TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணையை எதிர்க்கட்சிகள் வற்புறுத்துவது ஏன்?

Go down

பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணையை எதிர்க்கட்சிகள் வற்புறுத்துவது ஏன்? Empty பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணையை எதிர்க்கட்சிகள் வற்புறுத்துவது ஏன்?

Post by logu Sun Dec 12, 2010 7:12 am

"ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, மத்திய
அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என,
மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அறிக்கை அளித்ததில் இருந்து, தேசிய
அரசியலில் பெரும் பிரளயமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில்
மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே, நீயா, நானா போட்டி
நடந்து கொண்டிருக்கிறது.
"ஊழல் குறித்த முழு விவரங்களும் வெளிவர வேண்டுமானால், பார்லிமென்ட்
கூட்டுக் குழு (ஜே.பி.சி.,) இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்'என்பது,
ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளின் வாதம். இந்த விஷயத்தில் மத்திய அரசு
இறங்கிவர மறுக்கிறது. "இதுபோன்ற பிரச்னைகளை விசாரிப்பதற்கென்றே
பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு இருக்கிறது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்
தான் இதன் தலைவராக உள்ளார். எனவே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு
குறித்து பொதுக் கணக்கு குழு விசாரித்தால் போதும்'என்பது, மத்திய அரசின்
பிடிவாதம். இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் இந்த மோதலால், கடந்த
மூன்று வாரங்களாக பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இதற்கு யார்
காரணம் என, மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர்
குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம், சாதாரண மக்களிடையே பல்வேறு
கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. "அப்படி என்னதான்
இருக்கிறது பார்லிமென்ட் கூட்டுக் குழுவில். இதற்கு உள்ள அதிகாரம் தான்
என்ன? பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு ஏன் தயக்கம்
காட்டுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை பார்லிமென்ட் கூட்டுக் குழு தான்,
விசாரிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் ஏன் பிடிவாதம் பிடிக்கின்றன'
என்பவை எல்லாம், சாதாரண மக்களிடையே எழுந்துள்ள கேள்விகள். இதைப் பற்றி
சுருக்கமாக அலசுவோம்.
மத்திய ஆடிட்டர் ஜெனரல்: மத்திய அரசின் பொது நிதிக் கணக்குகளை
தணிக்கை செய்து, அவற்றை ஒழுங்குமுறை படுத்தும் பணியை செய்வது, ஆடிட்டர்
ஜெனரல் அலுவலகத்தின் வேலை. கடந்த 1935ம் ஆண்டின் சட்டம் இதற்கு வழி வகை
செய்கிறது. மத்திய ஆடிட்டர் ஜெனரல் பதவி என்பது, சுப்ரீம் கோர்ட் தலைமை
நீதிபதியின் பதவிக்கு சமமான அந்தஸ்து உடையது. செலவுகளை செய்வதற்கு மத்திய
அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த செலவுகள்
முறையாக செய்யப்பட்டுள்ளனவா என, கண்காணிக்கும் பணி, மத்திய ஆடிட்டர்
ஜெனரல் அலுவலகத்தை சேர்ந்தது. அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில்
மேற்கொள்ளப்படும் செலவுகளை ஆய்வு செய்து, அதில் அரசுக்கு இழப்பு
ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அறிக்கை
அளிக்கும். இந்த அறிக்கையை பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு ஆய்வு
செய்யும்.
பொதுக் கணக்கு குழு (பி.ஏ.சி.,): இந்த குழு, பார்லிமென்டால்
அமைக்கப்படுகிறது. இதில் 22 உறுப்பினர்கள் இடம் பெறுவர். 15 பேர் லோக்சபா
எம்.பி.,க்கள். மீதமுள்ள ஏழு பேர் ராஜ்யசபா எம்.பி.,க்கள். பெரும்பாலும்,
பிரதான எதிர்க்கட்சியை சேர்ந்தவர் தான், இதன் தலைவராக இருப்பார். தற்போது
பா.ஜ.,வின் முரளி மனோகர் ஜோஷி, இதன் தலைவராக உள்ளார். ஒவ்வொரு ஆண்டும்
இந்த கமிட்டி கூடும். மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கணக்குகளையும்,
மத்திய அரசின் பல்வேறு அமைச்சரவையின் செலவு, வருவாய் ஆகியவற்றையும் இந்த
குழு ஆய்வு செய்யும். பல்வேறு துறைகள் குறித்து ஆய்வு செய்து, மத்திய
ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அளித்த அறிக்கையையும் இந்த குழு ஆய்வு செய்யும்.
பி.ஏ.சி.,யின் பிற பணிகள்: கணக்குகளை ஆய்வு செய்வதை தவிர, வேறு
சில பணிகளையும் பி.ஏ.சி., மேற்கொள்ளும். மத்திய அமைச்சகத்துக்கு ஏற்பட்ட
வருவாய் இழப்புகள், அவசியம் இன்றி செய்யப்பட்ட செலவுகள், நிதி முறைகேடு
ஆகியவை குறித்து இந்த குழு, முழுமையாக ஆய்வு செய்யும். தான் ஆய்வு செய்த
விஷயங்களை மத்திய அரசுக்கு, பரிந்துரையாக அளிக்கும். இதன் அடிப்படையில்
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, மத்திய அரசு சார்பில்
பி.ஏ.சி.,க்கு தாக்கல் செய்யப்படும். இதன் தொடர்ச்சியாக, பொதுக் கணக்கு
குழு அளித்த பரிந்துரையின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த
விவரங்கள், மத்திய அரசு சார்பில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.
பொதுவாக, பொதுக் கணக்கு குழு அளித்த பரிந்துரைகள் அனைத்தும், அரசால்
நடைமுறைப்படுத்தப்படும். அதேநேரத்தில், மத்திய அரசின் அமைச்சரவையில் நடந்த
ஊழல் குறித்து விசாரிக்கும் அதிகாரம் எதுவும் பொதுக் கணக்கு குழுவுக்கு
இல்லை. மேலும், பொதுக் கணக்கு குழு, முக்கியமான பொறுப்பில் உள்ளவர்களை
நேரடியாக அழைத்து விசாரிக்கவும் முடியாது.
பார்லிமென்ட் கூட்டுக் குழு (ஜே.பி.சி.,): பார்லிமென்ட்டில்
அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்படுவது
இந்த குழு. பார்லிமென்ட்டில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின்படி,
விகிதாசாரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் உறுப்பினர்கள்
இடம் பெறுவர். லோக்சபாவில் இருந்து 30 எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில்
இருந்து பத்து எம்.பி.,க்களும் இதில் இடம் பெற முடியும். பார்லிமென்ட்
கூட்டு குழு, நம் நாட்டில், முதல் முறையாக போபர்ஸ் ஊழல் குறித்து
விசாரிப்பதற்காக 1987ல் அமைக்கப்பட்டது. அப்போது மத்திய அரசுக்கு
பார்லிமென்டில் 420 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. இந்த அசுர பலம்
இருந்தபோதும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, போபர்ஸ் விவகாரம்
குறித்து பார்லிமென்ட் கூட்டு குழு விசாரிப்பதற்கு, அப்போது அரசு அனுமதி
அளித்தது அப்போதைய அரசின் பெருந் தன்மை.
அப்போது மத்திய அரசு சார்பில் கூறப்பட்டதாவது: போபர்ஸ்
விவகாரத்தில் எங்களிடம் மறைத்து வைப்பதற்கு எதுவும் இல்லை. இந்த
விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அரசும் அறிந்து கொள்ள
விரும்புகிறது. மேலும், பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணைக்கு
உத்தரவிடவில்லையெனில், இந்த விஷயத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என,
அனைத்து தரப்பினருக்கும் கருதுவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே தான்,
பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு
மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஜே.பி.சி.,யின் பணிகள் என்ன? பார்லிமென்ட் கூட்டுக் குழு, எந்த
வகையான பணிகளை மேற்கொள்ளும் என்பதை தெரிந்து கொள்வதற்கு, ஸ்பெக்ட்ரம்
விவகாரத்தை உதாரணமாக வைத்துக் கொள்வோம்.
* முதலாவதாக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் முறையாக
பின்பற்றப்பட்டனவா அல்லது விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது குறித்து இந்த
குழு விசாரணை நடத்தும். ஒதுக்கீடு விஷயத்தில் ஏதாவது ஆட்சேபம்
தெரிவிக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் அது
பரிசீலிக்கப்பட்டுள்ளதா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விண்ணப்பம் பெறுவதற்கான
தேதி, முன் தேதியிட்டு மாற்றப்பட்டுள்ளதா, இதனால், எந்த நிறுவனமாவது பயன்
அடைந்துள்ளதா என்பது குறித்தும் பார்லிமென்ட் கூட்டு குழு விசாரிக்கும்.
* மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அளித்த அறிக்கையின் முக்கிய
சாராம்சங்களை, கூட்டுக் குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும். பொதுக்
கணக்கு குழுவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விஷயங்களையும்
பார்லிமென்ட் கூட்டு குழு விசாரிக்கும்.
* அரசின் கருவூலத்துக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும், அதை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும்.
* ஒட்டு மொத்த முறைகேடுகளுக்கும் காரணமான நபர் யார் என்பதை
பொதுக் கணக்கு குழு அடையாளம் காணும். ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள்
குறித்து ஆய்வு செய்யும். அந்த நிறுவனங்களின் பங்குதாரர்கள், அவர்களுக்கு
தொழிலில் உள்ள முன் அனுபவம், அவர்களின் பணப் பரிமாற்றம் ஆகியவற்றை பற்றிய
அனைத்து விஷயங்களையும் தோண்டி துருவி விசாரிக்கும்.
* ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டது
தெரியவந்தால், அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டது தொடர்பான ஆதாரங்களை
சேகரிப்பதுடன், அது தொடர்பான மற்ற கிரிமினல் நடவடிக்கைகள் குறித்தும்
விசாரிக்கும்.
* மத்திய ஆடிட்டர் ஜெனரல், அட்டர்னி ஜெனரல் ஆகியோர், இந்த கமிட்டிக்கு உதவி செய்வர்.
* ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரிக்கும் அனைத்து
புலனாய்வு அமைப்புகளும், தேவைப்பட்டால் பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு
போதிய விவரங்களை அளிக்கும்.
* கமிட்டியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும், ஒருவர்
பின் ஒருவராக சாட்சிகளை விசாரிக்க முடியும். சாட்சிகளை நேரில் அழைத்து
விசாரிப்பதற்கு முன்பாக, அது தொடர்பான ஆவணங்கள் கவனத்துடன் ஆய்வு
செய்யப்படும். தகுந்த காரணங்கள் இல்லாமல், ஆதாரங்களை பகிரங்கமாக வெளியில்
தெரிவிக்க முடியாது.
* வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளிடம் இருந்தும், வழக்குக்கு
தேவையான ஆவணங்களை இந்த குழு பெற்றுக் கொள்ள முடியும். ஊழலில்
தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் இருந்தால், அவர்களையும் நேரில் அழைத்து
விசாரிக்கும் அதிகாரம் இந்த குழுவுக்கு உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட
வெளிநாடுகள் உதவும். பிரதமர் உட்பட யாரை வேண்டுமானாலும், இந்த குழு
விசாரிக்க முடியும்.
* அத்தியாவசியமான விசாரணைகளுக்காக, பார்லிமென்ட் கூட்டுக்
குழுவால் அமைக்கப்பட்ட துணைக் குழு, வெளிநாடுகளுக்கு சென்று விசாரணை நடத்த
முடியும்.
இப்போது புரிகிறதா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தை பார்லிமென்ட்
கூட்டுக் குழு தான் விசாரிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள்
வலியுறுத்துவதற்கும், அதை மத்திய அரசு ஏற்க மறுப்பதற்குமான காரணம் என்ன
என்று?
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» பார்லிமென்ட் கூட்டுக்குழு என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரணாப் மீண்டும் உறுதி
» பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க அரசியல் ஒற்றுமை, துணிச்சல் தேவை: ஜெயலலிதா
» எதிர்க்கட்சிகள் அமளியால் பார்லிமென்ட் இன்று முடங்கும்?
» செட்-டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவது சட்ட விரோதம்: தனியாருக்கு, அரசு கேபிள் நிறுவனம் எச்சரிக்கை
» கூட்டுக்குழு விசாரணை அமைக்கும் வரை போராடுவோம்: ஜெ., பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum