TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பட்ஜெட் பற்றி இவருக்கு எந்தக் கவலையும் இல்லை... ஏன்?

Go down

பட்ஜெட் பற்றி இவருக்கு எந்தக் கவலையும் இல்லை... ஏன்? Empty பட்ஜெட் பற்றி இவருக்கு எந்தக் கவலையும் இல்லை... ஏன்?

Post by Tamil Tue Mar 01, 2016 9:45 pm

லகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பட்ஜெட்.  ‘இது எனக்கான தேர்வு...’ என்று நாட்டின் பிரதமரும் அதற்கான எதிர்பார்ப்பை தூண்டிவிடுகிறார். பொருளாதார நிபுணர்கள் 24 X 7 தொலைக்காட்சிகளில் அதி தீவிரமாக விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.
'வரி விலக்கு வருமா... அத்தியாவசிய பொருட்களின் விலை கூடுமா...?' என்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பட்ஜெட்டுடன் தன்னை பொருத்தி பார்த்துக் கொள்கிறான். ஊடகங்களும் பட்ஜெட்டின் சிறப்பம்சங்களை நமது கைப்பேசிக்கே கொண்டு வந்து சேர்க்கிறது. இந்தியாவின் எந்த மனிதனும் பட்ஜெட்டின் சுவாரஸ்யங்களையோ தாக்கங்களையோ தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்ற நிலை.  ஆனால், இதில் எதுவும் கலந்து கொள்ளாமல் ஒருவர், ஆடுகளை மேய்த்துக் கொண்டு, தனது 35 சென்ட் நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு அவரை சந்தித்த போது, “நான் எதற்காகவும் சந்தையை நம்பி இல்லை. பெட்ரோல் விலையோ, வரி ஏற்ற, இறக்கமோ என்னை பாதிக்கப்போவதில்லை. நான் ஏன் பட்ஜெட் குறித்து கவலைப்பட வேண்டும்.  நானும், என் குடும்பமும் எங்கள் இயல்பில் வாழ்கிறோம், எங்கள் குடும்பத்தின் தேவைகளை, எனது 35 சென்ட் நிலம் பூர்த்தி செய்கிறது...” என்றார்.   
ஃபெலிக்ஸ் - மனிதர்களின் பொதுப்புத்தி சவுகரியங்கள் என சொல்லும் அனைத்தையும் விட்டு, ஒரு துண்டு நிலத்தில் தன் ஆன்மாவை மீட்டவர்.


பட்ஜெட் பற்றி இவருக்கு எந்தக் கவலையும் இல்லை... ஏன்? Rsz_112782540_1159116670772845_878928540_n
ஃபெலிக்ஸ் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.  ‘வேலை அழுத்தம் கொடுக்கிறதா... மீண்டும் ஊருக்குச் செல்லலாமா?’ என்ற தலைப்பில் முன்பே அவர் குறித்து ஒரு முறை எழுதி இருந்தோம்.  இந்த பட்ஜெட் அழுத்தத்தில் மீண்டும் ஒரு முறை அவரின் முழுப்பேட்டியை பகிர்வது மிக முக்கியம் என்று கருதுவதால், விரிவாக பகிர்கிறேன்....
  ஃபெலிக்ஸ் குறித்த சின்ன அறிமுகத்துடன் இக்கட்டுரையை தொடங்குகிறேன். மென்பொறியாளர், உலகின் நவீனங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் புனேவில் லகரங்களில் சம்பாதித்தவர். ஒரு நன்னாளில் அனைத்தையும் விட்டு விட்டு, தன் சொந்த ஊருக்கு ரயிலேறியவர். தன் பூர்வீக நிலமான 10 ஏக்கரில் விவசாயம் செய்யத் தொடங்கி,  சில ஏமாற்றங்களுக்குப் பின் அதை விட்டுவிட்டு வந்து வெற்றிகரமாக ஒரு 35 சென்ட் நிலத்தில் வேளாண்மை (Permaculture) செய்து கொண்டிருப்பவர்.
இயற்கை குறித்த பெரும் நம்பிக்கையும், வாழ்வு குறித்த பெரும் காதலையும் அவரின் செயல்பாடும், உரையாடலும் ஒருசேர உருவாக்கிவிடுகிறது. அவரின் உரையாடலுக்குள் நுழைவதற்கு முன்பு, அவரின் 35 சென்ட் பண்ணை குறித்த சில தகவல்கள்.

ஃபெலிக்ஸ், தன் வீட்டுடன் ஒட்டிய ஒரு 35 சென்ட் நிலத்தில், ஆடு , மீன் , கோழி மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட மூலிகைகள், காய்கறிகள் என வளர்ப்பவர். குறிப்பாக நிலைக்கொள் (permaculture) வேளாண்மை முறையை பின்பற்றுபவர். வீட்டிற்கு தேவையான அரிசி மற்றும் எண்ணெய் வித்துகள் தவிர ஏதும் வெளியிலிருந்து வாங்காதவர். அவர் பண்ணையை குறித்து நான் எவ்வளவு எழுதினாலும் அதன் முழு அர்த்ததையும் வார்த்தைகளால் தர இயலாது. வேளாண்மை, மரபு வாழ்வியல் குறித்து விருப்பம் உள்ளவர்கள் ஒரு முறையேனும் அவர் பண்ணைக்குச் சென்று பார்வையிடுங்கள்.
இனி, அவருடனான உரையாடலில் இருந்து....

பட்ஜெட் பற்றி இவருக்கு எந்தக் கவலையும் இல்லை... ஏன்? 12421500_1159117254106120_1524663045_n%20(1)
மென்பொருள் துறையில் ஒரு பெரும் நகரத்தில் மாதம் லகரங்களில் சம்பாதித்துவிட்டு, பெரும் வருவாய் எதிர்பார்க்க முடியாத வேளாண்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

பெரும் நகர வாழ்கை தந்த மன அழுத்தம் முதல் காரணம். அடுத்தது நான் பணியாற்றிய நிறுவனம் ஒரு முக்கிய காரணம். நான் வேலை பார்த்த நிறுவனம் எனக்கு சுதந்திரத்தை வலியுறுத்தியது. பிறகு மிகுந்த தன்னம்பிக்கையை ஊட்டியது!

வியப்பாக இருக்கிறது. மிகுந்த வேலை நெருக்கடியை தரும் மென்பொருள் துறை,  தங்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டியது என்பதை எப்படி பொருள் கொள்வது? தங்களுக்கு அளித்த அதிகமான ஊதியம் வேண்டுமானால் உங்களுக்கு அவ்வுணர்வை ஊட்டி இருக்கலாம் அல்லவா…?

இல்லை. நிச்சயம் இல்லை. பணம் ஒரு பொருட்டல்ல… நான் வேலை பார்த்தது லினக்ஸ் திறவூற்று மென்பொருளில் (open source), அதாவது லினக்ஸ்,  இயங்கு முறை விண்டோஸ் போன்றதல்ல. உங்களுக்கு ஏற்றவாறு, உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் நீங்களே வடிவமைத்துக் கொள்ளலாம். நீங்கள் உங்களுக்கு மென்பொருள் வழங்கிய நிறுவனத்தை எதற்காகவும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை. அதாவது உங்கள் முழு கற்பனை மற்றும் தேவைக்கேற்றவாறு உங்கள் இயங்கு முறை (Operating System) மென்பொருளை வடிவமைக்கும் சுதந்திரம். இதுதான் எனக்கு தூண்டுதலாக இருந்தது. பிறகு, நான் நகர வாழ்வு அழுத்தத்தில் இருந்து விடுபட புகைப்பட பயிற்சி எடுத்தேன், ஆனால், அது தற்காலிக அமைதியை தான் தந்தது.

பட்ஜெட் பற்றி இவருக்கு எந்தக் கவலையும் இல்லை... ஏன்? Rsz_felixசுதந்திரமாக செயல்படுதல் தான் உங்கள் எண்ணம் என்றால், வேறு ஏதாவது தொழில் செய்திருக்கலாமே… விவசாயத்தை தேர்ந்தெடுக்க காரணம்…?


தொடர் வாசிப்பு மட்டுமே காரணம். வேளாண்மை குறித்த தொடர் வாசிப்பு என்னை வேளாண்மை நோக்கி இழுத்தது. அதுவே என்னை விவசாயி ஆக உருமாற்றியது. மேலும், பணம் எனக்கு நோக்கமல்ல. பணமும், பிழைத்தலும் நோக்கமென்றால் நான் புனேவிலேயே இருந்திருக்கலாம். எனக்கு விடுதலை தேவைப்பட்டது. நிலத்தில் மட்டுமே சுந்திரமாக இருக்க முடியும் என்று நம்பினேன். அதுவே நான் வேளாண்மையைத் தேர்ந்தெடுக்க காரணம்.

லட்சங்களில் சம்பாதித்துவிட்டு விவசாயம் செய்ய ஊருக்கு வந்ததும், உங்கள் மனைவி மற்றும் உறவினர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்…?

எங்களது காதல் திருமணம். பல எதிர்ப்புகள் தாண்டித்தான் நாங்கள் திருமணம் செய்தோம். திருமணமான முதல் ஒன்றரை வருடம் எனக்கு வேலை இல்லை. என் மனைவியின் ஊதியம் மட்டுமே எங்கள் குடும்பத்திற்கான வாழ்வாதாரம். நான் கிட்டதட்ட ‘House Husband’ ஆக மட்டுமே இருந்தேன். எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் உண்டு. என் மனைவி நான் எடுத்த இந்த முடிவையும் புரிந்து கொண்டார். ஆனால், என் அப்பாவைச் சமாதானப்படுத்துவதுதான் பெரும்பாடாக ஆகிவிட்டது. அவரும் ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டார். எங்கள் பூர்வீக நிலத்தில் என்னை விவசாயம் செய்ய அனுமதித்தார். ஆனால் அதுவும் சில மாதங்களில் முறிந்தது. நான் இயற்கை (organic) வேளாண்மை செய்வதை அவரால் புரிந்து கொள்ள முடியாததும் ஒரு காரணம். பிறகு ஊரார். நான் வேலையை உதறிவிட்டு வந்து விவசாயம் செய்வதை ஏதோ பெரும்பாவமாக கருதி, என் தந்தையிடம் துக்கம் விசாரிக்கத் தொடங்கினர். அதுவும் என் தந்தை என்னை நிலத்திலிருந்து வெளியேற்ற காரணம். நிலத்திலிந்து வெளியேற்றப்பட்டால் நான் வேறு ஏதாவது தொழிற் செய்வேன் என்பது அவர் எண்ணம். ஆனால், ஒரு சின்ன நிலத்தில் விவசாயம் செய்வேன் என்பதை அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். என் முயற்சிகள் அனைத்துக்கும் துணையாக இருந்தது சட்டையில்லா சாமியப்பன் அய்யாதான்.

இயற்கை வேளாண் அறிஞர் சாமியப்பன் அய்யாவுடன் இணைந்தது எப்படி? 

இதற்கான பதில் மிகவும் சிறியது. வேளாண்மை, இயற்கை மீதான பெருங்காதல் மட்டும்தான் எங்களை இணைத்தது.

புரிந்து கொள்ள முடிகிறது. 35 சென்ட்டில் வேளாண்மை செய்ய முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு எப்படி வந்தது?

இது ஒன்றும் புது சிந்தனை அல்ல. இதற்கு முன்பே இதைப் பலர் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, தபோல்கர் கால்காணி 33 சென்ட் நிலத்தில் பல வேளாண் அற்புதங்களை நிகழ்த்தியவர். 33 சென்ட் நிலத்திலிருந்து வரும் வருவாயை கொண்டே ஒரு குடும்பம் ஆனந்தமாக வாழலாம் என்று காட்டியவர்.

உண்மையில் உங்கள் 35 சென்ட் நிலத்தில் வரும் வருவாய் உங்களுக்கு போதுமானதாக இருக்கிறதா…?

உண்மையை சொல்ல வேண்டுமானால் தற்போது இல்லை. 60 சதவீத தேவையை மட்டும்தான் தற்போது நிலம் பூர்த்தி செய்கிறது. மிச்சம் 40 சதவீததிற்கு நான் வேறு செயற்பாடுகளை நம்பி இருக்கிறேன். ஆனால், கூடிய விரைவில் என் 100 சதவீத தேவையையும் என் நிலம் பூர்த்தி செய்யும் என நம்பிக்கை இருக்கிறது. அதை நோக்கியே என் பயணமும் இருக்கிறது.



பட்ஜெட் பற்றி இவருக்கு எந்தக் கவலையும் இல்லை... ஏன்? Rsz_12769486_1159117027439476_666174525_n60 சதவீத கணக்கு மிகையாக இருக்கிறதே. உங்கள் குழந்தையின் தேவைகளுக்கு….?

இதில் மிகைப்படுத்த ஒன்றும் இல்லை. மிகைப்படுத்தி கூறுவது பெருநிறுவனங்களின் வியாபார தந்திரம். எனக்கு அது தேவை இல்லை. நாங்கள் தேவைக்கு அதிகமாக நுகர்வது  இல்லை. உங்கள் நுகர்வை குறைத்துக்கொண்டாலே உங்கள் வாழ்வு அற்புதமாக மாறும். நீங்கள் நுகர்வைக் குறைத்துக்கொள்ளும் போது இப்புவி உங்களுடன் சேர்ந்து மகிழ்வடைக்கிறது. ஏனெனில் உங்கள் நுகர்வு குறையும் போது இயற்கையை அழித்தல், மாசுபடுத்துதல் குறைகிறது. குறிப்பாக என் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை. அதனால் அதிகம் நுகர வேண்டும் என்ற தூண்டுதல் இல்லை. மேலும், நான் மருத்துவமனையை எட்டிப்பார்த்தே இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிறது. நான் மட்டுமல்ல என் மொத்தக் குடும்பமும். குறிப்பாக என் குழந்தை நாவினியும். வீட்டில் நூற்றுக்கு மேற்பட்ட மூலிகைகள் இருக்கிறது. சளி வந்தால் சிறியாநங்கை, குப்பைமேனி, துளசி சாப்பிட வேண்டும் என்று எனது 9 வயது மகள் நாவினிக்கு தெரிகிறது.

நாவினியின் படிப்பு செலவிற்கு, அதாவது, மிகவும் விலை உயர்ந்ததாகி போன கல்வி கட்டணங்களுக்கு...?
என் மகள் பள்ளி செல்வதில்லை. Home Schooling தான். 

என்ன... Home Schooling ஆ...? இதை நீங்கள் அபாயகரமானதாக உணரவில்லையா...? உங்கள் குழந்தை எப்படி சமூக மனுஷி ஆவாள்...?

பள்ளி சென்றால் மட்டும் ஆகிவிடுவாளா... ? பள்ளிகள் மனிதனின் சுயசிந்தனையை அழிக்கும் கூடங்களாக இருக்கின்றன... அதுவும் அதிக நுகர்வையே வலியுறுத்துகின்றன. ஆனால், என் மகள் சுயமாக சிந்திக்கிறாள். அவளுக்கு பிடித்த நாவல்களை இப்போதே படிக்கிறாள். நடன வகுப்பு செல்கிறாள்... 

சரி. இது அனைத்தும் எப்படி சாத்தியமானது....?

மிகவும் சுலபம். வேளாண்மை குறிப்பாக permaculture என்பது பிழைத்தல் முறையல்ல, வாழ்கை முறை. அதில் அனைத்துமே அடங்கும்.

ஒன்றை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களைப் போன்றவர்கள் பெரும் பணம் சம்பாதித்துவிட்டு, இயற்கை வேளாண்மை, நிலைக்கொள் வேளாண்மை என திரும்புவது சாத்தியம். ஆனால், ஏற்கெனவே கடனில் உழன்று கொண்டிருக்கும் விவசாயிக்கு இது எப்படி சாத்தியம்?

நான் ஏற்கெனவே கூறியது போல். பணம் ஒரு பொருட்டல்ல… உங்களுக்குள் ஒரு தூண்டுதல் வேண்டும். என்னிடம் இந்த 35 சென்ட் நிலமும் இல்லையென்றால் நான் இயற்கை வேளாண்மை செய்யும் இன்னொருவர் நிலத்தில் தன்னார்வலராக (volunteer) ஆக சேர்ந்திருப்பேன். அதாவது விவசாயக் கூலியாக அல்ல. 'நான் உழைப்பு தருகிறேன் எனக்கான தேவையை நீங்கள் நிறைவேற்றுங்கள். அது உணவு, உறைவிடம் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.' அதாவது பண்ட மாற்று முறை. மேலும், நாம் வேண்டுமானால் பிழை செய்யலாம்;  நிலம் நிச்சயம் செய்யாது.

பேச்சின் நடுவே சட்டையில்லா சாமியப்பன் இணைந்து கொள்கிறார்.

பட்ஜெட் பற்றி இவருக்கு எந்தக் கவலையும் இல்லை... ஏன்? Rsz_samiyappan(1)சாமியப்பன்: தம்பி… இயற்கை விவசாயம் என்பது தொழில் அல்ல. அது வாழ்க்கை முறை. ஒரு உதாரணம் சொல்கிறேன், ஈரோட்டில் ஒரு நண்பர் வெங்காயம் சாகுபடி செய்கிறார். அவருடைய நண்பர் அவருக்கு இயற்கை விவசாயம் செய்ய வழிகாட்டுகிறார். E.M (effective microorganism)  எனும் திற நுண்ணுயிர் தருகிறார். இயற்கை முறையில் விவசாயம் செய்ததில் அவருக்கு நல்ல லாபம். ஏறத்தாழ 12 லட்சங்கள் வருவாய் ஈட்டுகிறார். அந்த பணத்தைக் கொண்டு பழைய மகிழுந்துவை மாற்றி,  அவர் தேவைக்கு அதிகமான ஒரு 12 லட்சங்கள் மதிப்பில் குறைந்த மைலேஜ் தரும் ஒரு மகிழுந்து வாங்குகிறார். இவரை எப்படி நாம் இயற்கை வேளாண்மை செய்பவராக கருத முடியும். இயற்கையோடு இயைந்த வாழ்வே இயற்கை வேளாண்மை!

மீண்டும் ஃபெலிக்ஸ் தொடர்கிறார்....

நாம் நம் நுகர்வை குறைத்து கொள்ளவில்லை என்றால், நாம் எந்த உன்னதமான வேலை செய்தும் பயனில்லை. எந்த மிருகமும் தேவைக்கு அதிகமாக நுகர்வதில்லை. அதற்கு தன் அடுத்த சந்ததி குறித்த எண்ணம் இருக்கிறது. ஆனால் ஆறாவது அறிவு இருப்பதாக பிதற்றிக் கொள்ளும் மனிதன் மட்டும்தான் எந்த பிரக்ஜையும் இல்லாமல் பெரும் வெறிகொண்டு அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் நுகர்கிறான்.

அண்டை வீட்டார் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்…?

அது எனக்கு பிரச்னை அல்ல. ஆனால் அரசு எப்படி பார்க்கிறது என்பதுதான் முக்கியம். எந்த அரசும் நாம் சுயசார்பாக இருப்பதை விரும்புவதில்லை. அரசுகள் பெரும் நிறுவனங்களுக்கான கங்காணிகள். நாம் நம் தேவைகளுக்கு நிறுவனங்களை சார்ந்து இருக்க வேண்டும் என அரசு விரும்புகிறது. அதற்கு முரணாக நாம் செயல்படும்போது நம்மை கண்காணிக்க தொடங்குகிறது.


வெளியில் மழை பெய்ய துவங்கிறது. மண் வாசனை இதமானதாக இருக்கிறது

அவர் போல் வாழ்வது அனைவருக்கும் சாத்தியமில்லை என்றாலும், நுகர்தல் குறித்து அவர் சொல்லும் செய்தி முக்கியமானது. பட்ஜெட்டினால் செல்ஃபோன் விலை குறைந்துள்ளதா, கார் விலை குறைந்து இருந்தால், இருக்கிற பைக்கை எக்ஸ்சேஞ்சில் போட்டுவிட்டு கார் வாங்கலாமென்று திட்டமிடும் அனைவரும், ஃபெலிக்ஸிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமொன்று இருக்கிறது. அது, நுகர்வை குறைத்துக் கொள்ளுதல்.

இது அனைவருக்கும் சாத்தியமா... செளகரியமா என்பது நிச்சயம் விவாதத்திற்குட்பட்டது. அந்த விவாதத்தையும் இந்தப் புள்ளியிலிருந்தே துவக்குவோம் நண்பர்களே. பின்னூட்டப் பெட்டியில் இது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். பரஸ்பரம் நிதர்சம் புரிவோம்! 
 
- மு. நியாஸ் அகமது

-விகடன்-
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum