TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆட்டிப் படைத்த அமெரிக்கா: முடங்கி போன காரணம் இதுதான்!

Go down

ஆட்டிப் படைத்த அமெரிக்கா: முடங்கி போன காரணம் இதுதான்! Empty ஆட்டிப் படைத்த அமெரிக்கா: முடங்கி போன காரணம் இதுதான்!

Post by ஜனனி Thu Oct 03, 2013 6:38 pm

அமெரிக்க அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் கதவடைப்பு நேற்று இரண்டாவது நாளாக அமலானது. ஒபாமாவின் பெடரல் அரசு அலுவலங்கள், சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் பாதி நாளில் நேற்று வீடு திரும்பி விட்டனர். அரசு வெப்சைட்கள் ‘இருட்டு’ மயமானது. யெல்லோஸ்டோன், அலாக்ரடஸ் போன்ற தேசிய பொழுதுபோக்கு பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் போன்றவையும் இழுத்து மூடப்பட்டன.ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு இரண்டுமே பரஸ்பரம் பிடிவாதமாக தங்கள் நிலையில் இருப்பது மட்டுமின்றி, இனி சமரசத்துக்கு இடமே இல்லை என்று அதிபர் ஒபாமா திட்டவட்டமாக இருப்பதால், 1995ல் இருந்தது போன்று இல்லாமல், ஒரு வாரத்துக்கும் மேலாக கதவடைப்பு நீடிக்கும் என்று தெரிகிறது.
ஆட்டிப் படைத்த அமெரிக்கா: முடங்கி போன காரணம் இதுதான்! 3-america
அண்மையில் அமெரிக்காவில் உள்ள சாதாரண மக்களுக்கும், வயதானவர்களுக்கும் ஒபாமா தனி சுகாதார காப் பீட்டு திட்டத்தை கொண்டு வர உள்ளார். ஜனவரி மாதம் 1ம் தேதி அமலாகிறது. மிதவாத எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எம்பிக்கள், ‘இப்படி அரசு பணத்தை வீணடிக்கக் கூடாது; அவரவர் வேண்டிய காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கட்டும்’ என்று கூறி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

கடந்த திங்கள் அன்று அமெரிக்காவில் நிதி ஆண்டின் கடைசி நாள். அன்று அவசர நிதி மசோதாவை நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஒபாமா அரசு கொண்டு வந்தது. பட்ஜெட்டில் சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கும் ஒப்புதல் தர வலியுறுத்தியது. திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று கோரி அதை ஓட்டெடுப்புக்கு விட வேண்டும் என்று கூறி 228 ,221 என்ற ஓட்டு கணக்கில் குடியரசு கட்சி வெற்றிபெறச் செய்தது.
அதே திருத்தங்களை செனட் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி 54 ,46 கணக்கில் தோற்கடித்தது. இந்த இழுபறி காரணமாக மீண்டும் பிரதிநிதிகள் சபையில் நள்ளிரவு வரை விவாதம் நீடித்தது. ஆனால், எந்த சமரசமும் ஏற்படவில்லை. செனட் சபையின் ஜனநாயக கட்சியும் பிடிவாதமாக இருந்தது.இதையடுத்து நள்ளிரவில் பேசிய ஒபாமா, நாளை அமெரிக்காவுக்கு பெரும் அவமானம் ஏற்படப்போகிறது. அரசு கஜானா முடங்கும். அந்த செயலை செய்த உங்களை மக்கள் மன்னிக்க மாட்டர்’ என்று கோபத்துடன் பேசினார்.
நள்ளிரவை தாண்டிய நிலையில், அவசர நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அரசு நிதி தொடர்பாக அவசர முடிவுகளை ஒபாமா எடுத்தார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், திட்டப்பணிகள், தேசிய இடங்கள் பராமரிப்பு, வெப்சைட்கள் பராமரிப்பு போன்றவற்றை நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் நாள் பல அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. அதுபோல, வாஷிங்டன், நியூயார்க் உட்பட பல மாநிலங்களில் உள்ள தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மூடப்பட்டன. ஊழியர்கள் காலவரையற்ற விடுப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் மதியத்துக்கு மேல் பலரும் தங்கள் லேப்டாப்களை எடுத்து கொண்டு வீடு திரும்பினர். முதியோர் காப்பகங்களும் மூடப்பட்டன. அவர்களுக்கு மாநில அரசு நிதி மட்டும் கிடைத்தது. மருத்துவ வசதிகளும் குறைக்கபப்ட்டன. பல இடங்களில் குப்பை அள்ளுவதும் பாதிக்கப் பட்டது.
எல்லை பாதுகாப்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, உணவு துறை போன்ற பணிகளில் பாதிப்பில்லை. அந்த பணிகளில் உள்ள ஊழியர்கள் வேலை க்கு வந்தனர். பாஸ்போர்ட், விசா பணிகளும் கூட பெரிய அளவில் பாதிக்கவில்லை. மத்திய அரசின் ஊழியர்கள் எண்ணிக்கை 24 லட்சம். அதில் மூன்றில் ஒரு பங்கான 8 லட்சம் பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டாவது நாளாக நேற்று வேலைக்கு வரவில்லை. எனினும், ஒபாமாவின் சுகாதார காப்பீடு திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வாங்கும் பணிகள் 1 ம் தேதியில் இருந்து திட்டமிட்டபடி தொடங்கின.
200 கோடி ரூபாய் இழப்பு: கடந்த 2 நாளில் மட்டும் அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் முடக்கம், தேசிய பொது இடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் இயங்காததால் மட்டும் 200 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், கதவடை ப்பை முடிவுக்கு கொண்டு வர எந்த தரப்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பரஸ்பரம் இரு கட்சிகளும் குற்றம்சாட்டுவதில் ஈடுபட்டுள்ளன. ‘நாங்கள் கதவடைப்பை விரும்பவில்லை. திட்டமிட்டு அரசு தான் செய்துள்ளது’ என்று குடியரசு கட்சி சொன்னது. ‘மக்களை பாதிக்கும் வகையில் நிதி மசோதாவை நிறுத்திய செயலுக்கு குடியரசு கட்சி பதில் சொல்லியாக வேண்டும்’ என்று ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியது.
பல வனவிலங்கு பூங்காவில் குவிந்த பெண்கள், குழந்தைகள் எல்லாம் திருப்பி அனுப்பப்பட்டனர். அதுபோல, அவசர தேவையற்ற நிர்வாக பணிகள் கவனிக்கும் பல அலுவலகங்கள், அரசு ஏஜன்சிகள் ஆகியவையும் சம்பளம், பராமரிப்பு நிதி ஒதுக்காததால் மூட அறிவுறுத்தப்பட்டன. இது போன்ற அரசு பணிகள் முடங்கின. ஊழியர்கள் எல்லாரும் பிரச்னை தீரும் வரை ஆபீஸ் வர வேண்டாம் என்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளை மாளிகை: பெடரல் அரசு என்பது தான் மத்திய அரசு. அந்த அரசு பணிகள் தான் முடங்கின. வெள்ளை மாளிகையில் அதிபர் ஆபீஸ் பணிகளும் கூட முடங்கின. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. வெறும் 1,200 பேர் மட்டும் முக்கிய பணிகளை கவனித்தனர். பாஸ்போர்ட், விசா பணிகள், தூதகர பணிகள் போன்றவை பாதிக்கவில்லை. மேலும், பாஸ்போர்ட், விசா ஆகியவற்றில் கட்டண வருவாய் இருப்பதால் அந்த பணிகளை கவனிக்கும் பணியாட்கள் வழக்கம் போல பணிக்கு வந்தனர் என்று என்பிசி செய்தி கூறியுள்ளது.
In first day of U.S. shutdown, no sign how it will end
***********************************************************
President Barack Obama and congressional Republicans came no closer to ending a standoff on Tuesday that has forced the first government shutdown in 17 years and thrown hundreds of thousands of federal employees out of work.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதாவை திருமா எதிர்த்து நிற்க இதுதான் காரணம்...! -அதிரப் போகும் ஆர்.கே.நகர்
» ஸ்டாலின் மீதான பிரேமலதா கோபத்துக்கு இதுதான் காரணம்!
» மாயன் காலண்டர் உலகம் அழியாத்த்ற்கு காரணம் இதுதான்
» டி-20 உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாக். போட்டி மாற்றத்துக்கு இதுதான் காரணம்!
» தமிழ‌ர்க‌ளி‌ன் கரத்தைப் பற்றிப்பிடிக்க ராஜப‌‌க்சவுக்கு இதுதான் சந்தர்ப்பம்: அமெரிக்கா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum