TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருச்சி பிரம்மாண்ட கூட்டத்தில் ஜெயலலிதா ஆவேசம்: தி.மு.க., மீது கடும் தாக்கு

Go down

திருச்சி பிரம்மாண்ட கூட்டத்தில் ஜெயலலிதா ஆவேசம்: தி.மு.க., மீது கடும் தாக்கு  Empty திருச்சி பிரம்மாண்ட கூட்டத்தில் ஜெயலலிதா ஆவேசம்: தி.மு.க., மீது கடும் தாக்கு

Post by ஜனனி Sun Aug 15, 2010 7:27 am

""தமிழத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தர, முதல்வர் கருணாநிதி துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. மாறாக, துரோகங்களை இழைத்துள்ளார்,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, திருச்சியில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் குற்றம் சாட்டினார்.
விலைவாசி உயர்வு, விவசாயிகள், மீனவர்கள் பிரச்னை, மணல் திருட்டால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில், திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியதாவது: நான் அரசியலுக்கு வந்து 28 ஆண்டுகளாகின்றன. இதுபோல மக்கள் கூட்டத்தை நான் என் வாழ்நாளில் எங்கும் பார்த்ததில்லை.தி.மு.க., ஆட்சியின் நான்கு ஆண்டு காலம் முடிந்து விட்டது. இப்போது தேர்தல் ஆண்டில் உள்ளோம். ஒன்பது மாதங்களில் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். ஜனநாயக நாட்டில் ஓட்டு போடுவது மக்களின் கையில் உள்ள சிறந்த ஆயுதம்.முதல்வர் கருணாநிதி, உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ளார். அவரது சொத்துக்கணக்கை பார்த்தால், கால்குலேட்டருக்கும் கிறுக்கு பிடித்து விடும். கடந்த நான்கு ஆண்டுகளில் விலைவாசி மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்து விட்டது. இதைக் கட்டுப்படுத்த, அரசு எதையும் செய்யவில்லை. கேட்டால், மத்திய அரசு மீது பழிசுமத்துகிறார். மத்திய, மாநில ஆட்சியில் இருப்பது தி.மு.க., தான்.மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டு, இல்லை என்கிறார். கர்நாடகாவை விட, தமிழகத்தில் குறைவு தான் என்கிறார். மின் கட்டண உயர்வு, ஆந்திராவை விட இங்கு குறைவு தான் என்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, சர்வதேச சந்தை விலையைக் காட்டி, கருணாநிதி ஏமாற்றுகிறார்.
தமிழக விவசாயத்தை, காவிரியைக் கழித்து விட்டு கணக்கிட முடியாது. மொத்த பாசனத்தில் 85 சதவீதம் காவிரியை நம்பித் தான் உள்ளது. வறண்ட காவிரியை வற்ற வைத்த பெருமை கருணாநிதிக்கு உண்டு. 1924ம் ஆண்டு கர்நாடகா - தமிழகத்துக்கு இடையில் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து ஒப்பந்தம் போடப்பட்டது. 50 ஆண்டுகள் அமலில் இருந்த அந்த ஒப்பந்தத்தை, 1974ம் ஆண்டு புதுப்பிக்க தவறி விட்டார் கருணாநிதி. ஒப்பந்தம் காலாவதியாவதை உணர்ந்த கர்நாடகா அரசு, அணைகளைக் கட்டியது. அதை தடுக்க கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே, காவிரி விஷயத்தில் அவர் செய்த முதல் துரோகம்.அதன்பின், இது சம்பந்தமாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வது என 1971ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஆண்டில் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இது, இரண்டாவது துரோகம். 1974ம் ஆண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது மூன்றாவது துரோகம். ஐகோர்ட் உத்தரவின்படி 1990ம் ஆண்டு நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் சேர்த்து 192 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா வழங்கவேண்டும் என, 2007ம் ஆண்டு இறுதித் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது நான்காவது துரோகம்.
அதற்குக் காரணம், கர்நாடகாவில் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான வணிக சம்ராஜ்யங்களை பாதுகாக்க, கர்நாடகாவை விரோதிக்க விரும்பாமல், தமிழக விவசாயிகளின் உரிமைகளை துளியும் கவலையில்லாமல், தாரை வார்த்துள்ளார். நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிய தஞ்சை, பாலைவனமாக மாறியுள்ளது. விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தர, கருணாநிதி துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.
இடையில், பல முறை பெங்களூரு சென்றிருக்கிறார். அங்கே அம்மாநில முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், காவிரி நீரைக் கேட்கவில்லை. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகு, காவிரியில் நீர் திறந்து விடக் கேட்டு, கர்நாடகா முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகே, மேட்டூரில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இல்லாவிட்டால், தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு இருந்திருக்காது.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு : ஜெயலலிதா சூசகம் : காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு குறித்து ஜெயலலிதா பேசியதாவது:"தி.மு.க., அரசை மைனாரிட்டி அரசு' என்று நான் சொல்வதற்கு கருணாநிதி கோபம் அடைகிறார். தமிழக சட்டசபையில் மெஜாரிட்டி முறையில் ஆட்சி அமைக்க மொத்தம் 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. ஆனால், சபாநாயகர் தவிர தற்போது தி.மு.க.,விடம் 99 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். பெரும்பான்மை இல்லாத தி.மு.க., தான் அரசு அமைத்து ஆட்சி நடத்துகிறது. இதை எப்படி மெஜாரிட்டி அரசு என்று சொல்லமுடியும்? காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதால் தான் கருணாநிதி அரசு நீடித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரசை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளக்கூடிய "பரந்த' மனம் கருணாநிதிக்கு இல்லை. ஆகையால், காங்கிரஸ் கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. ஆனால், தி.மு.க.,வினருக்கும் மட்டும் அமைச்சர் பதவிகளை அவர் மத்திய அரசிடம் வற்புறுத்தி பெற்றுக் கொண்டுவிட்டார்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.ஜெயலலிதா தன் பேச்சில், "பரந்த மனது கருணாநிதிக்கு இல்லை' என்று குற்றம்சாட்டியுள்ளார். அப்படி பரந்த மனது உள்ளவர் தான், பரந்த மனது இல்லாதவர் பற்றி குறைகூற முடியும் என்ற அடிப்படையில் பார்த்தால், "கண்டிப்பாக இது காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு என்ற அழைப்பு தான்' என்பதை புரிந்து கொள்ள முடியும்.
கருணாநிதியை எப்படி அழைப்பது? திருச்சியில் ஜெயலலிதா விளக்கம் : திருச்சியில் அ.தி.மு.க., சார்பில், பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியதாவது:தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்தியாவில் பெருமை மிக்க மாநிலமாக விளங்கிய தமிழகம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு கீழாக மாறிவிட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும், அதை மாற்றும் சக்தி உங்களிடம் தான் உள்ளது. 1,000 ரூபாய் கொடுக்கிறார்களே என ஏமாந்து ஓட்டு போட்டு விட வேண்டாம். குடும்ப ஆட்சியை வீழ்த்தி புதிய ஆட்சி அமைய வேண்டும். ஆளும் கட்சியை கண்டித்து தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். எங்காவது எதிர்க்கட்சியை கண்டித்து ஆளும் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியொரு கேவலம் இங்கு நடந்துள்ளது. 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றபோது என்மீது ஏராளமான பொய் வழக்குகளை போட்டனர். 12 வழக்குகளில் இருந்து வெளிவந்து விட்டேன். நீதிமன்றமே தீர்ப்பு அளித்து விட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று கருணாநிதியால் போடப்பட்டது. பெங்களுரு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதை ஏழு ஆண்டுகளாக இழுத்தடித்தது கருணாநிதி தான். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதனால், வழக்கை நான் தாமதப்படுத்துவதாக கூறி வருகிறார். நான் ஆமாம் என்று சொல்ல வேண்டும், சிறைக்குள் சென்று தண்டனை அனுபவிக்க வேண்டும், தேர்தலில் போட்டியில்லாமல் ஜெயித்து விடலாம் என கருணாநிதி நினைக்கிறார்.இப்படிப்பட்டவர் முதல்வராக இருக்கலாமா? கருணாநிதி பெயரை சொல்லுவதால் வேதனைப்படுகிறாராம்.
கோவையில் அ.தி.மு.க., கூட்டத்தை கண்டு மிரண்டு போய், பிரியாணி, மதுபாட்டில் கொடுத்து கூட்டத்தை கூட்டினார். 30 சதவீத அளவு கூட்டம் கூட அங்கு இல்லை. ஜெயலலிதா என்ற பெயரை என் பெற்றோர் எனக்கு வைத்தனர். நேரு, இந்திரா, காமராஜர் பெயரை எல்லாம் பெயர் சொல்லி தான் அழைக்கிறோம்.ஜெயலலிதா சொல்லும் போது கோபம் வருகிறது. எம்.ஜி.ஆர்., அழைத்த பட்டப்பெயர் சொல்லித் தான் இனி கூப்பிடப்போகிறேன். அது தான் தீயசக்தி. இனி, "திருக்குவளை தீயசக்தி' என்று தான் அழைப்பேன்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.தொடர்ந்து, தி.மு.க., ஆட்சியை கண்டித்து ஜெயலலிதா கண்டன கோஷங்கள் முழங்க, கட்சியினர் அவற்றை திரும்பக் கூறினர்.
அ.தி.மு.க., ஆர்ப்பாட்ட துளிகள் வருமாறு:* ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம் என, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அ.தி.மு.க.,வினர் வந்திருந்தனர்.
* நேற்று முன்தினமே அ.தி.மு.க.,வினர் திருச்சிக்கு படையெடுத்தனர். ஜெயலலிதா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதோ, இல்லையோ போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
* எம்.ஜி.ஆர்., இளைஞரணியினர் வெள்ளை நிற சட்டை, பேன்ட், தொப்பி அணிந்தும், ஜெயலலிதா பேரவையினர் பச்சை நிற சட்டை, பேன்ட், தொப்பி அணிந்தும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவை அண்ணா தொழிற்சங்க பேரவையினர் 350 பேர் சபாரி உடையணிந்து மேடையை சுற்றி பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
* மைதானத்தை சுற்றியிருந்த மரங்கள், ப்ளக்ஸ் போர்டுகளில் தொண்டர்கள் ஏறி அமர்ந்திருந்தினர். சிலர் ஸ்பீக்கர் மீது ஏறிநின்று மேடையை பார்த்துக் கொண்டிருந்தனர். முன்னாள் அமைச்சர் பாலகங்கா மேடையில் இருந்தபடி அவர்களை கீழே இறங்கும்படி கூறினார்.
* மதியம் ஒரு மணியிலிருந்தே குழந்தைகள், முதியவர், பெண்கள், ஆண்கள் என லட்சக்கணக்கானோர் மைதானத்தில் குவிந்தனர். கடும் வெயில் வாட்டி வதக்கியதையும் பொருட்படுத்தாது லட்சக்கணக்கானோர் ஜெயலலிதா வரும் வரை மைதானத்தில் காத்திருந்தனர். ஜெயலலிதா பேசத் துவங்கிய சிறிது நேரத்தில் மேடை பின்புறம் இருந்த தொண்டர்கள் கலைந்தனர்.
* ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்யப்படவில்லை. நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்ததாலும், குடிநீர் இல்லாததாலும் மேடை அருகே மூன்று பேர் மயங்கினர். கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்ட பெண்கள், முதியவர்களை போலீசாரும், ஜெ., பேரவையினரும் மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவி செய்தனர்.
* ஜெயலலிதாவை காண மேடையைச் சுற்றியிருந்த வீடு, வீட்டு மாடி, ப்ளக்ஸ் போர்டு, மரங்களில் தொண்டர்கள் ஏறிநின்றிருந்தனர். மேடையின் இடதுபுறம் பெரிய அளவில் ஜெயலலிதாவின் ப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதில், சிலர் ஏறிநின்றனர். அப்பகுதியில் தான் பத்திரிகையாளர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ப்ளக்ஸ் போர்டு லேசாக ஆடியதால் நிருபர்கள் அதிர்ச்சியடைந்து, சத்தம் போட்டனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மின் கட்டணம் உயர்த்துவதா ? திருச்சி கருத்துகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
» காங்கிரஸ் மீது கெஜ்ரிவால் கடும் தாக்கு: ‘எந்த நேரத்திலும் ஆதரவை வாபஸ் பெறலாம்’
» தி.மு.க., அரசு ரவுடிகளின் ராஜ்யமாக விளங்குகிறது: ஜெ., கடும் தாக்கு
» ஜெயலலிதா இஸ் ஏ மர்டரர்' என் மீது கேஸ் போடுங்க... வைகோ ஆவேசம்!
» உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம் : கருணாநிதி மீது ஜெயலலிதா கடும் சாடல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum