலாம். அதை
அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருங்கள். அந்த நினைவூட்டல் உங்களை
வழிநடத்திக் கொண்டே இருக்கும்.
9. அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த
எதையும் செய்ய ஆரம்பிக்காதீர்கள். உங்களுக்குச் சரி எனப்படுவது சரியாக
இருந்தால், தயங்காமல் அதைச் செய்யுங்கள். தவறு என உணர்ந்தால்
நிறுத்துங்கள். எல்லோரும் படகு வாங்குகிறார்கள் என்று படகு வாங்கி
ரோட்டில் நிறுத்துவது பயனளிக்காது.
10. 'தம் அடிப்பதை நிறுத்த
வேண்டும்' என பிடிவாதமாக முயன்றாலும், முடியவில்லையா? கவலை வேண்டாம்.
உங்கள் முயற்சியில் தொடர்ந்து பிடிவாதமாக, நம்பிக்கையுடன் இருங்கள்.
வெற்றி உங்களுக்கே!
11. உங்கள் திறமைகளை நீங்களே பாராட்டிக்
கொள்ளுங்கள். 'நான் குட்!' என்று உங்களுக்கு நீங்களே மரியாதை செய்யுங்கள்.
நல்ல திருத்தமான ஆடைகள் அணியுங்கள். இவையெல்லாம் உங்கள் தன்னம்பிக்கையை
வளர்க்கும்.
12. எதை நீங்கள் அதிகம் சிந்திக்கிறீர்களோ, அதுவாகவே
மாறிவிடுவீர்கள். எனவே, உங்களுடைய இயலாமைகளையே சிந்தித்துக் கொண்டிருப்பதை
உடனடியாக நிறுத்துங்கள். நல்ல பாஸிட்டிவ் விஷயங்களைச் சிந்தியுங்கள்.
13.
தவறுகள், தோல்விகள்... இவற்றையெல்லாம் அனுபவங்களாகக் கொள்ளுங்கள். தவறே
செய்யாமலும், தோல்வியே இல்லாமலும் யாரும் இல்லை என்பதை உணருங்கள். 'இட்ஸ்
ஆல் இன் த கேம்...' என்று அவற்றை அந்த நிமிடமே உதறிவிட்டு, அடுத்த வேலையை
ஆரம்பியுங்கள்.
14. 'நான் ஸ்லிம்மா இல்லையே...', 'எனக்கு லாங் ஹேர்
இல்லையே...' போன்ற உங்களின் பர்சனாலிட்டி பற்றிய நெகட்டிவ் எண்ணங்களைத்
தூக்கி தூரப் போடுங்கள். 'அழகு என்பது முகம் அல்ல... அகம்' என்பதை
உணருங்கள்! மனதளவில் அழகி, அழகனாகுங்கள்!
15. உங்களுக்குத் திறமை,
ஆர்வம் இருக்கும் ஏரியாவைக் கண்டறிந்து அதை டெவலப் செய்யுங்கள். அப்போது
உங்களை அறியாமலேயே உங்களுக்குள் இருக்கும் அசாத்திய பலம் தெரிய வரலாம்.
இது உங்களுக்கு அதீத தன்னம்பிக்கை தரும்.
16. வகுப்பறை, நண்பர்
கூட்டம், குழுக்கள் என்று எங்கேயானாலும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
எதுவும் சொல்லாமல் இருப்பதைவிட ஆயிரம் மடங்கு சிறப்பானது, உங்கள்
கருத்தைச் சொல்வது. கருத்துகள் அங்கீகரிக்கப்பட்டால் உங்கள் தன்னம்பிக்கை
அதிகரிக்கும். இல்லாவிட்டாலும் கவலையில்லை, 'நம் கருத்தைச் சொல்லும்
தைரியம் நமக்கு இருந்தது' என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.
நன்றி விகடன்
உருவாக்குங்கள். அவை குறுகிய கால லட்சியங்களாகவும் இருக்கலாம். அதை
அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருங்கள். அந்த நினைவூட்டல் உங்களை
வழிநடத்திக் கொண்டே இருக்கும்.
9. அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த
எதையும் செய்ய ஆரம்பிக்காதீர்கள். உங்களுக்குச் சரி எனப்படுவது சரியாக
இருந்தால், தயங்காமல் அதைச் செய்யுங்கள். தவறு என உணர்ந்தால்
நிறுத்துங்கள். எல்லோரும் படகு வாங்குகிறார்கள் என்று படகு வாங்கி
ரோட்டில் நிறுத்துவது பயனளிக்காது.
10. 'தம் அடிப்பதை நிறுத்த
வேண்டும்' என பிடிவாதமாக முயன்றாலும், முடியவில்லையா? கவலை வேண்டாம்.
உங்கள் முயற்சியில் தொடர்ந்து பிடிவாதமாக, நம்பிக்கையுடன் இருங்கள்.
வெற்றி உங்களுக்கே!
11. உங்கள் திறமைகளை நீங்களே பாராட்டிக்
கொள்ளுங்கள். 'நான் குட்!' என்று உங்களுக்கு நீங்களே மரியாதை செய்யுங்கள்.
நல்ல திருத்தமான ஆடைகள் அணியுங்கள். இவையெல்லாம் உங்கள் தன்னம்பிக்கையை
வளர்க்கும்.
12. எதை நீங்கள் அதிகம் சிந்திக்கிறீர்களோ, அதுவாகவே
மாறிவிடுவீர்கள். எனவே, உங்களுடைய இயலாமைகளையே சிந்தித்துக் கொண்டிருப்பதை
உடனடியாக நிறுத்துங்கள். நல்ல பாஸிட்டிவ் விஷயங்களைச் சிந்தியுங்கள்.
13.
தவறுகள், தோல்விகள்... இவற்றையெல்லாம் அனுபவங்களாகக் கொள்ளுங்கள். தவறே
செய்யாமலும், தோல்வியே இல்லாமலும் யாரும் இல்லை என்பதை உணருங்கள். 'இட்ஸ்
ஆல் இன் த கேம்...' என்று அவற்றை அந்த நிமிடமே உதறிவிட்டு, அடுத்த வேலையை
ஆரம்பியுங்கள்.
14. 'நான் ஸ்லிம்மா இல்லையே...', 'எனக்கு லாங் ஹேர்
இல்லையே...' போன்ற உங்களின் பர்சனாலிட்டி பற்றிய நெகட்டிவ் எண்ணங்களைத்
தூக்கி தூரப் போடுங்கள். 'அழகு என்பது முகம் அல்ல... அகம்' என்பதை
உணருங்கள்! மனதளவில் அழகி, அழகனாகுங்கள்!
15. உங்களுக்குத் திறமை,
ஆர்வம் இருக்கும் ஏரியாவைக் கண்டறிந்து அதை டெவலப் செய்யுங்கள். அப்போது
உங்களை அறியாமலேயே உங்களுக்குள் இருக்கும் அசாத்திய பலம் தெரிய வரலாம்.
இது உங்களுக்கு அதீத தன்னம்பிக்கை தரும்.
16. வகுப்பறை, நண்பர்
கூட்டம், குழுக்கள் என்று எங்கேயானாலும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
எதுவும் சொல்லாமல் இருப்பதைவிட ஆயிரம் மடங்கு சிறப்பானது, உங்கள்
கருத்தைச் சொல்வது. கருத்துகள் அங்கீகரிக்கப்பட்டால் உங்கள் தன்னம்பிக்கை
அதிகரிக்கும். இல்லாவிட்டாலும் கவலையில்லை, 'நம் கருத்தைச் சொல்லும்
தைரியம் நமக்கு இருந்தது' என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.
நன்றி விகடன்
Re: விவகாரமா போயிடும் விவரமா இல்லன்னா...
கோபத்தைக்கட்டுப்படுத்த..!
17.
டீன்-ஏஜ் உணர்ச்சிபூர்வமான வயது. அடிக்கடி கோபம் வருவது இயற்கை. கோபத்தால்
பெற்றோருடனோ, மற்றோருடனோ சண்டைகள் போடுவதற்கு முன்... அந்த கோபத்துக் கான
உங்கள் காரணம் நியாயமானதுதானா என்று நிமிட நேரம் சிந்தியுங்கள். அப்படியே
நியாயமாக இருந் தாலும், அதை 'இந்த இடத்தில் காட்டுவதால் என்ன லாபம்?' என
யோசியுங்கள்.
18. கோபத்தை நீங்கள் கட்டுக்குள் வைத்திருந்தால் சிக்கல்கள் பல விலகும். கோபம் உங்களைக் கட்டுப்படுத்தினால் விளைவுகள் விபரீதமாகும்.
19.
உங்களைக் கோபப்படுத்தும் சூழல் உருவானால் சில நிமிடங்கள் அமைதியாக
இருங்கள். உங்களுக்குள்ளேயே சில கேள்விகளைக் கேளுங்கள். இந்தச் சூழலில்
எப்படியெல்லாம் செயல்படலாம் என்பது உங்களுக்குப் புரியவரும். நல்ல வழியை
முடிவு செய்யுங்கள். இந்த சில நிமிட இடைவெளி பல அதிசய மாற்றங்களைத் தரும்.
20.
கோபப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்.
விளைவுகளை எப்படிச் சமாளிக்க முடியும் என்பதையும் கண நேரம் யோசியுங்கள்.
நீங்கள் சரியான முடிவை எடுக்க இது உதவும்.
21. நீங்கள் கோபப்பட்ட சூழல்களையும், அதில் நீங்கள் செய்தவற்றையும் ரீவைண்ட் செய்து பாருங்கள். உங்களுக்குப் பல பாடங்கள் புரியும்.
22.
கோபத்தின் எதிரி இசை. நல்ல இசை கேட்டால் கோபம் ஓடியே போய்விடும். தினமும்
சிறிது நேரம் இசைக் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் மிகவும்
நல்லது. கூடவே, கோபம் எனும் அந்தச் சக்தியை ஆக்கபூர்வமாக கலைகளில்
ஈடுபடுத்தி சமன் செய்யுங்கள்.
23. உங்கள் கோபங்கள், எரிச்சல்கள் எல்லாவற்றையும் எழுதி வைக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். அது உங்கள் கோபத்தைக் குறைக்கும்.
நன்றி விகடன்
17.
டீன்-ஏஜ் உணர்ச்சிபூர்வமான வயது. அடிக்கடி கோபம் வருவது இயற்கை. கோபத்தால்
பெற்றோருடனோ, மற்றோருடனோ சண்டைகள் போடுவதற்கு முன்... அந்த கோபத்துக் கான
உங்கள் காரணம் நியாயமானதுதானா என்று நிமிட நேரம் சிந்தியுங்கள். அப்படியே
நியாயமாக இருந் தாலும், அதை 'இந்த இடத்தில் காட்டுவதால் என்ன லாபம்?' என
யோசியுங்கள்.
18. கோபத்தை நீங்கள் கட்டுக்குள் வைத்திருந்தால் சிக்கல்கள் பல விலகும். கோபம் உங்களைக் கட்டுப்படுத்தினால் விளைவுகள் விபரீதமாகும்.
19.
உங்களைக் கோபப்படுத்தும் சூழல் உருவானால் சில நிமிடங்கள் அமைதியாக
இருங்கள். உங்களுக்குள்ளேயே சில கேள்விகளைக் கேளுங்கள். இந்தச் சூழலில்
எப்படியெல்லாம் செயல்படலாம் என்பது உங்களுக்குப் புரியவரும். நல்ல வழியை
முடிவு செய்யுங்கள். இந்த சில நிமிட இடைவெளி பல அதிசய மாற்றங்களைத் தரும்.
20.
கோபப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்.
விளைவுகளை எப்படிச் சமாளிக்க முடியும் என்பதையும் கண நேரம் யோசியுங்கள்.
நீங்கள் சரியான முடிவை எடுக்க இது உதவும்.
21. நீங்கள் கோபப்பட்ட சூழல்களையும், அதில் நீங்கள் செய்தவற்றையும் ரீவைண்ட் செய்து பாருங்கள். உங்களுக்குப் பல பாடங்கள் புரியும்.
22.
கோபத்தின் எதிரி இசை. நல்ல இசை கேட்டால் கோபம் ஓடியே போய்விடும். தினமும்
சிறிது நேரம் இசைக் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் மிகவும்
நல்லது. கூடவே, கோபம் எனும் அந்தச் சக்தியை ஆக்கபூர்வமாக கலைகளில்
ஈடுபடுத்தி சமன் செய்யுங்கள்.
23. உங்கள் கோபங்கள், எரிச்சல்கள் எல்லாவற்றையும் எழுதி வைக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். அது உங்கள் கோபத்தைக் குறைக்கும்.
நன்றி விகடன்
Re: விவகாரமா போயிடும் விவரமா இல்லன்னா...
எக்ஸாம் ஃபீவரை எளிதில் துரத்தலாம்!
24.
பயத்தை விரட்ட எளிய வழி, பயத்தை எதிர்கொள்வதுதான். எந்த விஷயத்துக்காகப்
பயப்படுகிறீர்களோ அதை தைரியமாக, நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.
25. பயத்தை எதிர்கொள்ள சரியான தயாரிப்புகள் வேண்டுமல்லவா? ஆக, தேர்வு பயத்தை விரட்ட நன்றாகப் படித்து விடுங்கள். வேறு வழியே இல்லை.
26.
தேர்வுக்கு முந்தைய நிமிடங்களில் ரிலாக்ஸ்டாக இருங்கள். அந்த நேரத்தில்
நண்பர்களுடன் சேர்ந்து வேகவேகமாக பக்கங்களை உருட்டினால், அவர்கள்
ஒப்பிக்கும் விஷயங்களை 'ஐயோ, இதெல்லாம் எங்கே இருக்கு?!' என்று பதறித் தேட
ஆரம்பிப்பீர்கள். பின் படித்ததெல்லாம் அம்போதான்.
27. பரீட்சைக்கு
முன்பே 'ஒருவேளை நான் ஃபெயில் ஆயிட்டா..?' என்று தேவையில்லாமல் நெகட்டிவாக
நினைத்து பயப்படுவதை நிறுத்துங்கள். பரீட்சைத் தாளை நம்பிக்கையுடன்
கட்டிக்கொடுங்கள்.
28. மதிப்பெண்கள், நீங்கள் என்ன
படித்திருக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. நீங்கள்
என்ன எழுதுகிறீர்கள் என்பதன் அடிப்படையில் தரப்படுவதுதான். எனவே,
படிக்காதவற்றை நினைத்து பதற்றப்படாமல், படித்தவற்றை நன்றாக எழுதுங்கள்.
29.
தேர்வுக் காலங்களில் உடற்பயிற்சி, நல்ல உணவு, சுத்தமான காற்று இவையெல்லாம்
முக்கியம். 'பரீட்சை... பரீட்சை' என சீக்கு வந்த கோழி போல அறைக்குள்ளேயே
அடைபட்டு கிடக்காமல், இயல்பாக இருங்கள்.
30. 'படிக்காமலேயே
பாஸாகணுமா? படிச்சதெல்லாம் நினைவில் நிற்கணுமா?' என்றெல்லாம் கூவிக் கூவி
விற்கும் மருந்துகள் பக்கமெல்லாம் பார்வையைக் கூட திருப்பாதீர்கள்.
31.
தேர்வுக்கு முந்தைய நாள் நன்றாகத் தூங்கி ஓய்வெடுங்கள். அடுத்த நாள்
சுறுசுறுப்பாக தேர்வு எழுத இது உதவும். தேர்வுக்கு சீக்கிரமாகவே கிளம்பி
விடுங்கள். கால், அரை மணி நேரம் முன்பாகவே பள்ளி வளாகத்தில் காத்திருப்பது
தப்பில்லை. டிராஃபிக், பஸ் பிரேக்டவுன் என எதிர் பாராத சிக்கலில் மாட்டி,
எக்ஸாம் ஹாலுக்கு நொடிகள் லேட்டாக போனா லும், அந்த டென்ஷனிலேயே படித்ததில்
பாதி மறந்து போய்விடும்.
32. தேர்வு எழுதும்போது அடுத்தவர்கள் என்ன
எழுதுகிறார்கள் என்பதையெல்லாம் எட்டிப் பார்க்காதீர்கள். 'ஆஹா...
எல்லோரும் நாலாவது கேள்வி எழுதறாங்களே, நான் ரெண்டாவதுதானே எழுதுறேன்',
'ஐயோ, நான் இன்னும் அடிஷனல் ஷீட் வாங்கலையே... எல்லோரும் வாங்கிட்டாங்களே'
போன்ற பதற்றங்களெல்லாம் வேண்டாம். உங்களுக்குத் தெரிந்ததை எதைப் பற்றியும்
கவலைப்படாமல் எழுதுங்கள்.
33. ஒரு தேர்வு எழுதும்போது அதில்
மட்டும் கவனம் இருக்கட்டும். அடுத்த பாடத்துக்கான திட்டமிடுதலோ, அதைப்
பற்றிய கவலையோ தேவையில்லை. 'ஐயோ, நாளைக்கு மேத்ஸ்...' என கவலைப்பட்டால்...
இன்றைய சயின்ஸ் பாடமும் காலி!
நன்றி விகடன்
24.
பயத்தை விரட்ட எளிய வழி, பயத்தை எதிர்கொள்வதுதான். எந்த விஷயத்துக்காகப்
பயப்படுகிறீர்களோ அதை தைரியமாக, நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.
25. பயத்தை எதிர்கொள்ள சரியான தயாரிப்புகள் வேண்டுமல்லவா? ஆக, தேர்வு பயத்தை விரட்ட நன்றாகப் படித்து விடுங்கள். வேறு வழியே இல்லை.
26.
தேர்வுக்கு முந்தைய நிமிடங்களில் ரிலாக்ஸ்டாக இருங்கள். அந்த நேரத்தில்
நண்பர்களுடன் சேர்ந்து வேகவேகமாக பக்கங்களை உருட்டினால், அவர்கள்
ஒப்பிக்கும் விஷயங்களை 'ஐயோ, இதெல்லாம் எங்கே இருக்கு?!' என்று பதறித் தேட
ஆரம்பிப்பீர்கள். பின் படித்ததெல்லாம் அம்போதான்.
27. பரீட்சைக்கு
முன்பே 'ஒருவேளை நான் ஃபெயில் ஆயிட்டா..?' என்று தேவையில்லாமல் நெகட்டிவாக
நினைத்து பயப்படுவதை நிறுத்துங்கள். பரீட்சைத் தாளை நம்பிக்கையுடன்
கட்டிக்கொடுங்கள்.
28. மதிப்பெண்கள், நீங்கள் என்ன
படித்திருக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. நீங்கள்
என்ன எழுதுகிறீர்கள் என்பதன் அடிப்படையில் தரப்படுவதுதான். எனவே,
படிக்காதவற்றை நினைத்து பதற்றப்படாமல், படித்தவற்றை நன்றாக எழுதுங்கள்.
29.
தேர்வுக் காலங்களில் உடற்பயிற்சி, நல்ல உணவு, சுத்தமான காற்று இவையெல்லாம்
முக்கியம். 'பரீட்சை... பரீட்சை' என சீக்கு வந்த கோழி போல அறைக்குள்ளேயே
அடைபட்டு கிடக்காமல், இயல்பாக இருங்கள்.
30. 'படிக்காமலேயே
பாஸாகணுமா? படிச்சதெல்லாம் நினைவில் நிற்கணுமா?' என்றெல்லாம் கூவிக் கூவி
விற்கும் மருந்துகள் பக்கமெல்லாம் பார்வையைக் கூட திருப்பாதீர்கள்.
31.
தேர்வுக்கு முந்தைய நாள் நன்றாகத் தூங்கி ஓய்வெடுங்கள். அடுத்த நாள்
சுறுசுறுப்பாக தேர்வு எழுத இது உதவும். தேர்வுக்கு சீக்கிரமாகவே கிளம்பி
விடுங்கள். கால், அரை மணி நேரம் முன்பாகவே பள்ளி வளாகத்தில் காத்திருப்பது
தப்பில்லை. டிராஃபிக், பஸ் பிரேக்டவுன் என எதிர் பாராத சிக்கலில் மாட்டி,
எக்ஸாம் ஹாலுக்கு நொடிகள் லேட்டாக போனா லும், அந்த டென்ஷனிலேயே படித்ததில்
பாதி மறந்து போய்விடும்.
32. தேர்வு எழுதும்போது அடுத்தவர்கள் என்ன
எழுதுகிறார்கள் என்பதையெல்லாம் எட்டிப் பார்க்காதீர்கள். 'ஆஹா...
எல்லோரும் நாலாவது கேள்வி எழுதறாங்களே, நான் ரெண்டாவதுதானே எழுதுறேன்',
'ஐயோ, நான் இன்னும் அடிஷனல் ஷீட் வாங்கலையே... எல்லோரும் வாங்கிட்டாங்களே'
போன்ற பதற்றங்களெல்லாம் வேண்டாம். உங்களுக்குத் தெரிந்ததை எதைப் பற்றியும்
கவலைப்படாமல் எழுதுங்கள்.
33. ஒரு தேர்வு எழுதும்போது அதில்
மட்டும் கவனம் இருக்கட்டும். அடுத்த பாடத்துக்கான திட்டமிடுதலோ, அதைப்
பற்றிய கவலையோ தேவையில்லை. 'ஐயோ, நாளைக்கு மேத்ஸ்...' என கவலைப்பட்டால்...
இன்றைய சயின்ஸ் பாடமும் காலி!
நன்றி விகடன்
Re: விவகாரமா போயிடும் விவரமா இல்லன்னா...
நல்ல நட்பைத் தேர்ந்தெடுங்கள்!
34.
பெரும்பாலும், பருவ வயதில் நமக்கு அமையும் நண்பர்கள்/தோழிகள்தான் நம் ஆத்ம
நண்பர்களாகி, இறுதி வரை வருவார்கள். எனவே, இப்போது தேர்ந்தெடுக்கும்
நட்பில் இருக்கிறது நமது வாழ்க்கை. படிப்பு, கலாட்டா என அனைத்திலும்
ஆர்வமுடைய நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள். எக்காரணம் கொண்டும் ஸ்மோக்,
ட்ரிங்க், டேட்டிங் என்று தீய வழிக்கு இழுக்கும் நண்பர்கள் பக்கம்
ஒதுங்கவே ஒதுங்காதீர்கள். விளையாட்டாக ஆரம்பித்து வினையில் முடியும்
சமாசாரங்கள் இவை!
35. நல்ல தோழியைத் தேர்ந்தெடுப்பதில்
தாமதம் நிலவினாலும் பரவாயில்லை... பொறுமையாக தேர்ந்தெடுங்கள். ஒரு நல்ல
தோழி கிடைத்தால் அவர் மூலம் மேலும் பல நல்ல தோழிகள் கிடைப்பார்கள்.
36.
நண்பர்கள் உற்சாகமானவர்களாக இருந்தால்தான், அந்த உற்சாகம் உங்களையும்
வந்தடைந்து உற்சாகமாக இயங்க வைக்கும். ''பேப்பர் பிரசன்டேஷனா..? அதெல்லாம்
நம்மளால முடியாதுடி'', ''உன்னால மேடையில பயமில்லாம நின்னுட முடியுமா..?''
என்றெல்லாம் பேசி, தங்களுக்கும் தன்னம்பிக்கை இல்லாமல், நம்
நம்பிக்கையையும் குலைக்கப் பார்க்கும் நண்பர்களை கழித்துக் கட்டுங்கள்.
37.
சிலருக்கு நிறைய தோழிகள் இருப்பார்கள், சிலருக்கு சில தோழிகளே
இருப்பார்கள். ஒரு நல்ல தோழிகூட போதும்... வாழ்க்கை சுவாரஸ்யமாகவும்
அர்த்தமுள்ளதாகவும் அமைய. எனவே, தோழிகளின் எண்ணிக்கை குறித்த கவலை
வேண்டாம்.
38. உங்கள் நண்பர்கள் உங்களிடம் எப்படியெல்லாம் அன்பு
செலுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த அன்பை முதலில் நீங்கள்
அவர்களுக்குக் கொடுங்கள். தப்பு செய்தால் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்கத்
தயங்க வேண்டாம். குறிப்பாக, ஈகோ எனும் வார்த்தையே நட்பில் இருக்கக் கூடாது.
39.
நட்பில் 'நம்பிக்கை' மிக முக்கியம். அதை எந்தச் சூழ்நிலையிலும்
உடைக்காதீர்கள். உங்கள் தோழி ஒரு ரகசியம் சொன்னால், அதை ரகசியமாகவே
வையுங்கள். ஒரு வாக்குறுதி கொடுத்தால், அதை நிறைவேற்றுங்கள். தோழியிடம்
உண்மையை மட்டுமே பேசுங்கள்.
40. தோழிக்கு ஏதேனும் ஆபத்து என்றால்
உதவத் தயங்காதீர்கள். அதற்காக சில கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வதும்
தப்பில்லை. துணையாகத் தோள் கொடுப்பதும்தான் நட்பின் முக்கிய இலக்கணம். அது
நட்பின் ஆழத்தை இன்னும் அதிகரிக்கும்.
41. நண்பர்கள் இடையேயான
ஆத்மார்த்த உரையாடல்கள் அவ்வப்போது நடக்கட்டும். மன அழுத்தம், கோபம்,
எரிச்சல் போன்றவற்றைஎல்லாம் அது வீசி எறிந்துவிடும்.
42. உங்கள் வளர்ச்சியில் பொறாமைப்படாமல் ஆனந்தமடைபவரும், உங்களைப் பற்றி தப்பாக கிசுகிசுக்காதவருமே உங்களின் உண்மையான நண்பர்!
43. பழைய, பால்ய நண்பர் களுடனும் தொடர்பில் இருங்கள். பழைய நட்புகள் வேர்கள் போல. எப்போதும் நமக்குள் வியாபித்திருக்கட்டும்.
இதெல்லாம் மன அழுத்த சிம்ப்டம்ஸ்!
நன்றி - விகடன்
34.
பெரும்பாலும், பருவ வயதில் நமக்கு அமையும் நண்பர்கள்/தோழிகள்தான் நம் ஆத்ம
நண்பர்களாகி, இறுதி வரை வருவார்கள். எனவே, இப்போது தேர்ந்தெடுக்கும்
நட்பில் இருக்கிறது நமது வாழ்க்கை. படிப்பு, கலாட்டா என அனைத்திலும்
ஆர்வமுடைய நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள். எக்காரணம் கொண்டும் ஸ்மோக்,
ட்ரிங்க், டேட்டிங் என்று தீய வழிக்கு இழுக்கும் நண்பர்கள் பக்கம்
ஒதுங்கவே ஒதுங்காதீர்கள். விளையாட்டாக ஆரம்பித்து வினையில் முடியும்
சமாசாரங்கள் இவை!
35. நல்ல தோழியைத் தேர்ந்தெடுப்பதில்
தாமதம் நிலவினாலும் பரவாயில்லை... பொறுமையாக தேர்ந்தெடுங்கள். ஒரு நல்ல
தோழி கிடைத்தால் அவர் மூலம் மேலும் பல நல்ல தோழிகள் கிடைப்பார்கள்.
36.
நண்பர்கள் உற்சாகமானவர்களாக இருந்தால்தான், அந்த உற்சாகம் உங்களையும்
வந்தடைந்து உற்சாகமாக இயங்க வைக்கும். ''பேப்பர் பிரசன்டேஷனா..? அதெல்லாம்
நம்மளால முடியாதுடி'', ''உன்னால மேடையில பயமில்லாம நின்னுட முடியுமா..?''
என்றெல்லாம் பேசி, தங்களுக்கும் தன்னம்பிக்கை இல்லாமல், நம்
நம்பிக்கையையும் குலைக்கப் பார்க்கும் நண்பர்களை கழித்துக் கட்டுங்கள்.
37.
சிலருக்கு நிறைய தோழிகள் இருப்பார்கள், சிலருக்கு சில தோழிகளே
இருப்பார்கள். ஒரு நல்ல தோழிகூட போதும்... வாழ்க்கை சுவாரஸ்யமாகவும்
அர்த்தமுள்ளதாகவும் அமைய. எனவே, தோழிகளின் எண்ணிக்கை குறித்த கவலை
வேண்டாம்.
38. உங்கள் நண்பர்கள் உங்களிடம் எப்படியெல்லாம் அன்பு
செலுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த அன்பை முதலில் நீங்கள்
அவர்களுக்குக் கொடுங்கள். தப்பு செய்தால் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்கத்
தயங்க வேண்டாம். குறிப்பாக, ஈகோ எனும் வார்த்தையே நட்பில் இருக்கக் கூடாது.
39.
நட்பில் 'நம்பிக்கை' மிக முக்கியம். அதை எந்தச் சூழ்நிலையிலும்
உடைக்காதீர்கள். உங்கள் தோழி ஒரு ரகசியம் சொன்னால், அதை ரகசியமாகவே
வையுங்கள். ஒரு வாக்குறுதி கொடுத்தால், அதை நிறைவேற்றுங்கள். தோழியிடம்
உண்மையை மட்டுமே பேசுங்கள்.
40. தோழிக்கு ஏதேனும் ஆபத்து என்றால்
உதவத் தயங்காதீர்கள். அதற்காக சில கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வதும்
தப்பில்லை. துணையாகத் தோள் கொடுப்பதும்தான் நட்பின் முக்கிய இலக்கணம். அது
நட்பின் ஆழத்தை இன்னும் அதிகரிக்கும்.
41. நண்பர்கள் இடையேயான
ஆத்மார்த்த உரையாடல்கள் அவ்வப்போது நடக்கட்டும். மன அழுத்தம், கோபம்,
எரிச்சல் போன்றவற்றைஎல்லாம் அது வீசி எறிந்துவிடும்.
42. உங்கள் வளர்ச்சியில் பொறாமைப்படாமல் ஆனந்தமடைபவரும், உங்களைப் பற்றி தப்பாக கிசுகிசுக்காதவருமே உங்களின் உண்மையான நண்பர்!
43. பழைய, பால்ய நண்பர் களுடனும் தொடர்பில் இருங்கள். பழைய நட்புகள் வேர்கள் போல. எப்போதும் நமக்குள் வியாபித்திருக்கட்டும்.
இதெல்லாம் மன அழுத்த சிம்ப்டம்ஸ்!
நன்றி - விகடன்
Re: விவகாரமா போயிடும் விவரமா இல்லன்னா...
இதெல்லாம் மன அழுத்த சிம்ப்டம்ஸ்!
44. மிகவும் கவலையாக, கோபமாக, எரிச்சலாக இருக்கிறதா? இந்த உணர்வுகள் பல மணி நேரம் நீடிக்கிறதா?
45.
உலக மஹா ஜோக் சொன்னால்கூட, சிரிப்பு வரவில்லையா... நண்பர்களின் உற்சாக
அரட்டை சலனப்படுத்தவில்லையா... சிரிக்க வேண்டுமென்று முயற்சிகூட செய்யத்
தோன்றவில்லையா?
46. உங்களைப் பற்றி உங்களுக்கு நிறைய தாழ்வு
மனப்பான்மை இருக்கிறதா? 'நான் ஒரு உதவாக்கரை, யாருக்கும் தேவையற்றவன்,
என்னால் என்ன பயன் இருக்கப் போகிறது..?' என்றெல்லாம் சிந்தனை ஓடுகிறதா?
47. திடீர் திடீரென தலைவலி வருகிறதா? உடல் வலி வருகிறதா? காரணமே இல்லாமல் சோர்வாக இருக்கிறதா?
48.
அவ்வப்போது அழுகை வருகிறதா... யாராவது சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள்கூட
அழுகையை மேலும் கிளறுகிறதா... சும்மாவாச்சும் உட்கார்ந்து அழ வேண்டுமென்று
தோன்றுகிறதா?
49. திடீரென உடல் எடை அதிகரிக்கிறதா... அல்லது டயட் இருக்காமலேயே உடல் எடை சட சடவென குறைகிறதா?
50.
எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறதா... ஒரு வேலை செய்து
கொண்டிருக்கும்போதே பாதியில் மறந்து போய்விடுகிறதா... படிப்பு எல்லாம்
'சர்'ரென கீழே இறங்குகிறதா?
51. 'யாரும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை' என தோன்றுகிறதா... 'என்ன செய்தாலும் இனி என்னால் கரையேற முடியாது' என்று தோன்றுகிறதா?
52. தூக்கம் எட்டாக்கனியாகி தொந்தரவு செய்கிறதா? அல்லது அதீத தூக்க மயக்கமாகவே இருக்கிறதா?
53. மரணம் அடிக்கடி சிந்தனையில் வருகிறதா? தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என தோன்றுகிறதா?
- மேற்சொன்னவை எல்லாம் மன அழுத்தத்துக்கான அறிகுறிகள். பதற வேண்டாம். வழி இருக்கிறது. வாழ்க்கை அழகானது! மேலே படியுங்கள்!
'ஸ்ட்ரெஸ்'-ஐ சிம்பிளா விரட்டலாம்!
நன்றி விகடன்
44. மிகவும் கவலையாக, கோபமாக, எரிச்சலாக இருக்கிறதா? இந்த உணர்வுகள் பல மணி நேரம் நீடிக்கிறதா?
45.
உலக மஹா ஜோக் சொன்னால்கூட, சிரிப்பு வரவில்லையா... நண்பர்களின் உற்சாக
அரட்டை சலனப்படுத்தவில்லையா... சிரிக்க வேண்டுமென்று முயற்சிகூட செய்யத்
தோன்றவில்லையா?
46. உங்களைப் பற்றி உங்களுக்கு நிறைய தாழ்வு
மனப்பான்மை இருக்கிறதா? 'நான் ஒரு உதவாக்கரை, யாருக்கும் தேவையற்றவன்,
என்னால் என்ன பயன் இருக்கப் போகிறது..?' என்றெல்லாம் சிந்தனை ஓடுகிறதா?
47. திடீர் திடீரென தலைவலி வருகிறதா? உடல் வலி வருகிறதா? காரணமே இல்லாமல் சோர்வாக இருக்கிறதா?
48.
அவ்வப்போது அழுகை வருகிறதா... யாராவது சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள்கூட
அழுகையை மேலும் கிளறுகிறதா... சும்மாவாச்சும் உட்கார்ந்து அழ வேண்டுமென்று
தோன்றுகிறதா?
49. திடீரென உடல் எடை அதிகரிக்கிறதா... அல்லது டயட் இருக்காமலேயே உடல் எடை சட சடவென குறைகிறதா?
50.
எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறதா... ஒரு வேலை செய்து
கொண்டிருக்கும்போதே பாதியில் மறந்து போய்விடுகிறதா... படிப்பு எல்லாம்
'சர்'ரென கீழே இறங்குகிறதா?
51. 'யாரும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை' என தோன்றுகிறதா... 'என்ன செய்தாலும் இனி என்னால் கரையேற முடியாது' என்று தோன்றுகிறதா?
52. தூக்கம் எட்டாக்கனியாகி தொந்தரவு செய்கிறதா? அல்லது அதீத தூக்க மயக்கமாகவே இருக்கிறதா?
53. மரணம் அடிக்கடி சிந்தனையில் வருகிறதா? தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என தோன்றுகிறதா?
- மேற்சொன்னவை எல்லாம் மன அழுத்தத்துக்கான அறிகுறிகள். பதற வேண்டாம். வழி இருக்கிறது. வாழ்க்கை அழகானது! மேலே படியுங்கள்!
'ஸ்ட்ரெஸ்'-ஐ சிம்பிளா விரட்டலாம்!
நன்றி விகடன்
Re: விவகாரமா போயிடும் விவரமா இல்லன்னா...
ஸ்ட்ரெஸ்'-ஐ சிம்பிளா விரட்டலாம்!
54. 'ஸ்ட்ரெஸ்' எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்போது செய்ய வேண்டிய முதல் காரியம், பெற்றோரிடம் உங்களின் நிலையை விளக்கிவிடுவதுதான்.
ஆத்மார்த்த
நேசம் கொண்டவர்களுடனான உரையாடல், மன அழுத்தங்களை விலக்கிவிடும். 'அம்மா,
அப்பா என்ன நினைப்பாங்க..? புரிஞ்சுப்பாங்களா..?' என்றெல்லாம் யோசித்துக்
குழம்பாதீர்கள். உலகிலேயே நீங்கள் அதிகம் நம்ப வேண்டிய இரண்டு பேர்...
உங்கள் பெற்றோர்தான்.
55. அதேசமயம், பெற்றோர் சண் டையிடுவதுதான்
உங்கள் ஸ்ட்ரெஸ்-க்கு காரணமா? தயக்கம் வேண்டாம்... அதை பெற்றோரிடம்
நேரடியாகச் சொல்லுங்கள். சண்டை நடக்கும்போதல்ல... எல்லாம் முடிந்து இயல்பு
நிலைக்கு வந்தபின்.
56. மன அழுத்தமாக உணர்கிறீர்களென்றால் உடனடியாக
உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள்... ஓடுவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது,
ஸ்கிப்பிங் என உங்களுக்குப் பிடித்த ஏதோ ஒன்று. உடலில் ரத்த ஓட்டம்
அதிகரிக்கும். மன அழுத்தம் மட்டுப்படும். கூடவே யோகா போன்ற தியான
முறைகளிலும் ஈடுபட்டால் உங்களை விட்டு மன அழுத்தம் ஓடோடி விடும்.
57.
'எதற்காக இந்த மன அழுத்தம்..?' என்பதே பல வேளைகளில் உங்களுக்கு விளங்காது.
நண்பன் சொன்ன ஏதேனும் வார்த்தையாக இருக்கலாம். ஏதோ ஒரு தோல்வியாக
இருக்கலாம். உங்களுக்குப் பிடித்த நபர் இன்னொருவருடன் பேசுவதால்
இருக்கலாம். எதுவானாலும், அந்தக் காரணம் என்ன என்பதைக் கண்டறியுங்கள்.
அதற்குள் ரொம்ப மூழ்க வேண்டாம். காரணத்தைக் கண்டுபிடித்தால் பலவேளைகளில்
உங்களுக்கே 'ப்ப்பூ... இதுக்கா இவ்ளோ ஃபீல் பண்றோம்' எனத் தோன்றும்.
58.
உங்களுடைய பெஸ்ட் ஹாபியை அந்த நேரம் கையில் எடுங்கள். ஏதேனும்
கிரியேட்டிவிட்டி சார்ந்ததென்றால் ரொம்ப நல்லது. மன அழுத்தம், கற்பனை
சக்தியை முடக்கும். நீங்கள் உங்கள் ஹாபியின் மூலம் அதை புதுப்பிக்கும்போது
உங்கள் மன அழுத்தம் குறையும். 'அப்படி ஹாபி எதுவும் இல்லையே...'
என்கிறீர்களா? சரி... சந்தோஷமாக, சந்தோஷமான சினிமா பாருங்கள்.
59.
மிகவும் மனப்புழுக்கமாக இருந்தால், உங்களின் நம்பிக்கைக்குரிய நண்பர்
ஒருவரிடம் சென்று மனம்விட்டுப் பேசுங்கள். வேடிக்கை பார்க்கும்
நண்பர்களிடம் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள். பின் மன அழுத்தம் இரண்டு
மடங்காகிவிடும்.
60. சமீபத்தில் நடந்த மகிழ்ச்சியான நினைவுகளை அசை
போடுங்கள். உங்களை யாராவது பாராட்டியிருக்கலாம், ஏதேனும் பரிசுகள்
வாங்கியிருக்கலாம், நண்பனைச் சந்தித்திருக்கலாம், நகைச்சுவை
படித்திருக்கலாம்... ஏதோ ஒன்று!
61. ஒருவேளை உங்களின் மன அழுத்தம்
அதிகமாகி, ஓர் உளவியல் நிபுணரைப் பார்க்க வேண்டும் என பெற்றோர்
விரும்பினால்... எகிறிக் குதிக்காதீர்கள். மன அழுத்தம் என்பது காய்ச்சல்
போல ஒரு நோய்தான். 'மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்' எனும் சிந்தனைகளை தூர
எறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். சீக்கிரம் குணம் பெறலாம்.
ட்ரெண்டி டீன்-ஏஜ்!
நன்றி விகடன்
54. 'ஸ்ட்ரெஸ்' எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்போது செய்ய வேண்டிய முதல் காரியம், பெற்றோரிடம் உங்களின் நிலையை விளக்கிவிடுவதுதான்.
ஆத்மார்த்த
நேசம் கொண்டவர்களுடனான உரையாடல், மன அழுத்தங்களை விலக்கிவிடும். 'அம்மா,
அப்பா என்ன நினைப்பாங்க..? புரிஞ்சுப்பாங்களா..?' என்றெல்லாம் யோசித்துக்
குழம்பாதீர்கள். உலகிலேயே நீங்கள் அதிகம் நம்ப வேண்டிய இரண்டு பேர்...
உங்கள் பெற்றோர்தான்.
55. அதேசமயம், பெற்றோர் சண் டையிடுவதுதான்
உங்கள் ஸ்ட்ரெஸ்-க்கு காரணமா? தயக்கம் வேண்டாம்... அதை பெற்றோரிடம்
நேரடியாகச் சொல்லுங்கள். சண்டை நடக்கும்போதல்ல... எல்லாம் முடிந்து இயல்பு
நிலைக்கு வந்தபின்.
56. மன அழுத்தமாக உணர்கிறீர்களென்றால் உடனடியாக
உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள்... ஓடுவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது,
ஸ்கிப்பிங் என உங்களுக்குப் பிடித்த ஏதோ ஒன்று. உடலில் ரத்த ஓட்டம்
அதிகரிக்கும். மன அழுத்தம் மட்டுப்படும். கூடவே யோகா போன்ற தியான
முறைகளிலும் ஈடுபட்டால் உங்களை விட்டு மன அழுத்தம் ஓடோடி விடும்.
57.
'எதற்காக இந்த மன அழுத்தம்..?' என்பதே பல வேளைகளில் உங்களுக்கு விளங்காது.
நண்பன் சொன்ன ஏதேனும் வார்த்தையாக இருக்கலாம். ஏதோ ஒரு தோல்வியாக
இருக்கலாம். உங்களுக்குப் பிடித்த நபர் இன்னொருவருடன் பேசுவதால்
இருக்கலாம். எதுவானாலும், அந்தக் காரணம் என்ன என்பதைக் கண்டறியுங்கள்.
அதற்குள் ரொம்ப மூழ்க வேண்டாம். காரணத்தைக் கண்டுபிடித்தால் பலவேளைகளில்
உங்களுக்கே 'ப்ப்பூ... இதுக்கா இவ்ளோ ஃபீல் பண்றோம்' எனத் தோன்றும்.
58.
உங்களுடைய பெஸ்ட் ஹாபியை அந்த நேரம் கையில் எடுங்கள். ஏதேனும்
கிரியேட்டிவிட்டி சார்ந்ததென்றால் ரொம்ப நல்லது. மன அழுத்தம், கற்பனை
சக்தியை முடக்கும். நீங்கள் உங்கள் ஹாபியின் மூலம் அதை புதுப்பிக்கும்போது
உங்கள் மன அழுத்தம் குறையும். 'அப்படி ஹாபி எதுவும் இல்லையே...'
என்கிறீர்களா? சரி... சந்தோஷமாக, சந்தோஷமான சினிமா பாருங்கள்.
59.
மிகவும் மனப்புழுக்கமாக இருந்தால், உங்களின் நம்பிக்கைக்குரிய நண்பர்
ஒருவரிடம் சென்று மனம்விட்டுப் பேசுங்கள். வேடிக்கை பார்க்கும்
நண்பர்களிடம் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள். பின் மன அழுத்தம் இரண்டு
மடங்காகிவிடும்.
60. சமீபத்தில் நடந்த மகிழ்ச்சியான நினைவுகளை அசை
போடுங்கள். உங்களை யாராவது பாராட்டியிருக்கலாம், ஏதேனும் பரிசுகள்
வாங்கியிருக்கலாம், நண்பனைச் சந்தித்திருக்கலாம், நகைச்சுவை
படித்திருக்கலாம்... ஏதோ ஒன்று!
61. ஒருவேளை உங்களின் மன அழுத்தம்
அதிகமாகி, ஓர் உளவியல் நிபுணரைப் பார்க்க வேண்டும் என பெற்றோர்
விரும்பினால்... எகிறிக் குதிக்காதீர்கள். மன அழுத்தம் என்பது காய்ச்சல்
போல ஒரு நோய்தான். 'மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்' எனும் சிந்தனைகளை தூர
எறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். சீக்கிரம் குணம் பெறலாம்.
ட்ரெண்டி டீன்-ஏஜ்!
நன்றி விகடன்
Re: விவகாரமா போயிடும் விவரமா இல்லன்னா...
ட்ரெண்டி டீன்-ஏஜ்!
62.
ட்ரெண்ட், ஃபேஷன்களைப் பின்பற்றுவது சந்தோஷம் தரும் விஷயங்கள்தான். ஆனால்,
உங்கள் தன்னம்பிக்கை குறைவினால் நீங்கள் ஃபேஷன் பக்கம் சாய்ந்து
விடக்கூடாது. 'அழகில்லை' என க்ரீம்கள் பூசுவதெல்லாம் வேண்டாம். ஆனால்,
ஹேர் ஸ்டைல், டிரெஸ் ஸ்டைல் எல்லாம் உங்கள் விருப்பத்துக்கு அமைவதில்
தப்பில்லை.
63. 'பிராண்ட்'களைப் பார்த்து மயங்க வேண்டாம். ஒரு
பந்தாவுக்காக 'பிராண்ட்'களில் பணத்தைக் கொட்டாமல் கவனமாக இருங்கள். உடைகள்
அணியும்போது அவை ரசிக்கும்படியாக இருப்பது முக்கியம். கவர்ச்சி ஆடைகளை
ஒதுங்குங்கள்.
64. உங்களால் இயல்பாக இருக் கக்கூடிய 'கம்ஃபர்ட்னஸ்'
தரும் ஆடை களையும், நகைகளையுமே அணியுங்கள். அங்கே குத்தி, இங்கே பிடித்து
என உங்களுக்கு பிரச்னை தரும் ஆடை, ஆபரணங்களைத் தவிர்க்கலாம்.
65.
ஹை ஹீல்ஸ், ஆரோக்கியத்துக்கு எதிரி. முதுகு வலி, சுளுக்கு, தசைப் பிடிப்பு
போன்ற பிரச்னைகளை விரும்பி அழைப்பது அது. எனவே, ஹீல்ஸ் எவ்வளவு சின்னதாக
இருக்கிறதோ... அவ்வளவு நல்லது.
66. சில காஸ்மெடிக்ஸ், ஃபேஷன்
ஜுவல்லரிகள் சிலருக்கு அலர்ஜியை உருவாக்கும். எனவே, உங்கள் உடம்புக்கு
ஒப்புக் கொள்ளாதெனில் அவற்றைத் தயங்காமல் ஒதுக்கிவிடுங்கள்.
67.
உடை, ஹேர் ஸ்டைல், அக்ஸஸரிஸ் என்று நடிகர், நடிகைகளின் வெளிப்புற
ஃபேஷன்களை நீங்கள் பின்பற்றலாம். ஆனால், அவை உங்களை கேலிக்குரியவராக
மாற்றிவிடக்கூடாது. உங்களுக்கு சூட் ஆகிறது என்றால் மட்டுமே தொடருங்கள்.
நன்றி விகடன்
62.
ட்ரெண்ட், ஃபேஷன்களைப் பின்பற்றுவது சந்தோஷம் தரும் விஷயங்கள்தான். ஆனால்,
உங்கள் தன்னம்பிக்கை குறைவினால் நீங்கள் ஃபேஷன் பக்கம் சாய்ந்து
விடக்கூடாது. 'அழகில்லை' என க்ரீம்கள் பூசுவதெல்லாம் வேண்டாம். ஆனால்,
ஹேர் ஸ்டைல், டிரெஸ் ஸ்டைல் எல்லாம் உங்கள் விருப்பத்துக்கு அமைவதில்
தப்பில்லை.
63. 'பிராண்ட்'களைப் பார்த்து மயங்க வேண்டாம். ஒரு
பந்தாவுக்காக 'பிராண்ட்'களில் பணத்தைக் கொட்டாமல் கவனமாக இருங்கள். உடைகள்
அணியும்போது அவை ரசிக்கும்படியாக இருப்பது முக்கியம். கவர்ச்சி ஆடைகளை
ஒதுங்குங்கள்.
64. உங்களால் இயல்பாக இருக் கக்கூடிய 'கம்ஃபர்ட்னஸ்'
தரும் ஆடை களையும், நகைகளையுமே அணியுங்கள். அங்கே குத்தி, இங்கே பிடித்து
என உங்களுக்கு பிரச்னை தரும் ஆடை, ஆபரணங்களைத் தவிர்க்கலாம்.
65.
ஹை ஹீல்ஸ், ஆரோக்கியத்துக்கு எதிரி. முதுகு வலி, சுளுக்கு, தசைப் பிடிப்பு
போன்ற பிரச்னைகளை விரும்பி அழைப்பது அது. எனவே, ஹீல்ஸ் எவ்வளவு சின்னதாக
இருக்கிறதோ... அவ்வளவு நல்லது.
66. சில காஸ்மெடிக்ஸ், ஃபேஷன்
ஜுவல்லரிகள் சிலருக்கு அலர்ஜியை உருவாக்கும். எனவே, உங்கள் உடம்புக்கு
ஒப்புக் கொள்ளாதெனில் அவற்றைத் தயங்காமல் ஒதுக்கிவிடுங்கள்.
67.
உடை, ஹேர் ஸ்டைல், அக்ஸஸரிஸ் என்று நடிகர், நடிகைகளின் வெளிப்புற
ஃபேஷன்களை நீங்கள் பின்பற்றலாம். ஆனால், அவை உங்களை கேலிக்குரியவராக
மாற்றிவிடக்கூடாது. உங்களுக்கு சூட் ஆகிறது என்றால் மட்டுமே தொடருங்கள்.
நன்றி விகடன்
Similar topics
» அரசியல் அமைப்பு பிரிவு 370 வை தூக்கினா உரிமை போயிடும், காஷ்மீரிகளின் தேசிய உரிமை போயிடும் என கூவும் ஆட்கள் இதை கொஞ்சம் படிங்க.
» ஸ்பெக்ட்ரம் விவகாரமா? தேர்தல் அறிக்கையா? சட்டசபை தேர்தலை கலக்கப்போவது எது?
» ஸ்பெக்ட்ரம் விவகாரமா? தேர்தல் அறிக்கையா? சட்டசபை தேர்தலை கலக்கப்போவது எது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|