TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இப்போது பேசாமல் எப்போது பேசுவது? நூல் வெளியீட்டு விழா - அரங்கத்தை சூடாக்கினார் பழ.கருப்பையா

Go down

இப்போது பேசாமல் எப்போது பேசுவது? நூல் வெளியீட்டு விழா - அரங்கத்தை சூடாக்கினார் பழ.கருப்பையா Empty இப்போது பேசாமல் எப்போது பேசுவது? நூல் வெளியீட்டு விழா - அரங்கத்தை சூடாக்கினார் பழ.கருப்பையா

Post by Tamil Mon Jan 25, 2010 11:42 am

இப்போது பேசாமல் எப்போது பேசுவது? நூல் வெளியீட்டு விழா - அரங்கத்தை
சூடாக்கினார் பழ.கருப்பையா

அந்த நேரத்தை இளம் மாலைப் பொழுது என்று சொன்னால் சரியாக இருக்காது.
இனமானப் பொழுது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

ஜனவரி 9ம் தேதி... சென்னைப் புத்தகக் காட்சி திறந்தவெளி அரங்கில்,
புகழேந்தி தங்கராஜ் எழுதிய, ‘இப்போது பேசாமல் எப்போது பேசுவது?’ என்ற
நூல் வெளியீட்டு விழா நடந்த மாலைப் பொழுதுதான் இன மானப் பொழுதாக
இருந்தது. ‘தமிழக அரசியல்’ இதழில், ‘எண்ணத்தைச் சொல்கிறேன்’ என்ற
பொதுத் தலைப்பில் கடந்த 40 வாரங்களாக புகழேந்தி தங்கராஜ் எழுதி வந்த
கட்டுரைகளின் தொகுப்புதான்... ‘இப்போது பேசாமல் எப்போது பேசுவது?’
என்ற பெயரில் நமது திரிசக்தி பதிப்பகத்தின் சார்பில் நூல் வடிவம்
பெற்றிருக்கிறது.

திரிசக்தி பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் ரமணன் வரவேற்புரையாற்ற...
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்க...
எழுத்தாளரும் பேச்சாளருமான பழ.கருப்பையா இந்த நூலை வெளியிட்டார். முதல்
பிரதியை... ‘நான் உயிராயுதம் ஏந்துகிறேன்’ என முழங்கி தீக்குளித்த தியாகி
முத்துக்குமாரின் சகோதரி, (மட்டுமல்ல... நம் அனைவரின் சகோதரியான)
தமிழரசி கருக்குவேல்ராஜன் பெற்றுக்கொண்டார்.

வாசகர்கள் திரளுக்கிடையே நூலை வெளியிட்டுப் பேசிய பழ. கருப்பையாவின்
மொழியில் உணர்வுத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

‘‘இப்போது பேசாமல் எப்போது பேசுவது? என்ற இந்தத் தலைப்பே
தமிழர்களுக்குப் பல சங்கதிகளைச் சொல்கிறது. ‘நம் இனம் அழிந்து
சாம்பலாகிக் கொண்டிருக்கையில் நீ வாய் பேசாமல் இருந்தால் நீ
வாயிருந்தும் ஊமைதான்’ என சாட்டையால் அடிக்கிறார் புகழேந்தி தங்கராஜ்.
ஆட்சியாளர்களின் தவறுகளை அங்குலம் அங்குலமாக அலசிப் பார்த்திருக்கும்
இந்தப் புத்தகத்தை நெஞ்சு துணிச்சலோடு பதிப்பித்திருக்கிறார் திரிசக்தி
சுந்தர்ராமன். இது தமிழ் இனப் பணி!

தமிழ்த்தாய் பெற்றெடுத்த மூத்த மகன் தமிழகம் என்றால், இளைய மகன்தான்
ஈழம். இருவருக்கும் ஒரே பாலைத்தான் ஊட்டி வளர்த்திருக்கிறாள்
தமிழ்த்தாய். உருவம் ஒன்று, உணர்வு ஒன்று, நிறம் ஒன்று... ஆனால் நிலம்
மட்டும்தான் வேறு வேறு. மூத்த மகனுக்குத் தமிழகம் உரியது என்றால், இளைய
மகனுக்கு ஈழம் உரியதுதானே.

ராஜபக்ஷே நமக்குப் பிறவிப் பகைவன். இது உலகம் அறிந்த உண்மை. ஒரே ஒரு
ராஜபக்ஷே வந்து ஈழத்தை அழித்துவிடவில்லை. இதற்கு முன் மூன்று ஈழப்
போர்கள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் தமிழனைத் தோற்கடிக்க முடியாத
சிங்களர்கள் இப்போது திடீர் வீரர்கள் ஆனது எப்படி? இங்குள்ளவர்களின்
உதவிகளால்தான்!

இந்த மூடத்தனத்தின் பலனை இந்தியா இன்னும் பத்து ஆண்டுகளில் அனுபவிக்கும்.
புகழேந்தி தங்கராஜின் மேன்மையான எழுத்துக்கள், தமிழர்களின் உள்ளங்களில்
எரியும் போராட்டத் தீயை அணைத்துவிடாமல் ஊதி வளர்த்துக் கொண்டே
இருக்கிறது’’ என்று பேசி அரங்கத்தை சூடாக்கினார் பழ.கருப்பையா.

தலைமை உரை ஆற்றிய பழ. நெடுமாறன் உரையில் அவரது பழுத்த அனுபவப் பாங்கு
வெளிப்பட்டது.

‘‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஈழத்தின் நிலையைப் பார்த்து தமிழகம்
எப்படியெல்லாம் உணர்வுபூர்வமாகக் கொதித்துக்கொண்டிருக்கிறது என்பதை
எழுத்துப் போராளி புகழேந்தி தங்கராஜ் இந்தப் புத்தகத்தில் பதிவு
செய்திருக்கிறார். இலங்கையில் அரசின் வழிக்கு வராத பத்திரிகையாளர்கள்
சுட்டுக் கொல்லப்படுகின்றனர். தமிழகத்தில் பத்திரிகையாளர்களை
சுட்டுக்கொல்வதைத் தவிர மற்றது எல்லாம் நடக்கிறது இந்த
ஆட்சியாளர்களால்.

தமிழனின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றில் இந்த அளவுக்கு யாரும் துரோகம்
இழைத்ததில்லை. அவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

எம்.ஜி.ஆர். இரண்டாம் முறையாகச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று
திரும்பியபோது, நானும் வீரமணியும் அவரை சென்று பார்த்தோம். அவரால் பேச
இயலவில்லை. ஆனாலும்... ‘என்ன என்ன?’ என்று எங்களைப் பார்த்து சைகையிலேயே
கேட்டார். அப்போது, ‘நீங்கள் நடிகராக, முதல்வராக புகழ் பெற்றதைக்கூட
நாளை இன்னொருவர் பெற்றுவிட முடியும். ஆனால், நமது ஈழத் தமிழர்களுக்கு
நீங்கள் உதவியதால் வரலாற்றில் அழியா இடம் உங்களுக்கு இருக்கும்’ என
அவரிடம் கூறினேன். பேச இயலாத நிலையிலும் என் கையைப் பிடித்து தன்
நெஞ்சில் வைத்துக்கொண்டு அழுதார் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்டவர் எங்கே?
இப்போது இருப்பவர்கள் எங்கே?

இந்தியாவின் தென்பகுதிதான் அபாயம் இல்லாத பகுதி என உணர்ந்து பல
தொழிற்சாலைகளை தென்னிந்தியாவில் நிறுவினார் நேரு. ஆனால், இன்று
இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றிவிட்டது. இந்தியாவின் தென்பகுதிக்கு
எப்போது வேண்டுமானாலும் அபாயம் காத்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே இலங்கை இந்திய
ஒப்பந்தத்திலிருந்து நழுவிச் செல்லும் நிலை ஏற்பட்டபோது... ஈழத்திலுள்ள
போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க உத்தரவிட்டார் இந்திரா
காந்தி. ராமநாதபுரம் உச்சிப்புளி விமான தளம், தூத்துக்குடி மீளவிட்டான்
விமான தளம் ஆகியவற்றை புதுப்பித்து தயார் நிலையில் வைக்கவும்
உத்தரவிட்டார்.

எல்லை காந்தி என அழைக்கப்படும் கான் அப்துல் கபார் கான், பட்டாணி இன
மக்களுக்காகத் தனி நாடு கேட்டு போராடியபோது, அவருக்கு ஆதரவளித்தார்
இந்திரா. பாகிஸ்தான் சிறையிலிருந்து அவரை விடுவித்து டெல்லிக்கு அழைத்து
ஐந்து கோடி ரூபாய் நிதி கொடுத்தார் இந்திரா. ஏன்? இந்தியாவின்
பாதுகாப்புக்கு அபாயம் ஏற்பட்டபோது, பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷை
பிரித்துக் கொடுத்ததே இந்திராதான். அப்போது பாகிஸ்தானின் இறையாண்மை
உடைபடவில்லையா? இதெல்லாம் இறையாண்மை பேசும் இன்றைய காங்கிரஸாருக்குத்
தெரியுமா? பாவம்... அவர்களுக்கு முதல்வருக்குப் புகழ்மாலை சூட்டுவதிலேயே
பொழுது கழிகிறதே...

86வயது முதியவரான பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள், இந்தத் தள்ளாத
வயதிலும் சிங்களனுக்கு அடிபணியாமல் கடைசி வரை போராடி வீர
மரணமடைந்திருக்கிறார். முதியவருக்கே இவ்வளவு வீரம் இருக்கும்போது தமிழ்
இளைஞர்களுக்கு எவ்வளவு வீரம் இருக்கும். அந்த வெஞ்சின வீரத்தை நெஞ்சில்
தாங்குங்கள். புகழேந்தியின் நூல் அந்த நெருப்பை அணையாமல் காக்கிறது’’
எனப் பேசினார் பழ.நெடுமாறன்.

இரண்டு ‘பழ’ங்களுக்கு மத்தியில் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் புகழேந்தி
தங்கராஜ், ‘‘பல ஆண்டுகளுக்கு முன் பழ.கருப்பையா அவர்களின் வீட்டிலே ஒரு
விருந்து. என்னைக் கூப்பிட்டிருந்தார்கள். அங்கே சென்றால்
ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த சகோதரி மாலினி, காந்தளகம் சச்சிதானந்தன்,
டாக்டர் ஸ்ரீதர் ஆகியோர் இருந்தனர். ஈழத்து மக்களுக்கு மருந்து சேகரிக்க
வந்திருந்தனர் மாலினியும், ஸ்ரீதரும். ஆனால் சில நாட்கள் கழித்து...
‘இலங்கைக்கு மருந்து கடத்த முயன்ற டாக்டர் கைது’ என செய்திவருகிறது.
கொல்வதற்கு ஆயுதத்தை அனுப்புவீர்கள்! காப்பாற்ற மருந்து எடுத்துச்
சென்றால் கடத்தலா? இந்தத் தார்மீக கோபம்தான் எனக்குள் திருப்புமுனையை
ஏற்படுத்தியது.

இப்போதும் ‘தமிழக அரசியல்’ இதழில் எனது கட்டுரைகளைப் படித்துவிட்டு,
‘முந்தா நேத்துதான் நினைச்சேன். நீங்க எழுதிட்டீங்க’ என பலரும்
சொல்கிறார்கள். உண்மைதான். நான் உங்கள் கருவி. உங்கள் உணர்வுகளைத்தான்
வெளிப்படுத்துகிறேன். நெருப்புத் துண்டுகளை காகிதத்தில் அடைத்துத் தரும்
துணிச்சலுக்காக ‘தமிழக அரசியல்’ இதழ் ஆசிரியர் குழுவினருக்கும்,
பதிப்பாளர் சுந்தர்ராமன் அவர்களுக்கும் நன்றிகளை
தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று சொல்லி நெகிழ்ச்சியாக நிறைவு செய்தார்
புகழேந்தி தங்கராஜ்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» "தாது மணல் கொள்ளை " நூல் வெளியீட்டு நிகழ்வு
» சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில், நூலசிரியரான பிரான்சிஸ் ஹாரிசன் உரையாற்றுகையில்:
» "இனவெறி குறும்பட வெளியீட்டு விழா"
» வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!!
» எந்திரன் பாடல் "சிடி' வெளியீட்டு விழா: மலேசியத் தமிழர்கள் அதிருப்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum