TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மனித நாகரிகத்தின் மகத்தான விழா!

Go down

மனித நாகரிகத்தின் மகத்தான விழா! Empty மனித நாகரிகத்தின் மகத்தான விழா!

Post by மாலதி Sat Sep 21, 2013 7:18 pm

மனித நாகரிகத்தின் மகத்தான விழா! In_1சினிமாவுக்கு வயது இப்போது 100. ஆஹா!... அடே.. அடடே! என வியக்கும் அளவுக்கு அதன் சாதனைகள் இந்தப் பிரபஞ்சத்தைத்  தாண்டி விட்டது. மனிதனின் கண்டுபிடிப்புகளில் மகத்தான கலையாகக் கருதப்படும் சினிமா, இந்து நூறு ஆண்டுகளில் வியப்பூட்டும் பல திருப்பங்களையும், சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், மறக்கவே முடியாத பல நட்சத்திரங்களையும் தாங்கி நின்றிருக்கிறது. 

நூறு வயது ஆனாலும், சினிமா எப்போதும் 16 வயது இளம் மங்கைதான்.எதிர்த்தவர்களை துவம்சம் செய்யும் இளம் காளைதான்! இந்த அம்சம்தான் மற்ற எந்தக் கலைக்கும் கிடைக்காத அரிதினும் அரிதான வாய்ப்பு. புதியதாக கண்டுபிடிக்கப்படும் அத்தனை விஷயங்களையும் தனக்குள் உள்வாங்கிக்கொண்டு தன்னை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் சினிமாவை தமிழக அரசுடன் சேர்ந்து மகுடம் சூட்டி, அழகுப் பார்க்கிறது திரையுலகு!

சென்னையின் பூங்காக்களிலும், முக்கியத் திரையரங்குகளிலும் காலத்தால் மறக்க முடியாத திரைக் காவியங்களை இலவசமாக மக்கள் கண்டு களிக்க ஏற்பாடும் செய்திருக்கும் அரசுக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் ஒரு சேர பூங்கொத்து கொடுத்து, கைககுலுக்கி வரவேற்கலாம். மற்ற எந்த விழாவுக்கும் இல்லாத சிறப்பு, இந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்கு உண்டு. அது, சாதி, மத, இன,மொழி அடையாளங்களைக் களைந்து எல்லோரும் ஓர் குடையின் கீழ் நின்று, வாழ்வைத் தரிசிக்க... சக மனிதனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வழிகாட்டிய சினிமாவின் பிள்ளைகள் நாம் என்பதுதான்! 

இது நம் விழா... ஒவ்வொரு குடிமகனின் வீட்டில் நூறு ஆண்டுகளாக பயணித்த... மூத்த கலைக்கு மரியாதை செய்யும் விழா... இதில் இந்தியாவின் முதல் குடிமகனும் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் என்பதைக் கேட்கும்போது... உண்மையில், இதுதான் மனித நாகரிகத்தின் மகத்தான விழா! மனித நாகரிகத்தின் மகத்தான விழா! Pather_04_1

சினிமா கண்டுபிடிக்கப்படாமலேயே போயிருந்தால் நாம் என்னவாகியிருப்போம்? தமிழ் சினிமாவுக்கு இளையராஜா கிடைக்காமல் போயிருந்தால் என்ன மனநிலையில் வாழ்வு தினசரி கழிந்திருக்கும்-? நினைத்தாலே பயமாக இருக்கிறது. மனித வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட... சரியாக பாலுமகேந்திராவின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் ரத்தமும் சதையுமாக கலந்துவிட்டது சினிமா. மனித வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்ட சினிமா, கடைசி மனிதன் உள்ளவரை இருக்கும், வாழும்.  உலக அளவில் பல்வேறு மொழிகளில் படங்கள் தயாரிக்கப்பட்டாலும், இந்தியாவில்தான் அதிகமான திரைப்படங்கள் உருவாகிறது என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. 

இன்று பெரும் வணிகம் புழங்கும் தொழிலாக சினிமா மாறியிருந்தாலும், அதன் ஒட்டுமொத்த நோக்கமும் பொருள் ஈட்டுவது மட்டுமல்ல. அது மனிதனை மகிழ்ச்சிப்படுத்தும் கலை. மனித நாகரிகத்தின் கசடுகளைத் தோலுரித்து, மேன்மைப்படுத்தும் கலை. அதற்குள் ஆயிரம் சிக்கல்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி உயர்ந்திருக்கும் உன்னத கலைதான் சினிமா!

இந்திய சினிமா தான் கடந்து வந்த இந்த நூறு ஆண்டுகளில் மறக்க இயலாத நட்சத்திரங்களையும், இசையமைப்பாளர்களையும், பாடகர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் வழங்கி மக்களை மேம்படுத்தியிருக்கிறது. வாழ்க்கையை ரம்மியமாகவும், ரசனையாகவும் வைத்திருக்க கற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சினிமா மனித வாழ்க்கையை ஒரு உன்னதப் பாதையை நோக்கி வழிநடத்திய ஆசான் என்றால் அது மிகையில்லை! 

லூமியர் சகோதரர்கள் கண்டுபிடித்த நகரும் படக் காட்சி, இரண்டு வருடங்களில் சென்னைக்கு வந்துவிட்டது. பத்து நிமிடங்கள் மட்டுமே திரையில் ஓடக் கூடிய படங்கள் ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்டன. அது இன்று மூன்று மணி நேரப் படமாக மாறியிருக்கிறது. ரயிலின் வருகை என்ற படம் முதன் முதலாக திரையில் காண்பிக்கப்பட்டபோது, ரயில் தங்கள் மீது மோதி விடும் என அஞ்சி தியேட்டரை விட்டே மக்கள் ஓடினார்கள். பின் தியேட்டர் வாசலில் அதே மக்கள் இன்று கால்கடுக்கக் காத்து நிற்கிறார்கள். சினிமாவின் மகத்தான சாதனை இதுதான்!

சரி! இந்திய சினிமாவில் நூறு ஆண்டுகளில் யாரெல்லாம் மக்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கிறார்கள் என்றால் அந்தப் பட்டியல் நீளமானது. ஆனாலும், காலத்தைத் தாண்டியும் மிகச் சிலரே நின்றிருக்கிறார்கள். திரைப்படம் என்கிறபோது அதன் ஒட்டுமொத்த படைப்பாற்றலுக்குப் பின்னால் நிற்பவர் இயக்குநர் மட்டுமே. அவரே, அதன் வெற்றி, தோல்விக்கு தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டிய முதல்நபர். அந்தவகையில் நூறு ஆண்டு இந்திய சினிமாவில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் வந்த ஒரேயரு பெயர் மட்டுமே தேசம் முழுமைக்குமாக உரக்க உச்சரிக்கப்படுகிறது. ஆம்! நண்பர்களே... வங்கத்தின் புலி ரே எனும் சத்யஜித்ரே!

  மனித நாகரிகத்தின் மகத்தான விழா! Satyajit-Rayரே எனும் மகத்தான கலைஞனே தனது 'பதேர் பாஞ்சாலி' படத்தின் மூலம் வாழ்க்கையைப் பிரதி எடுத்து திரையில் உலவ விட்ட உன்னதக் கலைஞனாக.. நூறு ஆண்டு இந்திய சினிமாவில் உயர்ந்து நிற்கிறார். முதல் ஐம்பது -ஆண்டுகளில் பல்வேறு படங்கள் உருவாக்கப்பட்டபோதிலும், மனித வாழ்வை இந்த அளவிற்கு எந்தப் படமும் பதிவு செய்யவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகே இந்திய சினிமாவுக்கு ஒரு மகுடம் கிடைத்தது என்றால் அது 'பதேர் பாஞ்சாலி'தான். துர்காவும், அபுவும், பாம்பு புகுந்த வீடும்.. பாட்டியும் இன்னும் நம் கண்களைவிட்டு அகலவில்லை. ஆயிராமாயிரம் படங்கள் இந்தியாவில் எடுக்கப்பட்ட போதும், அத்தனையையும் புறம்தள்ளிவிட்டு ஒரே ஒரு  சினிமாவே முன்னால் நிற்கிறது.  நல்ல சினிமாவுக்கான பாதையும் 'பதேர் பாஞ்சாலி' திரைப்படத்தில் இருந்துதான் தொடங்கியது. அதன் பிறகு சுனாமி வேகத்தில் இன்று சிறந்த இயக்குநர்களின் வருகை இந்திய சினிமாவுக்குள் மிகப்பெரும் பாய்ச்சலை கொண்டுவந்திருக்கிறது.

வங்காளத்தில் கவனம் ஈர்த்த மற்றொரு இயக்குநர் ரித்விக் கட்டக் ஆவார். தனது 'மேக தக்க தாரா' படத்தின் மூலம் புதிய யதார்த்தத்தை இந்திய சினிமாவுக்குள் நிகழ்த்திக் காட்டினார். தொடர்ந்து மிருணாள் சென், ஷியாம்பெனகல், கிரிஷ் காசரவள்ளி, ஜான் ஆபிரஹாம், அடூர் கோபாலகிருஷ்ணன், பரதன், அரவிந்தன், மகேந்திரன் என அனைத்து மாநிலங்களிலும் சத்யஜித்ரே சீடர்கள் சினிமாவை யதார்த்த தளம் நோக்கி வேகமாக நகர்த்தினார்கள். அதன்பின் வந்த அனைவரும் இன்று வரை இந்த பிதாமகன்களை மிஞ்சிய ஒரு படைப்பை உருவாக்குவதில் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களது அசாத்திய சாதனையை இன்னும் புதியவர்களால் முறியடிக்க முடியவில்லை என்பதுதான் பேருண்மை!

இந்திய சினிமாவில் தமிழுக்கும், மலையாளத்துக்கும் பெரும் இடம் உண்டு. இதில் கேரளமே மகத்தான சாதனைகளை உருவாக்கியது. கேரளத்தின் அரசியல் தளம் அதன் வெற்றிக்கு பல வகையில் பின்னணியாக இருந்தது. பொதுவுடைமை சித்தாந்தத்தை உறுதியாக நம்பிய இயக்குநர்கள், கலை மக்களுக்காகவே என்பதில் தெளிவாக இருந்தார்கள். அதன்விளைவாக மனித வாழ்வில் பதிவு செய்ய வேண்டிய பல மகத்தான தருணங்களை ஃபிலிம் சுருளுக்குள் சிறை வைத்தார்கள். இன்று அந்தப் படங்களே தமிழ் சினிமாவுக்குள் பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. ராமுகாரியத் இயக்கிய 'செம்மீன்' தொடங்கி, கேரளத்தின் வலிமையான பல படைப்புகள் இன்று இளம் தலைமுறையினருக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்துள்ளது. அடூர் இயக்கிய 'சுயம்வரம்', 'கதாபுருசன்' மற்றும் எம்.டி.வாசுதேவன் நாயர் இயக்கிய 'நிர்மால்யம்' போன்றவை காலத்தைத் தாண்டி நிற்கும் படைப்புகள். இலக்கியத்தில் வைக்கம் முகமது பஷீர் போன்ற இலக்கிய ஜாம்பவான்கள் கேரளத்தில் பிறந்தது மலையாள சினிமாவுக்கு மகுடம் சூட்டியது போல் அமைந்தது.

 மனித நாகரிகத்தின் மகத்தான விழா! 12TH_NEW_SIVAJI_142837gநாடகத்தனமாக பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை தனது வசனத்தால் உடைத்து அரசியிலிலும் புதிய பாதையைப் போட்டார் மு. கருணாநிதி. அவரின் வசனத்தில் உருவான 'பராசக்தி' தமிழ் சினிமாவில் முக்கிய மைல்கல். 'பராசக்தி' படத்தின் கதையின் நாயகனாக அறிமுகமாகிய சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் தனி நடிப்புப் பாணியை உருவாக்கினார்.

அதே காலகட்டத்தில் தியேட்டருக்கு கூட்டத்தை முண்டியடித்துக் கொண்டு வந்த சேர்த்த மற்றொருவர் எம்.ஜி.ஆர். கால் நூற்றாண்டு காலம் தமிழக மக்கள் காண துடிக்கும் உச்ச நட்சத்திரமாக எம்.ஜி.ஆர் விளங்கினார். நடிகர் என்பதையும் தாண்டி, அவரிடம் எதோ ஒரு கவர்ச்சி அவரிடம் இருந்தது. எதிரிகளையும் தன்னுடைய தோழனாக மாற்றக்கூடிய அசாத்திய சக்தியும் எம்.ஜி.ஆருக்கு இருந்தது.
 மனித நாகரிகத்தின் மகத்தான விழா! MGR'அன்பே வா', 'உலகம் சுற்றும் வாலிபன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'எங்க வீட்டுப் பிள்ளை' என்று பாக்ஸ் ஆபிஸில் பல ஹிட்டுக்களை கொடுத்தவர் எம்.ஜி.ஆர். தான் நடிக்கும் படத்தில் மது, சிகரெட்டை அறவே தவிர்த்த முற்போக்குவாதி எம்.ஜி.ஆர். மார்க்சிய சித்தாந்த்தை தன்னுடைய பாடல்களில் இடம்பெற செய்து, பாமர மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த நட்சத்திரம் எம்.ஜி.ஆர் மட்டுமே. தமிழ் சினிமா ரசிகன் அவரை தமிழகத்தின் முதல்வராகவும் உட்கார வைத்து அழகு பார்த்தான். ரசிகனுக்கும், தன்னை நம்பியவர்களுக்கும் என்றுமே ஒரு காட்பாதராக விளங்கினார் எம்.ஜி.ஆர். அவரின் இழப்பு... தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், தமிழக அரசியலிலுமே ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. இவரின் முன்னோடியான என்.எஸ்.கிருஷ்ணன் நாடகத்திலும், திரைப்படத்தில் நகைச்சுவையின் மூலம் முற்போக்கு கருத்துக்களை பரவ விட்டவர். தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதும்போது கலைவாணர் என்று அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணனை தவிர்த்துவிட முடியாது.

அறுபதுகளில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த இயக்குநர் ஸ்ரீதரின் வருகை பின்னர் தமிழில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்து சேர்த்தது. பாத்திரப்படைப்பு, வசனம், மாறுப்பட்ட திரைக்கதைகள், தொழில்நுட்பம் என்று தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தினார் ஸ்ரீதர். 'கல்யாணப் பரிசு', 'நெஞ்சில் ஓர் ஆலயம்', 'காதலிக்க நேரமில்லை' போன்ற படங்கள் உதவி இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பல பாடமாகவும் அமைந்தன. 

  மனித நாகரிகத்தின் மகத்தான விழா! K_balachandar_5_1மேடை நாடகத்தில் ஆளுமை செலுத்திக் கொண்டிருந்த கே.பாலசந்தர் தனது 'நீர்க்குமிழி' படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக புரமோஷன் ஆனார். 'தண்ணீர் தண்ணீர்', 'சிந்து பைரவி' உள்பட ஏராளமான படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்தார். பல முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமலை தமிழ் சினிமாவுக்கு அடையாளப்படுத்திய பெருமையும் கே.பி.யையேச் சாரும். இயக்குநர்களுக்கு தனி அந்தஸ்தைப் பெற்றுக்கொடுத்தது இவரின் வரலாற்று சாதனையாகும்! 

எழுபதுகளில் ''என் இனிய தமிழ் மக்களே...'' என்று அழைத்தவாறு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த பாரதிராஜா தனது 'பதினாறு வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் யதார்த்த அலையை உருவாக்கினார். முதல் மரியாதை அவர் இயக்கிய படங்களிலேயே இன்றளவிலும் மிக முக்கியமான படைப்பாகும்.மனித நாகரிகத்தின் மகத்தான விழா! Bharathiraja
ஸ்டூடியோவு-க்குள் சுற்றிக்கொண்டிருந்த கேமிராவைத் தூக்கிக்கொண்டுபோய் கிராமத்தில் மறைத்து வைத்து மனிதர்களைப் படம் பிடித்த மகத்தான கலைஞன் பாரதிராஜாதான்! அவரின் சிஷ்யர்கள் பின்னர் தமிழ் சினிமாவை நெடுங்காலம் ஆக்கிரமித்தார்கள். பாக்யராஜ் அதில் முக்கியமான இயக்குநர். திரைக்கதையின் ஆளுமையை பாமர ரசிகனும் விவாதிக்க வழி வகுத்தவர் பாக்யராஜ்தான்! 'சுவரில்லாத சித்திரங்கள்', 'அந்த ஏழு நாட்கள்', 'இன்று போய் நாளை வா' போன்றவை குறிப்பிடத்தகுந்த படைப்புகள் ஆகும். பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன் என பா வரிசை இயக்குநர்களால் தமிழ் சினிமா திண்டாடியது. மணிரத்னம் என்ற இளைஞர் அதன்பின்னர் தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்கு இட்டுச் சென்றார். அவர் இயக்கிய 'நாயகன்', 'தளபதி' தமிழ் சினிமாவுக்கு வேறு ஒரு பாதையை காட்டியது. பின்னர் வந்த இயக்குநர் சேரன் தனது 'பாரதி கண்ணம்மா', 'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து' போன்ற படங்களின் மூலம் புதிய யதார்த்த சினிமாவுக்கான தேடலை இளம் தலைமுறையிடம் விதைத்தார். இன்று அவரின் நீட்சியாக பல இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள்.

திரை இசைப் பாடல்களுக்குப் பின்னால் பைத்தியமாக தமிழ் சினிமா ரசிகனை கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் மற்றும் கண்ணதாசன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி கூட்டணி சுற்றவைத்தது. தமிழகத்தில் ஹிந்திப் பாடல்களில் இருந்து மக்களை விடுவித்த திரைஇசைக்கலைஞர்கள் இவர்கள்தான் என்பதில் தமிழ் சினிமாவுக்கு எப்போதுமே ஒரு கர்வம் உண்டு! இளையராஜா என்ற இளம் இசையமைப்பாளர் 'அன்னக்கிளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் காலடி வைத்திருந்தாலும், பாரதிராஜாவோடு இணைந்த பிறகு, அவரது இசை மேலும் பல படி முன்னே சென்றது. பட்டித் தொட்டியெங்கும் இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்கள் பட்டையைக் கிளப்பின. ஆடியோ விற்பனையில் தனிச்சாதனை நிகழ்த்திய காட்டியவர் இளையராஜாதான் என்றால் அது மிகையில்லை. அவரின் மெட்டுக்கு பாட்டு எழுதியவர்களில் முக்கியமானவர் வைரமுத்து. இன்றும் நள்ளிரவுகளில் ராஜாவின் தாலாட்டைக் கேட்டபடிதான் இளைஞர்களும், இளைஞிகளும் உறங்கச் செல்கிறார்கள் என்பதுதான் அவரின் தனிப்பெரும் சாதனை!

மனித நாகரிகத்தின் மகத்தான விழா! Indexதமிழ் சினிமாவின் திரைப்பட வரலாற்றில் உச்ச பட்ச படைப்பாக கருதப்படுவது இயக்குநர் மகேந்திரன் இயக்கிய 'உதிரிப்பூக்கள்' திரைப்படம்தான். தென்னகத்தின் சத்யஜித்ரே என்று மக்களால் அழைக்கப்பட்ட ஒரே இயக்குநர் மகேந்திரன் மட்டும்தான். 'முள்ளும் மலரும்', 'ஜானி' போன்றவை அவர் இயக்கிய படங்களில் முக்கியமானவை.

2013 வரை மகேந்திரனின் படைப்பை மிஞ்சிய ஒரு சினிமா வரவில்லை என்பதுதான் தமிழ் சினிமாவுக்கு விடப்பட்டிருக்கும் சவாலாக முன்னால் நிற்கிறது. தற்போது தமிழ் சினிமாவுக்குள் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் பாலா, மிஷ்கின் போன்ற இளம் படைப்பாளிகள் அந்த சவாலை எதிர்கொள்வார்கள் என்று ரசிகன் எதிர்பார்த்து காத்திருக்கிறான். அதை அவர்கள் முறியடிப்பார்கள் என்று நம்புவோம் ஆக..!
- கிராபியென் ப்ளாக்
cinema.vikatan


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மருத்துவ ஆய்வில் மகத்தான சாதனை: மனித தோலில் இருந்து குருத்தணுக்கள் உருவாக்கும் முயற்சி வெற்றி...
» மருத்துவ ஆய்வில் மகத்தான சாதனை: மனித தோலில் இருந்து குருத்தணுக்கள் உருவாக்கும் முயற்சி வெற்றி...Achievement in medical research
» நாகரிகத்தின் கோரமுகம்!
» மக்கள் திலகம் கொண்டாடிய ஒரே விழா பொங்கல் விழா.
» இன்று உலக மனித உரிமை நாள்! - மனித உரிமை முற்றிலும் கருவருக்கப்பட்ட இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐ.நா. மனித உரிமை-அமைப்பிற்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum