TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:48 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 11:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மிஸ்டர் கழுகு: “என்னையே ஏமாத்துறீங்களா?”

Go down

மிஸ்டர் கழுகு: “என்னையே ஏமாத்துறீங்களா?” Empty மிஸ்டர் கழுகு: “என்னையே ஏமாத்துறீங்களா?”

Post by Tamil Wed Apr 20, 2016 8:33 am

மிஸ்டர் கழுகு: “என்னையே ஏமாத்துறீங்களா?”
மிஸ்டர் கழுகு
23 வேட்பாளர்களுக்கு கல்தா! – இன்னும் எத்தனை பேர்?
ழுகார் உள்ளே நுழையும்போது நம் முன் ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் இருந்தது. அதைப் பார்த்து மெல்லச் சிரித்த கழுகார், ‘‘ஏழாவது முறையாக வேட்பாளர்களை மாற்றிவிட்டாரா ஜெயலலிதா? இதுவரை வந்துள்ள அறிவிப்பையும் சேர்த்தால் மொத்தம் 23 வேட்பாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். மூன்று வேட்பாளர்களின் தொகுதியை மாற்றி உள்ளார் ஜெயலலிதா” என்றபடியே ‘நமது எம்.ஜி.ஆரை’ எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டு நம்மைப் பார்த்தார்.
‘‘என்னதான் நடக்கிறது அ.தி.மு.க-வில்? ஏப்ரல் 29-ம் தேதி வேட்புமனுத் தாக்கல்செய்ய கடைசி நாள். அன்றைய தினம் வரை இன்னும் எத்தனை வேட்பாளர்களை ஜெயலலிதா மாற்றப்போகிறாரோ?” என்ற கேள்வியைப் போட்டோம்.
“இப்போது உள்ள வேட்பாளர்களில் 41 பேரைப் பற்றிய புகார்கள் ஆதாரத்துடன் வந்து குவிந்துள்ளனவாம். போயஸ் கார்டன் ஃபேக்ஸ் மிஷினில் பேப்பர் வைத்து மாளவில்லை என்பதால், அந்த லைனையே பாதி நேரம் அணைத்து வைத்துவிட்டார்களாம். கூரியரில் மலை அளவு தகவல்கள் தினமும் வந்துகொண்டே இருக்கிறதாம். சொந்தக் கட்சிக்காரர்களையே மதிக்காதவர்கள், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், முறைகேடுகள் செய்தவர்கள், எதிர்க் கட்சியினரோடு தொடர்பு வைத்துக்கொண்டு இருப்பவர்கள், அந்தத் தொகுதிக்கே சம்பந்தம் இல்லாதவர்கள், அமைச்சர்களின் பினாமிகள், பணம் கொடுத்து சீட்டு வாங்கியவர்கள்… என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் இந்தப் பட்டியலில் இருக்கிறார்களாம். இதனை அருகில் இருந்து உணர்ந்த உள்ளூர் கட்சிக்காரர்கள்தான் இந்தப் புகார்களை அனுப்புகிறார்களாம்.”
‘‘நிலமோசடி, ஊழல், கடத்தல், பாலியல், ரவுடிகள் தொடர்பு, கஞ்சா… ஆகிய புகார்களில் சிக்கிய அ.தி.மு.க வேட்பாளர்களின் இ.பி.கோ பட்டியலை நமது நிருபர்கள் எழுதி வந்தார்களே… மினி தொடர்போல!”
‘‘அந்தத் தகவல்கள் அனைத்துமே தோட்டத்துக்கு வந்துவிட்டன. அவற்றை பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்ச்சிசெய்து வருகிறது ஒரு டீம். மாவட்டச் செயலாளர்கள், மந்திரிகள், கட்சி வி.ஐ.பி-க்கள் என்று யாரையும் ஆலோசிக்காமல், முழுக்க முழுக்க உளவுத்துறையினரின் ஒத்துழைப்போடு ஜெயலலிதா தயாரித்த வேட்பாளர் லிஸ்ட் என்று இதனைச் சொல்கிறார்கள். இப்படி உளவுத்துறையிடம் கேட்கிறார்கள் என்றதும், உள்ளூர் உளவுத்துறை போலீஸ்காரர்களை லோக்கல் கட்சிக்காரர்கள் வளைத்ததாகவும் தங்களுக்குச் சாதகமான ரிப்போர்ட் அனுப்பக் கவனிப்புகளைச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ஐவர் அணியோ, கட்சிப் பிரமுகர்களோ ஆட்களை பரிந்துரை செய்தால், மோசமான ஆட்கள் வந்துவிடக்கூடும் என்பதால், உளவுத்துறையிடம் சொல்லி இருக்கிறார் முதல்வர். ஆனால், அதைவிட மோசமான பட்டியலை உளவுத்துறை தயாரித்து விட்டது என்ற கோபத்தில் கொந்தளித்து விட்டாராம் முதல்வர். 41-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மீது புகார் என்றதும் கோபமான ஜெயலலிதா, ‘என்னையே ஏமாத்துறீங்களா?’ என்று சினந்தாராம். அனைத்து வேட்பாளர்களைப் பற்றியும் மறுபடியும் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு போட்டுள்ளாராம்.”
‘‘ஓஹோ!”
மிஸ்டர் கழுகு: “என்னையே ஏமாத்துறீங்களா?” %E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2
“வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க சார்பாக தனியார் உளவுப் பிரிவினர் களம் இறங்கப்பட்டதாகச் சொன்னார்களே?”
“தனியார் நிறுவனத்தின் பங்கு இதில் உள்ளது. அவர்களின் ரிப்போர்ட்களுக்கு தமிழக போலீஸ் உளவுத்துறையினர் அடித்த ஜால்ராதான் வேட்பாளர் குழப்பங்களுக்குக் காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.”
‘‘வேட்பாளர்களை நேர்காணல் செய்தாரே ஜெயலலிதா?”
‘‘இந்த இரண்டு தரப்பும் சொன்ன ஆட்களை மட்டும் தான் ஜெயலலிதா நேர்காணல் செய்தார். குறிப்பிட்ட தொகுதியில் நிற்பவர், அந்தத் தொகுதியில் பெரும்பான்மை சாதியைச் சேர்ந்தவரா, பணபலம் படைத்தவரா என்று பார்த்து வேட்பாளர்களைத் தனியார் நிறுவனம் தேர்வுசெய்தது. அந்த ஆள் மீது புகார் இருக்கிறதா என்று உளவுத்துறை விசாரணை நடத்தியது. பணம் விளையாடியதால் உண்மை என்ன என்று முதல்வர் அறியாமல் போய்விட்டார் என்கிறார்கள். இந்தத் தரப்பினர் ஒரு தொகுதிக்கு மூன்று பேர் பெயரைக் கொடுத்து உள்ளார்கள்.”
‘‘அப்படியா?”
‘‘பொதுவாக உளவுத்துறை டிக் செய்யும் வேட்பாளர்களை ஜெயலலிதா மாற்றமாட்டார். அதுவே இறுதியானதாக இருக்கும். ஆனால், இந்தமுறை ஜெயலலிதாவுக்கு வேட்பாளர்களைப் பற்றிய புகார்கள் மின்னல் வேகத்தில் போயின. அதில் பல புகார்கள் ஜெயலலிதாவின் நேரடிப் பார்வைக்கும் போனது. இதைப் பார்த்து டென்ஷன் ஆனவர், ‘ஒழுங்காக செக் செய்வார்கள் என்று எதிர்பார்த்தேனே? இப்படி செய்து ஏமாற்றிவிட்டார்களே’ என்றாராம். ‘திருச்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பெண்மணி ஒரு போலி டாக்டர். ஊருக்கே தெரிந்த விஷயம் இது. இந்த மாதிரியான சாதாரண விஷயம் கூடவா உளவுத்துறைக்குத் தெரியவில்லை. அல்லது தெரிந்தே விட்டுவிட்டார்களா? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் மக்கள் பிரச்னைகளைக் கவனிக்க 12 பி.ஆர்.ஓ-க்களை நியமித்து அவர்கள் மூலம் பிரச்னைகளை அறிந்து, முடிந்தவரை அதனை உடனுக்குடன் தீர்க்க ஸ்பெஷலான ஏற்பாடுகளை அமைச்சர் பழனியப்பன் ஏற்பாடு செய்துவைத்திருந்தார். ஆனால், அவருக்கு தொகுதியில் நல்ல பெயர் இல்லை என்று உளவுத்துறை ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டது. அப்படியானால், என்ன மாதிரியான விசாரணை நடத்தினார்கள்?’ என்று கேட்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்!”

‘‘ஓஹோ!”
‘‘அமைச்சர் பழனியப்பன் பெயர் வேட்பாளர் பட்டியலில் இல்லை. ஜெயலலிதா கிராஸ் செக் செய்ததில் உள்ளூர் நிலவரம் தெரியவந்ததாம். அதையடுத்து, தர்மபுரிக்கு தேர்தல் பிரசாரம் போன ஜெயலலிதா, கடந்த ஒரு மாத காலமாக பழனியப்பனை ஓரங்கட்டி வைத்திருந்த நிலையில், அவரிடம் பொக்கே வாங்கிக்கொண்டார். சென்னைக்கு உடனே வரும்படி அங்கே சொல்லிவிட்டு வந்தாராம். அப்போதே அவருக்கு சீட் மாற்றி அறிவிக்கப்படும் என்று தெரிந்துவிட்டது. இதுமாதிரியான பல தகவல்கள் ஜெயலலிதாவை டென்ஷன் ஆக்க, ஒருகட்டத்தில், மூத்த போலீஸ் அதிகாரியை போனில் அழைத்து ஜெயலலிதா டோஸ் விட்டதாகவும் போலீஸ் வட்டாரத்தில் பேச்சு. ‘ஒட்டுமொத்த லிஸ்ட்டும் இப்படித்தான் தப்பாக இருக்கும் போலிருக்கே? தேவைப்பட்டால், அனைத்தையும் மாற்றவும் தயங்கமாட்டேன்’ என்று ஜெயலலிதா கோபமாகச் சொன்னாராம்.”
‘‘உளவுத்துறை ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி சர்ச்சை மனிதர் அல்லவே?”

‘‘அதைத்தான் சொல்லவந்தேன். ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி இப்போது உளவுத்துறை தலைவர். ‘இந்தப் பிரிவின் நெளிவுசுளிவு தெரியாதவர். தேர்தல் நேரத்தில் அவரைக் கொண்டுவந்து இந்தப் பதவியில் உட்காரவைத்தார் ஜெயலலிதா. பணியில் சேர்ந்தபோது மரியாதை நிமித்தம் ஜெயலலிதாவைச் சந்தித்ததோடு சரி. அதன் பிறகு, தலைமைச் செயலகத்திலோ, போயஸ் கார்டனிலோ ஜெயலலிதாவை அவர் பார்த்ததே இல்லை. பொதுவாக, தினமும் காலையில் முதல்வரை உளவுத்துறை தலைவர் நேரில் சந்தித்துப் பேசிவிட்டு வருவது சம்பிரதாயம். ஆனால், இங்கு எல்லாம் தலைகீழ். ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார டூர்களுக்குத் தவறாமல் போய் அட்டென்டன்ஸ் போட்டு வருகிறார். போயஸ் கார்டனில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் சத்தியமூர்த்தி போடும் குறிப்புகள் டி.ஜி.பி-யான அசோக்குமார் கைக்குப் போய் அவர் திருத்தம் போட்டு அதன் பிறகுதான், ஜெயலலிதாவுக்குப் போகிறது. அந்தத் திருத்தங்கள் எந்தவகையில் செய்யப்படுகின்றன என்பது தெரியவில்லை’ என்று போலீஸ் வட்டாரத்தில் தகவல் சொல்லப்படுகிறது.”
“அப்படியானால்?”
“தனியார் உளவுத்துறையினர் தயாரித்த பட்டியலில் மன்னார்குடி வகையறாக்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட சிலரது பெயர்களை நுழைத்து ஜெயலலிதா பார்வையில் படும்படி அனுப்பிவிட்டார்கள் என்பதுதான் அ.தி.மு.க உள்விவரங்களை அறிந்த தலைவர்கள் மத்தியில் லேட்டஸ்ட் பேச்சு. உதாரணத்துக்கு, திருச்சி திருவெறும்பூர் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பவர், டாக்டர் சிவக்குமாருக்கு நெருக்கமானவராம். அவர் பெயரை லிஸ்ட்டில் பார்த்ததும், உள்ளூர் கட்சிக்காரர்கள் மிரண்டுபோனார்கள். அதேபோல், துறையூர் தொகுதியில் சீட் கேட்டிருந்தவர்களில் ஒருவரிடம், மன்னை வகையறாக்களுடன் தொடர்பில் இருக்கும் கண்ணான ஒருவர் ஆசை வார்த்தை சொல்லி சில லகரங்களை அட்வான்ஸாக வாங்கிவிட்டாராம். ஆனால், சீட் கிடைக்கவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்கப்போனவரிடம் அந்த, கண்ணான பிரமுகர்,  ‘இன்டர்வியூ வரை கொண்டுபோனேன் அல்லவா? அதற்குப் பிறகு, உங்கள் மாவட்டச் செயலாளர்தான் முட்டுக்கட்டை போட்டு விட்டார். அவர் வேறு ஒருவருக்கு சீட் வாங்கிக் கொடுத்துவிட்டார்’ என்று திரியை கொளுத்திப்போட, சீட் கிடைக்காதவரின் கோபம் முழுக்க மா.செ. மீது திரும்பிவிட்டதாம். அந்த மா.செ. பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் திடீரென்று பரவின. நொந்துப்போய்விட்டார் மா.செ. இப்படி பல இடங்களில் குளறுபடிகள்.”
‘‘ம்!”
‘‘பொதுவாக தேர்தல் நேரத்தில் ஆட்சி மேலிடத்தைக் குளிர்விக்கும் நோக்கத்தில் வழக்கமாக உளவுத்துறையினர் எதிர்க் கட்சியினரை தாழ்த்தியும், ஆளும் கட்சியை உயர்த்தியும் ரிப்போர்ட் அனுப்புவார்கள் அல்லவா? அதுவும் இப்போது நடந்துள்ளது.
தமிழக உளவுத்துறையினர் அண்மையில் எக்ஸ்பிரஸ் வேக சர்வே ஒன்றை நடத்தினார்களாம். தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு மற்றும் தேர்தல் அறிக்கைக்குப் பிறகு ஜெயலலிதாவின் பிரசாரத்துக்கு மக்களிடம் என்ன வரவேற்பு கிடைக்கிறது? ஜெயலலிதா பேச்சை மக்கள் ரசிக்கிறார்களா என்ற கேள்விகள் அந்த சர்வேயில் இடம்பெற்று இருந்ததாம். வந்த ரிசல்ட்டை வைத்து கிராஃப் போட்டார்களாம். அ.தி.மு.க-வைவிட தி.மு.க-வுக்குக் கொஞ்சம் ஏற்றம் தெரிந்ததாம். இதை அப்படியே ஆட்சி மேலிடத்துக்குச் சொன்னால் கோபித்துக்கொள்வார்களே என்று நினைத்து, சர்வே ரிசல்ட்டை பதுக்கிவிட்டார்களாம். ஜெயலலிதா கூட்டத்துக்கு அதிகக் கும்பல் கூடுவதாகவும் எதிர்க் கட்சித் தலைவர்களின் கூட்டங்களுக்கு வருகிற கும்பலின் எண்ணிக்கையைக் குறைத்தும் காட்டுகிறார்களாம். ‘ஜெயலிதாவின் ஒரே மாதிரியான பிரசாரப் பேச்சை மக்கள் ரசிக்கவில்லை என்பதை மோப்பம் பிடித்த உளவுத்துறையினர் அதை ஜெயலலிதாவிடம் முறைப்படி எடுத்துச் சொல்லவில்லை’ என்றும் சொல்கிறார்கள்.”
‘‘தி.மு.க-விலும்தானே வேட்பாளர்களை மாற்றுகிறார்கள்? ஒரத்தநாடு தி.மு.க-வில் என்ன பிரச்னை?”
‘‘தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு தொகுதி, முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமாருக்கு ஒதுக்கப்பட்டது. பழனிமாணிக்கம் தனது தம்பிக்கு தஞ்சாவூர் தொகுதியைத்தான் கேட்டார். ஆனால், கிடைத்தது ஒரத்தநாடு. தலைமையின் அறிவிப்பை ஏற்று தேர்தல் வேலை தொடங்குவதற்கு நினைத்தார் பழனிமாணிக்கம். தொகுதிக்கு உட்பட்ட 3 ஒன்றியச் செயலாளர்களும் பழனிமாணிக்கத்துக்கு எதிர் அணியினர். அவர்கள் மூன்று பேரும் ராஜ்குமரை வந்து பார்க்கவில்லையாம். ராஜ்குமார் அவர்களைத் தொடர்புகொண்டபோது செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தனவாம். மற்றவர்கள் மூலம் தகவல் சொல்லி அனுப்பியும்  அவர்களிடம் இருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லையாம். இதனால் நொந்துபோன ராஜ்குமார் தனது அண்ணனிடம் முறையிட்டிருக்கிறார். இரண்டு நாட்கள் காத்திருந்தவர்கள், யாரும் தொகுதி வேலைகள் குறித்து கூட்டம் நடத்துவதற்குக்கூட எந்த ஆலோசனையும் கேட்காதபோது எப்படித் தேர்தலில் நின்று வைத்திலிங்கத்தை ஜெயிக்க முடியும் என்று நினைத்துத்தான் அறிவாலயத்துக்குச் சென்றிருக்கிறார்கள். ‘இப்படி உள்ளவர்களை வெச்சுக்கிட்டு எப்படி நான் தேர்தல் வேலை பார்க்க முடியும்’ என்று கருணாநிதியிடம் முறையிட்டு இருக்கிறார்கள். அப்போது பழனிமாணிக்கத்துக்கும் துரைமுருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு கருணாநிதி முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரனை போனில் அழைத்து, ‘நீ போட்டியிடுகிறாயா?’ என்று கேட்டிருக்கிறார். ‘நீங்கள் சொன்னால், நான் போட்டியிடுகிறேன்’ என்று சொன்ன ராமச்சந்திரனை அறிவாலயத்துக்கு அழைத்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி. ஆனால்…”
‘‘என்ன ஆனால்?”
‘‘சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனும், ராஜ்குமாரும் ஒரே வீட்டில் பெண் எடுத்திருக்கிறார்கள். நெருங்கிய உறவுக்காரர்கள் என்பதால், அ.தி.மு.க-வில் சேருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்களாம் சசிகலா தரப்பினர். சசிகலா தரப்பின் யோசனைப்படிதான் தொகுதியை விட்டுக்கொடுத்தார்கள் என்று பழனி மாணிக்கத்தின் எதிரிகள் சொல்கிறார்கள்!”
‘‘ம்!”
‘‘தி.மு.க வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட அன்று மாலையே, சீட் கிடைத்த முன்னணித் தலைவர்கள் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சந்தித்து ஆசிபெற்றனர். தொடர்நது வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் வரிசையாக கோபாலபுரம் நோக்கி படையெடுக்கத் தொடங்கினார்கள். வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று ஒருபுறம் போராட்டம் நடப்பதையும் சட்டைசெய்யாமல் சால்வையோடு, கோபாலபுரம் முதல்மாடியில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. 163 வேட்பாளர்கள் இதுவரை கருணாநிதியை சந்தித்து ஆசிவாங்கிஉள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லோருக்கும் சளைக்காமல் சந்திப்பு நேரம் ஒதுக்கிவிட்டாராம் கருணாநிதி.”
‘‘காங்கிரஸ்…?”
‘‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர்களைத் தேர்வு செய்ய 27 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் அமைத்திருந்தது. இந்தக் குழு, வேட்பாளர்களின் தேர்வை கடந்த வாரம் நடத்தியது. அதில், 29 தொகுதிகளுக்கு, தொகுதிக்கு ஒருவர் வீதம் தேர்ந்தெடுத்தனர். மயிலாப்பூர் தொகுதிக்கு கராத்தே தியாகராஜன், தாமோதரன், அமெரிக்க நாராயணன் ஆகிய மூன்று பேர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம். இந்த முறை கராத்தே தியாகராஜனுக்குதான் வாய்ப்புப் பிரகாசம் என்கின்றனர். அம்பத்தூர் தொகுதிக்கு ஹசன் மற்றும் ஹசினா, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு யசோதா, செல்வபெருந்தகை பெயர்களை டெல்லிக்கு பரிந்துரை செய்துள்ளார்கள். இப்படி சில தொகுதிகளுக்கு இரண்டு, மூன்று பேர் உள்ளதாம். டெல்லி மேலிடம் இவர்களில் இருந்து இறுதி வேட்பாளர்களைத் தேர்வுசெய்ய உள்ளதால் கலக்கத்தில் உள்ளனர் கோஷ்டித் தலைவர்கள்.
27 தலைவர்கள் முன்னிலையில் வேட்பாளர்கள் தேர்வுக்கான பரிசீலனை நடைபெற்றாலும், டெல்லிக்குச் சென்ற இறுதி லிஸ்ட்டை இளங்கோவன் மட்டுமே தயார் செய்ததுள்ளார். எனவே, அவருக்கு ஆதரவான ஆட்களின் பெயர்களை மட்டும் இவர் கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டையும் கோஷ்டித் தலைவர்கள் கொளுத்திப் போடுகிறார்கள்.”
‘‘பட்டியல் ரிலீஸ் ஆவது எப்போது?”
‘‘அதை தி.மு.க-வும் எதிர்பார்க்கிறதாம். வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்ய கடந்த சனிக்கிழமை அன்றே டெல்லி சென்ற இளங்கோவன், தலைமையால் நியமிக்கப்பட்டுள்ள அஜய்மக்கான், மல்லிகா அர்ஜுன கார்க்கே, முகுல்வாஸ்னிக் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு, பட்டியலை இறுதி செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை திரும்பிவிட்டார். சோனியாவின் ஒப்புதலோடு வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை அன்று வெளிவரும் என்று காங்கிரஸ் தரப்பில் செய்திகள் வெளிவருகின்றன” என்றபடி பறந்தார் கழுகார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum