TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நாடுகடந்த தமிழீழ அரசு விடுக்கும் வேண்டுகோள்

Go down

நாடுகடந்த தமிழீழ அரசு விடுக்கும் வேண்டுகோள் Empty நாடுகடந்த தமிழீழ அரசு விடுக்கும் வேண்டுகோள்

Post by மாலதி Tue Jul 20, 2010 5:54 pm

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு வரவேற்பு!

சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச் சலுகையை
தற்காலிகமாக நிறுத்துவது குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை நாடுகடந்த
தமிழீழ அரசாங்கம் வரவேற்றுள்ளது.

இது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொருண்மிய நலன்பேணல்
மேம்பாட்டுக்கான குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மனிதவுரிமைகள்
விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த நிபந்தனைகளை சிறிலங்கா
அரசு ஏற்க மறுத்ததின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இம் முடிவை தாம்
வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக்கான குழுவின் ஒருங்கு கூட்டுனர் பேராசிரியர் செல்வநாதன்;

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுமையான வடிவத்தை இங்கே தருகின்றோம்.

சிறிலங்கா அரசு கடந்த 5ஆண்டுகளாக அனுபவித்து வந்த பொதுப்படுத்தப்பட்ட
முன்னுரிமை முறைமையைத் (GSP+) தற்காலிகமாக நிறுத்துவது என்ற ஐரோப்பிய
ஒன்றியத்தின் முடிவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சார்ந்த நாம்
வரவேற்கிறோம்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா அரசு பன்னாட்டு அளவைகளுக்கு அமைவான
அடிப்படை மனிதவுரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை கொடுக்க மறுத்த
பின்னணியிலேயே நாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை ஆதரிக்கிறோம்.

2009 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியமே சிறிலங்காவின் அதிமுக்கிய ஏற்றுமதிச்
சந்தையாக விளங்கியது. அதன் பெறுமதி யூரோ 220 கோடியாகும். இது
சிறிலங்காவின் மொத்த ஏற்றுமதியில் ஏறக்குறைய 40 விழுக்காடாகும். இதில்
மூன்றில் இரண்டுபங்கு துணியும் ஆடைகளும் ஆகும்.

(GSP+) சலுகைகள் தெரிந்தெடுக்கப்பட்ட நாடுகள் சிலவற்றுக்கே
கொடுக்கப்படுகின்றன. தொடர்ச்சியான பொருளாதார மேம்பாடு மற்றும் நல்லாட்சி
தொடர்பான சில மரபுகளை நடைமுறைப்படுத்தும் நாடுகளுக்கே இந்த சலுகைகள்
அளிக்கப்படுகின்றன. முக்கியமாக மூன்று பன்னாட்டு மனிதவுரிமை மரபுகளைக்
குறிப்பிடலாம். அவையாவன பன்னாட்டு பொது மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய
மரபு, சித்திரவதைக்கு எதிரான மரபு மற்றது குழந்தையின் உரிமைபற்றிய மரபு.

சிறிலங்கா அரசு, உலக நாடுகளால் விலக்கி வைக்கப்பட்டிருக்ம் நாடுகள் போல்
நடந்து கொள்வதையிட்டு நாடுகடந்த தமிழீழ அரசு கவலை கொள்கிறது. சிறிலங்கா
அரசு பன்னாட்டு மனிதவுரிமை மரபுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற
உறுதிமொழியை ஐரோப்பிய ஒன்றியத்துக்கக் கொடுக்க மறுப்பதன் மூலம் தனது
சொந்தக் குடிகளான சிங்கள மக்களின் நலன்களைவிட தனது நலன்களுக்கு முன்னுரிமை
கொடுக்க முனைகிறது.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய
ஒன்றியம் வழங்கிய (GSP+) சலுகையானது பெரும்பாலும் சிறிலங்காவின் சிங்கள
சமூகத்திற்கே அநுகூலமாக அமைந்திருந்தது. இதே சமயம் சிறிலங்கா அரசு கடந்த
அறுபது ஆண்டு காலமாக தமிழ் மக்களின் அடிப்படை மனிதவுரிமைகளை மீறியுள்ளது.
எனவே சிறிலங்கா அரசுக்கு எதிராக சிங்கள பொது மக்களைக் கிளர்ந்தெழுமாறு
கேட்டுக்கொள்கிறோம். அதன் மூலம் சிங்கள மக்கள் சிறிலங்கா அரசு ஆகக்
குறைந்த பன்னாட்டு மனிதவுரிமைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஐரோப்பிய
ஒன்றியத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டும்.

இது சிறிலங்கா மக்கள் (GSP+) தகைமையைத் தொடர்ந்து அனுபவிக்க வழிசெய்யும்.
தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சிக்கும் இது வழிகோலும். அதனால் சிறிலங்கா
குடிமக்களது வறுமை களையப்பட்டு சிங்கள மக்களது வாழ்க்கை மேன்மையடையும்.
(GSP+) சலுகை மறுக்கப்பட்டாலும் சிறிலங்காவின் ஆகக்கூடிய ஏற்றுமதிச்
சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து விளங்கும் என எதிர்கூறல்
சொல்லப்படுகிறது. இந்தப் பொருளாதார நெம்புகோலை ஐரோப்பிய ஒன்றியம்
விரைவாகப் பயன்படுத்தி சிறிலங்காவின் மனிதவுரிமை நிலைமையைச்
செம்மைப்படுத்தல் வேண்டும்.

2009 ஆண்டு நடைபெற்ற போரின் கடைசிக் கட்டத்தில் சிறிலங்கா அரசும் அதன்
இராணுவமும் தமிழ் தேசத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட - கீழ்கண்டவை
உட்பட - மிருகத்தனத்தை இப்போது உலகம் விளங்கிக் கொள்ளத் தொடங்கியுள்ளது.

* ஆயிரக்கணக்கில் திரளாகக் கொல்லப்பட்ட தமிழ்ப் பொதுமக்கள்
(இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 - 80,000 வரை இருக்கலாம் என
மதிப்பிடப்படுகிறது.

* பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிப்
போராளிகளும் ஐ. நா. சபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வெள்ளைக்
கொடியுடன் இரணுவத்திடம் சென்ற அவர்களது அரசியல் பிரிவுத் தலைவர்களும் கொலை
செய்யப்பட்டமையும்.

* 300,000 இற்கும் மேலான தமிழ்ப் பொதுமக்கள் முட்கம்பி வேலிக்குப்
பின்னாலே இருந்த வதை முகாம்களில் பலவந்தமாக அடைக்கப்பட்டார்கள். அவர்களது
நலனைக் கவனிக்கத் தன்னிச்சையான மனிதவுரிமை அமைப்புக்களுக்கு அனுமதி
மறுத்தல்.

* கைதுசெய்யப்பட்ட பல தமிழீழ விடுதலைப் போராளிகள் மிக அணித்தாக வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்டது.

* சிறிலங்கா இராணுவத்திடம் சென்றடைந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போனது.

போர்க் காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள்
மற்றும் போர்க்குற்றங்களைச் சுதந்திரமாக விசாரிக்க சிறிலங்கா பிடிவாதமாக
மறுத்துவிட்டது.

பன்னாட்டு மனிதவுரிமை மரபுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தைத்
தர மறுத்தமை, போரின் கடைசிக் கட்டத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை,
மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க ஐ.
நா. நியமித்த ஆலோசனைக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது,

அரச சார்பற்ற மனிதவுரிமை அமைப்புக்கள் தமிழ்ப் பகுதிகளுக்கு சுதந்திரமாகச்
செல்வதற்கு தடை செய்தது ஆகியன சிறிலங்கா ஈழத் தமிழர்களை எப்படி
நடத்துகிறது என்பதற்கு போதிய சாட்சியாகும். ஏனைய மக்களைப் போல் தமிழீழ
மக்களும் தங்களது தாயக மண்ணில் சிறிலங்காவின் தலையீடு மற்றும் இராணுவ
வல்வளைப்பு இல்லாது அமைதியோடும் பெருமையோடும் வாழ்வதற்கு உரித்துடையவர்கள்
ஆவர்.

நாடுகடந்த தமிழீழ அரசு விடுக்கும் வேண்டுகோள்

1. சிறிலங்கா அரசு தனது சிங்கள குடிமக்களை இட்டும் தமிழீழ குடிமக்களை
இட்டும் பன்னாட்டு மனிதவுரிமை மரபுகளை கடைப்பிடிப்பதாக உறுதிமொழி தரும்
வரையும் தமிழீழ மக்களது தாயகத்தை விட்டு தனது படைகளை விலக்கிக் கொள்ளும்
வரையும் பின்வரும் விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டுகின்றோம்.

2. சிறிலங்காவின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக விளங்கும் ஐரோப்பிய
ஒன்றியம் சிறிலங்கா மீது மேலதிக வாணிகக் கட்டுப்பாடுகளை விதித்தல்
வேண்டும்.

3. சிறிலங்காவுக்கு வாணிக அநுகூலங்களை வழங்கும் ஏனைய நாடுகள்
ஐரோப்பிய ஒன்றியத்தைப் பின்பற்றி அப்படியான அனநுகூலங்களைப் பிற்போட
வேண்டும்.

4. சிறிலங்காவோடு வாணிகம் மேற்கொள்ளும் அமைதி விரும்பும் நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக வாணிக தடைகளை விதித்தல் வேண்டும்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொருண்மிய நலன்பேணல்
மேம்பாட்டுக்கான குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

http://www.infotamil...b434OS3e220Mq20
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பதிலடி கொடுக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசு! – போர்க்குற்றவாளிகள் பட்டியலை வெளியிடுகிறது.
» நீதிக்காக அலையும் ஒரு தேசிய இனத்தின் குரல்: நாடுகடந்த தமிழீழ அரசு
» இலங்கையின் புதிய போர்க்குற்ற ஆதாரத்தினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு! (காணொளி, பட இணைப்பு)
» "கனடிய தமிழர் தேசிய அவை விடுக்கும் கேப்பாபிலவு மக்களுக்கான அவசர தேவைகளுக்கான வேண்டுகோள்"
» காயமடைந்த போராளிகளை காப்பாற்றவே சரணடைகின்றேன் – நடேசனின் மகன் சாட்சியம் – நாடுகடந்த தமிழீழ அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum