TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நவி.பிள்ளையின் நகல் அறிக்கை: அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள் (அறிக்கை இணைப்பு)

Go down

நவி.பிள்ளையின் நகல் அறிக்கை: அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள் (அறிக்கை இணைப்பு) Empty நவி.பிள்ளையின் நகல் அறிக்கை: அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள் (அறிக்கை இணைப்பு)

Post by mmani Tue Mar 04, 2014 6:58 pm

நவி.பிள்ளையின் நகல் அறிக்கை: அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள் (அறிக்கை இணைப்பு) 1797453_489355144509740_754008501_n

நவி.பிள்ளையின் நகல் அறிக்கை: அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள் (அறிக்கை இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 04 மார்ச் 2014, 03:02.01 AM GMT ]

இலங்கையில் படையினரும் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரேரணை வரைபு நேற்று விநியோகிக்கப்பட்டது.

இலங்கைக்கு எதிராக நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கும் மூன்றாவது வரைபு இதுவாகும்.

இதில் உள்ளூர் ஆணைக்குழுக்களின் விசாரணைகளில் திருப்தி வெளியிடப்படாத நிலையில் குற்றங்களை கண்டுபிடிக்கும் வகையில் விசேட நிபுணர்களின் உதவிகள் பெறப்பட வேண்டும் என்று தமது வரைபில் பிள்ளை கோரியுள்ளார்.

இந்த வரைபின் மூலம் ஐக்கிய நாடுகளின் விசாரணை பொறிமுறை ஒன்றுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையினை வாசித்த மனித உரிமை ஆர்வலர்களும், நோக்கர்களும், இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினரும் அதிர்ந்து போயுள்ளனர்.

இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பில் தீவிரமான விசாரணை நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான வடிவத்தில் இந்தப் பிரேரணை இருக்கும் என்று பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இலங்கையில் நடைபெற்றவை தொடர்பில் விசாரிக்கச் சர்வதேச விசாரணைகளை பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படுவதற்கு இந்த அமர்வில் முன்முயற்சி எடுக்கப்படும் என்று பலரும் நம்பியிருந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் இலங்கை தொடர்பான தமது அறிக்கையில் அதனையே பரிந்துரை செய்தும் இருந்தார்.

ஆனால், பிரேரணையின் நகல் வடிவம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. இன்னமும் உள்நாட்டுக்குள் எடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகள் பற்றியே அது பேசுகின்றது.

அதனை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மதிப்பீடு செய்து 2014 செப்ரெம்பரில் நடைபெறும் 27 ஆவது கூட்டத்தொடரில் வாய் மூலமும், 2015 மார்ச்சில் நடைபெறும் 28 ஆவது கூட்டத்தொடரில் விரிவாக எழுத்து மூலமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தற்போதைய பிரேரணை வடிவம் சிபாரிசு செய்கிறது.

இந்தப் பிரேரணை வடிவம் யுத்தம் முடிந்தும் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் மேலும் ஒருவருட காலத்தை இலங்கை அரசுத் தரப்புக்கு இழுத்தடிப்பதற்கு வழங்கப்போகின்றது.

ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமான சூழலில் இலங்கை தொடர்பான தமது பிரேரணையின் நகல் வடிவத்தை அமெரிக்கா, பிரிட்டன், மொண்டாரிகோ, மெஸிடோனியா, மொறீஸியஸ் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து பல தரப்பினரதும் பார்வைக்காகச் சுற்றுக்கு விட்டன.

உள்கட்டுமானங்களை மீளக் கட்டியெழுப்புதல், கண்ணிவெடியகற்றுதல், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தல் போன்றவற்றில் இலங்கை அரசின் செயற்பாட்டை வரவேற்றுள்ள இந்த வரைவு, நீதி நிலைநாட்டப்படல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், இராணுவ மயப்படுத்தலை நீக்குதல், வாழ்வாதாரங்களை மீள உருவாக்குதல், இந்த விடயங்களில் சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மையினரை முழுப் பங்காளர்களாக்குதல் போன்ற அம்சங்களில் இன்னும் பெருமளவு வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது எனச் சுட்டிக்காட்டுகின்றது.

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலையும் அதில் வாக்காளர்கள் அதிகளவில் பங்குபற்றியமையும் வரவேற்றுள்ள இந்தப் பிரேரணை, அதேசமயம் தேர்தல் வன்முறைகள், வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டமையையும் சுட்டிக்காட்டுகின்றது.

ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் போது அவரைச் சந்தித்தோர் உட்பட சிவில் சமூக உறுப்பினர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை குறித்து முன்மொழிவில் ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் அல்லது பால் இனத்துவ வன்முறைகள், பலவந்தமாகக் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்தல், சட்டவிரோதப் படுகொலைகள், சித்திரவதை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கும் கூட்டுச் சேருதல் மற்றும் அமைதியாக ஒன்று கூடுதல் போன்றவற்றுக்கும் எதிரான மீறல்கள், மனித உரிமைகளை பாதுகாப்போர், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் ஊடகவிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் அல்லது பதிலடி நடவடிக்கைகள், நீதிச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான மிரட்டல்கள் என்பன மோசமான விதத்தில் அதிகரித்து வருகின்றமை குறித்து இந்த வரைவில் ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சமய நம்பிக்கைகளுக்கு எதிராக - குறிப்பாக இலங்கையில் சிறுபான்மையின மதப் பிரிவினரான இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்றோருக்கு எதிராக திடீரென மோசமாக அதிகரித்து வரும் வன்முறைகள் அபாய எச்சரிக்கையை எழுப்புவதாக பிரேரணை வெளிப்படுத்துகிறது.

நல்லிணக்கத்துக்கு மிக அடிப்படையான அரசியல் அதிகாரத்தை பரவலாக்குவது, நாட்டின் மக்கள் அனைவரும் மனித உரிமைகளை அனுபவிப்பது ஆகியவை உட்பட தான் பகிரங்கமாக ஒப்புக் கொண்ட அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றுமாறு இலங்கை அரசை மேற்படி பிரேரணை முன்மொழிவு வேண்டியுள்ளது.

பரவலாக இடம்பெற்ற சட்டவிரோதக் கொலைகள், பலவந்தமாக ஆட்களைக் கடத்திக் காணாமற் போகச் செய்தல் ஆகியன தொடர்பில் நம்பகமான விசாரணை செய்தல், வடக்கு இலங்கையை இராணுவ மயத்திலிருந்து விடுவித்தல், காணிப் பிணக்கு விடயங்களில் பக்கச்சார்பற்ற தீர்வுக்கான பொறிமுறையை நடைமுறைப்படுத்தல், தடுப்புக் காவல் நடவடிக்கைகள் தொடர்பான கொள்கைகளை மீள மதிப்பீடு செய்தல், முன்னர் செயற்பட்ட சுயாதீன சிவில் நிறுவனங்களை மீளவும் வலிமைப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் அரசியல் தீர்வை எட்டுதல், எல்லோருக்குமுரிய கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையை மேம்படுத்திப் பாதுகாத்தலும், சட்ட ஆட்சியின் மறுசீரமைப்புக்கு வழிசெய்தலும், போன்ற விடயங்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இந்தப் பிரேரணை முன்மொழிவு வரவேற்றிருக்கின்றது.

ஆனால் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசு வரைந்துள்ள தேசிய நடவடிக்கைத் திட்டம் அந்த பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்குப் போதுமானதேயல்ல என்பதை இந்தப் பிரேரணை முன்மொழிவு வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இதேசமயத்தில், இந்த பிரேரணை முன்மொழி சில விடயங்களை தெளிவாக வலியுறுத்த முற்பட்டிருக்கின்றது.

தனியாட்களுக்கு எதிரான நீதி விசாரணை, இழப்பீடுகள் வழங்கல், உண்மையைக் கண்டறிதல், நிறுவனமயப்பட்ட மறுசீரமைப்பு, பொது ஊழியர் மற்றும் ஊழியர்களை ஒருநிலைப்படுத்தல் போன்றவை உட்பட பரந்தளவில் நீதியை நிலை நாட்டுவதற்காக சட்டமுறையான மற்றும் சட்ட வழியற்ற ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். அதன் மூலம் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த வேண்டும். நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிட்டவேண்டும்,

நல்லிணக்கமும் முரண்பாடு நீங்கலும் மேம்படுத்தப்பட வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்யும் சுயாதீன முறைமை ஸ்தாபிக்கப்பட வேண்டும், அரச நிறுவனங்கள் மீது நம்பிக்கை கொள்ளும் முறைமை மீள உருவாகக்கபபட வேண்டும், அத்தோடு சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு அமைவாக சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்த வேண்டும். - இப்படியெல்லாம் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தின் போது சுற்றுக்கு விடப்பட்ட பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் பின்வரும் விடயங்களை அந்த முன்மொழி மீள நினைவூட்டி, மீளச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

- உண்மையைக் கண்டறியும் நடவடிக்கைத் திட்டம்.

- மனித உரிமை மீறல்கள் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைமைகள், போக்குகள் அவற்றைக் கண்டறிவதன் மூலம் சரியான நீதி விசாரணைத் திட்டத்துக்கு வழி செய்தல்.

- மோசமான மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்கள் போன்றவற்றில் ஈடுபட்டோருக்கு சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாத்து விலக்களிப்பதை முடிவுக் கொண்டு வந்து, அவர்களை சரியான நீதி விசாரணைகளின் முன் நிறுத்துவதில் அரசுக்கு உள்ள பொறுப்பு.

- உண்மையைக் கண்டறிந்து, நிலைநாட்டி, நீதி எட்டப்படுவதை உறுதிப்படுத்துவதில் தேசிய பொறிமுறை தொடர்ந்து தவறிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டி, ஆகவே, அத்தகைய மனித உரிமைச் சட்டங்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் குறித்து மேலும் விசாரிக்க மனித உரிமைகள் கவுன்ஸில் தானாகவே ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறையை ஸ்தாபிப்பதோடு, உள்நாட்டில் பொறுப்புக் கூறுவது தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனையும் கண்காணிக்க வேண்டும் என முடிவு செய்து அதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள பரிந்துரை.

இவ்வளவு விடயங்களையும் அப்பட்டமாக - வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை அந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது தொடர்பில் உரிய பரிந்துரைகளை முன்வைப்பதில் பெரும் தவறிழைத்திருப்பதாகவே பாதிக்கப்பட்ட தரப்பினரும் நோக்கர்களும் கருதுகின்றார்கள்.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், நீதியின் ஆட்சி ஆகியவற்றுக்கு எதிரான மீறல்கள் குறித்து விலாவாரியாக - விவரமாக - கோடிகாட்டிய இந்தப் பிரேரணை மீண்டும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வாக தேசிய மட்டத்தில் நடைபெறும் விசாரணைப் பொறிமுறை குறித்தே பிரஸ்தாபித்திருக்கின்றமை ஆச்சரியத்துக்குரியதாகும்.

தேசிய மட்ட விசாரணைப் பொறிமுறை நடவடிக்கை தெளிவான பெறுபேற்றைத் தரத் தவறுமிடத்து சுயாதீனமான, நம்பத் தகுந்த சர்வதேச விசாரணையே அவசியம் என்ற முடிவை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தமது பரிந்துரையில் குறிப்பிட்டிருப்பதை இந்த முன்மொழிவு வரவேற்றுள்ளது. ஆனால் அதை உடனடியாக முன்னெடுக்கும்படி அது குறிப்பிடவில்லை. அதற்கு மாறாக -பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் ஆகியவை தொடர்பில் முன்னெடுக்கப்படும் தேசிய மட்ட (அதாவது நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும்) நடவடிக்கைகள், இரு தரப்புகளினாலும் இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பான விசாரணைகள் ஆகியவை குறித்து கண்காணித்து, மதிப்பீடு செய்யுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை இந்தப் பிரேரணை வடிவம் கோரியிருக்கிறது.

அதேநேரம் இந்த மதிப்பீடு குறித்து தனது அவதானிப்பை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 27 ஆவது கூட்டத் தொடரில் (2014 செப்டெம்பரில்) வாய் மூலமும், 28 ஆவது கூட்டத் தொடரில் (2015 மார்ச்சிலும்) அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஆணையாளரைக் கோருகிறது இந்த முன்மொழிவு.

இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவின் வடிவத்திலேயே இந்தப் பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்படுமானால் அது இரண்டு விடயங்களை வெளிப்படுத்தி நிற்கும்.

1. இலங்கையில் யுத்த காலத்தில் இழைக்கப்பட்ட கொரடூரங்களுக்கு சர்வதேச ரீதியிலான சுயாதீன விசாரணைப் பொறிமுறை இப்போதைக்கு இல்லை. தற்போதைக்கு நாட்டுக்குள் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படக்கூடிய விசாரணைப் பொறிமுறையே தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

2. இவ்விடயத்தில் இலங்கை அரசு தொடர்ந்தும் முரண்டு பிடித்தால் கூட அடுத்த ஆண்டு செப்டெம்பர் வரை - அதாவது அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு - இலங்கை எதிரான அழுத்தமான நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பது இப்போதே தெளிவாகிவிடும்.

இதே சமயம் இந்த ஆண்டு இறுதியுடன் தற்போதைய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைகிறது. அடுத்த வருடம் மார்ச்சில் இலங்கை விவகாரம் எடுக்கப்படும் போது புதிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பதவியேற்றிருப்பார். அவரின் கீழ் இதே உத்வேகத்தோடு இவ்விடயம் எடுக்கப்படுமா என்பதும் சந்தேகமே.

இந்த வரைபை நேற்று அமெரிக்கா, பிரித்தானியா, மொன்டேனேக்ரோ, மொரிசியஸ் போன்ற நாடுகள் ஏனைய நாட்டு பிரதிநிதிகளுக்கு விநியோகித்தனர்.

இதில் இதுவரையில், மேற்கொண்ட விசாரணைகளின் போது இலங்கைப் படையினர் வெலிவேரியாவில் தண்ணீர் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் என்றும் பிள்ளையின் வரைபில் கோரப்பட்டுள்ளது.

மதத்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் வடக்கில் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபைக்கு 13வது அரசியல் அமைப்பின் முழுமை அதிகாரங்களையும் வழங்கல் போன்ற கோரிக்கைகளும் பிள்ளையின் வரைபில் அடங்கியுள்ளன.

[You must be registered and logged in to see this link.]
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்குள் வரமுடியாது - மனித உரிமை அமைச்சர்
» இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை
» "செந்தூரன் புழல் சிறையில் அடைப்பு! தமிழக அரசின் அநீதி!- மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்"
» மீனவர்கள் மீது தாக்குதல்: அறிக்கை கேட்கிறது மனித உரிமை ஆணையம்
» இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா முதல் தடவையாக உத்தியோகபூர்வ அறிக்கை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum