TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிவலிங்கம் மேல் துப்பிய சைவப் பெண்மணி! ஆன்மீக கட்டுரை

Go down

சிவலிங்கம் மேல் துப்பிய சைவப் பெண்மணி!  ஆன்மீக கட்டுரை  Empty சிவலிங்கம் மேல் துப்பிய சைவப் பெண்மணி! ஆன்மீக கட்டுரை

Post by அருள் Sat Nov 23, 2013 9:52 pm

சிவலிங்கம் மேல் துப்பிய சைவப் பெண்மணி! 
---------------------------
சிவலிங்கம் மேல் துப்பிய சைவப் பெண்மணி!  ஆன்மீக கட்டுரை  1472986_561049200634693_1525194150_n
திருநீல நக்க நாயனார்! கேள்விப்பட்டு இருக்கீயளா?

சொல்லப் போனா அவர் மனைவிக்குத் தான் இன்னும் ஏற்றம்!

அந்தப் பெண் தான் சிவலிங்கம் மீது எச்சில் துப்பியவள்! அதுவும் கருவறைச் சிவலிங்கத்தின் மீது! - ஆகா! என்ன திமிரு? என்ன ஆணவம்? என்ன அபசாரம்?

கருவறைக்குள் பெண்கள் நுழையலாமா? நுழையத் தான் விடுவார்களா? முதற்கண் இந்தப் பெண் கருவறைக்குள் எப்படிப் போனார்? போய் எச்சிலும் துப்பினார்?

அட எப்படியோ போனார்! விடுவீங்களா! நாம கதைக்கு வருவோம்!

சோழநாடு! அங்கே சாத்தமங்கை (சீயாத்தமங்கை) என்னும் ஊர்! நாகை-நன்னிலம் ஏரியா! திருநள்ளாற்றுக்கு அருகில்-ன்னு வச்சிக்குங்களேன்!

அங்கே அந்தணர் குலத்திலே பிறந்தவர் தான் இந்த நீலநக்கர்! வேதம் எல்லாம் கரைச்சிக் குடிச்சவர்! ஆகம விற்பன்னர்! சிவாகம விதிப்படி ஊர்க் கோயிலில் தினமும் பூசை செய்வார்! நியம நிஷ்டைகளில் இருந்து இம்மி கூட பிசக மாட்டார்! மற்ற அர்ச்சகர்களையும் பிசக விட மாட்டார்! அம்புட்டு சிம்ம சொப்பனம்! 

ஆனால் மனத்தால் சிவபெருமான் மேல் மாளாத காதல் கொண்டவர்! ஈசனை ரொம்பவும் பிடிக்கும் அவருக்கு! ஆனால் ஆச்சாரமா? காதலா??-ன்னு வரும் போது......ஆச்சாரமே! நியமமே! என்ற கொள்கை உடையவர்! தங்களுக்கு-ன்னு "விதிக்கப்பட்டதை" தவறாம செய்யணும்-ன்னு, மாங்கு மாங்கு-ன்னு "செய்து" கொண்டே இருப்பவர்!

அன்னிக்கு சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்! சாத்தமங்கை கோயிலுக்கு அயவந்தி என்ற பெயரும் உண்டு!
இறைவன் = அய வந்தீஸ்வரர்; இறைவி = உபய புஷ்ப லோசனி
அழகு தமிழில், நான்முக நாதர் - இருமலர்க் கண்ணி

அன்றைய ஆருத்ரா பூஜை செய்ய நீலநக்கர் கருவறைக்குள் நுழைந்தார்.
குளித்து முடித்து, குடுமியை அவிழ்த்து விட்டு, மேனியெங்கும் விபூதி மணக்க, யாரிடமும் எதுவும் பேசாமல், நமோ பவாயச, ருத்ராயச, நம சர்வாய...ன்னு முணுமுணுத்தபடி உள்ளே வருகிறார். சிறு காலை. மெல்லிய குளிர். அபிஷேகத்தைத் துவக்குகிறார்!

பூசைப் பொருட்களும் மாலைகளும் நிறைய இருக்கு. பாரம் அத்தனையும் அவர் ஒருவராலேயே சுமக்க முடியவில்லை போலும். அவர் மனைவியும் கூடவே கூடையில் சுமந்து வருகிறார்.

மனைவிக்கு கருவறை நுழைவு புது அனுபவமோ என்னமோ, உடம்பெல்லாம் புல்லரிக்கிறது! ஆனானப்பட்ட திருமாலும் காணாத ஈசனை..........................
இவ்வளவு அருகில் இருந்து காண்கிறோமே என்ற பதைபதைப்பு போலும்! சிவ சிவ என்று அவளுக்குத் தெரிந்ததை முணுமுணுக்கிறாள்! கூடையைக் கீழே இறக்கியது தான் தாமதம்! ஐயோ....

சிவலிங்கத்தின் மேல் பெரிய விஷச் சிலந்தி!
சுதைச் சிலம்பி என்னும் கொடிய வகை! மேலே விழுந்தாலே போதும்! படபட-ன்னு கொப்புளங்கள் எழும்பி விடும்! எரிச்சல் எடுக்கும்! குளிர்ந்த நீரை ஊற்றிக் கொண்டே இருந்தாலும் அம்புட்டு சீக்கிரம் அடங்காது!

அந்தச் சிலந்தி ஈசனின் திருமேனி மீது விழுந்து கிடக்கிறது!
கருவறை உத்தரத்தில் இருந்து விழுந்ததோ இல்லை பூமாலையில் எங்காச்சும் ஒட்டிக் கொண்டு இருந்ததோ? பொதுவா ரோஜாச் செடியில் சிலந்தி வலையும் பெரும்பாலும் இருக்கும்! பார்த்து பார்த்து தான் ரோஜாவைப் பறிக்கணும்! எப்படிப் பறித்தார்களோ தெரியலையே!

தாயுள்ளம் பதறுகிறது! விடம் உண்ட கண்டனுக்கு விஷச் சிலந்தி ஆபத்தா-ன்னு எல்லாம் நினைக்கத் தோணலை அவளுக்கு!
ப்பூ...ப்பூ....த்து...த்தூதூ
ப்பூ...ப்பூ....த்து...த்தூதூ

ஊதி எடுப்பது போல் ஊதுகிறாள்!
அவள் ஊத ஊத, எச்சில் பட்டுத் தெறிக்கிறது சிவலிங்கத் திருமேனியில்!
ஆருத்ரா அதுவுமாய் எச்சிலாபிஷேகம்! உமையொரு பாகனுக்கு உமிழ் நீர் அபிஷேகம்! 

ரெளத்திரம் ஆகி விட்டார் நீலநக்கர்! கோபம் குபுகுபு என்று பொங்குகிறது!
அவருக்குச் சிலந்தி விழுந்தது கூடக் கண்ணுக்குத் தெரியவில்லை!
கண்ணை மூடிக்கிட்டு, அவருண்டு, அவர் மந்திரம் உண்டு-ன்னு இருப்பவருக்கு கண்ணில் படவில்லை போலும்!

மனைவியின் ஊனக் கண்ணுக்குத் தெரிந்தது கூட அவர் ஞானக் கண்ணுக்குத் தெரியவில்லையோ! இது தான் அனுஷ்டான ஆழமோ?

நாயனார்: "அறிவில்லாதவளே! என்ன காரியம் செய்தாய்? புத்தி இல்லை? ஆருத்ரா அதுவுமாய் குளிரக் குளிர அபிஷேகம் செய்துண்டு இருக்கேன்! அதைக் கெடுப்பது போல் வந்து வாயால் ஊதுகிறாயே? பால் சூடாக இருக்கும்-ன்னு ஊதினாயோ? பெண் புத்தி பின் புத்தி! எத்தனை காலமாய் நம்ம வீட்டில் இருக்கிறாய்? பாலாபிஷேகப் பாலைச் சுட வைப்பதில்லை-ன்னு கூடவா தெரியாது?"

மனைவி: "ஐயோ! அப்படியில்லீங்க"

நாயனார்: "என்ன அப்படியில்லை? உன் எச்சில் பூரா, பகவான் மேல் பட்டிருக்கு! அனாச்சாரம்! துராச்சாரம்! அபசாரம்! இப்போ நான் இன்னொரு முறை முதலில் இருந்து அபிஷேகம் செய்யணும்! ச்சே!"

மனைவி: "என்னங்க! அதோ பாருங்கள்! அங்கே...அங்கே...சிலந்தி ஓடுகிறது! அதோ...அதோ...
எவ்ளோ பெரிசு பாருங்க! விஷச் சிலந்தி! ஈசன் திருமேனியில் கிடந்தது! அதான் ஊதினேன்!"

நாயனார்: "எதுக்கெடுத்தாலும் ஒரு பதிலை வச்சிருப்பியே! சிலந்தி இருந்தா அதை அப்புறப்படுத்த ஆயிரம் வழி இருக்கே! எந்த மடையனாச்சும் இப்படி ஊதித் தள்ளுவானா?"

மனைவி: "மன்னித்துக் கொள்ளுங்கள்!"
________________________________________

நாயனார்: "இந்தச் சிவலிங்கம் ஆகமப் பூர்வமாக ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டது-ன்னு உனக்குத் தெரியாதா? எத்தனை எத்தனை சங்காபிஷேகம் பார்த்திருக்கும் இந்தச் சிவலிங்கம்?
பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஈசனுடைய ஜீவனே இதிலே இருக்கு-ன்னு, மற்றவாளுக்கு வேணும்னா தெரியாம போகலாம்! நம்ம வீட்டுப் பொண்ணு உனக்கே தெரியலீன்னா எப்படி?"

மனைவி: "ஜீவனுள்ள பகவானாச்சே-ன்னு தான் நானும் அப்படிச் செய்தேங்க! சிலந்தி விஷம் ஏறிடுமோ-ன்னு பயம்! வீட்டில் இருக்கும் பிள்ளைகள் மேல் பூச்சி விழுந்தா ஊதுறாப் போல ஊதிட்டேன்!
ஏதோ சட்டு-ன்னு அப்போ அதான் தோனித்து! தர்ப்பைக் குச்சியால் அகற்றி இருக்கலாமோ-ன்னு இப்போ தான் தோனுது! செஞ்சது தவறு-ன்னா மன்னித்து விடுங்கள் சுவாமி!"

நாயனார்: "ஓ...ஆக......இப்போ கூட நீ செஞ்சது தவறு-ன்னு உனக்குத் தோனலை! தவறா "இருந்தா" பொறுத்துக்கோங்க-ன்னு தான் இப்பவும் பேசுற! இல்லை இல்லை! இது சரி வராது!"

மனைவி: "என்னாங்க..."

நாயனார்: "உன் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பாமரத்தனமாகச் செய்யலாம்! பிற்பாடு விளக்கம் சொல்லிச் சரி கட்டிக்கலாம் என்பதெல்லாம் ஆன்மீகம் இல்லை!
அதுக்குன்னு ஒரு வரைமுறை இருக்கு! அது புரியாத உன்னோடு இனி எனக்குப் பேச்சு இல்லை! என்னை விட்டு அகன்று விடு! உன் வழியை நீ பார்த்துக் கொள்!"

மனைவி: "ஐயோ! என்னங்க இப்படியெல்லாம் பேசறீங்க? வேணாங்க! மன்னிச்சிருங்க! இல்லை வேறு ஏதாச்சும் தண்டனை கொடுங்க! ஆனா இப்படியெல்லாம் பேசாதீங்க!"

நாயனார்: "இல்லை! இனி நாம் பேருக்குத் தான் கணவன்-மனைவி! நமக்குள் எல்லாம் முறிந்தது!"

வார்த்தைகள் இடி போல் இறங்கின! மனைவி அழுதபடி கோயிலின் வாசலில் ஒதுங்குகிறாள்!
எச்சில் பட்ட தோஷத்துக்கு மீண்டும் இன்னொரு முறை பிராயச்சித்த அபிஷேகம் ஆரம்பிக்கிறார் நீலநக்கர்! தீப ஆராதனைகள் தொடர்கின்றன! சிவோஹம்! சிவோஹம்!

------
"நீலநக்கா!"

நாயனார்: "யாரது?"

ஈசன்: "கனவில் வந்த ஈசனைக் கூட அடையாளம் காண முடியவில்லையா நீலநக்கரே? ஆகமப் பிரகாரம் வராமல் சும்மா கனவில் வந்ததால் உமக்கு அடையாளம் தெரியவில்லையோ?"

நாயனார்: "சுவாமி...தாங்களா? வர வேணும்! வர வேணும்! என் பாக்கியம்! என் குலம் செய்த பாக்கியம்! என் முன்னோர் செய்த பாக்கியம்! என் பூஜை புனஸ்காரங்கள் பொய்யாகவில்லை! ஆகா என் பூஜை புனஸ்காரங்கள் பொய்யாகவில்லை!"

ஈசன்: "ஒரு வரியில் இத்தனை "என்"-ன்னா? ஹா ஹா ஹா! பூஜை புனஸ்காரம் பொய்யாகிவிடுமோ-ன்னு சந்தேகம் வேற இருந்ததா உமக்கு? ஏன் இப்படி "பொய்யாகவில்லை, பொய்யாகவில்லை" என்று இத்தனை முறை குதூகலிக்கிறீர்?"

நாயனார்: "அப்படியில்லை சுவாமி! உங்களைப் பார்த்த சந்தோஷம்! எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலை!"

ஈசன்: "பேசுவது எல்லாம் இருக்கட்டும்! இதோ...நீ பூஜை புனஸ்காரம் செய்த அழகைப் பார்! என் தோளைப் பார்! என் ஒரு பக்கத்துக் கன்னத்தைப் பார்!"

நாயனார்: "ஐயோ! இது என்ன இப்படிக் கெண்டு கெண்டாக கொப்பளம்! வீங்கி இருக்கே! நீலம் பாய்ந்து இருக்கே! இது என்ன விபரீதம்?..."

ஈசன்: "விபரீதம் விபரீதம்-ன்னு இப்பவும் பேசிக்கிட்டு தானே இருக்கே? பட்ட இடத்தில் திருநீறு பூசுவோம்...துளசியும் நெல்லி இலையும் அரைத்துப் பூசுவோம்-ன்னு தோனுதா உனக்கு? சரி, இப்போ என் இடப்புறம் தோளைப் பார்! கன்னத்தைப் பார்! தலையைப் பார்"

நாயனார்: "ஆகா! ஒரு பக்கம் மட்டும் தான் கொப்பளம் பூத்துக் கிடக்கு! இன்னொரு பக்கம் இல்லையே! இது எப்படிச் சாத்தியம்?"

ஈசன்: "உன் மனைவி ஊதியதால் சாத்தியம்! அவள் எச்சில் பட்டதால், சிலந்தி பட்ட இடம் ஈரமானது! குளிர்ந்ததால் கொப்பளம் எழவில்லை!
நீ பிராயச்சித்த அபிஷேகம் செய்கிறேன் பேர்வழி-ன்னு தேனை ஊற்றத் தொடங்கினாய்! தேன் சூடு-ன்னு தெரியாதா? இந்தப் பக்கமெல்லாம் கொப்பளம்! திருப்தி தானே?"

நாயனார்: "சுவாமீமீமீ...."
________________________________________


ஈசன்: "யார், யாரைத் தள்ளி வைப்பது? என்ன கேட்டாய் அவளை? ஜீவனுள்ள பகவானை எச்சிற்படுத்தலாமா-ன்னு தானே கேட்டாய்? இப்போ நான் உன்னைக் கேட்கிறேன்.......ஜீவனுள்ள பகவானை விஷத்தால் இம்சைப்படுத்தலாமா?
எனக்கு ஜீவன் இருக்கு-ன்னு உனக்கும் தோனலையே?
எச்சிற்படுத்தக் கூடாது...ஆனால் இம்சைப்படுத்தலாம்! அப்படித் தானே?"

நாயனார்: "ஐய்யய்யோ! அறிவீனனாய் போனேனே! சுவாமி என்னை மன்னியுங்கள்! மன்னியுங்கள்!"

ஈசன்: "மன்னிப்பா? எல்லாம் முறிந்தது-ன்னு சொல்ல எனக்கும் எவ்வளவு நேரம் ஆகும்?
உன் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் பண்டிதத்தனமாகச் செய்யலாம்! பிற்பாடு விளக்கம் சொல்லி சுலோகம்/பாட்டு எழுதி விடலாம் என்பதெல்லாம் ஆன்மீகம் இல்லை! அதுக்குன்னு ஒரு அன்பு இருக்கு!
அது புரியாத உன்னோடு இனி எனக்குப் பேச்சு இல்லை! என்னை விட்டு அகன்று விடு! உன் வழியை நீ பார்த்துக் கொள்"

நாயனார்: "ஐயோ! என் வார்த்தைகளை எனக்கே சொல்றீங்களே பெருமானே! உத்தமியை நோகடித்தேனே! உத்தம அன்பை நோகடித்தேனே!
"என்னை" மன்னித்து விடுங்கள்! இல்லையில்லை! "அடியேனை" மன்னித்து விடுங்கள்!

ஆயிரம் கர்மா செய்து என்ன பயன்? பகவானை, "என் பகவான்" என்று பாவிக்கத் தெரியாமப் போச்சே! ஞானம், கர்மம், பக்தி எல்லாம் அந்தப் பாவனைக்குத் தானே!
எரியும் விறகுக் கட்டையானது குளிரைப் போக்க மட்டுமே-ன்னு தெரியாமல், விறகுக் கட்டையைப் போய் கெட்டியாக, சாஸ்திரம் சாஸ்திரம்-ன்னு அணைத்துக் கொண்டேனே! சிவா சிவா!
இதோ ஓடுகிறேன் கோயிலுக்கு! அவளிடம் மன்னிப்பு கேட்டால் தான் என் தாபம் அடங்கும்!" ......................

கனவு கலைந்தது! குடும்பம் சேர்ந்தது!
________________________________________


பின்னாளில் மனம் திருந்தி், மனையாளோடு, சிவத் தொண்டு புரிந்து வந்தார் திருநீலநக்கர்! சாத்திர அபிமானத்தை விட்டொழித்து, சாத்திரத்தின் உள்ளத்தையே பார்த்து வாழ்ந்து வந்தார்!
அதற்காக நியம நிஷ்டைகளை எல்லாம் விட்டு விடவில்லை! ஆனால் அவற்றில் அபிமானம் கலக்கவில்லை! மாறாக அன்பு கலந்தது!

ஞானசம்பந்தர் பின்னாளில் சாத்தமங்கையில் இவர் வீட்டுக்கு எழுந்தருளினார்!
அப்போது கூடவே திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும் அவர் மனைவியும் சம்பந்தருடன் வந்தார்கள்! அவர்கள் சாதியால் பாணர்கள்! அந்தணர் வீட்டில் பாண சாதிக்கெல்லாம் இடம் உண்டோ? பாணன் கருவறைக்குள் தான் வருவானோ?....ஆனால் முன்பு போல் நீலநக்கரிடம் பழைய அபிமானங்கள் எல்லாம் இப்போது இல்லை!

வந்தவர்களை எங்கே தங்க வைப்பது? வீடோ சிறிசு! இடமோ சம்பந்தருக்கு மட்டும் தான் ஏற்பாடு செய்து இருக்கு! மனைவியின் ஆலோசனையைக் கேட்க....

அன்றாடம் தான் வேள்வி செய்யும் வேதிகை! அந்த இடத்திலேயே இடம் ஒதுக்கிக் கொடுத்தார் நீலநக்கர்! வேள்வித் தீ முன்னை விட வலம் சுழித்துப் பிரகாசமாக எரிந்தது! பெரும் இசைவாணரும் அடியாருமான திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் மனங் குளிர்ந்தார்! சம்பந்தப் பெருமானும் பதிகம் பாடி அருளினார்!

வேதமாய் வேள்வியாகி விளங்கும் பொருள் வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகம் நிலைதான் சொலல் ஆவதொன்றே
சாதியால் மிக்க சீரால் தகுவார் தொழுஞ் "சாத்தமங்கை"
ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே! - (தேவாரம், மூன்றாம் திருமுறை)

நன்றி: KRS கண்ணபிரான் "மாதவிப்பந்தல்" வலைப்பதிவு.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum