TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


‘ஹேர் டை’ செய்யும்போது கவனிக்க வேண்டியவை...!

Go down

‘ஹேர் டை’ செய்யும்போது கவனிக்க வேண்டியவை...! Empty ‘ஹேர் டை’ செய்யும்போது கவனிக்க வேண்டியவை...!

Post by அருள் Mon Dec 23, 2013 9:25 pm

சருமத்தின் நிறம் சிவப்பாக இருக்கவேண்டும். ஆனால் கூந்தலின் நிறம் எப்போதும் கறுப்பாகத்தான் இருக்கவேண்டும் என்பது அனைவரின் விருப்பம். கறுப்பாக கூந்தல் இருந்தால் அழகு மட்டுமல்ல, தன்னம்பிக்கையும் கிடைக்கும் என்பது பலரது கருத்தாக இருப்பதால், எங்கேயாவது ஒரு நரை தென்பட்டாலே, ‘அய்யோ வயசாயிடுச்சோ!’ என்ற கவலை வந்துவிடுகிறது. 
‘ஹேர் டை’ செய்யும்போது கவனிக்க வேண்டியவை...! 4d1b059c-ae24-4290-92c0-688082e052de_S_secvpf
நமது வயது நமக்கு மட்டும் தெரிந்தால் போதும், மற்றவர்களுக்கு எப்போதும் நாம் இள‘மை’யாக தோன்ற வேண்டும் என்பதால் அதற்கான கறு‘மை’யை எல்லோரும் தேடுகிறார்கள். அவர்களது ஆசையை நிறைவேற்றுவதற்காக பலவிதமான ‘ஹேர்டை’ ரகங்கள் வந்த வண்ணம் உள்ளன. 

அவைகளில் சரியானவற்றை தேர்ந்தெடுத்து, சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே முழுபலன் கிடைக்கும். நமது முடி கறுப்பாக இருக்க என்ன காரணம்? நமது உடலில் இருக்கும் ‘மெலனின்’ என்ற பொருள்தான், முடிக்கு கறுப்பு நிறத்தை தருகிறது.

வயதாகும்போது மெலனின் உற்பத்தி குறைவதால், முடியின் கறுமை குறைந்து, வெண்மை தோன்றுகிறது. முப்பது வயதுக்கு முன்னால் மெலனின் உற்பத்தி குறைந்து, முடி வெள்ளையானால் அதனை அகால நரை என்கிறோம். இதற்கு முக்கிய காரணம் பாரம்பரியம்தான். அடுத்த காரணம் நாம் உட்கொள்ளும் மருந்துகள். 

மனநோய்க்காக சாப்பிடும் சில வகை மருந்துகளும், மலேரியாவுக்கு சாப்பிடும் மாத்திரைகளும் முடி கறுப்புத்தன்மை குறைய காரணமாக இருக்கிறது. சத்துக்குறைபாடு, குளோரின் கலந்த தண்ணீரின் பயன்பாடு, அதிக வெயில்படுதல் போன்றவைகளாலும் அகால நரை தோன்றும். 

நாம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதுபோல் மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவேண்டும். மனபாரம், மன அழுத்தத்தை உருவாக்கிக்கொண்டால் உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் சமச்சீரின்மை ஏற்பட்டு முடியின் இயற்கை நிறம் பாதிக்கும். அதனால் எப்போதும் மனதை அமைதியாக, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும். 

முடிக்கு தேவையான சத்துக்கள் இருக்கும் கடல் உணவு, முட்டை மஞ்சள் கரு, பாலாடைக்கட்டி, மாமிசம் போன்றவைகளை உணவில் சேர்க்கவேண்டும். முடி நரைத்துவிட்டால், என்ன மாதிரியான ஹேர்டை பயன்படுத்தலாம்? தற்காலிகம், ஓரளவு நிரந்தரம், முழு நிரந்தரம் ஆகிய மூன்று வகை ‘டை’கள் உள்ளன. 

இரண்டு, மூன்று முறை ஷாம்பு போட்டாலே தற்காலிக டை நிறம் மாறத்தொடங்கிவிடும். ஐந்து முதல் பத்து தடவை ஷாம்புக்கு தாக்கு பிடிக்கும் டையை ஓரளவு நிரந்தரம் என்கிறோம். பத்துக்கு மேல் தாக்குப்பிடிக்கும் தன்மைகொண்டதை ‘பெர்மனென்ட் ஹேர் டை’ என்று கூறுகிறோம். 

இவை பவுடர், ஜெல், திரவ வடிவங்களில் இருக்கின்றன. இதில் இரண்டு முக்கிய மூலக்கூறுகள் உள்ளன. ஒன்று: அமோனியா கரைசல் கலந்த கலவை. இன்னொன்று: டெவ லப்பர். 

இவை இரண்டையும் கலந்து பயன்படுத்தவேண்டும். எப்படி? 

* முதலில் முடியை நன்றாக சீவி, சுத்தப்படுத்துங்கள். 

* முடியோடு சேர்ந்த சருமப் பகுதிகளில் (காது, கழுத்து போன்ற வைகளில்) டை ஒட்டாமல் இருக்க அந்த இடங்களில் வாசலின், கிரீம் போன்ற ஏதாவது ஒன்றை லேசாக பூசுங்கள். 

* கண் இமை, புருவங்களில் டை அடிக்கக்கூடாது. 

* தலையில் காயமோ, புண்ணோ, கட்டியோ இருந்தால் டை பயன்படுத்தக்கூடாது. 

* ஆண்கள் மீசையில் கவனமாக டை அடிக்கவேண்டும். 

தொடர்ச்சியாக பல வருடங்கள் டை அடித்தால் நோய்கள் ஏற்படுமா? 

டை அடிக்கும் அனைவருக்குமே இப்படி ஒரு பயம் கலந்த கவலை இருக்கிறது. அவர்களுக்கு புற்றுநோய் வரும் சூழ்நிலை அதிகம் என்று பேசப்பட்டாலும், விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் டையில் கலந்திருக்கும் ரசாயனத்தில் விஷத்தன்மை உள்ளது. அது உடலுக்குள் சென்றால் ஆபத்துதான். 

தற்காலிக டையில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது. நிரந்தர டையில் நாப்தலின், டொளீன் ஆகியவை இருக்கின்றன. நமது மூக்கு ‘வாக்வம்கிளீனர்’ போன்று காற்றை உள்ளே இழுக்கும் ஆற்றல் கொண்டது. சுற்றிலும் இருக்கும் மாசடைந்த காற்று மூக்கு வழியாக உள்ளே சென்று பாதிப்பை உருவாக்கும் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். 

அப்படி இருக்கும்போது மீசையில் இருக்கும் விஷத்தன்மை எளிதாக நாசியை அடைந்து உடலுக்குள் புகுந்துவிடும். நமது உடலில் தலை முதல் பாதம் வரை உள்ள சருமத்தில் துவாரம் இருக்கிறது. தலையில் அடிக்கப்படும் டையும் சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலக்கக்கூடும். 

அது உள்ளே சென்றால் சுவாசத்தில் தடை, பார்வை குறைபாடு, வயிற்று வலி, வாந்தி, பேச்சில் உளறல் போன்றவை தோன்றும். உடலுக்குள் டை சென்றால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். தலைக்கு டை செய்யும் ஒவ்வொரு முறையும் அவரது ஆயுளில் 15 நாட்களும், மீசைக்கு டை செய்யும் ஒவ்வொரு முறையும் அவரது ஆயுளில் 30 நாட்கள் குறைவதாகவும் சொல்லப்படுவதுண்டு. 

பெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் டை அடிப்பதை தவிர்க்கவேண்டும். டை முடியோடு செயல்பட அரை மணி நேரம் தேவைப்படும். (அதைவிட குறைந்த நேரத்தில் முழுமைபெறும் டையும் உள்ளது). குறிப்பிட்ட நேரம் கடந்ததும் தரமான ஷாம்புவை பயன்படுத்தி கழுவ வேண்டும். 

டை போட்டிருக்கும் நேரத்தில் நிறைய தண்ணீர் பருகி, இரண்டு மூன்று தடவை சிறுநீர் கழிக்கவேண்டும். அதன் மூலம் விஷத்தன்மை வெளியேறும் வாய்ப்பு உண்டு. நரை வந்த பின்பு அதை மாற்ற முடியாது. டை அடித்து மறைக்கத் தான் முடியும். ஆனால் நரையை தவிர்க்கவும், தள்ளிப்போடவும் ஆரோமாதெரபி கைகொடுக்கிறது. 

ஒருவருக்கு ஒருசில முடிகள் நரைத்த உடனே, பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மயிர்க்காலின் அடிப்பகுதியை ஆய்வு செய்து எதனால் நரை ஏற்படுகிறது என்று கண்டறிந்துவிடலாம். ஊட்டச்சத்து குறைபாடு, பொடுகு, ஷாம்பு, பயன்படுத்தும் எண்ணெய் போன்றவைகளில் எதன் மூலம் நரை தோன்றுகிறது என்று கண்டறிந்து, ஆரோமா தெரபி மூலம் நிவாரணம் பெறலாம். 

முடியை நன்றாக வளரச்செய்யவும் வாய்ப்புள்ளது. ஆனால் மரபு வழியால் ஏற்பட்ட நரை என்றால் அதை தள்ளிப்போட மட்டுமே முடியும். ‘டை’ பயன்படுத்தித்தான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலைக்கு வந்துவிட்டவர்கள் அலர்ஜி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். 

இயற்கையான ஹென்னா தயாரித்து பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்படாது. ரசாயன கலப்பு டைகளால் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். அதனால் முதலிலே அலர்ஜிக்கான பரிசோதனையை செய்யவேண்டும். தலை முடியில் பூச தயாராக்கிவைத்திருக்கும் டையில் சிறிதளவு எடுத்து காதின் வெளிப்புறத்திலோ, கையின் வெளிப்பகுதியிலோ சிறிதளவு பூசுங்கள். 

இரண்டு நாட்கள்வரை வைத்திருந்து அந்த பகுதியில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா என்று கவனியுங்கள். சிவந்துபோகுதல், வீங்குதல், அரிப்பு தோன்றுதல் போன்ற ஏதாவது வந்தால் அது அலர்ஜியின் அறிகுறியாகும். எல்லா டைகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ரசாயனங்களே இருப்பதால் ஒரு வகை டை அலர்ஜி என்றால், கிட்டத்தட்ட எல்லாமும் அலர்ஜியை உருவாக்கலாம். அலர்ஜி ஏற்பட்டால் உடனே டாக்டரிடம் சென்று சிகிச்சை பெறுங்கள். 

முன்பெல்லாம் நாற்பது வயதுக்கு மேல்தான் நரைக்கத் தொடங்கியது. தற்போது 20 வயதுகளிலே ஆண்களும், பெண்களும் நரையால் பாதிக்கப்படுகிறார்கள். திருமணத்திற்கு முன்பே டை அடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் விழிப்புணர் வோடு இருந்தால், நரை பாதிக்காத அளவுக்கு முடியின் நலனை பாதுகாக்கலாம்! 

கட்டுரை:- கீதா அசோக், 
(அரோமா தெரபிஸ்ட்) 
சென்னை - 26 
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum