TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பணம், காதலுக்காக பாகிஸ்தானுக்கு 'போட்டுக் கொடுத்த' இந்திய பெண் அதிகாரி

Go down

பணம், காதலுக்காக பாகிஸ்தானுக்கு 'போட்டுக் கொடுத்த' இந்திய பெண் அதிகாரி Empty பணம், காதலுக்காக பாகிஸ்தானுக்கு 'போட்டுக் கொடுத்த' இந்திய பெண் அதிகாரி

Post by மாலதி Sun May 02, 2010 7:53 am

பணம், காதலுக்காக பாகிஸ்தானுக்கு 'போட்டுக் கொடுத்த' இந்திய பெண் அதிகாரி Tblfpnnews_54793512822







நம்பிக்கை
என்ற வார்த்தை பிறந்தபோதே, துரோகம் என்ற வார்த்தையும் பிறந்துவிட்டது.
தனிப்பட்ட ஒருவருக்கு, தனிப் பட்ட காரணங்களுக்காக நம்பிக்கை துரோகம்
செய்வது பெரிய விஷயம் அல்ல. இதனால், பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படப்
போவது இல்லை. ஆனால், ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுத்து, நாட்டின்
அதிமுக்கியமான ரகசியங்களைக் கையாளும் பணியையும் கொடுத்த தாய்நாட்டை,
எதிரிகளிடம் காட்டிக் கொடுப்பது மன்னிக்க முடியாத குற்றம் அல்லவா? இந்த
குற்றத்தை தான் செய்துள்ளார், மாதுரி குப்தா என்ற இந்தியாவைச் சேர்ந்த
பெண் அதிகாரி.

மாதுரி குப்தா: காற்றில் அலை
பாயும் 'கலரிங்' செய்யப்பட்ட கூந்தல், அறிவு ஜீவிகளின் அடையாளமான விலை
உயர்ந்த மூக்கு கண்ணாடி, அலட்சியமான பார்வை, 53 வயது என்பதை நம்ப முடியாத
தோற்றம், எப்போதும் உதட்டில் தேக்கி வைத்துள்ள மெல்லிய புன்னகை, இவற்றின்
ஒட்டு மொத்த அடையாளம் தான் மாதுரி குப்தா. இவருக்கு இன்னும்
திருமணமாகவில்லை. இந்திய வெளியுறவு அலுவலகத்தின் மூத்த அதிகாரி; 25
ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிகிறார். இதற்கு முன், பாக்தாத்தில் உள்ள
இந்திய தூதரகத்தில் பணியாற்றினார். கடந்த 2007ல், பாகிஸ்தான் தலைநகரான
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிக்கு அமர்த்தப் பட்டார்.

காதலும், பணமும்: மாதுரி
குப்தாவுக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த உளவுப்பிரிவு அதிகாரி ராணா என்பவருடன்
காதல் ஏற்பட்டது. இந்த காதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்
பாக்., உளவு அதிகாரிகள். இந்தியாவிலிருந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய
தூதரகத்துக்கு வரும் முக்கியமான தகவல்களை எல்லாம், மாதுரி குப்தா மூலமாக
பாக்., உளவு அதிகாரிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெற்று வந்துள்ளனர்.
இதற்காக, மாதுரிக்கு தேவையான பணத்தை கொட்டிக் கொடுத்துள்ளனர். காதல், பணம்
ஆகிய காரணங்களுக்காக, அவர்கள் கேட்ட அனைத்து தகவல்களையும், முக்கிய
ஆவணங்களையும் கொடுத்துள்ளார் மாதுரி. பல்வேறு நாடுகளில் பணியாற்றும் 'ரா'
உளவுப்பிரிவு அதிகாரிகள் பற்றிய தகவல்களையும், பாகிஸ்தானுக்கு அவர்
கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாப்பிங்
மால்கள், காபி ஷாப்கள் போன்றவற்றில் ராணாவும், மாதுரியும் அடிக்கடி
சந்தித்து, தங்கள் காதலை பரிமாறிக் கொண்டதுடன், இந்திய அரசின்
நடவடிக்கைகள் பற்றிய ரகசியங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

வசமாக சிக்கினார்:
மாதுரியின் நடவடிக்கைகள், இந்திய உளவு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை
ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரை கண்காணித்து வந்தனர். சில நாட்களுக்கு
முன், சார்க் மாநாடு குறித்து பேச வேண்டும் என, மாதுரியை டில்லிக்கு
வரவழைத்தனர். அப்போது, இந்தியாவின் ரகசியங்களை, பாகிஸ்தானுக்கு தெரிவித்த
குற்றத்துக்காக மாதுரி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணையில் அதிர்ச்சி தகவல்:
மாதுரியிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, ரகசிய ஆவணங்களை
பாகிஸ்தானுக்கு கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இது மட்டுமல்லாமல்,
இஸ்லாமாபாத்தில் உள்ள 'ரா' (இந்திய உளவு அமைப்பு) தலைவர் ஷர்மாவே,
பாகிஸ்தான் உளவாளி தான் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்ததோடு,
பணத்துக்காவே இந்த குற்றத்தை செய்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும்,
மாதுரிக்கும், முக்கியமான அதிகாரிகளுக்கும் இடையே ரகசியமான இ-மெயில்கள்
பரிமாறப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

பெரும் சந்தேகம்: மாதுரி
குப்தா விவகாரம், இந்திய பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தலை
ஏற்படுத்தியுள்ளது. காதலுக்காகவும், பணத்துக்காகவும் ஒரு பெண் அதிகாரி இது
போன்ற துரோகச் செயலை செய்துள்ளது, வெளியுறவுத் துறை அதிகாரிகளிடையே கடும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலகின் பல்வேறு நாடுகளில்
பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய
அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாதுரி விவகாரத்தில், இயற்கையாகவே சில
சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன.

* பாகிஸ்தான் அதிகாரி ராணாவுக்கும், மாதுரிக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? இவர்களின் நட்புக்கான பின்னணியில் இருந்தவர்கள் யார்?

* இந்திய வெளியுறவுத் துறையின்
அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களையும், ரகசிய விஷயங்களையும் கையாளும்
அதிகாரம், இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய மாதுரிக்கு
கொடுக்கப்பட்டு இருந்ததா?

* அப்படியானால், கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தெந்த ஆவணங்களை அவர் கையாண்டுள்ளார்?

* மாதுரி குப்தாவின் ரகசியமான நடவடிக்கைகளை, இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தெரிந்து கொள்வதற்கு எவ்வளவு காலமானது?

* பணம், காதல் இவற்றைத் தவிர, பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாதுரி செயல்பட்டதற்கான காரணங்கள் என்ன?

நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தலை
ஏற்படுத்தியுள்ள மாதுரி விவகாரம், சர்வதேச அளவில் தலைக்குனிவையும்
ஏற்படுத்திவிட்டது என்பதையும் மறுக்க முடியாது. எதிரிகளின் கைகளுக்கு
இனிமேலும், நம் நாட்டின் ரகசியங்கள் கிடைக்கக்கூடாது என்பதே அனைவரின்
விருப்பம். இந்த விஷயத்தில் மத்திய அரசு, மேலும் கடுமையான நடவடிக்கைகளை
எடுப்பதுடன், மேலே எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும்
விடை காண வேண்டும்.

மாதுரியின் மறுபக்கம்:
மாதுரி குப்தா, தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் உடையவர்.
அடிக்கடி 'பியூட்டி பார்லர்'களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தனது தலைமுடியை அடிக்கடி 'கலரிங்' செய்து கொள்வார். விலை உயர்ந்த அழகான
உடைகளை அணிந்து கொள்வார். தனது வசீகரமான பேச்சின் மூலம், எப்படிப்பட்ட
நபரையும் எளிதில் வளைத்து விடுவார். லண்டன் அல்லது வாஷிங்டனில் பணியாற்ற
வேண்டும் என்பது இவரது கனவு. இஸ்லாமாபாத்துக்கு பணி நியமனம் செய்யப்பட்டதை
அடுத்து, அவசரம், அவரமாக உருது மொழியைக் கற்றுக் கொண்டார். உருது மொழியைக்
கற்றுக் கொடுப்பதற்காக ஒரு பெண்ணை ஆசிரியராக நியமித்துக் கொண்டார். வெகு
விரைவிலேயே, உருது மொழியில் சரளமாக பேசவும், படிக்கவும் கற்றுக் கொண்டார்.
இதனால், பாகிஸ்தான் சென்ற உடனேயே, அங்குள்ளவர்களுடன் சகஜமாக பழகும்
வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பாகிஸ்தானில் உள்ள ஆங்கில மொழி பத்திரிகைகளை
விட, உருது மொழி பத்திரிகைகளையே படிப்பதற்கு ஆர்வம் காட்டுவார். யாருடன்
பேசினாலும், மேக்-அப், ஹேர் ஸ்டைல், உடைகள் பற்றித் தான் அதிகம் பேசுவார்.


காதலுக்காக காட்டிக் கொடுத்த அதிகாரிகளின் 'பகீர்' பட்டியல்

* 'கோர்ஸ்கோவ்' என்ற விமானம் தாங்கி கப்பலை
வாங்குவதற்காக, இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே, கடந்த 2005-07ம்
ஆண்டில் பேச்சு வார்த்தை நடந்தது. கப்பலில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு
செய்வதற்காக இந்தியா சார்பில் ஒரு குழு, ரஷ்யாவுக்கு அனுப்பி
வைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு கடற்படையைச் சேர்ந்த சுக்ஜிந்தர் சிங்
தலைவராக இருந்தார். இவர் ரஷ்யா சென்ற போது, ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு
பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது, கப்பல் பேரம் தொடர்பான சில முக்கிய
தகவல்களை அந்த பெண்ணுக்கு தெரிவித்ததாக சுக்ஜிந்தர் மீது குற்றம்
சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணை இன்னும் நடக்கிறது.

* கடந்த 2008ல் மன்மோகன் சர்மா என்ற
'ரா'(இந்திய உளவுப்பிரிவு) அதிகாரி சீனாவில் பணியாற்றினார். அங்கு, சீனப்
பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டதை அடுத்து, பரபரப்பான புகார்கள் அவர்
மீது தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, அவர் உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப
அழைக்கப்பட்டார்.

* கடந்த 2007ல் ஹாங்காங்கில் பணிபுரிந்த 'ரா'
அதிகாரி ரவி நாயர், இந்தியாவுக்கு திரும்ப அழைக்கப்பட்டார். ஹாங்காங்கில்
இருந்த சீன நாட்டின் உளவுப் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு
வைத்திருந்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு.

* இந்திய உளவுப் பிரிவான 'ரா'வின் மற்றொரு
அதிகாரி உன்னி கிருஷ்ணன். புலிகள் அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருந்தது.
உளவு பிரிவைச் சேர்ந்தவர் என கருதப்படும் விமானப் பணிப்பெண் ஒருவருடன்
உன்னிகிருஷ்ணனுக்கு தொடர்பு இருந்தது. இதையடுத்து, முக்கிய ரகசியங்களை
அந்த பெண்ணுக்கு தெரிவித்ததாகக் கூறி, இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தம்
ஏற்படுவதற்கு முன்னதாக, உன்னிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓட்டுக்கு பணம் வாங்கினால் உரிமை பறிபோகும்: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
» பதவிக்காக எம்.பி.,க்களுக்கு பணம் : ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் இந்துஸ்தானி வாக்குமூலம்
» பணம் வேண்டாம், பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கங்கள் : உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி கண்ணீருடன் உருக்கமான வேண்டுகோள்...
» பாகிஸ்தானுக்கு ரயில் இன்ஜின்கள்: வழங்குகிறது இந்திய ரயில்வே
» பாகிஸ்தானுக்கு ஆக்ரோஷ பதிலடி கொடுங்கள்: இந்திய இராணுவத் தலைவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum