TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.மறைவு.

2 posters

Go down

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.மறைவு. Empty இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.மறைவு.

Post by sakthy Fri Oct 24, 2014 1:46 pm

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.மறைவு. Aew1hc

உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 86.

சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு சில தினங்களுக்கு முன் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வாந்தி எடுத்து மயங்கி விழுந்த ராஜேந்திரன், உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடலில் நோய் தொற்று மற்றும் சளித்தொல்லைகள் இருந்ததால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

நேற்று அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் அவரச சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் பெபருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை எஸ்.எஸ்.ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எஸ்.எஸ். ராஜேந்திரன் ஆரம்பத்தில் நாடக நடிகராக இருந்து பிறகு சினிமாவுக்கு வந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். படங்களில் இவர் பேசிய தெளிவான வசன உச்சரிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

பராசக்தி, மனோகரா, ரத்தக்கண்ணீர், குல தெய்வம், முதலாளி, தைபிறந்தால் வழிபிறக்கும், சிவகங்கை சீமை, ராஜா தேசிங்கு, குமுதம், முத்து மண்டாம், ஆலய மணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார், மணி மகுடம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முதலாளி படம் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்றது.

அரசியலிலும் ஈடுபட்டார். 1962ல் தி.மு.க. சார்பில் தேனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திய நடிகர்களில் முதன் முதலாக எம்.எல்.ஏ. ஆனது எஸ்.எஸ்.ராஜேந்திரன்தான். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அ.தி.மு.க.வில் இணைந்து 1981ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அரசு சிறு சேமிப்பு திட்ட துறையில் துணை தலைவராகவும் பணியாற்றினார்.

பெரியார் மற்றும் அண்ணாவின் சுயமரியாதை கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர். இதனாலேயே இலட்சிய நடிகர் என்ற பட்ட பெயரோடு அழைக்கப்பட்டார்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.மறைவு. Empty Re: இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.மறைவு.

Post by ஜனனி Fri Oct 24, 2014 3:11 pm

ஆழ்ந்த அனுதாபங்கள்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.மறைவு. Empty எஸ்.எஸ்.ஆர் மறைவுக்கு ஜெயலலிதா உள்பட தலைவர்கள் இரங்கல்!

Post by ஜனனி Fri Oct 24, 2014 3:14 pm

சென்னை: பழம்பெரும் நடிகர் எஸ்எஸ்ஆர் மறைவுக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.மறைவு. Jaya%206(51)ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: "பழம்பெரும் திரைப்பட நடிகரும், "SSR" என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான "லட்சிய நடிகர்" எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 86வது அகவையில் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடையதேன்.

மேடை நாடகங்கள் மூலம் திரையுலகிற்குள் நுழைந்து, முதலில் சிறு சிறு கதா பாத்திரங்களை ஏற்று நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு "முதலாளி" என்ற திரைப்படம் தான் முகவரி பெற்றுத் தந்தது. "குமுதம்", "சாரதா", "சிவகங்கை சீமை", "தை பிறந்தால் வழி பிறக்கும்" உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மூலம் தமிழக மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். தனது தெளிவான தமிழ் வசன உச்சரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். ரசிகர்களால் "லட்சிய நடிகர்" என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன், தலைமுறை தாண்டி தற்போதைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்த பெருமைக்குரியவர். திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தடம் பதித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியவர்.

எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும். தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்த எஸ்.எஸ். ராஜேந்திரனின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. எஸ்.எஸ்.ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்".

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.மறைவு. Vaiko%20200b(42)வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:  "கலை உலகம் திராவிட இயக்கத்திற்கு வழங்கிய அருட்கொடையாம் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். மறைந்தார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன்; வேதனைக்குள்ளானேன். பேரறிஞர் அண்ணாவின் இதயத்தில் தனித்ததோர் இடத்தைப் பெற்று, தி.மு.கழகத்தின் இலட்சிய வேங்கையாகத் திகழ்ந்தார். கொள்கையில் நிலைகுலையாத உறுதி கொண்டு இருந்தார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவரது தேனாம்பேட்டை வீட்டைச் சுற்றி வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியபோது, அஞ்சாமல் துப்பாக்கியோடு போய் நின்றார். எனவே, கழகத் தோழர்கள் அவரை ‘சேடபட்டி சிங்கக்குட்டி’ என்று அழைத்து மகிழ்ந்தார்கள்.

தமது தேனாம்பேட்டை இல்லத் திறப்பு விழாவுடன், பேரறிஞர் அண்ணாவின் 50ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினைப் பொன் விழாவாகக் கொண்டாடினார். அண்ணாவுக்குப் பட்டு வேட்டி, பட்டுச் சட்டையுடன் 50 பவுன் தங்கச் சங்கிலி அணிவித்தார். அண்ணா மலேசியா சென்று தாயகம் திரும்பியபோது, சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்புக் கூட்டத்தில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். பேச்சு முத்தாய்ப்பாக அமைந்தது. தாம் நேசித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை முன்னிறுத்தி அவர் தயாரித்த ‘தங்க ரத்தினம்’ திரைப்படத்திலேயே தி.மு.க.வின் பழநி மாநாட்டுக் காட்சிகளை இடம் பெறச் செய்தார்.

1962 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கோட்டையாகத் திகழ்ந்த தேனி தொகுதியில் காங்கிரசைத் தோற்கடித்துச் சாதனை படைத்தார். 67 தேர்தல் களத்தில் அவருடன் நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பைப் பெற்றேன். தென்மாவட்டச் சுற்றுப்பயணங்களின்போது உடன் சென்றேன். பேரறிஞர் அண்ணா இயற்கை எய்தியபோது அங்கு நின்று கொண்டு இருந்த நடிகமணி டி.வி.நாராயணசாமியுடன் என்னையும் தமது காரில் ஏற்றிக்கொண்டு அண்ணா வீட்டுக்கு அழைத்துச் சென்றதை மறக்க முடியாது. தேர்தல் களத்தில் பலமுறை வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், சிறுசேமிப்புத் துறைத் துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். திரை உலகில் தனக்கென ஒரு தனிப் பாணியை வகுத்துக் கொண்டு பிரகாசித்தார். தமிழ் வசனங்களை உச்சரிப்பதில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனை போலவே, கேட்போரின் இதயங்களைக் காந்தமாய்க் கவர்கின்ற குரலாக எஸ்.எஸ்.ஆரின் குரல் கணீரென ஒலித்தது. அதற்காகவே அவரது படங்களை நான் விரும்பிப் பார்ப்பது உண்டு. 

‘முதலாளி, தை பிறந்தால் வழி பிறக்கும், சிவகெங்கைச் சீமை, பூம்புகார், கை கொடுத்த தெய்வம், ஆலயமணி, பூமாலை, வைராக்கியம், ராஜா தேசிங்கு, சாந்தி போன்ற திரைப்படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். ‘காக்கும் கரங்கள்’ படத்தைப் பார்த்து விட்டு அண்ணா, ‘தம்பி இராஜேந்திரன் டாக்டர் சங்கராகவே மாறி விட்டார்’ என்று பாராட்டினார். இன்று மருதுபாண்டியர்கள் தூக்கில் இடப்பட்ட நாள். அவர்களது புகழ் பாடும் திரைப்படமாக, கவிஞர் கண்ணதாசன் தயாரித்த சிவகெங்கைச் சீமையில், முத்தழகு பாத்திரத்தில் எஸ்.எஸ்.ஆர். நடித்த நடிப்பும், வசன உச்சரிப்பும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்யும். அந்த மருதுபாண்டியர்கள் மறைந்த நாளிலேயே எஸ்.எஸ்.ஆர். இயற்கை எய்தி உள்ளார். அவர் மண்ணில் இருந்து மறைந்தாலும், அண்ணாவின் இயக்கத்திலும், வெள்ளித் திரையிலும் அவர் படைத்த சாதனைகள் என்றைக்கும் அவரது புகழ் பாடும்! அவரை இழந்து துயருறும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ம.தி.மு.க சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்". 

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.மறைவு. Thamizhisai%20soundararajan%20200(1)தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் இரங்கல் செய்தி:பழம்பெரும் திரைப்பட கலைஞர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான செய்தி தமிழக மக்கள் அனைவருக்குமே வருத்தமளிக்கக்கூடிய செய்தி. இலட்சிய நடிகர் என்று இலட்சியத்தை நடித்ததில் மட்டுமல்லாமல் வாழ்க்கையின் நடத்தையிலும் கடைபிடித்தவர். அரசியலில் திரைப்படக் கலைஞர்களும் ஈடுபட்டு கலை சேவையோடு மக்கள் சேவையும் ஆற்ற முடியும் என்று வெகு நாட்களுக்கு முன்பே நிரூபித்தவர். அழுத்தந்திருத்தமான வசனங்களை மக்கள் மனதில் அழுத்தமாகவும், ஆழமாகவும் விதைத்தவர். அவரின் மறைவு சிந்தனையில் கூட ஏற்றுக் கொள்ள முடியாதது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் பா.ஜனதா சார்பில் தெரித்துக்கொள்கிறேன்.
 

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.மறைவு. K_veeramani1(53)கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: ''லட்சிய நடிகர் என்று நாட்டு மக்களால் அறியப்பட்ட, போற்றப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறைவுற்றார் என்பது பெரிதும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

இளமைக்காலம் தொட்டே திராவிடர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரிடம் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். புராண வேடங்களில் கடைசி வரை நடிக்க மறுத்ததன் மூலம் அவருக்கு அளிக்கப்பட்ட ‘லட்சிய நடிகர்’ என்ற பட்டத்தை உயர்த்திப் பிடித்தவர். நாடக நடிகராக அறிமுகமாகி, நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்த சாதனையாளர்; தமிழ் உச்சரிப்பு என்பதில் அவருக்கு முதன்மையான இடம் உண்டு.

கலை மூலம் கழகக் கருத்துக்களை மக்கள் முன் கொண்டு சென்ற அந்தத் திராவிட நடிகருக்கு கழகத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர்தம் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.''
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.மறைவு. Empty Re: இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.மறைவு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum