TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே? பகீர் கேள்வி கேட்ட பஞ்சாபி

Go down

கருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே? பகீர் கேள்வி கேட்ட பஞ்சாபி Empty கருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே? பகீர் கேள்வி கேட்ட பஞ்சாபி

Post by மாலதி Mon Sep 20, 2010 7:25 pm

"என் இளமை விடியும் முன்னரே முடியும் என்று யாருக்குத் தெரியும்" வலி மிகுந்த இந்தக் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் பேரறிவாளன்!

ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு "பேட்டரி" வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தூக்கு தண்டனைக் கைதி!

19-வது வயதில் "ஐந்து நிமிட விசாரணை" க்காகக் காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்டவர்.

இப்போது 39 வயதில் மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறார். அவர்சிறைக்கு சென்று 20 ஆண்டுகள் முடிந்துவிட்டதை நினைவுபடுத்தும் நிகழ்ச்சிகடந்த வாரம் சென்னையில் நடந்தது.

தியாகு தலைமையில் நடந்த இந்த விழாவில் "மரண தண்டனைக்கு எதிரான சமூக நீதிப்போராளிகள்" அனைவரும் ஆஜர். ஆனாலும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர்பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்மோகன் சிங்!

பத்திரிகையாளரும், மனித உரிமை அக்கறையாளருமான ஜக்மோகன் சிங் தமிழர்குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் புள்ளி விவரங்களோடு பேசியஆச்சர்யப் பேச்சுகள் இங்கே அப்படியே...

உலகமே ஊமையாகி நிற்க...ஈழத்தில் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்றுகுவித்தார்கள். இன்னும் சில நாடுகள் நேரடியாகவே இலங்கைக்குப் போர் உதவிசெய்தன. கொடுமையிலும் கொடுமையாக, அத்தனையையும் நாமும் வேடிக்கைபார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இனிமேலாவது, அடுத்தவனின் வேதனைகளைவேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு மனித உரிமைக்காக ஒன்றுசேர்ந்து குரல்கொடுக்க வேண்டும். இன்று தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருக்கிறார்.விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது,2007 நவம்பர் 2-ம் நாள் கருணாநிதி தன் கவிதையில், இலங்கையிலேகொல்லப்பட்டிருக்கிற அந்த வீரன் ஒரு தமிழன். அங்கே பாய்கிற ரத்தம் என்தமிழர்களின் ரத்தம்" என்று எழுதியிருந்தார். இப்படி ஒரு கவிதை எழுதியஅவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். ஆனால், இன்று என் கவலை எல்லாம்"அந்த தமிழ் ரத்தம் இப்போது அவருக்கு எங்கே போனது?" என்பதுபற்றித்தான்!இந்த விழாவைத் தலைமையேற்று நடத்தும் தோழர் தியாகு உட்பட மரணக் கொட்டடியில்இருந்த 25 கைதிகளுக்கு 1974-ல் கருணாநிதிதான் தண்டனைக் குறைப்புவழங்கினார். தமிழக முதலமைச்சரை நான் கேட்டுகொள்கிறேன்..."இனிதமிழ்நாட்டில் எவருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்படாது" என்று இப்போதேஅறிவிக்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றம் மரண தண்டனைக்கு எதிரான ஒருதீர்மானத்தை இயற்றி... மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும்அனுப்பிவைக்க வேண்டும்!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை இன்று நாடே போற்றுகிறது. அவர்ஜனாதிபதியாக இருந்தபோது "கருணை தொடர்பான கோப்புகள், பல அரசியல் கைதிகள்தொடர்பான கோப்புகள்" உள்துறை அமைச்சகத்தில் இருந்து குடியரசுத் தலைவர்மாளிகைக்கு நகர மறுத்துவிட்டன.

காரணம் தெரியுமா? குடியரசுத் தலைவர் அரசுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், "மரணதண்டனையை மறு திறனாய்வு செய்யுமாறு" கேட்டுக்கொண்டு இருந்தார். "நான் இந்தமரண தண்டனையை எதிர்க்கிறேன்" என்று அவர் திட்டவட்டமாகச் சொல்லவில்லைதான்.ஆனால் மனிதாபிமான அடிப்படையிலேயே அவர் இதுபோல் கேட்டுகொண்டார்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நூற்றுக்கணக்கானவர்கள் தூக்கு மரநிழலில் துன்புறுகிறார்கள். ஒரு மனிதனை, இன்னொரு மனிதன் கொலை செய்வதுஎவ்வளவு கொடூரமானதோ...அதேபோல்தான் அரசு ஒரு தனி மனிதனைத் தூக்கில்போடுவதும் தவறானது, அநீதியானது.

மரண தண்டனை என்பது என்ன?

கொலைக்குக் கொலை என்ற பழிக்குப் பழி வாங்கும் காட்டுமிராண்டித்தனம்தானே!.

உலகில் 133 நாடுகள் முரண தண்டனையை ஒழித்துவிட்டன. இந்தியாவைக் காட்டிலும்குற்றங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிற பிலிப்பைன்ஸ் நாட்டிலும்கூடஇந்தக் கொலை தண்டனையை அண்மையில் ஒழித்துவிட்டார்கள்.

ஆனால், "காந்தியம்" பேசும் நாம்தான் இன்னமும் மரண தண்டனையைப் பொத்திப்பாதுகாத்து வருகிறோம்" என்றார் ஜக்மோகன் சிங் உணர்ச்சிப் பிழம்பாக!

த. கதிரவன்
சூனியர் விகடன்

தமிழ்செல்வன் மரணத்திற்கு "கையறு நிலைப்பாடல்" எழுதிய கருணாநிதியை பாராட்டி ஜக்மோகன் சிங் எழுதிய கடிதம்

Elegy to Tamilchelvan a great act of courage - Jagmohan Singh

[You must be registered and logged in to see this link.]

2009-ம் ஆண்டு போர் நிறைவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சார்லஸ் ஆன்டனிக்கு ஜக்மோகன் சிங் எழுதிய கடிதம்

Whose Responsibility is it to protect?

[You must be registered and logged in to see this link.]

தமிழாக்கம்

சார்லஸ் அந்தோணிக்கு உணர்வுள்ள சீக்கியரின் கடிதம்

உங்களது வாழ்வுரிமை, அடையாளம் மற்றும் விடுதலைக்கான போராட்டத்துக்கு எனதுஆதரவை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.நீங்களும் உங்களது மக்களும் உயிர்வாழ எப்படிப்பட்ட போராட்டத்தில் தற்போது இருக்கிறீர்கள் என்பதை பஞ்சாபில்நடந்த போராட்டங்களை அருகில் இருந்து கவனித்தவன் என்ற முறையில் நான்நன்கறிவேன்.

ஊடகங்களில், உங்கள் தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு நாள் நண்பர்,மற்றொரு நாள் எதிரி. சில நாட்கள் அவர் பாதுகாக்கப்பட்டவர். இன்று அவர்கைவிடப்பட்டவர். சிலருக்கு அவர் தீவிரவாதி. பலருக்கு அவர் ரட்சகர். அவர்எப்படிப்பட்டவர் என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும் என்று விடுவதேநல்லது.நான் போர்க் குணம் மிக்க இனத்தைச் சேர்ந்தவன். போராட்ட குணத்துக்குபெயர் பெற்றவர்கள் சீக்கியர்கள். பஞ்சாபில் உள்ள பெரும்பாலான அரசியல்தலைவர்கள் தங்களது வாயைத் திறக்கவில்லை என்றாலும், அச்சமின்றி அறிக்கைவெளியிடவில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களின் துணிச்சல்,உறுதி, போர்த் திறன் ஆகியவற்றை அங்குள்ள பலர் பாராட்டுகின்றனர். இதைநீங்கள் நம்பியே ஆக வேண்டும். சமீப காலமாக உங்கள் போராட்டம் சந்தித்துவரும் வீழ்ச்சி பற்றிய செய்தியைக் கேட்டு பெரும்பாலான சீக்கியர்கள் கவலைகொண்டுள்ளனர்.

போர் பகுதியில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற சில மணிநேரங்கள் மட்டுமே அளித்த நிலையில், உங்கள் மக்களும், வீரர்களும் இலங்கைராணுவத்தின் விஷ வாயு குண்டு வீச்சுக்கும், ரசாயன குண்டு வீச்சுக்கும்ஆளாகியுள்ள நிலையில் உங்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து நான் இந்தக்கடிதத்தை எழுதுகிறேன்.இலங்கையில் தமிழீழ மக்கள் படும் துன்பத்தால் மனம்நொந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். துன்பப்படும் பெண்கள் மற்றும்குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து மலைகளே அசைய வேண்டும். ஆனால்அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. உங்கள் வலிகளையும் துன்பங்களையும் கண்டுகொள்ளாமல் மொத்த உலகமும் இயங்கி வருகிறது. அதற்கு 24 மணி நேர டி.வி.சேனல்களுக்கு நன்றி கூற வேண்டும்!.

தமிழீழ தாயகத்தை விட்டும், தமிழீழ வீரர்களை விட்டும் ஆண்களும், பெண்களும்,குழந்தைகளும் வெளியேறுவதைக் கண்டு எனது இதயம் அழுகிறது. இதை எழுதும் போதுஎனது உள் மன உணர்வுகளை வெளிப்படுத்த இது ஒரு வழி மட்டுமே என்ற குற்றஉணர்வே மிஞ்சுகிறது. இருந்தபோதிலும் ஒரு சீக்கியனாக என்னால் செய்யமுடிந்தது உங்களது போராட்டத்தில் உங்களுடன் சேர்ந்து கொள்வது மட்டுமே.எனது பிரார்த்தனையும், எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு உண்டு.

உலகில் உள்ள மற்ற அமைப்புகள் போன்று தமிழீழத்திற்கும் வரலாற்று ஆவணங்கள்இருந்தபோதும், இலங்கையில் துன்பப்படும் பல்லாயிரம் மக்களின் துயரை,வலியைத் துடைக்க பன்னாட்டு சமூகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்தியா எப்படி சீக்கியர்கள், காஷ்மீரிகள், வடகிழக்கு மாநில மக்களின்போராட்டங்களை அழித்ததோ, அதே போல் இலங்கை அரசு உங்களது போராட்டத்தை பகல்நேரக் கொலை மற்றும் பேரழிவின் மூலம் நசுக்கி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் வீதிகளில் இறங்கி போராடி இருக்கும்பேச்சுகளைத் தொடங்க வைத்த புலம் பெயர் தமிழர்களின் போராட்டம் இதயத்தைவருடுவதாக உள்ளது. குறிப்பாக நார்வே தலைமையிடம் கூர்மையாக வாதாடிய புலம்பெயர் தமிழர்களால் இம்.ஆஸ்லோவில் எம் மலம் பிரதமரின் அலுவலகத்தை நார்வேவாழ் புலம் பெயர் தமிழர்கள் முற்றுகையிட்டு, அரசாங்கத்துடன் வாக்குவாதம்செய்தனர். அப்போது, சர்வதேச வளர்ச்சிக்கான நார்வே அமைச்சர் எரிக்சோல்ஹைம், ‘என்னால் நார்வே தமிழர்களது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

ஆனால் என்னால் மாயவித்தை புரிய முடியாது’ என்றார். இதை செய்திகளில் நான்படித்தேன். நார்வே அரசின் என்ஆர்கே பத்திரிகை நிருபர்கள் இது குறித்துகேள்வி கேட்ட போது, ‘என்னால் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம்ஆகியவற்றிடம் மீண்டும் ஒருமுறை பேச இலங்கையில் போரை நிறுத்த ஏதாவது செய்யமுடியுமா என்று பார்க்க வேண்டும்’ என்றார்.தமிழ் எழுத்தாளர்கே.பி.அறிவானந்தம் எரிக்கின் இந்த பதில் குறித்து அளித்த பதில்:‘மாயவித்தைகள் புரிய சோல்ஹைமால் முடியாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம்அவர் தவறுகள் செய்வதில் இருந்து தள்ளி நின்றிருக்கலாம். முடிந்தவற்றைசெய்வது மட்டுமே ராஜதந்திரம் என்பதாக இருக்கலாம்.

ஆனால் முடியாததையும் நடத்திக் காட்டுவதுதான் விடுதலைப் போராட்டம்’. இந்தபதில் மிகச் சரியானது. ஒரு காவியம் போன்றது.துணிவுக்கும், மனித உரிமைபோற்றுதலுக்கும் ஸ்காண்டிநேவிய நாடுகள் பெயர் பெற்றவை. அதனால் தான் சமாதானபேச்சுக்கு நார்வேயை உங்கள் தலைமை தேர்ந்தெடுத்திருக்கும்.‘முக்கியமானகருத்தை நார்வே உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டது. சமாதான பேச்சில் நடுநிலைவகித்ததால், புலிகள் ஆயுதங்களை கீழே போடுமாறு கோரிக்கை விடும் இணைத் தலைமைநாடுகளுடன் சேர்வதில் நியாயம் இல்லை. கொழும்பின் இனப்படுகொலைகரங்களுக்குள் வன்னி மக்களை செல்லுமாறு கூறுவது பெரும் கவலை அளிக்கிறது.அவர்களுடைய செயல்முறைத் தோல்விகளால், பன்னாட்டு அமைதித் தூதுவர் என்றமதிப்பை நார்வே குறைத்துக் கொண்டுள்ளது.

சுதந்திரமாகவும், வல்லரசுகளின் புவிசார் அரசியல் குறிக்கோளில் இருந்துவிலகியும், உலக மனித குலத்துக்கு உண்மையாக நடந்து கொள்ள விரும்பியும்வருவதற்கு நார்வேக்கு இன்னும் நேரம் உள்ளது’ என்று நார்வேயின் தலையில் ஆணிஅடித்தது போல் அறிவானந்தம் கூறியிருக்கிறார்.தொடர்ந்து துன்பப்படும்தமிழீழ மக்களானவர்கள், இந்தியா மற்றும் உலக நாடுகளின் வெளிப்படையானதும்,மவுனமானதுமான ஆதரவால் சிங்களப் பேரினவாத ராணுவத்திடம் சிக்கிக்கொண்டுள்ளனர்.இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களின்சகோதரர்களின் அபயக் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. 13 தமிழ் சகோதரிகள்உங்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்தியா முழுவதும்தேர்தல் களேபரத்தில் உள்ள நேரத்தில் அவர்களைப் பற்றி இந்த ஊடகங்கள் கண்டுகொள்கின்றனவா?தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பொய்யாகவும் ஏமாற்றும்விதமாகவும் குரல் கொடுக்கின்றனர்.

அவர்கள் நேர்மையாக உங்களை ஆதரிக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.ஆனால் உங்களுக்கு அவர்களைப் பற்றி நன்கு தெரியும்.தமிழ் தலைவர்களைப்போன்று இந்தியத் தலைவர்களும் உங்களுடனும் உங்களுடைய லட்சியத்துடனும்தங்கள் சாணக்கியத் தனத்தை காட்டி வருவதாக நான் கருதுகிறேன். இந்தியாஉங்கள் நண்பனா, எதிரியா என உலகத்தால் தெளிவாக புரிந்து கொள்ள முடியாது.அந்த வகையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது. இலங்கை ராணுவத்துக்குபயிற்சியும் ஆயுதமும் கொடுப்பதைத் தொடர்ந்து கொண்டே ஒன்றும் தெரியாததுபோல் மென்மையாக நடந்து கொள்கிறது.

நான் பாதுகாப்பு ஆய்வாளர் கிடையாது. ஆனால், நார்வே தலைமையிலான அமைதிப்பேச்சு துவங்கியபோதே உங்கள் மக்களின் போராட்டத்துக்கு பெரிய அடி விழுந்துவிட்டது. சீக்கியர்கள், காஷ்மீரிகள், நாகா, மிசோ மக்களின் போராட்டத்திலும்இந்தியா இந்த முறையையே கடைபிடித்தது. 9/11 சம்பவத்துக்குப் பிறகு உலகின்புவிசார் அரசியல் மாற்றமும் உங்கள் போராட்டத்தின் தன்மையை மாற்றிவிட்டது.இதுவும் கூட நார்வேயின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படக் காரணமாகஇருக்கலாம்.கடந்த ஆண்டு இதே நேரம் கொசோவா என்ற புதிய நாடு பிறந்தது.அதற்கு ஓராண்டு முன்பு கிழக்குத் தைமூர் விடுதலை அடைந்தது. 2009-ல்தமிழீழம் விடுதலை பெறும் என்று நினைத்தேன்.

இந்த ஆண்டு அது நடைபெறாது போல் இருந்தாலும் எனக்கு இன்னும் நம்பிக்கைஉள்ளது.உங்களுடைய போராட்டம் கடைசிக் கட்டத்தை அடைந்துவிட்டது என்று உலகஅளவில் ஒரு தோற்றம் உள்ளது. கள நிலைமைகள் குறித்த உண்மைகள் தெளிவாகத்தெரியாத நிலையில் இருந்தாலும் உங்கள் போராட்டம் கடைசிக் கட்டத்தை அடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. உங்கள் போராட்டம் தொடர வேண்டும். உங்கள்சுதந்திரக் கொடியை தொடர்ந்து நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும்.அமெரிக்ககுடியுரிமை பெற்ற கோத்தபய ராஜபட்ச, பச்சை அட்டைதாரர் பொன்சேகா ஆகியோரின்மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடருவதில் முன்னாள்அமெரிக்க அரசு வழக்கறிஞர் புரூஸ் ஃபெய்ன் வெற்றி பெற்றுள்ளார் என்றுநம்புகிறேன்.

நியூயார்க்கில் உள்ள இனப்படுகொலை தடுப்பு அமைப்பு உலகில் உள்ள 8 நாடுகளில்இனப்படுகொலை நடைபெறுகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில்இலங்கையும் ஒன்று. உங்களது தாயகத்தில் இனப்படுகொலை நடக்கிறது என்பதைஉலகிற்கு அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர்கள் வெற்றிபெறுவார்கள் என்று நாம் நம்புவோம்.ஒரு நாட்டின் மக்களை காப்பாற்றுவதில்யாருக்கு பொறுப்பு உள்ளது என்ற ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கூட்டதில் எழுப்ப மெக்ஸிகோ தூதர் கிளாட் ஹெலன் முயற்சிசெய்தார்.தெற்காசியாவின் புவியியலையே மாற்றும் வல்லமை கொண்டவரின் மகன்சார்லஸ் அவர்களே, நீங்கள் உங்கள் போராட்டத்தை தொடர்வீர்கள் என்பதை நான்உறுதியாக நம்புகிறேன்.நான் உங்களுக்கு கூறுவது இதுதான், கொசோவா விடுதலைஅடைந்ததும் நான் கூறியதும் இதுதான்.

சீக்கியர்களின் 10-வது குரு, குரு கோபிந்த் சிங் அவர்களின் வாக்குதான்அது.‘யாரும் உங்களுக்கு விடுதலையை தட்டில் வைத்துக் கொடுக்க மாட்டார்கள்;அதைப் பெற்றவர்கள், தங்களுடையை சொந்த முயற்சி, துணிவு, உறுதி, வலிமையாலேயேபெற்றார்கள்’ என்பது தான் அந்த வாசகம்.விரைவில் அல்லது காலம் தாழ்த்தியோநீங்கள் அதை அடைவீர்கள்.இந்த தலைமுறையிலேயே நீங்களும் உங்கள் மக்களும்விடுதலையை அடைவீர்கள் என வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவன் தமிழ்மக்களுக்கு ஆசி வழங்கட்டும். அவர்களது துன்பத்தை நிறுத்தட்டும். இந்தஉலகில் சுதந்திர மக்களாக அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கட்டும்.

உண்மையுள்ள,
ஜக்மோகன் சிங்
[You must be registered and logged in to see this link.]

(Jagmohan Singh is a social, religious, health and political activistbased in Ludhiana, Panjab. He may be contacted at [You must be registered and logged in to see this link.] )

முத்தமிழ்வேந்தன்
சென்னை
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» “கருணாநிதி தத்து எடுத்த இலங்கை தமிழ் சிறுவன் எங்கே?” -‘கும்பலில்’ இருந்த பரிதி கேள்வி
» தலைவர் பிரபாகரனின் மனைவி எங்கே ரமேஷிடம் இராணுவம் கேள்வி:: வீடியோ !
» ஊழல் புகார் பற்றி கேள்வி கேட்ட தொலைக்காட்சி நிருபருக்கு மிரட்டல்
» மீதி வீடுகள் எங்கே? ஸ்டாலின் கேள்வி
» மூளை ஆபரேசன் நடந்த போது எழுந்து அமர்ந்து டாக்டரிடம் கேள்வி கேட்ட பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum