TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சொந்த ஊருக்கு எழுதும் மடல்

Go down

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Empty சொந்த ஊருக்கு எழுதும் மடல்

Post by sriramanandaguruji Wed Aug 18, 2010 9:33 pm

சொந்த ஊருக்கு எழுதும் மடல் 1322395_Beautiful-Indian-Painting_620


அம்மாவைப்போல்
என்னை
வளர்த்த ஜென்மபூமியே
உன்மணல்
புழுதியில்
உருண்டு விளையாடிய
சின்னமகன் எழுதும் அன்புக் கடிதம்


நீ நலமா ?
உன் கருவேலம் முட்களும்
கள்ளிச் செடிகளும் நலமா?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் DSC09727-Silk-Daily-Life-Bi

என்னை
நீ நலமாவென திருப்பிக்கேட்டால்
சொல்லுவதற்கு
என்னடம்
நல்ல பதிலே இல்லை
உன்னை விட்டு
வெகுதூரம் சென்ற நான்
எப்போதாவது வரும்
உன்னினைவால் பெருகின்ற
சந்தோஷத்தை தவிற
பெரிதாக எதையும் பெற்றிடவில்லை


ஒட்டைவிழுந்த
கால்சட்டையும்
ஒருபிடி சோறும்தான்
உன்னிடம் இருக்கும்போது இருந்தது
ஆனாலும்
நெஞ்சம் எல்லாம் நிறைந்துக் கிடந்தது

சொந்த ஊருக்கு எழுதும் மடல் 20080106093249


உன்னோடு
உள்ளபோது பெற்ற சாந்தியை
இங்கே வந்து
விற்று வசதிகளை வாங்கினேன்
இன்று
வசதிகளை விற்றாலும்
அமைதி கொள்ள வழியில்லை
நாசியை விற்று
பூக்களை வாங்கியவன்போல்
கண்களை விற்று
கண்ணாடி வாங்கியவன்போல்
மழலையை விற்று
வீணை வாங்கியவன்போல்
மனைவியை விற்று
இல்லறம் வாங்கியவன்போல்
உன்னை விற்று
ஆடம்பரம் வாங்கிய நான்
ஒரு முட்டாள் வியாபாரி!
கல்யாணம் செய்த
பிறகுதான்
பிரமச்சரியத்தின் பெருமை தெரியும்
விடிந்த பிறகுதான்
இரவின் இனிமை புரியும்

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Countryside_landscape_PF10_l

கொத்தியப்
பிறகுதான் நாகத்தின் அழகு தெரியும்
கொட்டியப் பிறகுதான்
பாதரசத்தின் வலிமை புரியும்
இழந்தப் பிறகுதான்
எளிமையின் வளமை தெரியும்
ஆம்!
உன்னை இழந்தப் பிறகுதான்
உன் சௌந்தர்யம் தெரிகிறது
உன் சௌகர்யமும் புரிகிறது
பானையை உடைத்து விட்டு
பதபதைத்து ஆவதென்ன
உன்னை
பிரிந்து விட்டு உருகி
அழுவதால் என்ன பயன்

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Indian3
என் கதை கிடக்கட்டும்
எப்போதும் அது திருப்பதி குப்பைதான்
கிளற கிளற சிக்கல்களே வரும்
என்னைப்போல்
உனக்கு
ஏராளமான பிள்ளைகள் உண்டு
அவர்களெல்லாம் நலமா ?
அவர்களின் வாரிசுகளும் நலமா ?

காலையும் மாலையும்
உன்னை
அலங்கரிக்க நீண்ட துடப்பத்துடன்
கம்பீரமாய் நடப்பானே பகடை!
அவனும்
அவன் சாராயபுட்டியும்
அவனின் ஒவ்வொரு அடிக்கும்
புதுப்புது கெட்ட வார்த்தைகளை உதிர்ப்பாளே
அவன் மனைவி
அவளும் நலமா ?
சொந்த ஊருக்கு எழுதும் மடல் Indian_village_painting_calendar-p158173859388184017gvnr_400

சலவைக்குப் போட்ட
கால் சட்டையை
தொலைத்து விட்டதனால்
கல்லால் அடிப்பதாக
கந்தனை திட்டினேன்
அந்தக் கந்தன் நலமா ?
அவனுக்கு அழகான
ஒருபெண் உண்டே
அவள்
பெயர் கூட மறந்து விட்டது
அவளும் நலமா?


உன் வடபுரத்தில்
வரிசையாக
நிற்குமே தென்னை மரங்கள்
அதில் அசைந்தாடியப்படி
தொங்குமே
தூக்கணாங் குருவிக் கூடுகள்
அவைகள் நலமா ?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Indian-village-vijay-patil


வாசகச்சாலை
மதில்சுவர் மீது வரிசையாய்
உட்கார்ந்து
கிசுகிசு பேசுமே சிட்டுக் குருவிகள்
அந்தக் குருவிகளை பிடிக்க
பதுங்கி நிற்பார்களே
கால்சட்டை போடாத பொடிசுகள்
பொடிசுகளை
சின்னக்கல் வீசி துறத்துமே
பல்போன பெருசுகள்
அவர்கள் எல்லோரும் நலமா?
நாராயண ஸ்வாமி கோயில்
கிணற்றிலிருந்து
தண்ணீர் எடுத்துவரும்
மங்கையரின் நடையழகை
கண்களால் தின்பதற்கு
வீட்டுத் தின்ணைகளில்
வரிசையாய்
காத்திருக்குமே வாலிபக் கொக்குகள்.....

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Painting-by-Harvinder-Singh
கொக்குகளை துரத்துவதாய்
பாசாங்கு செய்து
தானும் மேயுமே கிழட்டு நாரைகள்.....
கொக்குகளையும்
நாரைகளையும் கண்மறைத்து
படகுகளுக்கு தூண்டில்
போடுமே மான்விழி மீன்கள்.....
அந்தக்
காட்சிகளை இப்போதும்
காண முடியுமா
உன் வீதி முனையில் ....?
பைப்படியில்
சத்தமிடும் பெண்கள்
அந்த சந்தத்திற்கு
தலையாட்டும் ஆண்கள்
கைப்பிடியில்
அடங்காத பிள்ளைகள்
பம்பரம் கோலி
பந்தாட்டம்
கில்லி என்று
குதியாட்டம் போடும்
அரைக்கால் சட்டைகள்

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Riverscape_PF83_lபிரண்டையில் ராட்டிணம்
பப்பாளி கிளையில் ஊதுகுழல்
ஆட்டாம் புழுக்கை குத்திய ஓலைக்காற்றாடி
குருவி முட்டை அவியல்
தலை உடைந்தப் பானையில்
கூட்டாஞ்சோறு
ஓணானுக்கு துண்டுபீடி
பிஞ்சுபோன சைக்கிள் டையரில் ரேஸ்
என்று எவ்வளவோ கும்மாளம்
இந்தக் கும்மலில்
காலத்தை
மறந்த சில நரைமுடிகள்
நெஞ்சை நிமிர்த்தி
கைகளை பின்னால் கட்டி
ஆண்பிள்ளைப் போல் நடப்பாளே
நவலடியாள்!
அவள்
முதுகுக்குப்பின்
பதுங்கி நடப்பாரே பூனை புருஷன்?
அவர்
முதுகு இப்போதாவது நிமிர்ந்திருக்கிறதா?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் The+village--watercolor+on+paper--11X14in.-Not+for+Sale

ஆவணிமாதத்து
அம்மன் கொடைவிழாவில்
தாவணிப்போட்ட
பட்டாம்பூச்சிக்களை வலைவீசி பிடிக்க
தலைசீவி
நடைபழகும் விடலைமீசைகள்
முளைப்பாரி பின்னால்
கையில் பக்தியும் கண்ணில் தூண்டிலுமாய்
திரிவார்களே
அவர்கள்
இப்பவும் அப்படியே இருக்கிறார்களா?
ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்
கோரோசனை வாங்கலையோ கோரோசனை!
குடை ரிப்பேர்
அம்மி கொத்தனுமா அம்மி
என்ற குரல்கள்

சொந்த ஊருக்கு எழுதும் மடல் The_Milkmaid_miniature_painting
வளையல்காரனிடமும்
பூக்கார முனியனிடமும்
வம்பளக்கும் பெண்களின் வெடிச்சிரிப்பு



வண்டியிழுக்கும்
மாடுகளின் மணியோசை
அவ்வப்போது ஏழும்பும்
குடிகாரர்களின் ஓலம்
இப்படி எல்லா ஓசைகளும்
இப்போதும் உன் வீதிகளில் கேட்கிறதா?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Village_scene
சங்குடு பாட்டி
இன்றைய மாலை
நேரத்திலும்
வைகுண்டஸ்வாமி கோயிலுக்கு போகிறார்களா?
மதியக் குழம்புக்கு
மீன் வாங்க
மீன்கார துரைராஜ் வீட்டுக்கு முன்னால்
காலையிலிருந்தே காத்திருக்கிறார்களா கிழவிகள்?
காதலனுடன்
ஓடிப்போகும் போது மாட்டிக் கொண்ட
சிவராஜக்கனி அக்காவிற்கு
அர்த்தராத்தியில்
கல்யாணம் நடந்த அரசமர மேடை
இன்னும் அப்படித்தான் இடிந்து கிடக்கிறதா?
அந்த மேடையில்தான்
பிடிபட்ட
சில்லரைத் திருடர்களை
இன்னும் கட்டி வைக்கிறார்களா?


சொந்த ஊருக்கு எழுதும் மடல் Village_scene_PY70_l
மாதாக் கோயில் மணியோசையும்
அம்மன் கோயில் மேளமும்
ஒரே நேரத்தில்தான் ஒலிக்கிறதா?
சுருட்டுப் புகைத்தப்படி
நகைச்சுவை நறுக்குகளை
வாரி இரைப்பாரே
லிங்கத்துரை அண்ணன்
அவர் அதே இளமையோடுதான்
வாழைக்கு நீர் பாய்க்க செல்கிறாரா?
தினம்தினம்
இரவு நேரம்
விளக்கு கம்பத்தின் கீழ்
குழந்தைகளை
வட்டமாய் உட்கார வைத்து
நல்லத்தங்காள் அல்லி அரசானி
கதைகளை
ஒப்பாரி பாடலுடன் சொல்வார்களே
தங்கபுஷ்பம் பெரியம்மா
அவர்கள் இன்னும்
அதே வித்தைக் கர்வத்துடன்தான் நடக்கிறார்களா?

சொந்த ஊருக்கு எழுதும் மடல் Village_scene_QN86_l
எல்லாமே அப்படித்தான்
உள்ளதென்றால்
ஒரு சின்ன அஞ்சல் அட்டையில்
""ஆம்''
என்று மட்டும் எழுதிப்போடு
அடுத்த நொடியே
அங்குவருகிறேன்
இல்லையென்றால்
மௌனமாய் இங்கு முடங்கிக்
கொள்கிறேன்
மொட்டை மரத்தைப்
பார்க்கும் தைரியம் எனக்கில்லை








சொந்த ஊருக்கு எழுதும் மடல் Sri+ramananda+guruji




சொந்த ஊருக்கு எழுதும் மடல் D




சொந்த ஊருக்கு எழுதும் மடல் Sri+ramananda+guruji+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF



sriramanandaguruji
sriramanandaguruji
உதய நிலா
உதய நிலா

Posts : 133
Join date : 02/08/2010

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum