TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மாரடைப்பு தடுப்பது உங்கள் கைகளில் - உலக இருதய தினம்

Go down

மாரடைப்பு தடுப்பது உங்கள் கைகளில் - உலக இருதய தினம் Empty மாரடைப்பு தடுப்பது உங்கள் கைகளில் - உலக இருதய தினம்

Post by ஜனனி Thu Oct 07, 2010 7:54 am

ஓவ்வொரு வருடமும் செப்டம்பர் மாத இறுதி ஞாயிறு தினத்தில் இது அனுஷ்டிக்கப்படுகிறது.

மாரடைப்பு தடுப்பது உங்கள் கைகளில் - உலக இருதய தினம் Untitled
உங்கள் இருதயத்தைக் காப்பாற்றுங்கள்
உலக இருதய சங்கத்தின் தூண்டுதலினால் முதன் முதலாக 2000 வருடத்தின் செப்டம்பர் மாதத்தில் இத் தினம் கொண்டாடப்பட்டது.

இருதய நோய்களாலும் பக்கவாதத்தாலும் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக்
குறைப்பதற்கு இவ்வருடமும் முயலுமாறு அரசாங்கங்களையும் உடல்நலத்துறை
சார்ந்த அறிஞர்களையும், சகல தொழில் வழங்குனர்களையும், தனிப்பட்ட
மனிதர்களையும் உலக இருதய சங்கம்; அழைத்திருக்கிறது.

இருதயத்திற்காக வீட்டில் மட்டுமின்றி தொழில் புரியும் இடங்களிலும் முயற்சியுங்கள்

இருதயத்திற்கு நல்ல செய்தி

இருதயத்திற்கு நல்ல செய்தியை வழங்கும் இடமாக இவ் வருடம் தொழில் புரியும்
இடங்களை முன்னிலைப்படுத்துகிறது உலக இருதய சங்கம். தொழில் வழங்குவோர்,
தொழில் புரிவோர் மற்றும் சமூகத்தினருக்கு நன்மை செய்யும் விதத்தில் நீண்ட
கால அடிப்படையில் வாழ்க்கை முறை மாற்றங்களை தொழிலகங்களிலும் ஏற்படுத்துவதே
இவ்வருடத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

இந்த உலக இருதய நாளிலே ஒவ்வொருவரும் தனது இருதயத்தின் நலனுக்கான
பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டு, ‘நான் எனது இருதயத்துடன் வேலை செய்வேன்’
என உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வருமுன் காப்போம்

வழமையான வைத்திய முறைகள் இன்று கேள்விக்குரியதாகிவிட்டதை நீங்கள்
அறிவீர்கள். வைத்தியர் சிகிச்சை முறைகளைச் சொல்லுவதும் நோயாளிகள் அவற்றைக்
கேட்டு நடப்பதுமான வழமையான முறை வெற்றியளிக்கவில்லை. இது நோயாளர் இறப்பு
விகிதத்தை போதியளவு குறைக்கவில்லை.


  • நோய் வராமல் தடுப்பதும்,
  • நோயை நேர காலத்துடன் இனங்காண்பதும்,
  • ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையை ஆரம்பிப்பதும் அவசியமாகும்.
இதனை நோயாளரின் முழுமையான ஒத்துழைப்புடனும் பங்களிப்பினோடுமே
செயற்படுத்த முடியும். நோயாளிகள் தமது முக்கிய பங்களிப்பை உணர்ந்து, ஏற்று
மருத்துவ உதவியுடன் செயற்பட்டால் தமது ஆரோக்கியத்தை நன்கு பேண முடியும்
என்பது இப்பொழுது நன்கு உணரப்படுகிறது.
எனவே உங்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பும் முக்கியமானது. நீரிழிவு, உயர்
இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இதய நோயையும்
பக்க வாதத்தையும் தடுப்பதில் இத்தகைய அணுகுமுறையே நல்ல பலனை அளிக்க
முடியும்.

மனிதனைப் பாதிக்கின்ற பல்வேறு நோய்களில் இதயநோய் மிகவும் முக்கியமான
இடத்தைப் ஏன் பிடிக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்வோம். காரணங்கள்
பல உள்ளன.


இருதய நோய்கள் ஏன் முக்கியமானது

  • மனிதர்களின் மரணத்திற்கான முதற்காரணியாக இருக்கிறது


  • எதிர்பாராது திடிரென தாக்கும் நோயாகவும் இருக்கிறது.


  • அதிகம் பயமுறுத்தும் நோயாக இருக்கிறது.


  • மனிதர்கள் தமது உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றுவதற்குத் தூண்டக் கூடிய காரணியாகவும் இருக்கிறது.

இலங்கையில் நிகழும் மரணங்களுக்கான காரணிகளில் முதலாவதாக இருப்பது இருதய
நோயாகும். இலங்கையில் மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் இன்று இதுவே முதற்
காரணியாக இருக்கிறது.

வீட்டில்
மாரடைப்பு தடுப்பது உங்கள் கைகளில் - உலக இருதய தினம் Heart+Life+style

நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குச் செய்ய வேண்டியவை யாவை?

உணவு- உடல் நலத்திற்கு ஏதுவான
உணவுகளை உட்கொள்ளுங்கள். தினமும் 5 பரிமாறலுக்கு குறையாதளவு பழவகைகளையும்
காய்கறிகளையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நிரம்பிய கொழுப்பு
அடங்கிய உணவுகளை தவிர்ப்பது அவசியம். அதிக உப்புள்ள உணவுகளையும்
தவிருங்கள். முக்கிய கடையுணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும்
அத்தகையவையே.

உடல் உழைப்பு:- உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயற்படுங்கள். அதில்
உங்கள் இருதயத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 30
நிமிடங்கள் உங்கள் உடலுக்கு வேலை கொடுக்கும் பணிகளில் அல்லது
உடற்பயிற்சியில் தவறாது ஈடுபடுங்கள்.

எடை:- உங்கள் எடையைக்
கவனத்தில் எடுங்கள். அதீத எடை உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டுவரும். அதே
நேரம் ஒருவர் தனது அதீத எடையைக் குறைத்தால் இரத்த அழுத்தம் குறையும்.

புகைத்தல்:-
புகைத்தலைக் கைவிடுங்கள். நீங்கள் அதனைச் செய்தால் ஒருவருட
காலத்திற்குள்ளேயே மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் உங்களுக்கு அரைமடங்கு
குறைந்துவிடும்.

மது:- மது அருந்துவராயின் அதைக்
கைவிடுங்கள் அல்லது அதன் அளவை நன்கு குறையுங்கள். அதிகமாக உட்கொள்ளும் மது
உங்கள் எடையை அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். உயர்
இரத்த அழுத்தம் பக்கவாதத்தை கொண்டு வருவதற்கான முதற் காரணி என்பதுடன்
மாரடைப்பைக் கொண்டுவருவதற்கு ஏதுவான காரணி என்பதை அறிவீர்கள்.

மருத்துவரை சந்தியுங்கள்:- “எனக்கு
எந்தவிதமான நோய் அறிகுறிகளும் இல்லை” என எண்ணி வாழாதிருக்க வேண்டாம்.
மனிதர்களுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் உயர் இரத்த அழுத்தம்,
நீரிழிவு, குருதியில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு போன்றவை நோய் முற்றும்
வரை வெளிப்படையான அறிகுறிகள் எவற்றையும் காட்டுவதில்லை.

எனவே ஒழுங்கு ரீதியில் உங்கள் மருத்துவரை அணுகி

  • பிரஷர், கொலஸ்டரோல் மற்றும் சீனி அளவை அறிந்து கொள்ளுங்கள்.
  • அத்துடன் உங்கள் எடையையும், வயிற்றின் சுற்றளவையும் அவர் அளந்து
    பார்த்து உங்களுக்கு இருதயநோய் வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைக்
    கண்டறிவார்.
  • இவை அதிகமாக இருந்தால் அவற்றைச் சரியான அளவில் குறைப்பதற்கு முயல வேண்டும்.

தொழில் தளத்தில்

இருதய நலத்தைப் பேணும் நடவடிக்கைகளை வீட்டில் எடுத்தால் மட்டும்போதாது, உங்கள் வேலைத்தளத்திற்கும் விஸ்தரியுங்கள்.

புகைக்காத வேலைத்தளம்:-
உங்கள் வேலைத்தளம் புகைத்தலுக்கு தடைவிதித்திருக்கிறதா எனப் பாருங்கள்.
இல்லையேல் அது புகைத்தில் தடை செய்யப்பட்ட இடமாக ஆக்குவதற்கு முழு முயற்சி
எடுங்கள்.

மாரடைப்பு தடுப்பது உங்கள் கைகளில் - உலக இருதய தினம் No+smoking+sign

உடலுக்கு வேலை:- உங்கள் தொழில் உடல் உழைப்பு அற்றதாயின் அங்கு உங்கள் உடலுக்கு வேலை கொடுக்கக் கூடிய வழிமுறைகளை கண்டுபிடியுங்கள்.

  • லிப்டைத் தவிர்த்து படிகளைப் பயன்படுத்துங்கள்.
  • மதிய உணவை மேசையில் உட்கார்ந்தபடி உண்ணாமல், வெளியே நடந்து சென்று பெற முடியுமானால் அதைச் செய்யுங்கள்.
  • வேலைக்குப் போவதற்கு பஸ், கார் போன்றவற்றுக்குப் பதிலாக சைக்கிளைப் பயன்படுத்த முடியுமானால் சிறந்தது.

உணவு:- உங்கள்
உணவு உள்ளக கன்ரீனில் பெறப்படுகிறது என்றால் அங்கு ஆராக்கியமான உணவு
கிடைக்க வழிசெய்ய வேண்டுங்கள். முடியாவிட்டால் நல்லாரோக்கிய உணவை
கொடுக்கும் நல்ல உணவகத்தைத் தேடுங்கள். அதன் மூலம் உடலாரோக்கியத்திற்கான
நடையும், நல்ல காற்றும் கிடைக்கும் அல்லவா?

ஓய்வு:- தொடர்ந்து ஒரே விதமான
வேலையெனில் இடையில் இரண்டு தடவைகளாவது 5 நிமிடங்கள் ஓய்வு பெற்று உங்கள்
அங்கங்களை நீட்டி நிமிர்த்தி அவற்றைச் சுறுசுறுப்பாக்குங்கள்.

உங்கள் இருதயம் உங்கள் பொறுப்பில் உள்ளது. அதனைச் சுறுசுறுப்பாக நீண்ட
காலத்திற்கு செயற்பட வைப்பதோ, அன்றி அதன் செயற்பாட்டிற்கு ஊறு விழைவித்து
நோயில் ஆழ்த்துவதோ உங்கள் கைகளில்தான் தங்கியிருக்கிறது என்பதை
மறந்துவிடாதீர்கள்.


உளநெருக்கீடு
உங்கள் வேலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடனும் செய்யுங்கள்.
மனப்பதற்றத்திற்கும், நெருக்கீட்டிற்கும் (Stress) மாரடைப்புடன் தொடர்பு
இருப்பதாக சிலஆய்வுகள் கூறுகின்றன. வேலைத்தளத்தில் நெருக்கீடுகள்
இருக்குமாயின் நீக்க முயலுங்கள்.

மாரடைப்பு பற்றிய எனது முன்னைய பதிவுகளுக்கு..


மனப்பதற்றமும் மாரடைப்பும்

மாரடைப்பும் மாரடைப்பலாத நெஞ்சு வரிகளும்
மாரடைப்பும் பெண்களும்
ஈ.சீ.ஜீ பரிசோதனை தேவையா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  உங்கள் இரகசியத் தகவல்கள் இணையத்தில் திருட்டுப்போவதை தடுப்பது சாத்தியமா?
» நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை.
» உங்கள் மனதை சிந்திக்க வைக்கும் உங்கள் கண்ணீர் துளிகளை உதிர வைக்கும் ''''ராவண தேசம்'''' விரைவில் உங்கள் பார்வைக்கு...
»  “ ஒருநாள் என் கைகளில்
» தமிழ்நாட்டில் தினம் தினம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum