TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கிணற்றுத் தவளையா தமிழக மாணவர்கள்?அகில இந்திய தேர்வுகளில் சொதப்புவது ஏன்?

Go down

கிணற்றுத் தவளையா தமிழக மாணவர்கள்?அகில இந்திய தேர்வுகளில் சொதப்புவது ஏன்? Empty கிணற்றுத் தவளையா தமிழக மாணவர்கள்?அகில இந்திய தேர்வுகளில் சொதப்புவது ஏன்?

Post by மாலதி Mon Jun 07, 2010 8:15 am

அகில
இந்திய அளவில் நடக்கும் தகுதித் தேர்வுகளில், தமிழக மாணவர்கள் பின்
தங்குவது, நம் மாநிலத்தின் எதிர்காலத்தை
கேள்விக்குறியாக்கியுள்ளது.ஐ.ஐ.டி. ஜே.இ.இ., பி.எம்.பி.டி., உள்ளிட்ட
நுழைவுத் தேர்வுகளாக இருக்கட்டும், ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத் தேர்வாக
இருக்கட்டும், தமிழக மாணவர்கள் தலைநிமிர்ந்து நிற்க முடியாத நிலையை
நீடிக்கிறது.
இந்நிலையை மாற்ற, துளி அளவும் பெற்றோர்களிடமோ, கல்வி நிறுவனங்களிடமோ
அல்லது அரசிடமோ எண்ணம் தோன்றியிருப்பதாக தெரியவில்லை. ஐ.ஐ.டி., ஜே.இ.இ.,
தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. சென்னை மண்டலத்தில் தேர்வு எழுதிய
65 ஆயிரத்து 557 பேரில் 2 ஆயிரத்து 619 பேர் தேர்வானார்கள். இவர்களில்
பெரும்பாலும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டுகளில் ஐ.ஐ.டி.
ஜே.இ.இ., தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சியைப் பார்க்கும் போது, மொத்த
இடங்களில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 1 முதல் 5 சதவீதம்
மட்டுமேஇருக்கிறது. சுமார் 10 ஆயிரம் பேர் கொண்ட ஐ.ஐ.டி. ஜே.இ.இ.,
தரப்பட்டியலில் சுமார் 100 முதல் 500 தமிழக மாணவர்களே தகுதி பெறுகிறார்கள்.
ஆந்திராவைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஐ.ஐ.டி.,யிலும் 25
சதவீத இடத்தைப் பிடித்து விடுகிறார்கள். டில்லி மற்றும் ஆந்திரா மாணவர்கள்
ஆண்டுதோறும் ஐ.ஐ.டி.,யில் மிகச்சிறப்பான இடத்தைப் பெறுகிறார்கள்.ஐ.ஐ.டி.,
தேர்வு எழுத வேண்டும் என்ற மனநிலை ஆந்திர மாணவர்களிடம் நிறைய இருக்கிறது.
தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களில், "நமக்குக் கிடைக்காது' என்ற மனநிலையில்
ஏராளமானோர் தேர்வு எழுதத் தயங்குகிறார்கள்.
டில்லியைப் பொறுத்தவரை, ஐ.ஐ.டி.,யில் இடம் கிடைக்கும் வரை, விடவே
மாட்டார்கள். தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பார்கள். அந்த மனவலிமை நம்
தமிழக மாணவர்களுக்கு குறைவாக இருக்கிறது.இம்மாநிலங்களைப் பின்பற்றி
தற்போது கர்நாடக மாணவர்களும், ஐ.ஐ.டி.,யில் சேர்ந்தே தீருவது என்ற
குறிக்கோளில் செயல்படுகின்றனர். பெங்களூருவில் ஐ.ஐ.டி. ஜே.இ.இ., கோச்சிங்
தருவதற்கு ஏராளமான நிறுவனங்கள் முளைத்துவிட்டன.
ஐ.ஐ.டி. ஜே.இ.இ.,க்கு பயிற்சி அளிப்பவர்கள் இது பற்றி கூறும் போது,
ஜே.இ.இ., தேர்வுக்கு முயற்சி செய்யாமலேயே தமிழக மாணவர்கள் பலர் விட்டுக்
கொடுத்துவிடுகின்றனர். இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழியாக அண்ணா
பல்கலைக்கழகங்களில் சேர்வதோ அல்லது கிண்டி பொறியியல்
கல்லூரியில்சேர்வதைத்தான் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் குறிக்கோளாகக்
கொண்டிருக்கின்றனர் என்று கூறினார்.தமிழகத்தைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு
ஐ.ஐ.டி. ஜே.இ.இ.,க்கு பயிற்சி அளிக்க போதுமான றுவனங்கள் இல்லை என்பதுதான்
உண்மை. இருக்கிற சில பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் எண்ணிக்கை நிரம்பி
வழிகிறது. அதே சமயத்தில், ஏழை மற்றும்சாதாரண மாணவர்கள் கட்டணம் கட்ட
முடியாத அளவில் உள்ளது.ஐ.ஐ.டி. ஜே.இ.இ.,தேர்வுக்கு தயாராக மாணவர்கள்
மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும் எனக் கருதி பாசத்தில் கண்களை
மூடிக்கொண்டு பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஜே.இ.இ., எழுத
ஊக்குவிப்பதில்லை.
இன்னொரு முக்கியமான பிரச்னை,தமிழக பாடத்திட்டத்தின் அமைப்பு. இது
சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக இல்லை. தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவரால்
ஐ.ஐ.டி., தேர்வு தாராளமாக எழுத முடியும். ஆனால், சி.பி.எஸ்.இ., மாணவரால்
இன்னும் சுலபமாக எழுத முடியும் என்பதால் வாய்ப்பு அவர்கள் பக்கமாக
இருக்கிறது. ஆகவே, தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி.,
செல்வதற்கு முன்னதாகவே தயார் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இதை
புரிந்து கொள்வதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கள் தயக்கம்
காட்டுகின்றனர்.மற்ற மாநில மாணவர்களைக் காட்டிலும் தமிழக மாணவர்கள் "டிவி'
மற்றும் வீடியோ கேம்ஸ்களுக்கு அடிமையாகி உள்ளனர். ஜே.இ.இ., தேர்வுக்கு
தேவைப்படும் பாடச் சுமை தமிழக பாடத் திட்டத்தில் குறைவாக இருக்கிறது.
இதனால் பாடத்துக்காக கடினமாக உழைக்கும் போக்கும் குறைவாக இருக்கிறது.
இதுவே ஜே.இ.இ., தேர்வில் தமிழக மாணவர்கள் பின்தங்குவதற்கான காரணம். இதே
போன்ற நிலை மகாராஷ்டிராவிலும் உள்ளது.
சென்னையிலும் மும்பையிலும் ஐ.ஐ.டி., இருந்த போதிலும் கூட, அங்கு
படிக்கும் அந்தந்த மாநிலத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.
தமிழகத்தில் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். ஆகவே
குறைந்த அளவில் தேர்ச்சி அடைகிறார்கள்.இதே போல், இன்னொரு தேசிய
அளவிலானநுழைவுத் தேர்வான ஏ.ஐ.இ.இ.இ., தேர்வில் தமிழகமாணவர்கள் 16ம்
இடத்தைப் பெற்றுள்ளார்கள். இத்தேர்வில் உ.பி., மற்றும் ஆந்திராவைச்
சேர்ந்த மாணவர்களே அதிக இடத்தை அள்ளிச் செல்கின்றனர். குட்டி மாநிலமான
அரியானாவை விட தமிழகம் பின்தங்கியிருக்கிறது. மாநில வாரியான ரேங்கிங்
பட்டியலில் தமிழகத்துக்கு 16வது இடம் கிடைத் துள்ளது என்பது மிக மோசமான
நிலையையே காட்டுகிறது.
30 தேசிய தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் வெவ் வேறு மாநிலங்களில்
அமைந் துள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் தேசிய ஒதுக்கீட்டில் உள்ள 24
ஆயிரம் இடங்களை ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு எழுதித்தான் பெறமுடியும்.
இத்தேர்வுகள்பற்றி விழிப்புணர்வு தமிழக மாணவர்கள் மத்தியில் இல்லை.
விழிப்புணர்வும் பயிற்சியும் அவர்களுக்கு மிக முக்கியம். சிவில் சர்வீஸ்
தேர்வுகளில் முன்பிருந்த நிலை தற்போது மாறியிருக்கிறது. அதேபோல், மற்ற
தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் ஜொலிக்க வேண்டும் என்று தமிழக
முன்னேற்றத்தில் ஆர்வம் உள்ளவர்கள் விரும்புகிறார்கள்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் நிலை குறித்து டில்லி
வஜ்ரம் ரவி தெரிவித்த போது, " தற்போது தமிழகத்திலிருந்து எழுதுவோர் சிவில்
சர்வீஸ் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றே கூறலாம். அகில
இந்திய அளவில் 3 அல்லது 4 வது இடத்தில் தமிழக மாணவர்கள் உள்ளனர். உ.பி.,
மற்றும் டில்லியை சேர்ந்தவர்கள் இத்தேர்வில் சிறப்பான இடம் பெறுகிறார்கள்.
தமிழக மாணவர்களிடம் விடா முயற்சி உள்ளது. இன்டர்வியூவில் தமிழக மாணவர்கள்
சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவர்கள் இன்னும் சிறப்பாக
செயல்படமுடியும்' என்றார். தற்போது, இந்திய அளவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்.,
அதிகாரிகளின் எண்ணிக்கையான 4 ஆயிரத்து 413 பேரில் 671 பேர் (15 சதவீதம்)
உ.பி.,யை சேர்ந்தவர்கள். 419 பேர் (9.4 சதவீதம்) பீகாரை சேர்ந்தவர்கள்.
290 பேருடன் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது.
ஆந்திரா 269, டில்லி 233, ராஜஸ்தான் 233, பஞ்சாப்228, மகாராஷ்டிரா 222,
அரியானா 158 பேர்இடம்பெற்றிருக்கின்றனர். ஆண்டுதோறும் 3 லட்சத்துக்கும்
அதிகமானோர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகின்றனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு
முன்பு வரை இருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கும் இப்போதுள்ள
தேர்வுகளுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளன. முன்பு போல், தற்போது கொஞ்சம்
கூட, கேள்விகளை எதிர்பார்த்து மாணவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே,
தேர்வு செய்த பாடத்தில் மிகுந்த திறன் பெற்றவராக விளங்க வேண்டிய கட்டாயம்
உள்ளது. திறனாய்வு செய்யும்திறனும் இருந்தால்தான் மெயின் தேர்வில்
தேர்ச்சி அடையும் நிலை உள்ளது.தமிழக மாணவர்கள் தகவல் தொடர்புத்
திறன்,பெர்சனாலிட்டி திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பத்திரிகைகளை
படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்வதும் இதுபோன்ற தேர்வுகளில்
வெற்றிபெறுவது சுலபமாகும்.
தமிழக இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு இல்லாததே ஆர்வக்குறைவுக்கு காரணம் :
மாணவர்களின் ஆர்வக்குறைவுக்கு தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் ப.வே.நவநீதகிருஷ்ணன்
தெரிவித்தது: தமிழகத்தில் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப நுழைவுத்
தேர்வு இருந்த போது, மாணவர்கள் பிளஸ் 2 தேர்வுக்கும் தயாரானார்கள்.
அத்துடன், நுழைவுத் தேர்வுக்கும் தயாரானார்கள். இதற்காக மீண்டும் ஒரு
மாதம் அவர்கள் படித்த பாடங்களை மீண்டும் படிக்க நேர்ந்தது. அச்சமயத்தில்
அகில இந்திய நுழைவுத் தேர்வுகளையும் சேர்த்தே எழுதலாமே என்ற எண்ணம்
இருந்தது. நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற வேட்கையும் அப்போது
இருந்தது. தற்போது தமிழக இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பப்
படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் இல்லாததால் அவர்கள், இங்குள்ள
கல்லூரிகளில் சேர உள்ள வாய்ப்புகளை மட்டுமே சிந்திக்கிறார்கள். அகில
இந்திய நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற வேட்கை இல்லை.நுழைவுத் தேர்வு
தொடர்ந்து இருந்திருந்தால், ஒருவேளை, தற்போது எழுதிய எண்ணிக்கையை விடக்
கூட, அகில இந்திய அளவில் நடந்த நுழைவுத் தேர்வுகளில்தமிழக மாணவர்களின்
எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். அகில இந்திய நுழைவுத் தேர்வு எழுத
வேண்டும் என்று நோக்கத்தோடு, தயாராகிறவர்கள் மட்டுமே தற்போது
விண்ணப்பிக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக இன்ஜினியரிங் கல்லூரியில்சேர்வதே மாணவர்களின் நோக்கம் :
அகில இந்திய அளவில்தமிழக மாணவர்கள் பங்கேற்பு குறைந்திருப்பது தொடர்பாக
சென்னை எய்ம்ஸ் பயிற்சிநிறுவன நிர்வாக மேலாளர் ஸ்ரீராம் தெரிவித்தது:தேசிய
அளவிலான நுழைவுத் தேர்வு குறித்து, மாணவர்கள் மத்தியில் ஒரு தவறான
கண்ணோட்டம் இருக்கிறது. இத்தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும்
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திலிருந்து எடுக்கப்படுகிறது என்று
நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல. ஆனால் மற்ற பிரிவு மாணவர்களும் தாராளமாக
போட்டியிடலாம். இந்த காரணத்தினால்தான் மிக நன்றாகப் படிக்கும் மாணவர்கள்
மட்டுமே அகில இந்திய தேர்வுகள் எழுத வேண்டும் என்ற
உருவாகியிருக்கிறது.தமிழகத்தில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு அகில இந்திய
இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.,) இருக்கிறது என்பதே
தெரியவில்லை. அது போல் அகில இந்திய முன் மருத்துவ முன் பல் மருத்துவ
நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.பி.எம்.பி.டி.,) இருக்கிறது என்பதும் தெரியவில்லை.
ஆகவே இந்த தேர்வை எழுத வேண்டும் என்று விரும்புவோர் எண்ணிக்கையே
மிகவும் குறைவாகஇருக்கிறது. பெற்றோர்களில் சிலருக்கு பிள்ளைகள் அகில
இந்திய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்று
விரும்புகிறார்கள். ஆனால் அந்த உத்வேகத்தில் சில மாணவர்கள் இல்லை.தமிழக
இன்ஜினியரிங் கல்லூரிகளில் நல்ல கல்லூரியில் சேர வேண்டும் என்ற எண்ணம்தான்
காணப்படுகிறது.ஆகவே பிளஸ் 2 தேர்வில் சிறப்பாகத்தேர்ச்சி பெற வேண்டும்
என்ற எண்ணம் உள்ளதே தவிர, அவர்கள் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வில்
போட்டி போட வேண்டும் என்று விரும்புவதில்லை.அகில இந்திய அளவில் நடக்கும்
தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டியது, பள்ளிகள் பொறுப்பு
என்றும் கூறிவிட முடியாது. அவர்களைப் பொறுத்தவரை பிளஸ் 2 தேர்வை
மையப்படுத்தியே இருக்கிறது.
பெற்றோர்களும் பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் இன்ஜினியரிங்
கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வும்,
ஏ.ஐ.இ.இ.இ., தேர்வாக இருக்கட்டும் பள்ளியில் உள்ள இயற்பியில், வேதியியல்
மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்துதான் கேட்கப்படுகின்றன. அதனால், பிளஸ்
2 தேர்வுக்குசரியாகத் தயாராகும் மாணவர்களால் தேசிய அளவிலான நுழைவுத்
தேர்வுக்கும் தயாராக முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். thanks:dinamalar
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» யுனெஸ்கோ போட்டி: தமிழக மாணவர்கள் சாதனை
» காங்கிரஸ் வெறியர்களுக்கு தமிழக மாணவர்கள் பதிலடி!
» அகில இந்திய மக்கள் ராஜ்ய கழகம்: புதிய கட்சி உதயம்
» அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட முடியாது; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
» சிவகாசிக்குள் நுழைய அனுமதி மறுக்கப் ப்ட்டுள்ள நடிகரும் அகில இந்திய நாடாளிம் மக்கள் கட்சி நிறுவனருமான கார்த்திக் தான் சிவகாசி போகாமல் சென்னை திரும்ப மாட்டேன் என்று கூறி மதுரையில் தங்கி இருக்கிறார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum