TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மிஸ்டர் கழுகு: தயாராகிறது தீவுத்திடல்!

Go down

மிஸ்டர் கழுகு: தயாராகிறது தீவுத்திடல்! Empty மிஸ்டர் கழுகு: தயாராகிறது தீவுத்திடல்!

Post by Tamil Fri Apr 08, 2016 9:31 pm

மிஸ்டர் கழுகு: தயாராகிறது தீவுத்திடல்!
தீவுத்திடல்
தீவுத்திடலில் இருந்து பறந்து வந்தார் கழுகார். ஜெயலலிதா கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டம் 9-ம் தேதி நடக்க இருக்கிறது. இப்போதே ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. அதனைப் பார்த்துவிட்டு நேராக வந்தார் கழுகார்

‘‘சென்னை தீவுத்திடலில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் 9-ம் தேதி, அ.தி.மு.க-வின் தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா தொடங்குகிறார். மாலை 6 மணிக்குப் பொதுக்கூட்டம் தொடங்குகிறது. அந்தக் கூட்டத்திலேயே சென்னையில் போட்டியிடும் 21 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்து​கிறார். தேர்தல் அறிக்கையையும் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது தீவுத்திடல் பொதுக்கூட்டத்தில்தான் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்துவைத்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது, தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 42 பொதுக்​கூட்டங்களில் ஜெயலலிதா பேசினார்.’’
‘‘இந்தத் தடவை எத்தனைக் கூட்டங்களில் பேசுகிறார்?’’
‘‘15 பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதா பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்கி மே 12-ம் தேதி வேலூரில் முடிக்கிறார். சிலசில நாட்கள் இடைவெளியில் வெவ்வேறு ஊர்களில் பேசுகிறார். அந்தப் பொதுக்கூட்டங்களில் அந்தந்தப் பகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கிறார். விமானம், ஹெலிகாப்டர் மூலம் சென்று இறங்கி, வேன் மூலம் பொதுக்கூட்ட மேடைக்குச் செல்கிறார். பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதா பேசுவதை அப்படியே லைவ் ஆக ஒளிபரப்ப, செயற்கைக்கோள் வசதியுடன் டிஜிட்டல் திரை பொருத்தப்பட்ட 75 பிரசார வேன்களை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த வேன்கள், ஜெயலலிதா பிரசாரம் செய்யச் செல்லும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கொண்டு செல்லப்படும். அ.தி.மு.க அரசின் சாதனைகளும், ஜெயலலிதா பேச்சுகளும் இந்தப் பிரசார வேன்களின் மூலமாக ஒளிபரப்பப்படும்.’’

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
‘‘சென்னை பொதுக்கூட்ட ஏற்பாடுகள் பற்றிச் சொல்லும்?’’
‘‘தீவுத்திடலில் நடக்கும் பொதுக்கூட்ட மேடையை, ஜெயலலிதா வடக்கு நோக்கிப் பார்த்துப் பேசும் வகையில் வடிவமைத்து இருக்​கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்களை அழைத்து வர உத்தரவாம். கடந்த 6-ம் தேதி இரவில் இருந்து மேடை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. ஜெயலலிதாவின் கார், மேடைக்குப் பின்புற வழியில் வந்து, மேடைக்கு உள்ளேயே செல்வதற்கு வசதி செய்யப்பட உள்ளது. கடற்கரைச் சாலையில் சட்டமன்ற வைரவிழா வளைவு அருகில் 3-ம் நம்பர் கேட்டில் இருந்து மேடைவரை புத்தம் புதியதாகத் தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. பொதுக்​கூட்டம் நடக்கும் பகுதியைச் சமன்படுத்தவும், குப்பைகளை அள்ளவும் சென்னை மாநகராட்சி லாரிகள் பயன்படுத்தப்​படுகின்றன.’’
‘‘இவையெல்லாம் அதிகார துஷ்பிரயோகம் அல்லவா?”
‘‘அவற்றையெல்லாம் யார் கண்டு கொள்வது? அந்தந்தக் கட்சிகள் அவரவர் வேலையைப் பார்க்கும்போது, இவற்றை எல்லாம் யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்ற நினைப்புத்தான் இந்த மாதிரிச் செயல்பட வைக்கிறது!”
‘‘வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே வெளயிட்டவர்கள், அதனை முழுமையாகவே மாற்றிவிடுவார்கள்போல் இருக்கிறதே!”
‘‘ மன்னார்குடி குடும்பத்தின் வேலைதான் என்று சொல்கிறார்கள்.”
“எஸ்.காமராஜுக்கு சீட் தரப்படவில்லை. அதனால் திவாகரன் கை ஓங்கவில்லை என்று கடந்த இதழில் சொல்லி இருந்தேன். அந்த காமராஜுக்கு சீட் தரப்பட்டு விட்டது. அதைவைத்துப் பார்க்கும்போது மன்னார்குடி குடும்பம் மறுபடியும் தலையெடுத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஐவர் அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தபோது இது சசிகலாவின் வேலை என்று சொல்லப்பட்டது. அதன்பிறகு புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவியை விஜயபாஸ்கரிடம் இருந்து பறித்து தனது தம்பி திவாகரனின் தீவிர விசுவாசியான வைரமுத்துவுக்குக் கொடுத்ததும் சசிகலாதான். அதோடு சசிகலா பார்ட் முடிந்துவிட்டதாகப் புதிதாக அமைந்த நால்வர் அணியும் அவர்களது ஆதரவாளர்களும் நினைத்திருந்தார்கள். ஆனால், வேட்பாளர் பட்டியல் அறிவித்த கையோடு அடுத்த நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார் சசிகலா. அந்த லிஸ்ட்டில் திவாகரனுடன் தொடர்பில் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஓரங்கட்டப்பட்ட முக்கியநபர்களான நாகப்பட்டினம் ஓ.எஸ்.மணியனும், மன்னார்குடி காமராஜும் முக்கியமானவர்கள். அவர்களின் பெயர் இல்லாமல் போனதால், ஐவர் அணிக்கு ஆதரவானவர்கள், இனிமேல் சசிகலா தலையீடு இருக்காது என நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.”
“ஓஹோ?”

[You must be registered and logged in to see this image.]
“ஆனால், தற்போது நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளராக ஓ.எஸ்.மணியனை அறிவித்ததோடு, வேதாரண்யம் வேட்​பாளராகவும் அறிவித்தார் ஜெயலலிதா. அடுத்து, மன்னார்குடி வேட்பாளரையும் மாற்றி காமராஜுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து அடுத்த அதிரடி இன்னும் விரைவிலேயே வெளிவரும் என்கிறார்கள்.”
‘‘ஓஹோ?”
‘‘வரும் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் சசிகலா போட்டியிடுவார் என முன்பே சொல்லப்பட்டது. ஆனால், அந்த முடிவைத் தற்காலிகமாகத் தள்ளிவைத்திருந்த சசிகலா ஒரத்தநாடு தொகுதியில் அமைச்சர் வைத்திலிங்கத்தை வேட்பாளராக அறிவிக்கவைத்தார். இப்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே, ஒரத்தநாடு தொகுதியில் சசிகலாவும், பட்டுக்கோட்டை அல்லது பேராவூரணியில் வைத்திலிங்கமும் போட்டியிடலாம் என்கிறார்கள். அப்படியே இந்தத் தேர்தலில் ஏதாவது காரணத்துக்காக சசிகலா போட்டியிடாமல் போனாலும், ஆட்சி அமைக்கும் நிலை வந்தால் யாரையாவது ராஜினாமா செய்யவைத்து அந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என்கிற முடிவில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதோடு கட்சியில் இதுவரை சசிகலா தரப்பினர் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் இருந்தனர். அந்த நிலையும் விரைவில் மாறும் என்றவர்கள், இதுவரை கட்சியின் பொருளாளராக இருந்த ஓ.பி.எஸ்ஸுக்குப் பதிலாக அவரை உருவாக்கிய டி.டி.வி.தினகரனுக்கு அந்தப் பொறுப்பு வழங்க இருப்பதாகவும் சொல்கிறார்கள்.”
‘‘மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தினகரன் பெயர் இப்படி அடிபட்டு அமுங்கும்!”
‘‘இதுவரை ஓ.பி.எஸ்., பழனியப்பன், நத்தம் விசுவநாதன் மீதுதான் தனது கோபப் பார்வையைத் திருப்பியிருந்தார் சசிகலா. இனி எடப்பாடி பழனிச்சாமி மீதும் நடவடிக்கைகள் இருக்கும் என்கிறார்கள். காரணம் சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இப்போது அறிவித்திருக்கும் வேட்பாளர்கள் பெரும்பாலும் எடப்பாடியால் அறிமுகப்படுத் தப்பட்டவர்கள். இதில், ஒருசிலர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தும், அதைத் தலைமைக்குத் தெரிவிக்கவிடாமல் தடுத்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டு இப்போது விஸ்வரூபம் எடுக்கிறது. எனவே, மேலே குறிப்பிட்டிருக்கும் மாவட்டங்களில் வேட்பாளர் மாற்றம் நிச்சயம் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.”
‘‘ம்!”

[You must be registered and logged in to see this image.]
‘‘ஓ.எஸ்.மணியன், எஸ்.காமராஜ், வைரமுத்து ஆகியோரை வளரவிடாமல் தடுத்ததில் அமைச்சர்கள் ஜெயபால், ஆர்.காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோரின் பங்கு அதிகம். அதனால், அவர்களுக்கு செக் வைக்கும் விதமாக மாவட்டத்துக்கு ஒருவரை நியமித்து இருக்கிறார்கள். புதுக்கோட்டைக்கு வைரமுத்து, திருவாரூருக்கு எஸ்.காமராஜ், நாகப்பட்டினத்துக்கு ஓ.எஸ்.மணியன் இந்த மாவட்டங்களுக்கு இனி எல்லாமே இவர்கள்தான் என்கிற நிலை விரைவில் வரும் என்கிறார்கள்.”
‘‘திவாகரனும் சுறுசுறுப்பு அடைந்து​விட்டாரா?”
‘‘கடந்த ஆறாம் தேதி தேசபந்துவின் பேரக்குழந்தை பிறந்தநாளுக்காகத் தனது மனைவியுடன் பட்டுக்கோட்டை வந்திருந்தார் திவாகரன். வேட்பாளர் பட்டியல் குறித்து அவரது ஆதரவாளர்கள் அவரிடம் கேட்டிருக்கிறார்கள். எதுவும் பதில் சொல்லாமல் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாகச் சென்றுவிட்டாராம் திவாகரன். ஆனால், பட்டுக்கோட்டையிலிருந்து மன்னார்குடி செல்வதற்குள் வேட்பாளர் மாற்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தான் இன்னமும் அசைக்க முடியாத சக்திதான் என்பதை நிரூபித்து உள்ளார் திவாகரன்!”
‘‘சொல்லும்?”
‘‘சீட் கிடைத்த உற்சாகத்தில் ஜெயலலிதாவைச் சந்திக்க கடந்த புதன்கிழமை அன்று கார்டனுக்கு வந்தார்கள் அ.தி.மு.க வேட்பாளர்கள். அனைவரும் கையில் பூங்கொத்தோடு வந்தனர். கார்டனுக்கு விஜயம் செய்த அனைவரும் முதல்வரைச் சந்திக்க முடியாமலேயே திரும்பியுள்ளார்கள். உதவியாளர் பூங்குன்றன் அனைவரது பூங்கொத்துக்களையும் வாங்கியுள்ளார். அனைத்துப் பூங்கொத்துக்களிலும், தங்களது விசிட்டிங் கார்டை மறக்காமல் வைத்தே கொடுத்தனர். நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவர், பூங்கொத்தோடு காரில் இருந்து இறங்கினார். ஆனால், அவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து எடுத்துவிட்டார்கள் என்று அவருக்குத் தகவல் தெரிவிக்கபட்டவுடன் சோகத்தோடு திரும்பிவிட்டார். அன்று ஒருநாள் மட்டும் 184 பூங்கொத்துகள் கார்டனுக்குள் சென்றன. முதலில் பூங்கொத்து ஆர்டர் செய்தவர்களுக்கு மட்டும்தான் சிவப்பு கலர் பூக்கள் கிடைத்ததாம். ஆகையால், பலர் சிவப்புப் பூங்கொத்து கிடைக்காமல் சென்னை முழுவதும் வலைவீசித் தேடிய பரிதாபமும் நிகழ்ந்தது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்றுவிட்டுத்தான் அனைவரும் கார்டன் சென்றார்களாம்!”
‘‘அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் என்ன விஷேசம்?”
‘‘அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் புதன் கிழமை அன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை நடத்தியது தம்பிதுரை. 15 பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதா பேசுகிறார் அல்லவா? அதற்கான ஏற்பாடுகளுக்கான கூட்டம்தான் இது. ஆட்களைத் திரட்டி வருவது பற்றித்தான் அதிகம் பேசி இருக்கிறார். தினமும் என்னதான் செய்கிறீர்கள் என்பதைக் கட்சி அலுவலகத்துக்குச் சொல்ல வேண்டும் என்றும் சொன்னாராம் தம்பிதுரை. ‘அம்மா பேசுவதை அறிக்கையாக வெளியிடுவதைத்தான் உங்கள் வட்டாரத்தில் நீங்கள் பேச வேண்டும்’ என்றாராம் தம்பிதுரை. அமைச்சர்கள் அனைவரும் வந்து இருந்தார்கள். அந்தக் கூட்டத்துக்கு நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் என்ற அந்தஸ்த்தோடு கூட்ட அரங்கில் நுழைந்தார் அமைச்சர் ஜெயபால். கூட்டம் முடிந்து வெளியே வந்து அவர் காரில் ஏறியபோது அவர், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கபட்டுவிட்டதாகத் தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பானது. அதைத் தெரிந்து சோகத்தோடு காரில் ஏறினார் ஜெயபால்.”

[You must be registered and logged in to see this image.]
‘‘என்னதான் நடக்கிறது ஜி.கே.வாசனுக்கும் வேல்முருகனுக்கும்?”
‘‘ஜி.கே.வாசனுக்கு 16 சீட்கள் என முடிவாகிவிட்டது. ஆனால், என்னென்ன தொகுதிகள் என்று எழுதிக் கேட்கிறார் அவர். அதற்கு ஜெயலலிதா சம்மதிக்கவில்லை. 5 தொகுதிகள் கேட்டார் வேல்முருகன். 2-தான் தரமுடியும். அதுவும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கும் வேல்முருகன் சம்மதிக்கவில்லை. ஜெயலலிதாவும் இரண்டு கட்சிகளுக்காகக் காத்திருக்கிறார். ஜெயலலிதாவிடமும் இரண்டு பேர் கோரிக்கைகளை வைத்து பிடிவாதமாகப் பேசுகிறார்கள் என்பதே பெரிய விஷயம்தான்” என்றபடி பறந்தார் கழுகார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum