TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பெண்கள் மீது இராணுவம் வல்லுறவு! சுஷ்மாவிடம் சீறிய சம்பந்தன்…

Go down

பெண்கள் மீது இராணுவம் வல்லுறவு! சுஷ்மாவிடம் சீறிய சம்பந்தன்… Empty பெண்கள் மீது இராணுவம் வல்லுறவு! சுஷ்மாவிடம் சீறிய சம்பந்தன்…

Post by மாலதி Sun Aug 24, 2014 7:28 am

பெண்கள் மீது இராணுவம் வல்லுறவு! சுஷ்மாவிடம் சீறிய சம்பந்தன்…
பெண்கள் மீது இராணுவம் வல்லுறவு! சுஷ்மாவிடம் சீறிய சம்பந்தன்… 12246_765895660134223_7005152183773777144_n
“வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம். தமிழரின் இந்தப் பூர்வீக நிலங்கள் இன்னும் 5 வருடங்களில் இலங்கை அரசால் முற்றாகச் சிதைக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அரசின் தற்போதைய நடவடிக்கைகள் இதனையே பிரதிபலிக்கின்றன. தமிழர் தாயகத்தில் ஒருபுறத்தில் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு தொடரும் வேளையில், மறுபுறத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
எனவே, இதனை இந்தியா உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.” இவ்வாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் நேற்று நேரில் வலியுறுத்தினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர்.
“வடக்கு, கிழக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புகளையும், அதனால் அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவலங்களையும் நேரில் பார்வையிட இந்திய அரசின் உயர்மட்டக் குழுவொன்று அவசரமாக இலங்கை வரவேண்டும்” என்றும் இதன்போது கூட்டமைப்புக் குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.
“இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசு ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆக்கபூர்வமாகச் செயற்படும் எனவும், அவர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் எனவும் உலகத் தமிழர்கள் நம்பியுள்ளனர். எனவே, ஈழத் தமிழர்களை மோடி அரசு கைவிடக்கூடாது” என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கூட்டமைப்புக் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராசா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்றுமுன்தினம் புதுடில்லி சென்றனர்.
இன்று இந்தியப் பிரதமரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ள இக்குழுவினர் நேற்றுக் காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துக் கலந் துரையாடினர். இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கூறிய விடயங்களை இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்தோம் என்று தெரிவித்தனர். இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பினர் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்ப் பெண்கள் மீது இராணுவம் வல்லுறவு
“வடக்கு, கிழக்கில் போர் நடைபெற்ற காலத்திலும் போர் நிறைவுக்கு வந்த பின்னரும் தமிழ்ப் பெண்கள் மீதான அரச படைகளின் பாலியல் வல்லுறவுகள் தொடர்கின்றன. இதனால் அங்குள்ள தமிழ்ப் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பில் இந்திய அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினோம்.
நீதி, விடுதலை கிடைக்கவில்லை
வடக்கு, கிழக்கில் காணாமல்போனோரின் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. காணாமல்போனோரைத் தேடித் தருமாறு உறவுகள் நடத்தும் ஜனநாயகப் போராட்டங்கள் மீதும், சர்வதேச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் மீதும் அரச புலனாய்வுப் பிரிவினரும், சிங்கள – பெளத்த இனவாதிகளும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, யுத்தம் நிறைவுக்கு வந்து 5 வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் சிறைச்சாலைகளில் தொடர்ந்து சித்திரவதைகளுக்குள்ளாகி வருகின்றனர். இதனால் சிலர் மரணித்தும் உள்ளனர் என்றும் சுஷ்மா சுவராஜிடம் நாம் தெரிவித்தோம்.
கைதுவேட்டைகள் தொடர்கின்றன
அதேவேளை, தமிழ் இளைஞர், யுவதிகள், குடும்பஸ்தர்கள், குடும்பப் பெண்கள் மற்றும் மாணவர்களை இலக்குவைத்து பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரின் கைதுவேட்டைகள் தற்போது தொடர்கின்றன. இதனால் வடக்கு, கிழக்கு மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். எனவே, இந்த அச்ச நிலையைப் போக்க இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை
தற்போது இரு நாட்டு மீனவர் பிரச்சினை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இது தொடர்பில் இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டும் என்றும் இந்தச் சந்திப்பின்போது நாம் கோரிக்கை விடுத்தோம்.
இராணுவ ஆட்சியின் பிடியில் மாகாணசபை
இதேவேளை, 13ஆவது அரசமைப்பு திருத்தச்சட்டம் ஈழத் தமிழருக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தராது. எனினும், இந்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக அமுல்படுத்தினால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாணசபை முறையாக இயங்க முடியும். இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளின் பிரகாரம்தான் வடக்கு மாகாணசபைத் தேர்தலை இலங்கை அரசு நடத்தியது. எனவே, கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வந்த இந்த மாகாணசபை இராணுவ ஆட்சியின் பிடியில் சிக்கித் தவிப்பதை இந்தியா கண்களால் பார்த்துக்கொண்டிருப்பதை விடுத்து அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். வடக்கு மாகாணசபையை முறையாக இயங்கவிடுமாறு இலங்கை அரசுக்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு வலியுறுத்தவேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் நாம் கோரிக்கை விடுத்தோம்.
13ஐயும் தாண்டி தீர்வு வேண்டும்
13ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கி அதற்கப்பால் சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஊடாக தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தவேண்டும் என்றும் நாம் அவரிடம் எடுத்துரைத்தோம். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடனான இந்தச் சந்திப்பு திருப்தியாக -ஆக்கபூர்வமாக இருந்தது. இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் நாம் சந்திக்கவுள்ளோம்.
இதன்போதும் பல்வேறு முக்கிய விடயங்களை அவரின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளோம். மோடியுடனான சந்திப்பின்போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணைக்குழு மேற்கொண்டுவரும் விசாரணை குறித்தும் எடுத்து விளக்கவுள்ளோம்” – என்றனர். இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நேற்று கூட்டமைப்பினர் நடத்திய சந்திப்பின்போது இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.ஏ.சிங்ஹாவும் கலந்துகொண்டார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  கிளிநொச்சியில் இராணுவ அதிகாரி ஒருவரினால் பாடசாலை மாணவி மீது பாலியல் வல்லுறவு
»  எகிப்தில் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற டச்சு பெண் நிருபர் மீது பாலியல் வல்லுறவு - உயிருக்குப் போராடுகிறார்!
» இந்திய அரக்க இராணுவம் தமிழர் மீது ஆடிய கோர தாண்டவம்!!!
» முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் மீது இராணுவம் தாக்குதல்; மக்களும் திருப்பி தாக்கினர்.
» பத்து வயதான சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த பிரிட்டிஷ் இராணுவம்! பிரதமர் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum