TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உயிர் காக்கும் மருந்திலுமா கொள்ளை

2 posters

Go down

உயிர் காக்கும் மருந்திலுமா கொள்ளை Empty உயிர் காக்கும் மருந்திலுமா கொள்ளை

Post by sakthy Thu Aug 07, 2014 10:02 pm

நம் நாட்டில் எத்தனையோ விதங்களில் மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள்.
விவரம் புரியாமல் - கேட்கும் வழி தெரியாமல் - வாய்மூடி, மௌனமாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் பாமர மக்களைக் காக்க,அரசாங்கமோ, அரசியல்வாதிகளோ எதுவுமே செய்வதில்லை.

காரணம் -
அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருக்கிறது என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?

மக்களுக்கு மிகவும் தேவைப்படும் உயிர் காக்கும் மருந்துகள். மருந்துகளை யாரும் ஆடம்பரம் என்று எந்த வகையிலும் சொல்லிவிட முடியாது. அவசியம் ஏற்பட்டாலொழிய யாரும் மருந்துப் பொருட்களை வாங்குவதில்லை.
அத்தகைய, அத்தியாவசியமான மருந்துகள் மக்களுக்கு நியாயமான முறையில், தரத்தில், விலையில் -கிடைப்பதை உறுதி செய்வது ஒரு ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தின் கடமை இல்லையா ?

மருந்து தயாரிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின், குழுவினரின்,– ஏகபோக உரிமையாகி விட்டது.

சாதாரணமாக சந்தையில் எந்தப் பொருளாக இருந்தாலும்,அதன் விலையை நிர்ணயிக்கும்
விஷயங்கள் என்னென்ன ?
1) மூலப்பொருட்களின் விலை, (cost of raw materials)
2) உற்பத்திச்செலவு,(cost of production/manufacturing)
3) போக்குவரத்து செலவு ( transportation)
4) லாப சதவீதம் (profit percentage )

இவை குறித்த தகவல்கள் யாவும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும். கத்தரிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற -சாதாரண விவசாயப்பொருட்களுக்கு கூட - உற்பத்தியாகும் இடத்தில் என்ன விலை, விற்பனைக்கூடத்திற்கு கொண்டு செல்ல ஆகும் செலவு எவ்வளவு, மொத்த விற்பனைகூடத்தில் என்ன விலை, சில்லரையில் எந்த விலைக்கு விற்கப்படுகின்றது - என்று விலா வாரியாக வெளிப்படையாகச் செய்திகள் அறிவிக்கப்படும்போது – மருந்துகள் தயாரிப்பில் – ஒவ்வொன்றையும் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களின் வெளிப்படையான, புரியும்படியான பெயர் என்ன (அட்டையில் அச்சடித்திருக்கும் புரியாத பெயர்களை விடுங்கள் ),
அதன் விலை என்ன, உற்பத்திச் செலவுகள், போக்குவரத்துச்செலவுகள் என்ன,

லாப சதவீதம் என்ன - என்பது யாருக்காவது தெரியுமா ?
எந்த மருந்து உற்பத்தியாளராவது தெரியப்படுத்துகின்றார்களா ?
மருந்து கம்பெனிகள் 500 % வரை கொள்ளை லாபம் அடிப்பது வெளியில் தெரிகிறதா …?

மொத்த விற்பனை கூடத்தில் (wholesale market) 10 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம், சில்லரை வண்டிக்காரரிடம் 15 ரூபாய்க்கு விற்கப்பட்டால், அதன் நியாயம் நமக்குப் புரிகிறது.

ஆனால் ஒரு மருந்துப் பொருளின் உற்பத்தி விலை 50 காசுகளாக இருக்கும்போது, அதன் விற்பனை விலை 50 ரூபாய்கள் என்று கொள்ளை விலை கூறினால் - இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு இல்லையா ?
நம் நாட்டில், மருந்துப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் / உற்பத்தியாளர்கள் எண்ணிக்கையில் மிகச்சிலர் தான்.

அவர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு எல்லாருமே விலையை கொள்ளை லாபத்திற்கு உயர்த்தி அறிவித்தால், இதைக் கண்டு பிடிக்க, தடுக்க சாமான்ய மக்களால் முடியுமா ?

மருந்து தயாரிப்பாளர்கள், மருத்துவ மனைகள், மருத்துவர்கள், விற்பனைப்பிரதிநிதிகள், இவர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு - அரசியல்வாதிகளையும் கைக்குள்
போட்டுக்கொண்டு பொதுமக்களைக் கொள்ளை அடிக்கிறார்களே இதை யார் தடுப்பது ? எப்படித் தடுப்பது ?

மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், விற்பனைப் பிரதிநிதிகளும் (medical representatives ) தொடர்ந்து மருத்துவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டே இருக்கிறார்களே -
இதன் பொருள் என்ன ?

குறிப்பிட்ட மருந்துப் பொருட்களின் விற்பனை அளவைப் பொறுத்து சம்பந்தப்பட்ட
மருத்துவர்களுக்கு கமிஷன் போவது அரசாங்கத்துக்கோ, அரசியல்வாதிகளுக்கோ தெரியாதா ?

50 காசு மாத்திரையை 50 ரூபாய்க்கு விற்கும் இந்த அநியாயத்தை, பகல்  கொள்ளையைத் தடுத்து நிறுத்தவே முடியாதா ?

இந்தியாவில் உள்நாட்டில் மட்டும், ஆண்டுக்கு, 79,000 கோடி ரூபாய்க்கு மேல் ஆங்கில முறை மருந்துப் பொருட்கள் விற்பனையாகின்றன. ( இதைத் தவிர, சுமார் 50,000 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதியாகின்றன.

அவற்றை எந்த விலைக்காவது விற்றுத் தொலைக்கட்டும் – நமக்கு கவலை இல்லை ..!)
Drug Prices Control Order 1995 என்று ஒரு உத்திரவை மத்திய அரசு வெளியிட்டதால்
யாருக்குப் பயன்…?

உயிர் காக்கும் மருந்துகளின் பட்டியலில், கூடுதலாக சில மருந்துகளின் பெயரைச் சேர்த்து அவர்களின் விலையையும் கட்டுப்படுத்தி, மத்திய அரசு அண்மையில் ஒரு உத்தரவு வெளியிட்டது.
சேர்க்கப்பட்ட மருந்துகள் – காச நோய்( டிபி ), ஆஸ்த்துமா, மலேரியா போன்ற நோய்களுக்கானவை.

இது அநியாயம் என்று கூறி, இந்த உத்திரவை செல்லாது என்று அறிவிக்கக் கோரி – அகில இந்திய மருந்து தயாரிப்பாளர் சங்கம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறது. வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த விலைக்குறைப்பே ஒரு கண்துடைப்பு. சும்மா பொதுமக்களை திருப்திப்படுத்துவதற்காக அவ்வப்போது மத்திய அரசும், மருந்து தயாரிப்பாளர்களும் கூட்டாகச் சேர்ந்து போடும் ஒரு நாடகம்.
விலைக்கட்டுப்பாடு செய்யப்பட்ட மருந்துகள் பட்டியல் என்று ஒன்றை அரசாங்கம் வெளியிடுவதால் மக்களுக்கு உண்மையான பயன் கிடைப்பதில்லை.. அதிலிருந்து தப்ப, அதை ஏமாற்ற, மாற்று வழிகளை மருந்து தயாரிப்பாளர்கள் உடனுக்குடனே கண்டுபிடித்து விடுகிறார்கள்..

20 – 30 சதவீத லாபத்திற்கு மேல் எந்த மருந்துப் பொருளின் விலையும்
நிர்ணயிக்கப்படக்கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் -விலையைத் தொடர்ந்து கண்காணித்தால் - இவர்களை வழிக்குக் கொண்டு வர முடியாதா என்ன ?

கரும்புக்கு சட்டம் கொண்டு வரலாம் -
நெல்லுக்கு சட்டம் கொண்டு வரலாம் -
மருந்துக்கு கொண்டு வர முடியாதா என்ன ?
எந்த நொண்டிக் காரணத்தையாவது சொல்லி இது நடைமுறையில் சாத்தியமில்லை என்று
கூறுவார்களேயானால் - மருந்து உற்பத்தியை - அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும்.

generic drugs- முறையை மத்திய அரசு மக்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்த முடியாதா ?
டாக்டர்கள், மருந்துகளை ( while prescribing medicines ) எழுதிக்கொடுக்கும்போது,
பிராண்டு பெயர்களை (brand -company name of the medicine ) எழுதாமல், ஜெனெரிக் பெயர்களை (generic name of the drugs ) எழுத வேண்டும் என்று சட்டம் கொண்டு வர அரசுக்கு உரிமை இருக்கிறது.
இதை வலியுறுத்தி ஒரு சட்டம் கொண்டு வரலாம்.

மக்களின் நலனைக் கருதி – எவ்வளவோ பொருட்களை உற்பத்தி செய்வதை/ விற்பனையை நாட்டுடைமை ஆக்கவில்லையா ? அது போல் மக்களின் நலன் கருதியே மருந்து உற்பத்தியையும் நாட்டுடைமை ஆக்கலாம்.

ஜெனெரிக் மருந்துகளை உற்பத்தி செய்வதை விற்பனை செய்வதை ஊக்குவிக்கலாம். ஏன் – அரசே, பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் (Public Sector Undertakings ) இத்தகைய மருந்துகளின் உற்பத்தியில் ஈடுபடலாம்.

மனமிருந்தால் மார்க்கம் நிச்சயம் உண்டு. மக்களுக்கு மிக மிக அத்தியாவசியமான இத்தகைய மருந்துகளின் விலையை, சாதாரண மக்களின் வாங்கும் சக்திக்கு உட்பட்ட நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அரசின் கடமை. அரசாங்கம் இருப்பது -
கொள்ளையடிக்கும் மருந்து தயாரிப்பாளர் கூட்டத்திற்காகவா -அல்லது
இந்த நாட்டின் சாதாரண குடிமக்களுக்காகவா….??

இந்த நிலையில் போலி மருந்துகள் வேறு. கண்டு கொள்ள அரசு தயாராக இல்லை.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

உயிர் காக்கும் மருந்திலுமா கொள்ளை Empty Re: உயிர் காக்கும் மருந்திலுமா கொள்ளை

Post by ஜனனி Thu Aug 07, 2014 10:33 pm

இந்த நிலையில் போலி மருந்துகள் வேறு. கண்டு கொள்ள அரசு தயாராக இல்லை.
மக்கள் என்ன செய்வது படிப்பு இல்லை ..
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum