Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
இவர்களின் கதறலுக்கு உங்க கட்சி பதில் சொல்லுமா?
Page 1 of 1
இவர்களின் கதறலுக்கு உங்க கட்சி பதில் சொல்லுமா?
ஶ்ரீரங்கம் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை ஆன்மீக நகரமான ஶ்ரீரங்கம் திணறிப்போனது.
திரும்பு திசையெங்கும் காவிகளுக்கு பதில் கரைவேட்டிகளாகவே காட்சியளித்தன. தெருமுனைகளில் ஏதாவது ஒரு தேர்தல் அலுவலகம், அதில் முகம் தெரியாத கட்சிக்காரர்கள் கும்பல் கும்பலாக உட்கார்ந்து, கட்சி ஜெயிக்க என்னவெல்லாம் செய்யணும் என பேசியதோடு, செயலில் இறங்கியும் காட்டினர். ராத்திரியோடு ராத்திரியாக பணப்பட்டுவாடா முடித்தனர்.
இப்படி தேர்தல் பணி முடிக்க தமிழகம் முழுவதிலும் இருந்து திருச்சி ஶ்ரீரங்கம் நோக்கி அரசியல் கட்சிகள் தங்கள் தொண்டர்களை வரவழைத்து கூட்டம் காண்பித்தார்கள். ஶ்ரீரங்கம் இடைத்தேர்தல் திருவிழா இன்றோடு முடிகிறது. கடந்த 11ஆம் தேதி பிரசாரத்திற்கு வந்தவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு கிளம்பினார்கள். ஆனால் இருவர் பிணமாக சென்றதுதான் பரிதாபம்.
சென்னை அம்பத்தூர், மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற இராசேந்திரன். 45 வயதான இவர் சென்னை மாநகராட்சியின் 82வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்தவர். ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து, திருச்சியை அடுத்துள்ள பெருகமணியில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டார் ரவி.
இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி பிரசாரத்தில் கலந்து கொண்ட ரவிக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே மாரடைப்பால் இறந்துவிட்டதாக ரவியை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். கவுன்சிலர் ரவியின் உடல் திருச்சியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
மேலும், ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது நடந்த சாலை விபத்தில் அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இறந்த அ.தி.மு.க. தொண்டருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். தினம்தினம் அறிக்கை விடும் தி.மு.க தலைவர் கருணாநிதியோ, அல்லது அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலினோ இதற்காக இரங்கல் கடிதம் கூட வெளியிடவில்லை. ஶ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்தால் முக்கிய தலைவர்கள் இருந்ததால், இவரின் மறைவில் கவனம் செலுத்தவில்லை என சொல்லப்படுகிறது. திமுக தரப்பு இப்படியிருக்க, அதிமுக தரப்பிலும் ஒரு விபத்து இரண்டு குடும்பங்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பூலாங்குளத்துப்பட்டி என்ற இடத்தில், திண்டுக்கல் மாவட்டம், சானார்பட்டி ஒன்றியம், கொரசின்னம்பட்டி கிளைக் கழக செயலாளர் ஏ.வெள்ளைச்சாமி, கம்பிளியம்பட்டி கிளைக் கழகச் செயலாளர் எஸ்.சிவசங்கரன் ஆகியோர் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக திருச்சியில் முகாமிட்டிருந்தார்கள்.
இவர்கள் கடந்த 10ஆம் தேதி எதிர்பாராத விதமா பூலாங்குளத்துபட்டியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, இவர்கள் பயணித்த பைக் மீது கார் மோதியதில் வெள்ளைச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த சிவசங்கரன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள். அவர் தேர்தல் பொறுப்பேற்றுக்கொண்ட பகுதியில் பிரசாரத்துக்காக திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு வந்தவர்கள் குடும்பத்தை நிர்க்கதியாக நிற்க வைத்துவிட்டதுதான் கொடுமை.
இவர்களுக்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இரங்கல் கடிதம் வெளியிட்டார். அதில், "தொண்டர்கள் இனி வரும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சாலைகளில் பயணம் செய்ய வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். வெள்ளைச்சாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவசங்கரன் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் அறிவித்தார். ஆனால் ஶ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த விபத்தில் சிக்கி தவிக்கும் அதிமுக குடும்பங்களுக்கு இதுவரை எந்த உதவியையும் அறிவிக்கவில்லை.
காயம்பட்ட சிவசங்கரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த தொண்டர்கள் வீட்டில் இருந்தபோது இறந்திருந்தால்கூட பரவாயில்லை. கட்சிப்பணிக்காக கொண்ட கொள்கைக்காக ஏற்ற தலைமைக்காக உழைக்க வந்த இடத்தில் உயிரிழந்துள்ளார்கள். அவர்களின் குடும்பத்தாரின் கண்ணீருக்கும் கதறலுக்கும் பதில் சொல்லப்போவது யார்?
-சி.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்
திரும்பு திசையெங்கும் காவிகளுக்கு பதில் கரைவேட்டிகளாகவே காட்சியளித்தன. தெருமுனைகளில் ஏதாவது ஒரு தேர்தல் அலுவலகம், அதில் முகம் தெரியாத கட்சிக்காரர்கள் கும்பல் கும்பலாக உட்கார்ந்து, கட்சி ஜெயிக்க என்னவெல்லாம் செய்யணும் என பேசியதோடு, செயலில் இறங்கியும் காட்டினர். ராத்திரியோடு ராத்திரியாக பணப்பட்டுவாடா முடித்தனர்.
இப்படி தேர்தல் பணி முடிக்க தமிழகம் முழுவதிலும் இருந்து திருச்சி ஶ்ரீரங்கம் நோக்கி அரசியல் கட்சிகள் தங்கள் தொண்டர்களை வரவழைத்து கூட்டம் காண்பித்தார்கள். ஶ்ரீரங்கம் இடைத்தேர்தல் திருவிழா இன்றோடு முடிகிறது. கடந்த 11ஆம் தேதி பிரசாரத்திற்கு வந்தவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு கிளம்பினார்கள். ஆனால் இருவர் பிணமாக சென்றதுதான் பரிதாபம்.
சென்னை அம்பத்தூர், மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற இராசேந்திரன். 45 வயதான இவர் சென்னை மாநகராட்சியின் 82வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்தவர். ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து, திருச்சியை அடுத்துள்ள பெருகமணியில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டார் ரவி.
இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி பிரசாரத்தில் கலந்து கொண்ட ரவிக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே மாரடைப்பால் இறந்துவிட்டதாக ரவியை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். கவுன்சிலர் ரவியின் உடல் திருச்சியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
மேலும், ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது நடந்த சாலை விபத்தில் அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இறந்த அ.தி.மு.க. தொண்டருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். தினம்தினம் அறிக்கை விடும் தி.மு.க தலைவர் கருணாநிதியோ, அல்லது அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலினோ இதற்காக இரங்கல் கடிதம் கூட வெளியிடவில்லை. ஶ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்தால் முக்கிய தலைவர்கள் இருந்ததால், இவரின் மறைவில் கவனம் செலுத்தவில்லை என சொல்லப்படுகிறது. திமுக தரப்பு இப்படியிருக்க, அதிமுக தரப்பிலும் ஒரு விபத்து இரண்டு குடும்பங்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பூலாங்குளத்துப்பட்டி என்ற இடத்தில், திண்டுக்கல் மாவட்டம், சானார்பட்டி ஒன்றியம், கொரசின்னம்பட்டி கிளைக் கழக செயலாளர் ஏ.வெள்ளைச்சாமி, கம்பிளியம்பட்டி கிளைக் கழகச் செயலாளர் எஸ்.சிவசங்கரன் ஆகியோர் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக திருச்சியில் முகாமிட்டிருந்தார்கள்.
இவர்கள் கடந்த 10ஆம் தேதி எதிர்பாராத விதமா பூலாங்குளத்துபட்டியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, இவர்கள் பயணித்த பைக் மீது கார் மோதியதில் வெள்ளைச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த சிவசங்கரன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள். அவர் தேர்தல் பொறுப்பேற்றுக்கொண்ட பகுதியில் பிரசாரத்துக்காக திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு வந்தவர்கள் குடும்பத்தை நிர்க்கதியாக நிற்க வைத்துவிட்டதுதான் கொடுமை.
இவர்களுக்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இரங்கல் கடிதம் வெளியிட்டார். அதில், "தொண்டர்கள் இனி வரும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சாலைகளில் பயணம் செய்ய வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். வெள்ளைச்சாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவசங்கரன் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் அறிவித்தார். ஆனால் ஶ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த விபத்தில் சிக்கி தவிக்கும் அதிமுக குடும்பங்களுக்கு இதுவரை எந்த உதவியையும் அறிவிக்கவில்லை.
காயம்பட்ட சிவசங்கரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த தொண்டர்கள் வீட்டில் இருந்தபோது இறந்திருந்தால்கூட பரவாயில்லை. கட்சிப்பணிக்காக கொண்ட கொள்கைக்காக ஏற்ற தலைமைக்காக உழைக்க வந்த இடத்தில் உயிரிழந்துள்ளார்கள். அவர்களின் குடும்பத்தாரின் கண்ணீருக்கும் கதறலுக்கும் பதில் சொல்லப்போவது யார்?
-சி.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்
Similar topics
» 7 பேரின் விடுதலை எதிர்க்கும் காங்கிரஸ் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுமா? இது என்னுடைய சந்தேகம்..
» இவர்களின் இப்படியான நிலைமைக்கு நாம் ஒவ்வருவருமே காரணம்
» தமீமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சி தொடங்கினார்
» தேசியக் கட்சி தகுதியை இழக்கிறது லாலு கட்சி?
» இந்த படத்தை பார்த்தும் நீ காங்கிரஸ் கட்சி, திமுக, பாரதிய ஜனதா கட்சி, ஆகிய தமிழின விரோதிகளுக்கு வாக்கு போடுவாயா, போடுவாயா???
» இவர்களின் இப்படியான நிலைமைக்கு நாம் ஒவ்வருவருமே காரணம்
» தமீமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சி தொடங்கினார்
» தேசியக் கட்சி தகுதியை இழக்கிறது லாலு கட்சி?
» இந்த படத்தை பார்த்தும் நீ காங்கிரஸ் கட்சி, திமுக, பாரதிய ஜனதா கட்சி, ஆகிய தமிழின விரோதிகளுக்கு வாக்கு போடுவாயா, போடுவாயா???
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|