Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
சொந்த நாடு தரும் பரிசு இதுதானா...? - கதறும் இந்திய உளவாளி!
Page 1 of 1
சொந்த நாடு தரும் பரிசு இதுதானா...? - கதறும் இந்திய உளவாளி!
தாய் நாட்டிற்காக உளவு பார்த்து பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டுகள் சித்ரவதைகளை அனுபவித்து திரும்பிய இந்திய உளவாளி ஒருவர், தனக்கு பிளாட்பாரத்தில் ஒரு தள்ளுவண்டி கடை வைத்து பிழைக்கக்கூட அனுமதிக்காமல் அரசும், அதிகாரிகளும் கைவிட்டுவிட்டதாக கண்ணீர்மல்க கூறுவதோடு, பிரதமர் மோடி தலையிட்டு தனக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் வினோத் ஷகானி. 37 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதற்காக உளவுத் துறையால் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ரகசியமாக தங்கியிருந்தபடியே இந்தியாவுக்காக உளவு பார்த்து தகவல்களை அனுப்பி வந்த அவர், ஒருகட்டத்தில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார்.
பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டு சித்ரவதை
இதனையடுத்து பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 11 ஆண்டுகளாக தினமும் அடி, உதை, எலெக்ட்ரிக் ஷாக் உள்ளிட்ட கடுமையான சித்ரவதைகளை எதிர்கொண்டார் ஷகானி. ஆனால் அப்பொழுதெல்லாம் ஷகானி அதற்காக மனம் கலங்கவில்லை. அந்த சித்ரவதைகளை கஷ்டமாக இருந்தாலும் தாய்நாட்டிற்காக என்ற எண்ணத்தில் பொறுத்துக்கொண்டார்.
அவ்வாறு கடுமையான சித்ரவதைகளை எதிர்கொண்டபோதும் மனம் கலங்காது தைரியத்துடன் அதனை எதிர்கொண்ட ஷகானி, 11 ஆண்டு சிறைவாசத்திற்கு பின்னர் தாய்நாடு திரும்பிய தனக்கு அரசு எவ்வித உதவியும் அளிக்காமல் கைவிட்ட நிலையில், குடும்பத்தினர் பசி, பட்டினியுடன் வாடுவதை கண்டு, மிகவும் மனமுடைந்துபோயுள்ளார்.
வறுமையில் குடும்பம்
தனது இளமை பருவம் முழுவதையும் பாகிஸ்தான் சிறை தின்றுவிட்ட நிலையில், 61 வயதில் விடுதலையாகி சொந்த நாடு திரும்பிய அவருக்கு கிடைத்த பரிசு, குடும்பத்தினர் வறுமையில் வாடுவதை பார்த்ததுதான்.
அரசு தரப்பில் எதுவும் உதவி கிடைக்காமல் போக, அதனை கண்டுகொள்ளாத ஷகானி, தானே உழைத்து குடும்பத்தினரின் பசியை போக்க சாலையோரத்தில் தள்ளுவண்டி உணவு கடை ஒன்றை வைத்து பிழைக்க முடிவு செய்தார். தள்ளுவண்டி கடை சில நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில், அதிகாரிகள் அதனை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டு, அதனை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
'பாகிஸ்தான் சிறை சித்ரவதையைவிட தாய்நாட்டில் கொடுமை'
இந்நிலையில் தனது குடும்பத்தினருக்கு வாழ்வாதாரமாக உள்ள இந்த ஒரே தள்ளுவண்டி கடையையும்அகற்ற முயற்சிப்பதை பார்த்து ஷகானி, ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தை எதிர்த்து உண்ணாவிரத மற்றும் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், " பாகிஸ்தான் சிறையில் என்னைப்போன்ற இந்திய உளவாளிகள் மிகக்கடுமையான சித்ரவதைகளை எதிர்கொண்டோம். ஆனால் இன்று நாங்கள் எங்களது வீட்டிற்கு சென்றால் எங்களது பிள்ளைகள் பட்டினியால் வாடுவதைத்தான் பார்க்க நேரிடுகிறது. அதனை பார்க்கும் என்னால் கதறி அழுவதை நிறுத்த முடியவில்லை. இது நாங்கள் பாகிஸ்தான் சிறையில் அனுபவித்த சித்ரவதைகளைவிட கொடுமையாக உள்ளது. எங்களது கதறல்களை யாராவது காதுகொடுத்து கேட்பார்களா...? நான் அரசிடம் காசு பணம் கேட்கவில்லை. பிழைக்க தள்ளுவண்டி நடத்துவதற்கு அனுமதி கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். இதற்கான யாரிடம் சென்று நாங்கள் முறையிடுவது? எங்களுக்கும் வாழ்வதற்கு உரிமை உள்ளது" என கண்ணீர் மல்க கூறினார்.
இது தொடர்பாக ஜம்மு நகராட்சி கமிஷனரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது," அவர் ஏன் தர்ணா போராட்டம் நடத்துகிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் தள்ளுவண்டி கடை நடத்தும் உரிமை இருப்பதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. அந்த இடத்தில் கடை வைத்துக்கொள்ளுங்கள் என்று யாராவது சில அதிகாரிகள் சொல்லியிருப்பார்கள். ஆனால் அது எடுபடாது" என்றார்.
மோடி உதவ கோரிக்கை
இவ்வாறு ஜம்மு காஷ்மீர் அரசு கைவிரித்துவிட்ட நிலையில், ஷகானியின் தற்போதைய ஒரே நம்பிக்கையாக இருப்பது பிரதமர் நரேந்திர மோடிதான். ஆதரவற்று நிற்கும் தனக்கு மோடி தலையிட்டு உதவ வேண்டும் எனக் கூறும் அவர், " எனது இளமையை பாகிஸ்தான் பறித்துக்கொண்டது. எனது வயோதிகத்தையோ வறுமையுடன் கடக்க வைத்துவிட்டது இந்தியா. எனவே நான் தற்போது பிரதமர் மோடியை கேட்டுக்கொள்வதெல்லாம், யாராவது ஒரு அதிகாரியை ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பிவைத்து 'எனக்கு இனியாவது நல்லகாலம் இருக்குமா அல்லது துன்பத்துடனேயே கழியுமா...?' என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
தாய் நாட்டிற்காக உளவு பார்த்து பாகிஸ்தான் சிறையில் சித்ரவதை அனுபவித்ததை இன்று உணர்வதுபோன்று, நான் ஒருபோதும் கசப்பானதாகவோ, துன்பமாகவோ நினைத்ததில்லை. தன்னலமில்லாத ஒரு உண்மையான இந்திய வீரரின் கடமையாகவே அதனை நான் கருதினேன். தற்போது நான் வேண்டுவெதெல்லாம் பணமோ அல்லது அங்கீகாரமோ அல்ல. தள்ளுவண்டி நடத்திக்கொள்வதற்கான கருணையும், நியாயமான கவுரமும் மட்டுமே" என்கிறார்.
வினோத் ஷகானிக்கு விமோசனம் பிறக்கு உதவுமா அரசு? - மேகன்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் வினோத் ஷகானி. 37 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதற்காக உளவுத் துறையால் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ரகசியமாக தங்கியிருந்தபடியே இந்தியாவுக்காக உளவு பார்த்து தகவல்களை அனுப்பி வந்த அவர், ஒருகட்டத்தில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார்.
பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டு சித்ரவதை
இதனையடுத்து பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 11 ஆண்டுகளாக தினமும் அடி, உதை, எலெக்ட்ரிக் ஷாக் உள்ளிட்ட கடுமையான சித்ரவதைகளை எதிர்கொண்டார் ஷகானி. ஆனால் அப்பொழுதெல்லாம் ஷகானி அதற்காக மனம் கலங்கவில்லை. அந்த சித்ரவதைகளை கஷ்டமாக இருந்தாலும் தாய்நாட்டிற்காக என்ற எண்ணத்தில் பொறுத்துக்கொண்டார்.
அவ்வாறு கடுமையான சித்ரவதைகளை எதிர்கொண்டபோதும் மனம் கலங்காது தைரியத்துடன் அதனை எதிர்கொண்ட ஷகானி, 11 ஆண்டு சிறைவாசத்திற்கு பின்னர் தாய்நாடு திரும்பிய தனக்கு அரசு எவ்வித உதவியும் அளிக்காமல் கைவிட்ட நிலையில், குடும்பத்தினர் பசி, பட்டினியுடன் வாடுவதை கண்டு, மிகவும் மனமுடைந்துபோயுள்ளார்.
வறுமையில் குடும்பம்
தனது இளமை பருவம் முழுவதையும் பாகிஸ்தான் சிறை தின்றுவிட்ட நிலையில், 61 வயதில் விடுதலையாகி சொந்த நாடு திரும்பிய அவருக்கு கிடைத்த பரிசு, குடும்பத்தினர் வறுமையில் வாடுவதை பார்த்ததுதான்.
அரசு தரப்பில் எதுவும் உதவி கிடைக்காமல் போக, அதனை கண்டுகொள்ளாத ஷகானி, தானே உழைத்து குடும்பத்தினரின் பசியை போக்க சாலையோரத்தில் தள்ளுவண்டி உணவு கடை ஒன்றை வைத்து பிழைக்க முடிவு செய்தார். தள்ளுவண்டி கடை சில நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில், அதிகாரிகள் அதனை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டு, அதனை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
'பாகிஸ்தான் சிறை சித்ரவதையைவிட தாய்நாட்டில் கொடுமை'
இந்நிலையில் தனது குடும்பத்தினருக்கு வாழ்வாதாரமாக உள்ள இந்த ஒரே தள்ளுவண்டி கடையையும்அகற்ற முயற்சிப்பதை பார்த்து ஷகானி, ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தை எதிர்த்து உண்ணாவிரத மற்றும் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், " பாகிஸ்தான் சிறையில் என்னைப்போன்ற இந்திய உளவாளிகள் மிகக்கடுமையான சித்ரவதைகளை எதிர்கொண்டோம். ஆனால் இன்று நாங்கள் எங்களது வீட்டிற்கு சென்றால் எங்களது பிள்ளைகள் பட்டினியால் வாடுவதைத்தான் பார்க்க நேரிடுகிறது. அதனை பார்க்கும் என்னால் கதறி அழுவதை நிறுத்த முடியவில்லை. இது நாங்கள் பாகிஸ்தான் சிறையில் அனுபவித்த சித்ரவதைகளைவிட கொடுமையாக உள்ளது. எங்களது கதறல்களை யாராவது காதுகொடுத்து கேட்பார்களா...? நான் அரசிடம் காசு பணம் கேட்கவில்லை. பிழைக்க தள்ளுவண்டி நடத்துவதற்கு அனுமதி கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். இதற்கான யாரிடம் சென்று நாங்கள் முறையிடுவது? எங்களுக்கும் வாழ்வதற்கு உரிமை உள்ளது" என கண்ணீர் மல்க கூறினார்.
இது தொடர்பாக ஜம்மு நகராட்சி கமிஷனரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது," அவர் ஏன் தர்ணா போராட்டம் நடத்துகிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் தள்ளுவண்டி கடை நடத்தும் உரிமை இருப்பதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. அந்த இடத்தில் கடை வைத்துக்கொள்ளுங்கள் என்று யாராவது சில அதிகாரிகள் சொல்லியிருப்பார்கள். ஆனால் அது எடுபடாது" என்றார்.
மோடி உதவ கோரிக்கை
இவ்வாறு ஜம்மு காஷ்மீர் அரசு கைவிரித்துவிட்ட நிலையில், ஷகானியின் தற்போதைய ஒரே நம்பிக்கையாக இருப்பது பிரதமர் நரேந்திர மோடிதான். ஆதரவற்று நிற்கும் தனக்கு மோடி தலையிட்டு உதவ வேண்டும் எனக் கூறும் அவர், " எனது இளமையை பாகிஸ்தான் பறித்துக்கொண்டது. எனது வயோதிகத்தையோ வறுமையுடன் கடக்க வைத்துவிட்டது இந்தியா. எனவே நான் தற்போது பிரதமர் மோடியை கேட்டுக்கொள்வதெல்லாம், யாராவது ஒரு அதிகாரியை ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பிவைத்து 'எனக்கு இனியாவது நல்லகாலம் இருக்குமா அல்லது துன்பத்துடனேயே கழியுமா...?' என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
தாய் நாட்டிற்காக உளவு பார்த்து பாகிஸ்தான் சிறையில் சித்ரவதை அனுபவித்ததை இன்று உணர்வதுபோன்று, நான் ஒருபோதும் கசப்பானதாகவோ, துன்பமாகவோ நினைத்ததில்லை. தன்னலமில்லாத ஒரு உண்மையான இந்திய வீரரின் கடமையாகவே அதனை நான் கருதினேன். தற்போது நான் வேண்டுவெதெல்லாம் பணமோ அல்லது அங்கீகாரமோ அல்ல. தள்ளுவண்டி நடத்திக்கொள்வதற்கான கருணையும், நியாயமான கவுரமும் மட்டுமே" என்கிறார்.
வினோத் ஷகானிக்கு விமோசனம் பிறக்கு உதவுமா அரசு? - மேகன்
Similar topics
» சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு: பி.சி.சி.ஐ., அறிவிப்பு
» இந்திய விமானப்படை விமானிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கிய சீன பாதுகாப்பு அமைச்சர்
» நாடு திரும்பிய இந்திய மீனவர்கள்: இலங்கை சிறையிலிருந்து விடுதலை
» நோபெல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி - சி.வி. ராமன் ~ பொது அறிவு புதையல்
» கறுப்புப் பண விவகாரத்தில் குட்டி நாடு பதில் :இந்திய கோரிக்கை நிராகரிப்பு
» இந்திய விமானப்படை விமானிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கிய சீன பாதுகாப்பு அமைச்சர்
» நாடு திரும்பிய இந்திய மீனவர்கள்: இலங்கை சிறையிலிருந்து விடுதலை
» நோபெல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி - சி.வி. ராமன் ~ பொது அறிவு புதையல்
» கறுப்புப் பண விவகாரத்தில் குட்டி நாடு பதில் :இந்திய கோரிக்கை நிராகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|