TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிங்கள தேசம் உணரத் தொடங்கியுள்ள விடுதலைப் புலிகளின் இராஜதந்திர பலம்!

Go down

சிங்கள தேசம் உணரத் தொடங்கியுள்ள விடுதலைப் புலிகளின் இராஜதந்திர பலம்!  Empty சிங்கள தேசம் உணரத் தொடங்கியுள்ள விடுதலைப் புலிகளின் இராஜதந்திர பலம்!

Post by ஜனனி Sun Dec 15, 2013 6:52 pm

சிங்கள தேசம் உணரத் தொடங்கியுள்ள விடுதலைப் புலிகளின் இராஜதந்திர பலம்! 
சிங்கள தேசம் உணரத் தொடங்கியுள்ள விடுதலைப் புலிகளின் இராஜதந்திர பலம்!  1458411_495612583890597_1160504811_n
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் சிதைக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்ற நிலையில்தான் அழுத்தம் அதிகரித்து வருகின்றது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மகிந்த ராஜபக்ச குடும்பம் தவிக்க ஆரம்பித்துள்ளது.

புலிகளைத் தவறாக எடைபோட்டதன் விளைவை சிங்களம் இன்று அனுபவிக்க தொடங்குகிறது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பாகச் சர்வதேசம் இதுவரை கொண்டிருந்த தவறான மாயை இப்போது களையப்பட்டிருக்கின்றது. புலிகளின் போராட்டம் நியாயமானதுதான் என்பதைச் சர்வதேசம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அந்தப் போராட்டம் உண்மையானது என்பதை சர்வதேச நாடுகள் தமக்குள் ஏற்றுக்கொள்ளத்தொடங்கியுள்ளன. உலகில் 54 நாடுகளைத் தனது காலனித்துவ ஆதிக்கத்திற்குள் வைத்திருந்து உலகில் பெரும் சாம்ராஜ்ஜியமாகத் திகழ்ந்த பிரித்தானியா இன்று ஈழத் தமிழர் பக்கம் தனது பார்வையைத் திருப்பியிருக்கின்றமை பெரும் வரலாற்று மாற்றமாகும். அதற்கு அப்பால் கனடா, ஜேர்மனி, மொறீஸியஸ் தீவு உள்ளிட்ட நாடுகளும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக மாறியிருக்கின்றமையானது சிறிலங்காவை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அண்மைக்காலமாக சிறிலங்காவிற்கு வருகின்ற வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தமிழர் தாயகத்திற்கும் வந்து செல்கின்றமையானது சிறிலங்கா அரசாங்கத்தை மட்டுமன்றி சிங்கள இனவாதக் கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் சிங்கள மக்களையும் பெரும் சிக்கலில் மாட்டியிருக்கின்றது. இவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் என்று தென்னிலங்கை கனவுகூட கண்டிருக்காது. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகம் ஆக்கிரமிக்கப்படுகின்றது என்ற உண்மையை சர்வதேசம் நேரிடையாகவே உணரத் தொடங்கியுள்ளது.

தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சர்வதேச ரீதியாகவே தனியானதொரு மதிப்பு இருக்கின்றது. கடந்த காலங்களில் கொழும்புக்கு அடுத்த நகரமாகத் திகழ்ந்த யாழ்ப்பாண மாவட்டம் போரின் தாக்கத்தால் அதன் சோபையை இழந்திருந்தது. போரினால் சின்னாபின்னமாகி பெரும் பின்னடைவைக் கண்டிருந்த இந்த மாவட்டம் தற்போது மீண்டும் தனது பழைய நிலைக்குச் செல்ல முயன்றாலும் அது பெரும் கஸ்டமான காரியமாகவே இருக்கின்றது. ஏனெனில், யாழ்ப்பாணத்திற்கென்று சர்வதேசத்திடம் தென்னிலங்கை பெற்றுக்கொள்கின்ற பெருந்தொகை நிதி தென்னிலங்கையின் அபிவிருத்திக்கே செலவிடப்படுவதால் யாழ்ப்பாணம் மீண்டும் வளர்ச்சியடைய முடியாத நகரமாகவே இருக்கின்றது.

இந்த நிலையில், இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்கின்ற வெளிநாட்டுத் தலைவர்கள் உண்மை நிலவரங்களை அறிந்து செல்கின்றனர். சிறிலங்கா இராணுவம் சமாதானம் என்ற பெயரிலும் அபிவிருத்தி என்ற பெயரிலும் எத்தகைய நாடகமாடுகின்றது என்று சர்வதேசம் தற்போது நன்றாகவே அறிந்துகொண்டு வருகின்றது. யாழ்ப்பாண நகரம் மட்டும் பொலிவாக இருக்கின்றது. சன நடமாட்டமாக, அபிவிருத்தியடைந்த தேசமாக இருக்கின்றது. ஆனால், வெளியே இருந்து வருகின்றவர்களும் சர்வதேச பிரதிநிதிகளும் இது அனைத்தும் யாழ்ப்பாணத்தின் வளர்ச்சி என்று கருதட்டும் என்பதற்காகவே சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிவுமிக்க கட்டடங்கள், வங்கிகள், வியாபார நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் அனைத்துமே தென்னிலங்கைச் சிங்களவர்களுடையவை. அவர்கள் தான் இங்கே முதலீடு செய்து எங்கள் மக்களின் பணத்தைச் சுரண்டிச் செல்கின்றார்கள். பொலிவுமிக்க யாழ்ப்பாண நகரத்தை விட மிகுதி இடங்கள் இன்னும் வளர்ச்சியை எட்டிப் பார்க்கவில்லை. இதனைச் சர்வதேசம் எட்டிப்பார்த்திருக்கின்றது. டேவிற் கமரூன் உட்பட அனைத்து வெளிநாட்டு பிரமுகர்களும் யாழ்ப்பாணத்திலுள்ள உண்மை நிலமையை நன்கு அறிந்து செல்கின்றார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசாங்கம் எந்த வகையில் அபிவிருத்தியை மேற்கொண்டுள்ளது என்பதற்கு யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தியின் வள்ளலை வைத்து சர்வதேசம் அறிந்துகொள்ளுகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக என்று தாங்கள் வழங்குகின்ற நிதி உண்மையில் தமிழர் தாயகத்தில் செலவழிக்கப்படவில்லையென்றும் அது தென்னிலங்கையின் மிகை அபிவிருத்திக்கே செலவிடப்படுகின்றது என்பதையும் அண்மைக்காலமாக நாட்டுக்கு வந்து செல்கின்ற சர்வதேச முக்கியஸ்தர்கள் அறிந்துசெல்கின்றனர். இது மகிந்த அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவாகும். உண்மை நிலைமையை வெளியுலகம் அறிந்துகொண்டுள்ளமையால் மகிந்தவின் இராஜதந்திரம் தற்போது பெரும் தோல்வி கண்டுள்ளது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக இருந்த அமரர் கதிர்காமர் தமிழ் இனத்தவராக இருந்த காரணத்தால் அவரின் இராஜதந்திரத்தை சர்வதேசம் நம்பியது. ஆனால், அவருக்கு பின்னர் வந்த வெளிவிவகார அமைச்சர்கள் தொடர்பாக இன்று மேற்குலகமோ ஆசிய நாடுகளோ எந்த விதத்திலும் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் சொல்வது எதுவும் இன்று சர்வதேசத்திடம் எடுபடவில்லை. சர்வதேசமே நேரில் வந்து தமிழர்களின் துன்பங்களைப் பார்த்துச் செல்கின்ற நிலமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

சர்வதேசம் இங்கு வருவதற்கு, குறிப்பாக பிரித்தானியப் பிரதமர் இங்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்ன? நாம் ஏற்கனவே, முன்னைய கட்டுரையன்றில் சுட்டிக்காட்டியது போன்று புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டங்கள் தான் இன்று தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியிருக்கின்றது. தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் சிறிலங்காப் படைகளால் துன்பப்படுத்தப்படுகின்ற விடயங்களை பொறுக்க முடியாமல் புலம்பெயர் தமிழ் மக்கள் அங்கே ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்புகள் போன்றவற்றைச் செய்தார்கள். உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டார்கள். இதன் விளைவே மகிந்தவின் இராஜதந்திரத்தைத் தோற்கடித்தது.

இங்கே தாயகத்தில் ஏதோ எல்லாவற்றையும் மறந்துவிட்டுத்தான் மக்கள் இருக்கிறார்கள் என்று புலம்பெயர் உறவுகள் நினைக்கக்கூடும். அப்படியில்லை. புலம்பெயர் தேசத்து உறவுகளைப் பற்றித்தான் இங்கே கதைகள். அலுவலகங்களிலும் பாடசாலைகளிலும் இன்று சிறிய இடைவேளைகளின் போது மகிந்தவின் ஆட்சி ஈடாட்டம் காண்கின்றது என்றும் அதற்கு எமது புலம்பெயர் தமிழ் மக்களின் வலுவான போராட்டங்களே காரணம் என்றும் வெளிப்படையாகவே பேசுகின்றார்கள். இந்த நிலை தொடர்பாக புலம்பெயர் உறவுகள் பெருமைப்படவேண்டும்.

ஈழத் தமிழரும் புலம்பெயர் தமிழரும் எதிர்பார்ப்பது போன்று போர்க்குற்றம் செய்த சிங்களப் படைத்தளபதிகளும் மகிந்த குடும்பமும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது உண்மை. இந்த உண்மையை மகிந்தவும் உணர்ந்துகொள்ளத் தொடங்கிவிட்டார். அதனால்தான் தற்போது மகிந்த குடும்பம் அமைதியாக இருக்கின்றது. இது அச்சத்தின்பாற்பட்ட அமைதி. இதுவரை மகிந்தவின் இராஜதந்திரம் வெற்றிபெற்றிருக்கலாம் இப்போதுதான் புலிகளின் இராஜதந்திரம் வெற்றிபெறத் தொடங்குகின்றது. புலிகளின் இராஜதந்திரம் வெறுமனே மகிந்தவைப் போர்க்குற்றவாளியாக்குவதல்ல. அந்தப் போர்க்குற்றம் மூலமாக எமது தமிழீழம் என்ற தனியரசை நிறுவுவது.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலின் போது எதை உள்ளுர நினைத்தாரோ அது நிறைவேறியது. சிங்களத்தின் உண்மை நிலமையை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க மகிந்த ராஜபக்சவை ஒரு கருவியாக்க தேசியத் தலைவர் நினைத்தார். 2005 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையின் போது தலைவர் யுத்தம் தொடங்குவது குறித்து அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. நானும் (கட்டுரையாளர் வீரமணி) கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நின்றவாறு தலைவர் மீண்டும் யுத்தம் தொடங்குவது பற்றி அறிவிப்பார், அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். (ஏனெனில் அப்போது சமாதான காலம். ஆனால், சிறிலங்கா படைகளின் அட்டூழியம் அதிகரித்திருந்தது) ஆனால், தேசியத் தலைவர் தெளிவாக இருந்தார். மீண்டும் சமாதானம் தொடர்பாகவே கருத்து வெளியிட்டார். மகிந்தவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார். தேசியத் தலைவர் அவர்கள் அந்த மாவீரர் தின உரையில் மகிந்த தொடர்பாக கூறும்போது,

‘ஜனாதிபதி மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட சிந்தனைகளை ஆழமாக அலசிப் பார்க்கும் பொழுது தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளையோ அதன் மூலக் கோட்பாடுகளையோ அவர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. கொள்கை ரீதியாக எமக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளி மிகப்பெரிது. எனினும் அவர் நடைமுறை அரசியலில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி என்று கருதப்படுவதால் சமாதான வழிமுறையை எவ்விதம் கையாளப் போகிறார் என்பதையும் தமிழ் மக்களுக்கு எவ்விதம் நீதி வழங்கப் போகின்றார் என்பதையும் முதலில் நாம் அறிந்து கொள்வது அவசியம். ஆகவே ஜனாதிபதி ராஜபக்சவின் நகர்வுகளை அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைச் சிறிது காலம் நாம் பொறுத்திருந்து பார்ப்பதென முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

மகிந்தவுக்கு தலைவர் நீட்டிய நேசக்கரத்தை மகிந்த தவறாகப் பயன்படுத்தினார். ஆனால், தலைவர் அதைச் சரியாகவே பயன்படுத்தினார். இன்று தலைவரின் இராஜதந்திர நகர்வே வெற்றியளித்திருக்கிறது. இனிமேல் மகிந்தவின் இராஜதந்திரம் பலிக்கப்போவதில்லை. சர்வதேசம் ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் எடுத்து வைத்துள்ள அடியை நாம் எமக்கு ஏற்றது போன்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே எமது விடுதலைக்கான செயற்பாடாகும். இனிமேல் எமது விடுதலையைப் பெற்றுத்தரப்போகின்ற பெரும் சக்தி சர்வதேசமே ஆகும். சர்வதேசத்துடன் இணைந்திருந்து நாம் எமது சுதந்திர தமிழீழத்தை வென்றெடுப்போம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப் புலிகளின் தலைவரின் தாய்க்கு சிங்கள தலைவர் அஞ்சலி!
» விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்!
» பொதுநலவாய மாநாட்டினால் சிங்கள தேசம் விழாக்கோலம் பூண்டிருந்த சமவேளை, தமிழர் தேசம் போர்க்கோலம் பூண்டு அனைத்துலகத்தின் பார்வையினை ஈட்டியுள்ளது.
» விடுதலைப் புலிகளின் உளவாளி கைது
» சிங்கள தேசம் ஒரு முள்ளிவாய்க்காலைச் சந்திக்காது என்று நிச்சயமாகக் கூற முடியாது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum