TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழ் யாரையும் விட்டுவைக்காது

Go down

தமிழ் யாரையும் விட்டுவைக்காது Empty தமிழ் யாரையும் விட்டுவைக்காது

Post by rose Tue May 25, 2010 2:03 pm

நாட்கள் போகப்போக ஒவ்வொரு செய்தியாய் வருகின்றன. உலகத் தமிழர்களின் வரலாற்றில் மிகப் பெருவாரியானவர்களைப் பாதித்த, மனரீதியாக ஒடுங்கவைத்த கொடூர சம்பவங்கள் இலங்கையில் நடத்தப்பட்டிருக்கின்றன.

அகில உலக அளவில் ஒரு சில ராட்சசர்கள் நடத்திய கோரக் கொலைகளை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

அந்த ராட்சசர்களின் வரிசையில்
ராஜபக்ஷேவும் அவரது சகோதரர்களும் அதுபோல் சரத் பொன்சேகாவின் தலைமையில் ஒரு
ராணுவமும் செயல்பட்டிருக்கிறது. அப்பாவி மக்களும் சாகட்டும் என்றே யுத்தம் செய்துள்ளார்கள்.


சில தமிழர்களும் தங்கள் இனத்தைச் சார்ந்த அப்பாவி மக்களைக் கொல்ல உடந்தையாகி உள்ளார்கள். இவர்கள் யார் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தனிநாடு ஒன்று வேண்டும் என்று கேட்டதற்காக இவ்வளவும் நடந்து முடிந்திருக்கிறது.

ஈழத்தமிழர்களின் வரலாறும், அவர்களின் தனியான மொழி, மதம், பழக்க வழக்கங்கள், போன்றனவும் அவர்கள் தனியான ஒரு இனம் என்பதை எந்த சந்தேகத்துக்கும் இடமின்றிக் கூறுகின்றன.

இவர்கள் தனிநாடு கேட்டதற்காக அவர்களின் சுமார் ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வன்னியில் மட்டும் புலிகள் தலைவர்களும் கொல்லப்பட்டதோடு சுமார் 50. வெள்ளைக்கொடி ஏந்திச் சென்றவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கடைசிநேரக் கொலை பாதகங்கள் இன்னும் அதிக காரணங்களைத் தருகிறது தனிநாடுகேட்க. இதுதான் அனைத்துலக சட்டங்களை அறிந்தவர்கள் கருத்து.

தமிழ் யாரையும் விட்டுவைக்காது Mahinda-rajapaksa-sarath-fonseka-2009-5-18-16-52-1எனவே புலிகளை அழித்துவிட்டதால் தனி நாடு கோரிக்கை வலுவிழக்கவில்லை. இன்னும் அதிக பலம்பெற்றிருக்கிறது.

இந்தியாவில் காஷ்மீர் தனிநாடாகப் பிரிந்து
போக பல ஆண்டுகளாகப் போராடுவதாலும் பிரிவினைத் தடைச்சட்டம் ஒன்று தமிழரின்
தன்னேரில்லாத் தலைவன் அண்ணாதுரைக்காக 1962-இல் கொண்டுவரப்பட்டதாலும் சாதாரண தமிழர்களிடம் ஓர் உளவியல் நிலை ஏற்பட்டுள்ளது. தனிநாடு கேட்பதே பாவம் என்பதுபோல.


அனைத்துலக சட்டங்கள் தனி நாடு கேட்க யாருக்கு முடியும் என்று தெளிவாக்கியுள்ளன. தனிநாடு கேட்பதே மாபாவம் என்று கூறவில்லை.

இங்குச் சில சொற்கள் முக்கியம். ‘பயங்கரவாதம்’ என்ற-ரெய்ட்டார் போன்ற செய்தி நிறுவனங்கள் பொருளற்ற வார்த்தை என்று தடை செய்த-வார்த்தையை வைத்துத் தமிழராகிய கதிர்காமர் உலக நாடுகளெங்கும் சென்று சொந்த இனத்தை இன்றைய நிலைக்குக் கொண்டு வந்தார். அதுபோல் ராஜபக்ஷே இந்த வார்த்தையைப் பயன்படுத்தி பல நாடுகளைத் தவறாக நடந்துகொள்ள வைத்தார். உலகின்மீது மோசடி புரிந்தார். ஒரு வார்த்தை பயன்பட்டிருக்கிறது, ஞாபகத்தில் இருக்கட்டும்.

இந்தச் சொல்லைப் போல அகில உலக யுத்தங்களில் பயன்படுத்தப்படும் வேறு ஒரு சொல் ‘இனப்படுகொலை.’

ஆங்கிலத்தில் இதனை ‘ஜினோசைட்’ என்று கூறுகின்றனர். வன்னியில் ஏழைத் தமிழர்கள் ‘இனப்படுகொலைக்கு’ ஆளாகினர். தமிழ்ப் பத்திரிகைகள், குடிசையில் இருப்பவர்களும் அதனைப் படிக்கவேண்டும் என்பதற்காக உணர்ச்சி கலந்து தலைப்புகள் எழுதுவதுண்டு. குடித்துவிட்டு ஒருவன் இன்னொருவனைக் கொன்றால் ‘குடித்தவன் படுகொலை’ என்று கொட்டை எழுத்தில் எழுதும். ஆனால் இனப் படுகொலை என்பது அனைத்துலக சட்டத்தில் வரும் சொல்.

தனியான மொழி, மதம், பழக்கவழக்கங்கள், வரலாறு கொண்ட ஒரு கூட்டம் மக்கள் தங்களுக்கு இழைத்த ஓரவஞ்சனையால், இருக்கும் நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடு கேட்கும்போது அப்பாவிகள் கொல்லப்படுவது ‘இனப்படுகொலை’. வன்னியில் மட்டும் ஐம்பதினாயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழ் யாரையும் விட்டுவைக்காது Capt_xej10112181812_aptopix_sri_lanka_tamil_refugees_xej101இது உலகம் பல இடங்களில் பார்த்துவிட்டது. தொடர்ந்து அய்க்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர் பதவியில் இருக்கும் வல்லரசுகள் அதனைச் செயல்படாமல் வைத்து வருகின்றன. உலகில்
எங்கு இனப்படுகொலை நடக்கிறதோ அங்கு சென்று உடனடியாகத் தடுப்பதற்கு
நடவடிக்கை எடுப்பது அய்க்கிய நாட்டுச் சபையின் வேலைகளில் ஒன்று.


வன்னியில் இப்படியொரு கொடூரம் நடந்த பின்பும் இந்தியாவும் பிற நாடுகளும் தடுக்க முன்வரவில்லை என்பது வரலாற்றில் பதிந்துவிட்டது. அண்ணாதுரையின் ஒரு கட்சி அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது என்பதும் அது என்னென்ன செய்தது என்பதும் வரலாறுதான்.

அய்க்கிய நாடுகள் சபை என்பது என்ன, அதன் செயல்பாடுகள் என்ன, கடமைகள் என்ன போன்ற கேள்விகள் தமிழர்களைப் பாதித்ததில்லை. புதுமைப்பித்தன் சொற்களில் சொல்வதென்றால் ஒருவகை சீலைப்பேன் வாழ்வு வாழ்பவர்கள் தமிழர்கள்.

எனினும் வன்னியில் சொந்த இரத்தத்தினர் சாகிறார்கள் என்ற செய்தி கேட்டுத் துடித்தனர். அய்க்கிய நாடுகள் சபை பற்றித் தெரியாதவர்கள்கூட அந்த சபையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.

கடந்த சிலமாதங்களில் அகில உலகத் தமிழர்களும் விழிப்படைந்தார்கள்; உலுக்கி எடுக்கப்பட்டனர்.

அய்க்கிய நாடுகளின் சபை, பல்வேறு தேசங்கள் ஒவ்வொன்றும் ஆயுதங்களை வைத்திருப்பதால் அவை தவறு செய்யவாய்ப்புண்டு என்று தெரிந்து தேசங்களுக்கு அப்பால், தேசங்களைவிட அதிக வலிமையுள்ள ஒரு அமைப்பாய் உருவாக்கப்பட்டது.

இங்குதான் சிந்தனையாளர்கள் முக்கியமாகின்றனர். ஹான்ஸ் கெல்ஸன் என்ற அறிஞரின் சிந்தனைகளை அடியொற்றி ‘நாடுகளின் கூட்டமைப்பு’ என்ற அமைப்பு உருவாகியது. நாடுகள், மக்களின் உரிமைகளை (Rights) துவம்சம் செய்யக்கூடிய தன்மை கொண்டவை என்ற மனநோவுதான் அவரை இந்த முறையில் சிந்திக்கத் தூண்டியது. நாடுகளின் கூட்டமைப்பு பின்னர் அய்க்கிய நாடுகளின் சபை என்று மறுவடிவம் பெற்றது. எனினும் இந்த சபை சரியாகச் செயல்படவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் உள்ளன. சில பிரச்சினைகளைத் தீர்த்திருக்கின்றன என்பது உண்மை.

அனைத்துலக ஒழுங்கு என்ற சிந்தனை தொடர்ந்து செயல்படுகிறது. அதனால்தான் குளோபலைசேஷன் சிந்தனையும் அய்க்கிய நாடுகள் பற்றிய சிந்தனையும் உலகின் கவனத்தில் இருக்கின்றன. அதுபோல் அனைத்துலக சட்டம் பற்றிய பேச்சுகளும் உலகின்முன் உள்ளது. இறையாண்மை உள்ள நாடுகள் எல்லாம் தன் எல்லைக்குள் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியாது.

அதுபோல் பிரான்சிஸ் பாயில் என்ற அனைத்துலக
சட்டநிபுணர் ஈழத்தவர்கள் தனி ஈழம் கோரிக்கையை அகில உலக சட்டங்களின்படி
முன்வைக்க உரிமை உடையவர்கள் என்று கூறுகிறார்.


தமிழ் யாரையும் விட்டுவைக்காது Satellite-image-of-sri-lankaஈழத்தமிழர்கள் தனிமதத்தவர். சிங்களவர் வேறு மதத்தவர்; தமிழர்கள் தனியான வேறு மொழி பேச, சிங்களவர் சிங்கள மொழி பேசுபவர்கள்; தமிழர்கள் இந்துக்கள்; சிங்களவர் பௌத்த மதத்தினர். தமிழர்கள் வேறு விழாக்கள், நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள் கொண்டவர்கள். சிங்களவர் முற்றிலும் வேறு. தமிழர்கள் தனி அரசுகள் வைத்து தம்மை ஆண்டவர்கள். சிங்களவர்கள் வேறு அரசுகளில் வாழ்ந்தவர்கள்.

இதனால் தமிழர்கள் தனி இனம்; சிங்களவர்கள் தனி இனம். தமிழர்களைத் தங்கள் சிங்கள நாட்டில் வலுக்கட்டாயமாக வைத்துக்கொள்ள எந்த அனைத்துலக சட்டமும் இடம் கொடுக்கவில்லை.

தமிழர்களை இனப்படுகொலை செய்ய சிங்களவர்களின் நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை. தமிழர்களோடு வாழமுடியும் என்று இலங்கை அரசு இதுநாள்வரை நிரூபிக்கவில்லை. எனவே சிங்கள அரசு மட்டுமே நிலைபெற்றுள்ளது. இன்றைய இலங்கை அரசின் படையில் தமிழர்கள் இல்லை.

எனவே 1948 இனப்படுகொலை கன்வென்ஷனின் ஒன்றாம் பிரிவுப்படி அனைத்துலக நியாயசபைக்கு (இது தான் உலக நீதிமன்றம் என்று அழைக்கப்படுவது) ஏதாவது ஒரு நாடு வழக்குத் தொடுக்கலாம். அப்படி வழக்குத் தொடுத்தால் அய்க்கிய நாட்டின் பாதுகாப்பு சபை செயல்படும் நிர்ப்பந்தம் ஏற்படும் என்கிறார் பேரா.பாயில்.

அதுபோல் தனி ஈழம் இனிக் கேட்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அனைத்துலக சட்டம் அதனை ஏற்றுக் கொள்கிறது. அனைத்துலக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய கவெனன்ட் பிரகாரம் தனி ஈழம் கேட்பது தவறல்ல. இத்தகைய அனைத்துலக சட்டத்தில் இலங்கை அரசு கையெழுத்திட்டு ஒத்துக் கொண்டுள்ளது.

மக்கள் ஒவ்வொருவருக்கும் பிறந்தவுடன் அவர்களுக்கான சில பிறப்பு உரிமைகள் உண்டு. நாயாய், ஆடாய், மாடாய் தெருக்களிலும் வயல் வெளிகளிலும் வாழும் நம் மக்களுக்கு அந்த உரிமைகள் பற்றித் தெரியாது. எனவேதான்
இந்தியா போன்ற எந்த மனித உரிமையையும் பின்பற்றாத நாட்டில்கூட பல்கலைக்கழக
மானியக் குழு ஒவ்வொரு கல்லூரி மாணவருக்கும் மனிதர்களின் பிறப்புரிமைகள்
கற்பிக்கப்படவேண்டும் என்று பெயரளவில் கூறுகிறது. ஏற்கனவே பார்த்ததுபோல் கெல்ஸன் அய்க்கியநாட்டு சபையின் மூல ஆணிவேரான தன் கருத்தை மனிதர்களின் உரிமை என்ற கருத்தில் நிறுவுகிறார்.


தெருவில் படுத்துறங்கும் மக்களையும் மருத்துவ வசதியின்றி சாகும் மனிதர்களையும், ஒவ்வொரு கணமும் ஏமாற்றப்படும் இந்தியாவின் குடிமக்களையும் பார்த்து உங்களுக்கும் ‘உரிமை’ இருக்கிறது என்றால் நம்பவா போகிறார்கள்?

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆனபிறகும் தமிழகம் உட்பட 50 விழுக்காடுக்குமேல் கல்விகொடுக்கப்படவில்லை. இந்த அடிப்படை மனித உரிமையை மறுக்கும் அரசாங்கங்களை யார் சிறைக்கனுப்புவது?

இந்த இலட்சணத்தில் தனிநாட்டு ‘உரிமையை’ எந்த அரசு அங்கீகரிக்கும்?

ஆனாலும் அகில உலகச் சட்டம் இருக்கிறது. இந்தியத் தமிழக அடிமைகள் என்றும் அடிமைகளாகவே இருப்பார்கள். ஏனெனில் அந்தளவு வறுமையாலும் உளவியல் நிலையாலும் அடங்கிய மனம் கொண்டவர்கள் அவர்கள். இவர்களை ஒதுக்கிவிட்டு ஈழத்தமிழர்கள் தங்கள் வரலாற்றை தாங்களே நிர்ணயிக்க முடியும்.

தமிழ் யாரையும் விட்டுவைக்காது Rajapakse_vaharai_05_59986_435மே 27ஆம்தேதி (2009) அன்று இலங்கை அரசுக்கு எதிராக அய்க்கிய நாடுகள் சபையில் வந்த தீர்மானத்தை இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்நின்று தோற்கடித்தன. இனப் படுகொலையை இலங்கை அரசு செய்யவில்லை; அது அவர்களின் உள்நாட்டுச் சமாச்சாரம் என்று அதிகமான நாடுகள் கூறின. இதனைக் கிண்டல்செய்து மறைந்த பத்திராதிபர், உயர்ந்த மனிதர், லசந்தவிக்கிரமதுங்கவின் பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்துள்ளது.

ஸண்டே லீடர் என்ற லசந்த விக்கிரமதுங்கவின் பத்திரிகையில் ரவி நாயர் என்பவர் (இவருக்கு எம்.எம்.தாமஸ் (பெங்களூர்) பரிசு கிடைத்தது ஒருமுறை) அய்க்கிய நாடுகள் சபையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்கூட (E.U.) முழுமனதுடன் இலங்கை மீது குற்றச்சாட்டைக் கொண்டுவரவில்லை என்கிறார். ஐரோப்பாவில்
பல இடங்களில் ஈழத்தமிழர்கள் இன உணர்வுடன் போராட்டம் நடத்தியதால் உந்தப்
பெற்றுத்தான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கையில் இனப் படுகொலை
நடக்கிறதென்றும் இலங்கை மீது யுத்தக்குற்றவாளி குற்றச்சாட்டு சுமத்தலாம்
என்றும் தீர்மானம் கொண்டுவந்தன. அந்தத் தீர்மானத்தைக்கூட முழுத தயாரிப்பின்றி பிரிட்டன் செய்தது என்கிறார் ரவி நாயர். அமெரிக்காவைத் தக்கமுறையில் கலந்தாலோசித்து இலங்கையின் ராஜபக்ஷ சகோதரர்கள் தப்பமுடியாதபடி தீர்மானத்தைக் கொண்டுவரவில்லை. போதிய ஆதாரங்களைத் திரட்டாமல், சான்றுகள் இல்லாமல் ஐரோப்பிய நாடுகள் உலக நாகரிகத்தைக் காத்தோம் என்று பெயர் சம்பாதிக்கும் அளவில்தான் செயல்பட்டன.


இவ்வளவும் குற்றச்சாட்டுகளை கொழும்பிலிருந்து வரும் லசந்தவிக்கிரமதுங்கவின் பத்திரிகை வெளியிடுகிறது. சிங்களவர்கள் ஒரு தனி நாட்டுக்கான பண்பாட்டைப் பெற்றிருப்பவர்கள் என்பதை ராஜபக்ஷ காட்டவில்லை. ஆனால் லசந்த காட்டுகிறார். ஆனால் லசந்த கூட ஈழம் தனிநாடாகப் பிரிந்துபோகலாம் என்ற கருத்தை ஏற்கவில்லை என்பது ஞாபகத்தில வருகிறது. அறிவாளிகள் அடிப்படையில் நியாயத்தின் பக்கம், அனைத்துலக சட்டத்தின் பக்கம்தான் நிற்கவேண்டும்.

அவர்கள் அவர்கள் வாழும் தேசத்தின் பக்கம் சாய்ந்து நியாயம் பேசக்கூடாது. தேசப்பக்தி என்பதே அடிப்படையில் பொய்யினால் உருவாவதாகும். ஒரு பக்கம் சாய்ந்து யுத்தங்களையும் தேவையற்ற கொலைகளையும் ஆதரிப்பதாகும். எழுபதுகளில்
தீவிரஇடதுசாரிக்கலாச்சாரம் தமிழ் எழுத்தில் பரவ ஆரம்பித்தபோது தேசபக்தி
என்ற நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் பயன்பாட்டிலிருந்த சொல் மறைந்தது. அதற்கு முக்கிய காரணம் அண்ணாதுரை என்ற காஞ்சிபுரத்தில் பிறந்த மனிதன் தொண்ணூறுகள் சார்ந்து இந்தியாவில் பி.ஜே.பி. பரவியதோடு தமிழக அரசியல் வரலாற்றில், குமரி
மாவட்டத்தில் ஒரு தொகுதியில் மலையாளம் பேசும் நாயர்களின் வாக்குகளை வைத்து
தமிழக சட்டமன்றத்துக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கவனிக்கவேண்டும், அக்காலகட்டத்தில்தான் மலையாள மொழி உந்துதலால் தமிழ் நாவல் எழுதும் எழுத்தாளர்கள் தோன்றி ஒரு பெரிய மாயையை உருவாக்குகிறார்கள். பெரியார் சிந்தனையை உள்ளேற்காத தமிழ் புத்திஜீவிகள் நாகர்கோயில் பகுதியை மையமிட்டுத் தோன்றுகிறார்கள். தமிழ் மையக் கலாச்சாரம் ஓரக்கலாச்சாரத்தால் மாய்மாலத்துக்கு உள்ளாகிறது. (இது தனியான விரிவான ஆராய்ச்சிக்குரியது. நிற்க.) பி.ஜே.பி. இந்திய அரசியலில் தோன்றுவதுடன் தேசபக்தி என்பது ஆயிரத்தித் தொள்ளாயிரத்து 30களில் தமிழகத்தில் இருந்ததுபோல் ஒரு கருத்துருவமாகத் தோன்றுகிறது. அண்ணா உருவாக்கிய அரசியல் கருத்துருவத்தில் ஓட்டை போட ஒரு சில தமிழ் அறிவாளிகள் முயல்கின்றனர். பெரியார் மற்றும் அண்ணாவா, அல்லது தேசபக்திச் சொல்லாடலா என்ற கேள்வி எழுந்தது. ஈழச்சிக்கலோடு இந்தப் பிரச்சினை மீண்டும் தமிழகத்தில் விசுவரூபமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தவிதமான
கருத்து விளையாட்டுகளின் பின்னே இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ளாமல்
புதிய தலைமுறை தமிழ் எழுத்தாளர்கள் மருள ஆரம்பித்துள்ளார்கள். புலிகளா புலிகள் இல்லையா என்ற எதிர்விணைவு அல்ல பிரச்சினை. இந்த வாதச் சட்டகங்களுக்குப்பின்னே ஒளிந்துள்ள தமிழ் வரலாறுதான் பிரச்சினை. தமிழுக்குள்ளே வரும் பிற மொழிக் கலாச்சாரங்களை நான் எதிர்க்கவில்லை. அவை தமிழின் குணத்தை மூடி மறைக்கக்கூடாது. நீண்ட பாரம்பரியத்தைச் சார்ந்த தமிழுயிர்ப்பு ஒன்று தமிழன் வரலாற்றில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. அதனால்தான்
எழுத்துப் பத்திரிகை தொடங்கிய புதுக்கவிதை பாணி இன்று எங்கோ காணாமல் போக
மிகப் புதுவிதமான சங்க இலக்கியப் பாணி புதுக்கவிதை தோன்றியுள்ளது.


நான் தேசப்பற்று பற்றிச்
சொல்லிக்கொண்டுவந்தது லசந்த விக்கிரமதுங்ககூட தேசப்பற்று என்ற சிந்தனைக்கு
அடிமையானதால்தானே தனி ஈழம் என்ற கருத்தை ஏற்கவில்லை என்று கேட்க? தேசப்பற்று என்ற சிந்தனையைத் தாண்டாதவர்கள் உண்மையை நேராகக் காணமுடியாது. அவர்கள் மாயைக்குள் மிக விரைவில் சென்று சேர்வார்கள். தேசப்பற்று வளர்ச்சியடையாத நாடுகளில் பெரிய ஒரு வியாபாரத்துக்கான சொல். அந்தச் சொல்லைப் பயன்படுத்துபவர்கள் உள்ளுக்குள்ளே ஒரு அதிகாரத்தை உணர்வார்கள்.


‘பேரரசு’ என்ற பெயரில் உலகப் புகழ்பெற்ற ஒரு நூல் வந்துள்ளது. மிக்கேல்ஹார்த்ட் மற்றும் அன்டானியோ நெக்ரி ஆகியோர் ஆசிரியர்கள். அதில் அய்க்கிய நாடுகள் சபை ஒரு பேரரசின் குணத்தைப் பெற்று வருவதைச் சொல்கிறார்கள். இது தேசபக்தி என்ற சொல்லால் அய்க்கிய நாடுகள் சபையைப் பேரரசாக மாற்றுகிறது என்பதே என் கணிப்பு.
ஆயிரம் பேர் செத்திருக்கிறார்கள்
rose
rose
பண்பாளர்
பண்பாளர்

Posts : 95
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?
» யாரையும் நோகாத கனவுகள்..
» சட்டசபை தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது: குர்ஷித்
» யாரையும் இழக்க விரும்பவில்லை: ஜெயலலிதா
» 2ஜி வழக்கில் யாரையும் காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கவில்லை: வி.நாராயணசாமி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum