TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மஞ்சள் காமாலை பற்றிய சந்தேகமும் அதன் விளக்கமும்

Go down

மஞ்சள் காமாலை பற்றிய சந்தேகமும் அதன் விளக்கமும்  Empty மஞ்சள் காமாலை பற்றிய சந்தேகமும் அதன் விளக்கமும்

Post by krishnaamma Sat Apr 19, 2014 9:50 pm

மஞ்சள் காமாலை வருவது ஏன்?

மஞ்சள்காமாலையைப் பற்றி கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிறப்பு  மருத்துவருமான டாக்டர். மனோகரன் விளக்கம் அளிக்கிறார்.
[You must be registered and logged in to see this image.]
நம் உடலில் அவ்வப்போது ஏதாவது நோய் வந்து சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றைக் கவனியாமல் விட்டுவிட்டால் நிலைமை மிக  மோசமாகிவிடும். அவற்றில் மிகவும் ஆபத்தானதும் மிகவும் கவனிக்கத்தக்கதாகவும் உள்ள நோய் மஞ்சள் காமாலை. நம் உடலிலுள்ள ஒரு உறுப்பான  கல்லீரல், வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு ரத்தத்திலுள்ள பிலுருபினின் அளவு அதிகரிப்பது மஞ்சள் காமாலை ஆகும். மஞ்சள் காமாலை  உள்ளவர்களுக்கு தோல் மஞ்சள் நிறமாகவும், கண்களின் வெண் படலத்தில் மஞ்சள் நிறம் படிந்தும் காணப்படும். சிறுநீர் தொடர்ந்து மஞ்சள் நிறத்தில்  இருக்கும்.

மஞ்சள் காமாலையின் வகைகள்?


வைரஸ் கிருமியால் பாதிக்கப்படுவது : இது ஹெபடைடிஸ் ஏ.பி.சி என்று மூன்று வகைப்படும்.

அப்ஸ்ட்ரக்டிவ் ஜான்டீஸ் :

பொதுவாக கல்லீரல் பித்தநீரை சுரந்து உணவு செரித்தலுக்கு பித்தநீரை அனுப்பும் வேலையைச் செய்கிறது. இவ்வாறு கல்லீரலில் சுரக்கும்  பித்தநீரானது செல்லும் பித்தநாளத்தில் சில சமயங்களில் பித்தக்கல்லால் அடைப்பு ஏற்பட்டாலோ, பித்தநாளம் சுருங்குவதாலோ அல்லது  பித்தநாளத்திற்கு வெளியில் கட்டி ஏற்பட்டு பித்தநாளத்தை நெருக்கினாலோ ஏற்படும் காமாலைக்கு அப்ஸ்ட்ரக்டிவ் ஜான்டீஸ் என்று பெயர்.  அப்ஸ்ட்ரக்டிவ் என்றால் அடைப்பு என்று பெயர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மலம் வெளுத்து காணப்படும். உடலில் அரிப்பு ஏற்படும். பசியின்மை, சோம்பல், களைப்பு, வாந்தி, குமட்டல், தலைவலி, உடல் எடை குறைவு, உடல் அரிப்பு, சாதாரண காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல்  போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். காமாலை முற்றிய நிலையில் தோல் பகுதி, கண்கள் மற்றும் நகப்பகுதியில் மஞ்சளாகவும் சிறுநீர் மற்றும் மலம்  மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்.

மஞ்சள் காமாலை வருவதற்கான காரணங்கள்


ரத்தத்தில் பிலுருபின் அளவு அதிகரித்தல், கல்லீரலை பாதிக்கும் சில நோய்கள், பித்தநீர் பை மற்றும் பித்தநாளத்தில் ஏற்படும் அடைப்பு, மது  அருந்துதல், மாசுபட்ட தண்ணீரில் காணப்படும் நோய் கிருமிகள் போன்றவை.

தடுப்பு முறைகள்


தண்ணீரைக் காய்ச்சி பருக வேண்டும். தன் சுத்தம் பேண வேண்டும். துரித உணவை தவிர்க்க வேண்டும். ரத்தம் செலுத்தும்போது முறையாக  பரிசோதனை செய்த பின் செலுத்த வேண்டும். மஞ்சள்காமாலை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மஞ்சள் காமாலை பற்றிய சந்தேகமும் அதன் விளக்கமும்  Empty மஞ்சள் காமாலை ஏன் ஏற்படுகிறது?

Post by krishnaamma Sat Apr 19, 2014 9:51 pm

நம் உடலில் உள்ள மிகச்சிறந்த ஒரு உறுப்பான கல்லீரல் சுரக்கின்ற பித்தநீரின் அளவு இரத்தத்தில் அதிகமாகி பித்தப்பை பாதிக்கப்படுவதைத்தான்  மஞ்சள்காமாலை என்று கூறுகிறோம். மஞ்சள் காமாலை நோயாளிக்கு தோல் மஞ்சளாகவும், கண்களின் வெண்படலத்தில் மஞ்சள் நிறம் படிந்தும்  காணப்படும். மஞ்சள் காமாலையில் சில முக்கிய வகைகள் உண்டு. 
[You must be registered and logged in to see this image.]
அப்ஸ்ட்ரக்டிவ் மஞ்சள்காமாலை(Obstructive jaundice): அப்ஸ்ட்ரக்டிவ் என்றால் அடைப்பு என்று பொருள். பொதுவாக பித்தநீர் கல்லீரலால்  சுரக்கப்பட்டு பித்தநீர் குழாய் வழியாக பித்த நீர்ப்பைக்கு அனுப்பப்படுகிறது. பித்த நீர்ப்பை அதை சேகரித்து வைத்துக் கொண்டு உணவு செரித்தலுக்கு  குறிப்பாக கொழுப்பு சத்துள்ள உணவு செரித்தலுக்கு தேவையான பித்த நீரை அனுப்பும் வேலையை செய்கிறது.

இந்த அப்ஸ்ட்ரக்டிவ் மஞ்சள்காமாலை என்பது கல்லீரலால் சுரக்கப்பட்ட பித்தநீர் பித்த நீர்க்குழாயில் கொலஸ்ட்ரால், பித்தக் கல் போன்றவற்றால்  ஏற்படும் அடைப்பின் காரணமாக பித்த நீர்ப் பையை அடையாமல் குடலுக்குச் சென்று விடுகிறது. இவ்வாறு அடைப்பின் காரணமாக ஏற்படும்  காமாலைக்கு அப்ஸ்ட்ரக் டிவ் ஜான்டீஸ் என்று பெயர். இதில் சிறுநீர் கருப்பு நிறத்திலும் மலம் வெளுத்தும் காணப்படும்.

ஹெப்பட்டோ செல்லுலார் ஜான்டீஸ் (Hepatocellular jaundice):   கல்லீரல் செல்கள் சில நோய்களால் பாதிக்கப்படும் போது இது உண்டாகிறது.  இவ்வாறு கல்லீரலானது நோயால் பாதிக்கப்படும்போது அது தன் வேலையை சரிவர செய்ய முடியாத நிலையில் குறிப்பாக தன் வேலையில்  ஒன்றான பித்த நீரை, பித்தப்பைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்படுவதால், கல்லீரலால் சுரக்கப்படும் அந்த பித்தநீர் அங்கேயே தங்கி, ரத்தத்தில்  கலந்து விடுவதால் ஏற்படும் மஞ்சள் காமாலைக்குத்தான் ஹெப்பட்டோ செல்லுலார் ஜான்டீஸ் என்று பெயர். இவ்வகை நோயாளிகளுக்கு சிறுநீர்  அடர்கருப்பாக வெளியேறும்.

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. ரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதால், தான் மஞ்சள் காமாலையானது ஏற்படுகிறது. மஞ்சள்  காமாலையானது மூன்று வகையாக உள்ளன. அவை கல்லீரலுக்கு முன், கல்லீரல் மற்றும் கல்லீரலுக்குப் பின் என்பன. இதில் கல்லீரலுக்கு முன்  காமாலையானது, ரத்த சிவப்பணுக்கள் அதிகமாக உடைவதால் ஏற்படும்.  கல்லீரல் மஞ்சள் காமாலையில் பிலிரூபினின் வெளியேற்றம் அதிகமாக  இருப்பதால், நுரையீரல் செயல்பாட்டை குறைத்து, கல்லீரலில் உள்ள செல்களை அழிக்கும். கல்லீரலுக்குப் பின் காமாலையில், பித்த நாளத்தில் பித்த  நீர் செல்வதில் ஏற்படும் தடையினால் உண்டாவது ஆகும். 

பொதுவாக மஞ்சள் காமாலையை கண்கள் மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தின் போது மஞ்சள் நிறத்தில் இருப்பதை வைத்து தான் கண்டறிவோம்.  ஆனால் இது மட்டும் மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் இல்லை. நமக்கு தெரியாத பல அறிகுறிகள் உள்ளன. அத்தகையவற்றை தெரிந்து  கொண்டால், முன்கூட்டியே மஞ்சள் காமாலையை தடுத்துவிடலாம்.  மஞ்சள் நிற சிறுநீர் உடல் வறட்சியினால் கூட ஏற்படும். ஆனால் மஞ்சள்  காமாலை என்றால் நன்கு அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறும். மஞ்சள் நிறத்தில் சருமம் மற்றும் கண்கள் காணப்பட்டால், அதுவும் மஞ்சள்  காமாலைக்கான அறிகுறியாகும். ஆனால் இதனை பலர் சரியாக கவனிக்கமாட்டார்கள். 

ஏனென்றால் அனீமியா காரணமாகவும், சருமம் வெளிர் நிறத்தில் காணப்படும். ஆகவே கவனமாக இருக்கவும். வயிற்றின் வலது பக்கத்திற்கு சற்று  கீழேயும் சில சமயங்களில் சற்று மேலேயும் கடுமையான வலி அடிக்கடி ஏற்படும். இத்தகைய வலி மஞ்சள் காமாலைக்கு மட்டும் ஏற்படாது,  பித்தக்கற்கள் இருந்தாலும் ஏற்படும் என்பதால், அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மூட்டு வலி பல காரணங்களால் ஏற்படும். ஆகவே  பலர் மஞ்சள் காமாலையின் போது ஏற்படும் மூட்டு வலியை சாதாரணம் என்று நினைத்து விட்டுவிடுவார்கள். ஒருவேளை மூட்டு வலியுடன், வேறு  ஏதாவது மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.  

மஞ்சள் காமாலையின் அறிகுறிகளுள் பசியின்மையும் ஒன்று. இது பலருக்கு இருக்கும் சாதாரண பிரச்னைகளில் ஒன்றாக இருப்பதால், பலர் கண்டு  கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த அறிகுறியுடன், மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படுமாயின் அது மஞ்சள் காமாலை தான்.  வாந்தியும் பல காரணங்களால் ஏற்படும். ஆனால் தேவையில்லாமல் குமட்டல் அல்லது வாந்தி ஏற்பட்டால், அது ரத்தத்தில் பிலிரூபின் அளவு  அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. பித்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, ரத்தத்தில் பிலிரூபினின் அளவை அதிகரித்து விடுவதால்  உடல் அரிப்பு ஏற்படும். 

ஆகவே திடீரென்று உடலில் அரிப்புகள் அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். உடலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், அது  காமாலைக்கான அறிகுறியாகும். ஆனால் பலர் இது சாதாரண உடல் வெப்பம் தான் என்றும், வெயிலில் சுற்றியதால், உடல் வெப்பமாக உள்ளது  என்றும் சாதாரணமாகவிடுகின்றனர். ஆனால் உடல் வெப்பத்துடன் குளிர்ச்சியும் இருந்தால், அது காமாலைக்கான அறிகுறி.உடல் சோர்வுடன் மற்ற  மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் 2 வாரத்துக்கு மேல் தொடர்ந்தால், அதுவும் மஞ்சள் காமாலைக்கான அறிகுறியாகும்.

மஞ்சள் காமாலை வருவதற்கான காரணங்கள்

* பரம்பரைத் தன்மை
* ரத்தத்தில் பித்த நீரின் அளவு அதிகரித்தல்
* கல்லீரலை பாதிக்கும் சில நோய்கள்
* பித்த நீர்ப்பை மற்றும் பித்தநீர்க் குழாயில் ஏற்படும் அடைப்பு
* ரத்த சிவப்பணுக்களின் சிதைவு
* மது அருந்துதல்
* மற்ற நோய்களுக்காக எடுக்கப்படும் அலோபதி மருந்துகள்
* மாசு பட்ட தண்ணீரில் காணப்படும் நோய்க்கிருமிகள் போன்றவை.

-தினகரன் -
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மஞ்சள் காமாலை பற்றிய சந்தேகமும் அதன் விளக்கமும்  Empty மஞ்சள் காமாலை - அறிகுறி & சிகிச்சை முறைகள்

Post by krishnaamma Sat Apr 19, 2014 9:52 pm

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோயே அல்ல. நோயின் அறிகுறி மட்டுமே. மஞ்சள் காமாலையை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடைந்துவிடலாம். வயதான சிவப்பு அணுக்கள் மண்ணீரலில் (Spleen)அழிக்கப்படும்போது பிலிரூபின் (Spleen) என்ற நிறப்பொருள் உடலில் உற்பத்தி ஆகிறது. ரத்தத்தின் வழியே பிலிரூபின், பித்தநீர் மூலமாக மலம், சிறுநீர் வழியில் வெளியேறுகிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. மது அருந்துதலாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலைத் தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. 

அறிகுறி 

ஒருவருக்கு `மஞ்சள் காமாலை' என்றால் வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும். 

கண்ணின் வெள்ளைப்படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும். உடலும் மெலிந்து காணப்படும். 

மஞ்சள் காமாலை என்பது அடைப்புக் காமாலை என்றும், அடைப்பில்லா காமாலை என்றும் இருவகைப்படும். அடைப்புக் காமாலையில் கணைய கோளாறு, பித்தக்குழாய் கற்கள், பித்தக்குழாய் புற்றுநோய் என்ற மூன்று உட்பிரிவும், அடைப்பில்லா காமாலையில் வைரஸ் கிருமிகள் (A,B,C,D,G,E) மதுபானம் பேக்டீரியாக்கள் (டைபாய்டு காய்ச்சல்), மலேரியா என்ற ஒட்டுண்ணிகள், சில்லறை மருந்துகள், மதுபானம் அருந்துவதால் ஏற்படுகிறது. 

கொழுப்புச் சத்துள்ள உணவை நாம் உட்கொள்ளும்போது அதை ஜீரணிப்பதற்காக கல்லீரல் பித்தநீரை சுரக்கிறது. இந்த நீர் பித்தபைக்கு குழாய் மூலம் வருகிறது. இந்த பித்தக்குழாயில் கல் மற்றும் கேன்சர் (Cancer) கட்டிகளாய் அடைப்பு ஏற்படலாம். அப்படி அடைப்பு ஏற்பட்டால் பித்தநீர் கல்லீரலிலேயே தேங்கி ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது அடைப்பு காமாலை எனப்படுகிறது. 

கல்லீரலை தாக்கும் A,B,C,D,E,G என்ற பலவகையான வைரஸ்களாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் வந்தாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரலாம். மதுபானங்கள் அருந்துவதன் மூலமாகவும் மஞ்சள் காமாலை நேரிடலாம்.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மஞ்சள் காமாலை பற்றிய சந்தேகமும் அதன் விளக்கமும்  Empty Re: மஞ்சள் காமாலை பற்றிய சந்தேகமும் அதன் விளக்கமும்

Post by krishnaamma Sat Apr 19, 2014 9:53 pm

சிகிச்சை முறைகள் 

அடைப்புக் காமாலை, அடைப்பில்லா காமாலை ஆகிய இரண்டுக்கும் சிகிச்சை முறைகள் வேறுபடும். வயிற்றின் மேல்பாகத்தில் அதிக வலி, விஷக்காய்ச்சல் ஆகியன அடைப்பு காமாலைக்கான அறிகுறியாகும். ரத்தப்பரிசோதனை மற்றும் ஸ்கேன் மூலமாக இரண்டு காமாலைகளையும் வேறுபடுத்த முடியும். பொதுவாக மக்கள் பிலிரூபினின் அளவை மட்டும் ரத்தத்தில் பார்த்தால் போதுமானது என்று எண்ணுகிறார்கள். இது தவறானது. பிலிரூபின் அளவு மட்டுமின்றி கல்லீரலின் வேலை செய்யும் திறனையும் அறிய வேண்டும். இதற்கு Liver Function Test GßÝ என்று அழைக்கப்படும் புரத அளவு, நொதிகளின் அளவு போன்ற மற்ற ரத்தப் பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும். 

அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலமாக பித்தக்குழாயில் உள்ள கற்கள், கட்டிகள் போன்றவற்றை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். எந்தவகை மஞ்சள் காமாலை என்பதை அறியாமல் கீழாநெல்லி போன்ற மருந்துகளை சுயமாகச் சாப்பிட்டுவிட்டு நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதால்தான் சிகிச்சை பலனில்லாமல் போகிறது. 

எண்டோஸ்கோப்பி மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ அடைப்புக் காமாலையை குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது. பித்தக்குழாய் கற்களால் ஏற்படும் காமாலையை சரிசெய்ய முன்பு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் இன்றைய அதிநவீன விஞ்ஞான வளர்ச்சியில் எண்டோஸ்கோப்பி மூலம் ERCP என்ற அதிநவீன சிகிச்சை முறையால் கல்லை ஆபரேஷன் செய்யாமலேயே வெளியே எடுத்துவிடலாம். 

புற்றுநோயினால் பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் `ஸ்டென்ட்' எனும் செயற்கை குழாயை எண்டோஸ்கோப்பி மூலம் பித்தக்குழாயின் உள்ளே பொருத்தி குழாய் சுருக்கத்தை நீக்கி மஞ்சள் காமாலையை குறைக்கலாம். 

சிகிச்சை முறைகள் 

கல்லீரல் சுருக்க நோயினால் (CIRRHOSIS) உணவுக்குழாயில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, ஆபத்தான நிலை உருவாகலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்தவாந்திக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை அளிக்க வேண்டியதிருந்தது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் மிகுதியாக இருந்தன. ஆனால் தற்போதைய மருத்துவ வளர்ச்சியினால் எண்டோஸ்கோப்பி மூலம் ரத்த வாந்தியை தடுக்க பேண்டிங் (Banding), (Sclero theoraphy),க்ளு இன்ஜெக்ஷன் (Glue injection) போன்ற நவீன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆஸ்பிரின் போன்ற தலைவலி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்வதாலும் ரத்தவாந்தி ஏற்படலாம். அவற்றையும் எண்டோஸ்கோப்பி மூலம் குணப்படுத்த முடியும். 

எப்படி பரவுகிறது? 

வைரஸ் A மற்றும் E கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலை, அசுத்தமான நீரையும், ஈ மொய்த்த தின்பண்டங்களை (facco-oral Route) உட்கொள்வதால் பரவுகிறது. சாக்கடை நீர் கலந்த குடிநீர் மற்றும் அசுத்தமான நீரை குடிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படும். 

வைரஸ் B,C,D மற்றும் `G' வகை கிருமிகள் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு எப்படி பரவுகிறது என்பதை பார்ப்போம். 

1. பலமுறை, பலருக்கு பயன்படுத்திய ஊசியை உபயோகப்படுத்தும் போது, 2. நோயால் பாதிக்கப்பட்ட ரத்தம் கொண்ட தாயிடமிருந்து குழந்தைக்கும், நோயால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் கொண்டவருடன் உடலுறவு கொள்பவருக்கும், போதை ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு மேற்கண்ட விபரீதங்கள் நேரிடலாம். இதில் `B' வைரஸ் மிகவும் அபாயகரமானது. ஹெபடைட்டிஸ் `B' ஒரு உயிர்க்கொல்லியாகும். இது கல்லீரல் சுருக்க நோய்களின் அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்நோய் முற்றினால் பசியின்மை, கால்வீக்கம், வயிறு வீக்கம் போன்றவையும் ஏற்படும். முற்றிய நிலையில் ரத்தவாந்தி, புற்றுநோயும் வரும். 

தடுப்பு நடவடிக்கை 

மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு அவசியமான ஒன்று. ஆனால் எந்தவகையான மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது? கல்லீரல் வியாதி எந்த நிலையில் இருக்கிறது? என்பதை அறிந்த பின்னரே தகுந்த உணவு முறையை பின்பற்ற வேண்டும். 

ஹெபடைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாவுச்சத்துக்கள் அதிகமாக உள்ள பொருட்களையும், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து குறைந்த உணவையும் உட்கொள்ளுங்கள். மாமிச உணவு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. உப்பு, காரம் வகைகளை அளவோடு சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சைக்காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகமாக சாப்பிடலாம். ஹெபடைட்டிஸ் A மற்றும் B-+Vயை தடுப்பூசி மூலம் விரட்டியடிக்கலாம். `B' _க்கு தடுப்பு ஊசி போடுவதன் மூலம் `D' வைரஸ$ம் நம்மை அண்டாது. ஆனால் C மற்றும் E-fj தடுப்பு ஊசியே கிடையாது. 

`B' வைரஸ் தாக்கியிருந்தால் ஒன்றுமுதல் 6 மாதங்கள் வரை மூன்று ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். 

`A' வைரஸ் என்றால் 6 மாதங்கள் என்ற முறையில் ஊசிப் போட்டுக்கொள்ள வேண்டும். 

உரிய இடைவெளியில் தடுப்பூசி போடவில்லை என்றால் உரிய பயன் கிடைக்காது. 

ரத்தம் மூலம் பரவும் வைரஸ்கள் `B' மற்றும் `C'. எனவே ரத்தம் செலுத்தும்போது இக்கிருமிகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியமானதாகும். 

வருமுன் காப்போம் 

மஞ்சள் காமாலையை அறவே தடுப்பது அவசியமானதாகும். அதற்கு நன்கு காய்ச்சி, வடிகட்டிய நீரை பருகுங்கள். வெளியூர் மற்றும் உள்ளூர் பயணங்களிலும் காய்ச்சிய நீரையே பருகுங்கள். வீதியோரங்களில் விற்கும் கண்ட தின்பண்டங்களையும், ஈமொய்க்கும் பண்டங்களையும் கண்டு விலகி ஓடுங்கள். நகங்களை, கைகளை நன்கு சுத்தமாக வைத்திருங்கள். மலம் கழிந்த பின்னர் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள். பச்சைக்காய்கறிகளை `Salad' முறையில் உட்கொள்வது இன்றைய பேஷனாக உள்ளது. அந்த காய்கறிகள் நன்கு சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அறிந்துகொள்வது நல்லது. மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள். மஞ்சள் காமாலை நோய் உங்களை கண்டு விலகி ஓடலாம்.

Thinaboomi article
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மஞ்சள் காமாலை பற்றிய சந்தேகமும் அதன் விளக்கமும்  Empty Re: மஞ்சள் காமாலை பற்றிய சந்தேகமும் அதன் விளக்கமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum