TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தி.மு.க.,விடம் கூடுதல் சீட்டுகளை பெற நடத்தும் தந்திரம்: ஜெயலலிதா

Go down

தி.மு.க.,விடம் கூடுதல் சீட்டுகளை பெற நடத்தும் தந்திரம்: ஜெயலலிதா Empty தி.மு.க.,விடம் கூடுதல் சீட்டுகளை பெற நடத்தும் தந்திரம்: ஜெயலலிதா

Post by மாலதி Thu Feb 03, 2011 7:49 am

தி.மு.க.,விடம் கூடுதல் சீட்டுகளை பெற நடத்தும் தந்திரம்: ஜெயலலிதா Large_179672






சென்னை: "ராஜா கைது நடவடிக்கை, தி.மு.க.,விடம், காங்கிரஸ் கூடுதல்
சீட்டுகளை பெறுவதற்காக நடத்தும் நெருக்கடி தந்திரமாக கருதுகிறேன்' என,
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜாவை சி.பி.ஐ., கைது
செய்திருப்பது தாமதமாக எடுத்த நடவடிக்கை. இந்த கைது நடவடிக்கை, பல்வேறு
கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு மாறாக, பல்வேறு புதிய கேள்விகளுக்கு வழி
வகுத்துள்ளது.இது, மக்களை ஏமாற்றுவதற்கும், சுப்ரீம் கோர்ட்டில் நடந்து
வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில், சில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை
காண்பிப்பதற்காகவும் செய்யப்பட்டதாக தெரிகிறது.மத்திய அரசு முரண்பாடாக
நடந்து கொண்டதாலேயே பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என,
அ.தி.மு.க., கோரிக்கை வைத்தது.
ராஜா எந்த தவறும் செய்யவில்லை என்றால், அவர் ஏன் கைது செய்யப்பட
வேண்டும்? எந்த தவறும் நடக்கவில்லை என, கபில்சிபல் கூறியுள்ள நிலையில்,
ராஜாவை கைது செய்திருப்பது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.இப்போது,
கபில்சிபல் நிலை என்ன? நான் சொன்னதை உறுதிப்படுத்த விரும்புகிறாரா அல்லது
பல்டி அடித்து வேறு காரணம் சொல்ல விரும்புகிறாரா?
சி.பி.ஐ.,யின் நோக்கம் உண்மையாக இருந்தால், மேலும் பலரை கைது
செய்திருக்க வேண்டும். எனவே, சி.பி.ஐ.,யும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசும், இப்பிரச்னையில் நடவடிக்கை எடுத்ததாக காட்டிக்
கொள்ள விரும்புகிறதாகவே நான் கருதுகிறேன்.சட்டசபை தேர்தலில்
தி.மு.க.,விடம் காங்கிரஸ் கூடுதல் சீட்டுகளை பெறுவதற்காக நடத்தும்
நெருக்கடி தந்திரமாக கருதுகிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டம் கடமையைச் செய்கிறது : காங்., -ராஜா கைது துவக்கம்:
பா.ஜ.,:"முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைது விவகாரத்தில், சட்டம் தன்
கடமையை செய்து கொண்டிருக்கிறது' என, காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ஆனால், ராஜா கைது துவக்கம் என்று, பா.ஜ., கருத்து தெரிவித்தது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி கூறியதாவது:இதுபோன்ற
அனைத்து வழக்குகளும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். சட்டம் தன் கடமையைச்
செய்ய வேண்டும் என, காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது. ராஜா
கைதானதன் மூலம் ஊழல் நடந்துள்ளது உறுதியாகிறதா என்ற கேள்விக்கு எல்லாம்
நான் பதில் அளிக்க முடியாது. ராஜா விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்து
கொண்டிருக்கிறது என்று மட்டுமே சொல்ல முடியும். ராஜா கைதானதன் மூலம்,
தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான உறவில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு திவேதி கூறினார்.
"முன்னாள் அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டது தாமதமான நடவடிக்கை.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடியில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய
வேண்டும். 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்புக்கு ராஜா மட்டுமே காரணம் எனக்
கூறுவது நியாயமல்ல. இழப்புக்கு காரணமான மற்றவர்களையும் கண்டறிய வேண்டும்.
அந்த வகையில், ராஜாவின் கைது ஒரு துவக்கமே. இதன் மூலம் மத்திய அரசு
மார்தட்டிக் கொள்ளவும் முடியாது. இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும் முன்னர்
மேலும் பல கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டியது நேரிடும்'
என, பா.ஜ., தகவல் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார்.
"ராஜா கைது செய்யப்பட்டதால், ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்து விசாரிக்க
பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின்
கோரிக்கை நியாயமானதே என்பது தெளிவாகியுள்ளது. அந்தக் குழு அமைக்க
வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. பார்லிமென்ட் கூட்டுக் குழு
அமைத்து விசாரித்தால், மோசடி எந்த அளவுக்கு நடந்துள்ளது என்பது முழுமையாக
தெரிய வரும். எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகள் நடக்காமல் தவிர்க்க,
ஒழுங்கு முறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
கூட்டுக்குழு விசாரணையை நியாயமாக்கியது: ஜெட்லி : ராஜா கைது
நடவடிக்கை குறித்து நேற்று, டில்லியில் நிருபர்களிடம் பேசிய அருண் ஜெட்லி
கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் வேண்டியவர்களுக்கு சலுகை
காட்டப்பட்டுள்ளது என்று, கடந்த மூன்றாண்டுகளாக சொல்லி வந்துள்ளோம். இதை
அரசு தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட்டில்
இதுபற்றி பலமுறை வலியுறுத்தியும், ராஜாவை அரசு தொடர்ந்து பாதுகாத்து
வந்தது. கடந்தாண்டுவரை கூட பிரதமர் மன்மோகன் சிங், ராஜா எதையும் தவறாக
செய்துவிடவில்லை என்று கூறினார். ராஜாவுக்கு பின் வந்த அமைச்சர் கபில்
சிபலும், ராஜா அரசுக்கு எவ்வித இழப்பையும் ஏற்படுத்தவில்லை என்றார்.
இந்நிலையில், ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதித்துறை, மீடியாக்கள், பார்லிமென்ட் ஆகியவற்றின் நெருக்குதல்
காரணமாக எடுக்கப்பட்ட தாமதமான நடவடிக்கை. ராஜாவை கைது செய்த போதும்,
பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை தேவை என்ற கோரிக்கையில் இருந்து பாரதிய
ஜனதா பின்வாங்காது.நாங்கள் இப்படி கேட்பதற்குக் காரணம் இருக்கிறது.
தொலைத்தொடர்பு துறை ஏன் தொடர்ந்து தி.மு.க., வசமே இருந்து வந்தது. மேலும்,
ராஜா வசம் மட்டுமே இருக்கக் காரணம் என்ன? இது பற்றி முழுமையாக அறிய
விரும்புகிறேம். இதுமட்டுமல்ல, இன்னும் விரிவான விஷயங்கள் இதில்
அடங்கியிருப்பதால், எங்கள் கோரிக்கையில் உறுதியாக இருக்கிறோம்.இவ்வாறு
அருண் ஜெட்லி கூறினார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum