TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஜோதிபாசு மரணம் : நீண்ட நாட்கள் முதல்வராக பதவி வகித்தவர் :நாளை இறுதிச் சடங்குகள்

Go down

ஜோதிபாசு மரணம் : நீண்ட நாட்கள் முதல்வராக பதவி வகித்தவர் :நாளை இறுதிச் சடங்குகள் Empty ஜோதிபாசு மரணம் : நீண்ட நாட்கள் முதல்வராக பதவி வகித்தவர் :நாளை இறுதிச் சடங்குகள்

Post by Tamil Mon Jan 18, 2010 7:08 am

ஜோதிபாசு மரணம் : நீண்ட நாட்கள் முதல்வராக பதவி வகித்தவர் :நாளை இறுதிச் சடங்குகள் Tblfpnnews_65708124638கோல்கட்டா
: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,
இந்தியாவில் நீண்ட காலம் தொடர்ந்து முதல்வராக இருந்தவருமான ஜோதிபாசு, உடல்
நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் கோல்கட்டாவில்
நாளை நடக்கின்றன. அவர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.


இந்தியாவில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்
ஜோதிபாசு. அக்கட்சியின் ஆணிவேராக விளங்கியவர். மேற்கு வங்க மக்களிடையே
பெரும் செல்வாக்கு பெற்ற தலைவர். அம் மாநில முதல்வராக ஐந்து முறை பதவி
வகித்துள்ளார். கடந்த 1977ம் ஆண்டில் இருந்து 2000ம் வரை (23 ஆண்டுகள்,
ஐந்து மாதம்) தொடர்ந்து முதல்வராக இருந்து, இந்தியாவில் தொடர்ந்து மிக
நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை பெற்றவர். உடல்நிலை
ஒத்துழைக்காததால், கடந்த 2000ல் தானாகவே முதல்வர் பதவியில் இருந்து
விலகினார். ஜோதிபாசுவுக்கு வயது 95. கடந்த சில மாதங்களாகவே உடல்
நலக்குறைவால் இவர் பாதிக்கப்பட்டிருந்தார்.


இதனால்,
தீவிர அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருந்தார்; பொது
நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது இல்லை.இந்நிலையில், இம்மாதம் 1ம் தேதி, இவரது
உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அவருக்கு நிமோனியா காய்ச்சல்
ஏற்பட்டது. கோல்கட்டாவில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ., மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். அங்கு, டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து
வந்தனர். பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்,
மருத்துவமனைக்கு சென்று அவரை பார்வையிட்டனர். கடந்த மூன்று தினங்களாக
அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்தன. இருந்தாலும், அவருக்கு
செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டது. டாக்டர்கள் குழுவினர், தொடர்ந்து அவரது
உடல்நிலையை கண்காணித்து வந்தனர்.


நேற்று
முன்தினம் இரவில் இருந்து ஜோதிபாசுவின் உடல்நிலை மோசமானது. இதயத் துடிப்பு
போராட்ட நிலையில் இருந்தது. இதையடுத்து, தற்காலிகமாக பேஸ் மேக்கர் கருவி
அவருக்கு பொருத்தப்பட்டது. அவருடைய மற்ற முக்கிய உறுப்புகள் அனைத்தும்
செயலிழந்து விட்டன. நுரையீரல்கள் மிகவும் குறைவான அளவே செயல்பட்டன.
சிறுநீரகம் முற்றிலுமாக செயலிழந்து விட்டது. தொடர்ந்து, "டயாலிசிஸ்'
செய்யப்பட்டது. இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல், "டயாலிசிஸ்'
செய்ய முடியவில்லை. அதைத் தாங்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இடம்
தரவில்லை. இதனால், "டயாலிசிஸ்' செய்வதை டாக்டர்கள் நிறுத்தினர்.


இந்நிலையில்,
நேற்று பகல் 11.47 மணியளவில், ஜோதிபாசுவின் உயிர் பிரிந்தது. கடந்த 17
நாட்களாக உயிருக்கு போராடி வந்த ஜோதிபாசு நேற்று காலமானார். அவரது
குடும்பத்தினர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா
உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் அப்போது உடன்
இருந்தனர்.ஜோதிபாசு இறந்த தகவலை, இடதுசாரி முன்னணி தலைவர் பீமன் போஸ்,
கண்ணீருடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


அவர் கூறுகையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு தற்போது நம்முடன் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்' என்றார்.


நாளை இறுதிச் சடங்கு :
மறைந்த ஜோதிபாசுவின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி
வருகின்றனர். முன்னதாக ஜோதிபாசு, தனது கண்களை தானம் செய்திருந்ததால்,
இறந்தவுடன் அவரது கண்கள் அகற்றப்பட்டன. ஜோதிபாசுவின் இறுதிச் சடங்குகள்
நாளை நடக்கின்றன. கோல்கட்டா, கியொரட்டலா சுடுகாட்டில் அவரது உடல்
எரியூட்டப்படுகிறது. மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேற்கு
வங்க மாநில அரசு, நாளை விடுமுறை அறிவித்துள்ளது. ஜோதிபாசு மறைவுக்கு
இரங்கல் தெரிவிக்கும் வகையில், மூன்று நாள் துக்கம்
கடைபிடிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே,
மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் சார்பில் ஜோதிபாசுவின் இறுதிச் சடங்கில்,
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார்.இறுதிச்சடங்குகளுக்கு
பின் அவரது சடலம், மறைந்த பாசுவின் விருப்பப்படி "தேக தானமாக'
கோல்கட்டாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு தரப்படும்.


கம்யூனிசத்தின் "உயிர்மூச்சு' ஜோதிபாசு :மேற்கு
வங்க மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய, மார்க்சிஸ்ட்
கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு(95) நேற்று காலமானார். சுதந்திர
போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். தொழிலாளர் நலனுக் காகவும்
பாடுபட்டவர். பேச்சாற்றலால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தவர்.
இந்தியாவில் நீண்ட காலம் முதல்வர் பதவியை வகித்தவர் என்ற பெருமையைப்
பெற்றவர்.கடந்த 1914, ஜூலை 8ம் தேதி, கோல்கட்டாவில் பிறந்தார் ஜோதி கிரண்
பாசு. இவரது தந்தை நிஷிகாந்தா பாசு ஒரு டாக்டர். லொரேட்டோ பள்ளியில்
சேரும் போது இவரது பெயர் ஜோதிபாசு என சுருக்கப்பட்டது.இந்து கல்லூரியில்
ஆங்கில இலக்கியத்தில், "ஹானர்ஸ்' பட்டம் பெற்றார். பின், இங்கிலாந்து
சென்று சட்டம் பயின் றார். பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி மூலமாக அரசியல்
பணிகளில் ஈடுபடத் துவங்கினார். அங் கிருந்த இந்திய மாணவர்களைத் திரட்டி,
சுதந்திர போராட்ட எழுச்சியை ஏற்படுத்தினார்.


1940ல்
சட்டம் முடித்து, "பாரிஸ்டர்' தகுதி பெற்றார்.இந்தியா திரும்பிய இவர்,
ரயில்வே பணியாளர்களின் நலனுக்காக பாடுபட்டார். ரயில்வே சங்கத்தின் பொதுச்
செயலரானார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதும் இடதுசாரி கட்சியில்
தொடர்வதில் உறுதியாக இருந்தார். மேற்கு வங்க சட்டசபைக்கு, 1946ல் முதன்
முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1964ல் இந்தியாவில் கம்யூனிஸ்ட்
கட்சி உடைந்த போது, புதிதாக உருவான மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
இதன் ஒன்பது பொலிட்பீரோ உறுப்பினர்களில் ஒருவரானார். அப்போதிருந்து 2008ம்
ஆண்டு வரை, கட்சியினரின் ஆசைப்படி பொலிட்பீரோவில் இருந்தார்.


கட்சியின்
சிறந்த தந்திரசாலியாகவும், மதிநுட்பமானவராகவும் கருதப்பட்டவர். 1965, ஜூன்
27லிருந்து வெளியான, "பீப்பிள் டெமாக்ரஸி' என்ற இதழின் ஆசிரியராகவும்,
வெளியீட்டாளராகவும் இருந்தார்.கடந்த 1957லிருந்து 1967 வரை, 10 ஆண்டுகள்
சட்டசபை எதிர்க் கட்சித் தலைவராகப் பணியாற்றியுள்ளார். 1967 மற்றும்
1969ல் துணை முதல்வராக பதவி வகித்தார். இடதுசாரி முன்னணி சார்பில், 1977ம்
ஆண்டு ஜூன் 21 முதல் 2000, நவ., 6 வரை, இடைவெளியின்றி மேற்கு வங்கத்தின்
முதல்வராக நீடித்தார். இதன் மூலம் இந்தியாவில் அதிக காலம் (23 ஆண்டு
மற்றும் 5 மாதம்) தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்தவர் என்ற சாதனை
படைத்தார்.


இவரது பதவிக்காலத்தின்
போது எழுந்த கூர்க்காலாந்து பிரச்னை, இவருக்கு தலைவலியை ஏற்படுத்தியது.
1960களில் நக்சல்பாரி இயக்கத்தை ஒடுக்கிய பெருமையையும் பெற்றார்.
நக்சல்பாரி என்பது மே.வங்கத்திலுள்ள ஊரின் பெயர். இதன் பின், இதுபோன்ற
வன்முறை இயக்கங்களுக்கு நக்சல்பாரி இயக்கங்கள் என்றே அழைக்கப்பட்டன. அதன்
உறுப்பினர்கள் நக்சலைட்டுகள் என்று அழைக்கப்பட்டனர். ஜோதிபாசுவின்
உயிருக்கு நக்சலைட்டுகளால் ஆபத்து இருந்தது. பாட்னா ரயில்வே ஸ்டேஷனில்
இறங்கிய போது, இவரை குறிவைத்து சுடப்பட்ட தோட்டா, இவரை வரவேற்க வந்த
ஒருவர் மீது பாய்ந்தது. அதன் பின், 1971 தேர்தல் பிரசாரத்தின் போது, இவரது
கார் கடுமையாகத் தாக்கப்பட்டது. அதிலிருந்தும் இவர் நூலிழையில் உயிர்
தப்பினார்.


இவரது ஆட்சிக்
காலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தச் சட்டங்கள், இவரது துவக்க கால
வெற்றிக்கு வழிவகுத்தன. அடிமட்ட அளவில் விவசாயக் கூலிகள் நசுக்கப்
படுவதற்கு எதிராக குரல் கொடுத்தவர். இது, மற்ற மாநிலங்களுக்கும் ஒரு
முன்னோடியாக அமைந்தது. 22 ஆண்டுகளுக்கு முன்பு, நான்கு ரூபாய் வாங்கிய
கூலித் தொழிலாளிகள், இவரது முயற்சியால், 15-18 ரூபாய் வரை பெற்றனர்.
மேற்கு வங்கத்தில், 74 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். அப்போது,
294 சட்டசபைத் தொகுதிகளில் 250 தொகுதிகள், கிராமங்களில் இருந்தன. இது வே,
அவர் ஐந்து முறை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட உதவியது. காலத்துக்கு
ஏற்றாற்போல், கம்யூனிச கோட்பாடுகளைக் கடைபிடித்த, சீனத் தலைவர் டெங்
ஜியாவோபிங் போன்றே இவரும் திகழ்ந்தார்.


இவரது
ஆட்சிக் காலத்தில், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் மேற்கு வங்கத்தில் தொழில்
துவங்க அனுமதியளித்தார். 300 தொழிலதிபர்கள், 1996ல் பிரிட்டன் பிரதமர்
ஜான் மேஜருடன் விஜயம் செய்தது இவரது காலத்தில் தான்.கடந்த 1996ல், ஐக்கிய
முன்னணி அரசில் பங்குபெறுவதில்லை என மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ முடிவு
செய்ததால், பிரதமராகும் வாய்ப்பை ஜோதிபாசு இழந்தார். அத்துடன், மத்தியில்
கம்யூனிஸ்ட்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு முற்றிலுமாக பறிபோனது.
உடல்நலத்தை காரணம் காட்டி, 2000ம் ஆண்டு முதல்வர் பதவியை தானாகவே ராஜினாமா
செய்தார். இவர் ராஜினாமா செய்ததிலிருந்து, மே.வங்கத்தில் கம்யூனிஸ்ட்
கட்சிகள் எதிர்க்கட்சிகளிடம் திணறி வருகின்றன.

"ஜன
கனர் சங்கே' என்ற தலைப்பில், வங்க மொழியில் தனது சுய சரிதையை
எழுதியுள்ளார். கமல் பாசுவை மணந்த இவருக்கு, சந்தன் பாசு என்ற மகன்
உள்ளார். அவர் தொழிலதிபராக உள்ளார்.இம்மாத துவக்கத்தில், "நிமோனியா'
காய்ச்சல் காரணமாக கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
ஜோதிபாசுவுக்கு, உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவமனையில் இவரது உயிர்
பிரிந்ததை தொடர்ந்து, நாடு; மாபெரும் கம்யூனிச தலைவரை இழந்தது
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தீவிரவாதிகளுடன் போராடி வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது: நாளை ஜனாதிபதி வழங்குகிறார்
»  நெயில் பாலிஷ் நீண்ட நாட்கள் வர வேண்டுமா?
» வங்கிகள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம்
» தமிழக கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு!
» தஞ்சாவூர்–திண்டுக்கல் மாநகராட்சி ஆனது: நகராட்சி தலைவர்கள் மேயராக நாளை பதவி ஏற்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum