TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கேரளாவில் வாழ்கிறது; தமிழகத்தில் தேய்கிறது: கொள்ளை போகும் வளம்

Go down

கேரளாவில் வாழ்கிறது; தமிழகத்தில் தேய்கிறது: கொள்ளை போகும் வளம் Empty கேரளாவில் வாழ்கிறது; தமிழகத்தில் தேய்கிறது: கொள்ளை போகும் வளம்

Post by ஜனனி Tue Oct 26, 2010 7:35 am

கோவை : கேரளாவின் இயற்கை வளங்களை பாதுகாக்க, அந்த மாநில
அரசு அடுத்தடுத்து தடை உத்தரவுகளை பிறப்பித்து, கண்காணிப்பையும்
தீவிரப்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, நீர்நிலைகளில் மணல் அள்ளப்படுவதும்,
வனத்தில் சந்தன மரங்கள் வெட்டப்படுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே
வேளையில், கேரளாவின் "தேவையை' பூர்த்தி செய்ய தமிழக இயற்கை வளங்கள்
அழிக்கப்பட்டு மணல், சந்தன மரங்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. கேரளாவில் ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் மணல்
அள்ளப்படுவதை, அந்த மாநில அரசு மூன்று ஆண்டுகளுக்கு முன் தடை செய்தது.
கட்டட கட்டுமான பணிக்காக அதிகளவில் மணல் அள்ளப்படுவதால் முக்கிய
நீராதாரங்கள் நாளடைவில் அழிந்துவிடும் என கருதியே, முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக தடை உத்தரவை அமல்படுத்தியிருக்கிறது கேரள அரசு. மேலும், தடை
மீறி மணல் அள்ளப்படுவதை தடுக்க வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை
அதிகாரிகளை கொண்டு, தொடர் கண்காணிப்பு மற்றும் ஆய்வையும் மேற்கொண்டு
வருகிறது.நீர்நிலைகளில் மணல் அள்ளப்படுவது 90 சதவீதம்
தடுக்கப்பட்டுவிட்டதால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள கான்ட்ராக்டர்கள்,
தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சி மற்றும் கரூர் ஆற்றங்கரைகளில்
அள்ளப்படும் மணலை லாரி, லாரியாக அதிக விலைக்கு வாங்கி குவித்து
வருகின்றனர். இவர்களது மணல் தேவையை, கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள்
பூர்த்தி செய்கின்றனர். தமிழக மணலுக்கு எவ்வித வரியும் செலுத்தாமல்,
சட்டவிரோதமாக கோவை மற்றும் பொள்ளாச்சி வழித்தடங்களில், கேரளாவுக்கு
லாரிகளில் கடத்திச் சென்று சப்ளை செய்கின்றனர். இதைதடுக்க, கேரள அரசு
தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
தமிழகத்தில் இருந்து மணல் கடத்தி வரப்படுவதை தடுத்தால், வேறுவழியின்றி
தங்களது மாநிலத்துக்குள் இருக்கும் கனிம வளங்களை சுரண்டி
அழித்துவிடுவார்கள் எனக்கருதியே, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல்
கடத்தலுக்கு மறைமுக ஆசி வழங்கியுள்ளனர். இது, கடத்தல்காரர்களின் பண
ஆதாயத்துக்கு பலம் சேர்க்கிறது. அதே வேளையில், தமிழக கனிம வளங்கள்
சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க இங்குள்ள வருவாய்த்துறை,
கனிம வளத்துறை மற்றும் போலீஸ் துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ளாமல்
வேடிக்கை பார்க்கின்றனர் அல்லது கடத்தல்காரர்களுடன் கைகோர்த்து மாமூல்
பெற்று வருகின்றனர்.
திருச்சி மற்றும் கரூரில் அள்ளப்படும் மணல் கோவை, பொள்ளாச்சி
மார்க்கமாக இரவு நேரங்களில் அதிகளவில் லாரிகளில் கேரளாவுக்குள் கடத்திச்
செல்லப்படுகிறது. இந்த லாரிகளில் சில, அவ்வப்போது பிடிபடுகின்றன; பல
லாரிகள் கேரளாவுக்குள் சென்று விடுகின்றன. இவ்வாறான மணல் கடத்தலில்,
திருச்சூரிலுள்ள செருத்துருத்தி, பாழயன்னூர், செலக்கரா, சாலக்குடி
பகுதிகளைச் சேர்ந்த "மணல் மாபியா' கும்பல்கள் ஈடுபடுவதாக திருச்சூர்
போலீசார் சமீபத்தில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இதே போன்று,
பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கும்பல்களும் மணல்
கடத்தலில் ஈடுபட்டுள்ளன. கேரளாவிலுள்ள நீர்நிலைகளை பாதுகாக்க அந்த மாநில
அரசு நடவடிக்கை எடுத்து, மணல் அள்ள தடை விதித்திருக்கிறது. அதே வேளையில்,
தமிழக அரசுத் துறையினரோ, இங்கு அள்ளப்படும் மணல் கேரளாவுக்கு
கடத்தப்படுவதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வியப்பாக உள்ளது.
சந்தன மரம் கடத்தல்: சந்தன ஆயில் தயாரிப்பு தொழிற்சாலைகள் கேரள
மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் முன்பு அதிகளவில் இயங்கிவந்தன.
இத்தொழிற்சாலைகளுக்கு தேவையான சந்தன மரங்கள், கேரள அரசின் உரிமம் பெற்று
அங்குள்ள வனப்பகுதிகளில் கான்ட்ராக்டர்களால் வெட்டப்பட்டு வந்தன.
சட்டவிரோதமாகவும் மரங்கள் அதிகளவில் வெட்டி வீழ்த்தப்பட்டன. கேரள
வனப்பகுதிகளில் இயற்கை வளங்கள் அழிவதை கண்ட கேரள அரசு, சந்தன ஆயில்
தொழிற்சாலைகளை மூடி நடவடிக்கை எடுத்தது. எனினும், சந்தன ஆயிலை
சட்டவிரோதமாக தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சந்தன ஆயில்
தொழிற்சாலைகள் பாலக்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இயங்குவதாக
கூறப்படுகிறது.சந்தன மரங்களை வெட்டுவதற்கான கெடுபிடி கேரளாவில்
அதிகரித்துள்ள நிலையில், சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள், சந்தன
மரங்களை கடத்தல்காரர்களிடம் கூடுதல் விலைக்கு வாங்கி, ஆயில் தயாரிப்பில்
ஈடுபட்டு வருகின்றன. இதற்கான சந்தன மரங்களை கடத்தல்காரர்கள் தமிழக
வனப்பகுதிகளில், குறிப்பாக கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெட்டி
கேரளாவுக்குள் கடத்திச் செல்கின்றனர்.
வனப்பகுதிகளில் மட்டுமின்றி, நகருக்குள் பல்வேறு இடங்களில் தனியார்
வீடுகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் வளர்ந்திருக்கும் சந்தன மரங்களை
இரவில் வெட்டி வாகனங்களில் கடத்திச் செல்கின்றனர்.கடந்த இரு ஆண்டுகளில்
மட்டும் கோவை நகரில் சந்தன மரத்திருட்டு தொடர்பாக 12 வழக்குகள் போலீசில்
பதிவாகியுள்ளன; எண்ணற்ற சம்பவங்கள் போலீசுக்கு புகார் வராமலே
மறைக்கப்பட்டுள்ளன. சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கேரள கும்பல்கள்,
பயங்கர ஆயுதங்களுடன் வருவதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்
போலீசாரும் அச்சமடைந்துள்ளனர்.
இரு ஆண்டுகளுக்கு முன் கோவை நகரிலுள்ள "பாரதி பார்க்' வளாகத்தில்
சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற கேரள கும்பல், தடுக்க முயன்ற மாநகர
ரோந்து போலீசாரை கட்டிப்போட்டு, அவர்களிடமிருந்த கைத்துப்பாக்கியையும்
பறித்துச் சென்றனர்; போலீஸ் துப்பாக்கி இன்னமும் மீட்கப்படவில்லை.
கோவையில் மட்டுமின்றி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலும் சந்தன மரம்
வெட்டி கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன.
கேரளாவிலுள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க அந்த மாநில அரசு நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது. அதே வேளையில், தமிழகத்தில் சந்தன மரங்கள் அதிகளவில்
வெட்டப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதை, இங்குள்ள வனத்துறை மற்றும்
போலீஸ் அதிகாரிகள் முழு அளவில் நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன்? என்ற கேள்வி
எழுந்துள்ளது. தமிழகத்தில் இருந்து மணல், சந்தன மரம் ஆகியவை கேரளாவுக்கு
தொடர்ச்சியாக கடத்தப்படுகிறது. இதை தடுக்க, தமிழக அரசு கடும் நடவடிக்கை
மேற்கொள்வது அவசியம். முன்பு, தமிழக - கேரள போலீசார் இரு மாநில எல்லை
பகுதிகளில் அவ்வப்போது "கூட்டு அதிரடி சோதனை' (கோம்பிங் ஆபரேஷன்) நடத்தி
வந்தனர். இதன் மூலம், இரு மாநில போலீசார் இடையே தகவல் பரிமாற்றம்
ஏற்பட்டு, குற்றத்தடுப்பு நடவடிக்கை ஓரளவு மேம்பட்டிருந்தது. சமீப
ஆண்டுகளாக, கூட்டு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாத காரணத்தால், கடத்தல்
சம்பவங்கள் தொடர்வதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரேஷன் அரிசியும் மிஞ்சவில்லையே! மணல், சந்தன மரங்கள்
மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசியும் கேரளாவுக்கு
கடத்தப்படுகிறது.தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கிலோ ஒரு ரூபாய்க்கு,
கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தகுதியான கார்டுதாரர்களில்
70 சதவீதம் பேர் ரேஷன் அரிசி வாங்கினாலும், 30 சதவீதத்தினர் அரிசி வாங்க
ஆர்வம் காட்டுவதில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும்
கடத்தல்காரர்கள், ரேஷன் கடை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் கூடுதல் விலைக்கு
அரிசி வாங்கி ரகசிய இடத்தில் பதுக்குகின்றனர். பல மூட்டைகள் சேர்ந்த பின்
சரக்கு ஆட்டோ மற்றும் வேன், ரயில், பஸ்களில் கடத்திச் சென்று கேரள
எல்லைக்குள் ஒதுக்குப்புறமான தோட்டங்களில் பதுக்கி வைக்கின்றனர். அவற்றை
கிலோ 6 ரூபாய்க்கு வாங்கும் கேரள ஏஜன்ட்கள், பல்வேறு பகுதிகளுக்கும்
எடுத்துச் சென்று கிலோ 9 முதல் 10 ரூபாய் வரை விற்கின்றனர். கடத்தலை
தடுக்க தமிழக வருவாய்த்துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை, போலீஸ் துறையினர்
நடவடிக்கை மேற்கொண்டு அவ்வப்போது சில வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.
எனினும், ரேஷன் அரிசி கடத்தல் புதுப்புது வழிமுறைகளில் தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரளாவில் அரசு வேலைக்கு மலையாள கல்வி கட்டாயம். கேரள அரசு அதிரடி. தமிழகத்தில் எப்போது?
» ஜப்பானில் வாழ்கிறது தமிழ்! இதுவும் தமிழனின் சாதனையே...
» வனவளமே நாட்டின் வளம்; விழிக்க வேண்டிய தருணம் இது
» பசி வந்தால் பற்றும் பறந்து போகும்,சரியா? அல்லது பத்தும் பறந்து போகும்,இது சரியா,விளக்கம் கீழே!!!
» தமிழ்நாட்டு பெட்ரோல் வளம் தமிழருக்கே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum