TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நம்பிக்கையை நண்பனாக்குங்கள்!' - வலிகளுக்கு விடை தரும் ஞானபாரதி

Go down

நம்பிக்கையை நண்பனாக்குங்கள்!' - வலிகளுக்கு விடை தரும் ஞானபாரதி Empty நம்பிக்கையை நண்பனாக்குங்கள்!' - வலிகளுக்கு விடை தரும் ஞானபாரதி

Post by mmani Wed Sep 11, 2013 7:38 am

நம்பிக்கையை நண்பனாக்குங்கள்!' - வலிகளுக்கு விடை தரும் ஞானபாரதி
நம்பிக்கையை நண்பனாக்குங்கள்!' - வலிகளுக்கு விடை தரும் ஞானபாரதி 1185403_723720570987547_1792000751_n
'வலிகள் தரும் வேதனை மட்டும் வாழ்க்கையல்ல, அந்த வலிகளை மறப்பதற்கான வழிகளைத் தேடி, அந்த வேதனைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சாதனையை எட்டுவதுதான் வாழ்க்கை'- முதுகுத் தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 'ஸ்பைனல் கேர் இந்தியா’ என்ற அமைப்பை நடத்திவரும், 43 வயதான ஞானபாரதியின் நம்பிக்கையூட்டும் வார்த்தை இது. 

சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஞானபாரதி, விழுந்து எழுந்த கதை, பலரது வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கூட்டும்.

'என் வாழ்க்கைல தென்றலையும், புயலையும் ஒருசேர அனுபவிச்சிருக்கேன். டேராடூனில் ஆராய்ச்சியாளரா சந்தோஷமா இருந்தபோது, 2002-ல் உறவினர் வீட்டுக்குப் போறதுக்காக குரோம்பேட்டை ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும்போது, விபத்தில் சிக்கிக்கிட்டேன். என்னை ஆட்டோவுல அள்ளிப் போட்டுட்டுப் போனது மட்டும்தான் ஞாபகத்துல இருந்தது. கண் முழிச்சுப் பார்த்தப்பதான், என் நிலைமையே புரிஞ்சது. ஓடியாடித் திரிஞ்சுக்கிட்டு இருந்த என் ரெண்டு கால்களும் நகர்த்த முடியாமல் செயலிழந்து போச்சு. மூளையில் இருந்து தொடங்கி, முதுகுத் தண்டுவடத்தினுள் செல்லும் நரம்புகள்தான் மூளை இடுகிற அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றும். இந்த நிலையில் முதுகுத் தண்டுவடத்துல ஏற்பட்ட விபத்து, என் முதுகெலும்பை நொறுக்கிடுச்சு. இதில், ஒரு சிறு பிசிறு என் தண்டுவடத்தை வெட்டி, மார்புக்குக் கீழே இருந்து கால் பாதம் வரைக்கும் போகும் நரம்பையும் துண்டிச்சிடுச்சு. இதனால், கடந்த 11 வருஷமாக மார்புக்குக் கீழே எந்த உணர்ச்சியும் இல்லாமல் வாழ்ந்துட்டிருக்கேன். ஆனால், நம்பிக்கையை மட்டும் தளரவிடவில்லை.

அடிபட்ட நாளிலிருந்து எனக்குத் தெரிஞ்ச அத்தனை மருத்துவர்களையும் பார்த்துட்டேன். ஆனா, தண்டுவடம் பாதிக்கப்பட்டவங்களுக்குன்னு ஒரு சரியான சிகிச்சை இல்லைங்கிறதுதான் நான் தேடி அலைஞ்சதுக்குக் கிடைச்ச விடை. 

ஆனால், இந்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டவங்களுக்குன்னு இந்தியாவுல மொத்தம் மூணு மறுவாழ்வு மையங்கள் இருக்கு. அதுல, வேலூர் சி.எம்.சி மருத்துவமனையும் ஒண்ணு. இந்தப் பிரச்னையில் இருந்து எப்படி மீண்டு வர்றதுனு சிறப்புப் பயிற்சி தர்றாங்க. பண வசதி இல்லாதவங்களுக்குக்கூட, மிக குறைந்த பணத்தை வாங்கிட்டு கத்துக் கொடுக்கிறாங்க. நானும், அந்த மறுவாழ்வு மையத்துல சேர்ந்து, ஒரு குழந்தையைப் போல நடப்பது, படுப்பது, கை கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது என அத்தனையும் கத்துக்கிட்டேன். அந்தப் பயிற்சினால, உடலும், மனசும் உற்சாகமாச்சு.'' - நொறுங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்த கதையைச் சொல்லி முடித்த ஞானபாரதி, கார், பைக் போன்ற வண்டிகளை அநாயாசமாக ஓட்டுவதில் வல்லவர். பைக்கையும் தன் வசதிக்கு ஏற்ப மாற்றி வடிவமைத்திருக்கிறார். 'இதுபோன்ற ஐடியா எப்படித் தோன்றியது?’ என்று கேட்டால், 'தேவை தான் என்னை இப்படி சிந்திக்க வைத்தது’ என்று சொல்லி ஆழமான சிரிப்பை உதிர்த்தவர், மறுவாழ்வில் இவருக்குத் தந்த பயிற்சிகளை விவரித்தார். 

>> சாதாரண மனுஷங்களைவிட, எங்களை மாதிரி பாதிக்கப்பட்டவர்களோட, நுரையீரல் மிகவும் லேசாகத்தான் சுருங்கி விரியும். ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கிறதுதான் இதுக்குக் காரணம். இதற்காக ஸ்பெஷல் மூச்சுப் பயிற்சி சொல்லித் தருவாங்க. 

>> கால்களுக்கு இயக்கமே இல்லாததால், ஸ்பாஞ்ச் பந்தை நல்லா அழுத்தி கைகளையே கால்களாகச் செயல்படறதுக்கு உடற்பயிற்சி செய்ய வைப்பாங்க. 

>> எழுந்து நிற்க முடியல்லைன்னாலும், குடும்பத்தாரோட உதவியில், தினமும் கொஞ்ச நேரம் நிக்கணும். அதோடு, வாக்கர் உதவியில் நடைப்பயிற்சி செய்யணும்.

>> எழுந்து நிற்கப் பயிற்சி தருவார்கள். இதனால், கால்சியம் கரைவது நின்று கால்கள் மட்டுமில்லாமல், முழு உடம்பும் நன்றாக வலுவடையும்.

நான் எடுத்துக்கிட்ட பயிற்சிகளை, என்னை மாதிரியே பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனதுக்கு மருந்திடுவதுதான் எங்கள் அமைப்பின் முக்கியப் பணி.

என் வாழ்க்கையில் எனக்கு வந்ததைப் போல, எதிர்பாராத விபத்தோ அல்லது எப்பேர்பட்டப் பிரச்னையாக இருந்தாலும் மனசை மட்டும் தளரவிடாம, இறுக்கமா பிடிச்சுக்குங்க. ஏன்னா, தன்னம்பிக்கையைவிட சிறந்த மருந்தோ, டாக்டரோ இந்த உலகத்துல இல்லை'' என்றார் முத்தாய்ப்பாக.

தளராத மனம் வேண்டும்!

>> தனிமையாக இருக்கும்போது உண்டாகும் தாழ்வு மனப்பான்மையே, நம் ஆயுளை குறைத்துவிடும்.

>> மருந்தைதான் நம்புகிறோமே தவிர, மனதைக் கரைத்து விடுகிறோம். அதனால் தான், மனம் நொந்து சிலர் தற்கொலைக்கும் தயாராகின்றனர். 

>> தனிமையைச் சந்திக்கும்போது, 'நாம் இப்படி இருப்பதால்தான் யாரும் நம்மை கண்டுகொள்ள மாட்றாங்க’ என்று குடும்பத்தார் எவ்வளவுதான் உதவி செய்தாலும், இது போன்ற எதிர்மறையான எண்ணங்கள் கோபத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் அதிகரித்துவிடுவதுடன், குடும்பத்தாருக்கும் மன கஷ்டத்தை ஏற்படுத்திவிடும். இதையெல்லாம் அடியோடு ஒழிக்கும் அருமருந்துதான் நம்முடைய திடமான மனசு.

ஸ்பைன் கேர் அமைப்பின் செயல்பாடுகள்!

>> வருடத்துக்கு ஒருமுறை சிறப்புக் கூட்டங்கள் போட்டு, பாதிப்படைந்தவர்களின் அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள், சாதனைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்...

>> மறுவாழ்வு மையத்தின் மருத்துவரின் மூலம், ஒரே நேரத்தில் பலரை தொலைபேசி வாயிலாக இணைத்து, அவர்களின் உடல் ரீதியாக ஏற்படும் சந்தேகங்களைக் களைவது.

>> இது போன்று யாரேனும் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கேள்விப்பட்டால், அவரை தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு மனதைப் பக்குவப்படுத்துவது. 

சிகிச்சையும் உண்டு!

வேலூர், சி.எம்.சி. மறுவாழ்வு மையத்தில் சமூகப் பணியாளராக இருக்கும் கண்ணதாசன் முதுகெலும்பு பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசு சலுகைகளைச் சொன்னார்.

>>இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பாதிப்பைப் பொறுத்து சர்ஜரி செய்யப்படும்.

>> கழுத்துக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நியூரோ சர்ஜரியும், கழுத்துக்குக் கீழே பாதிக்கப்பட்டு இருந்தால் ஆர்த்தோ சர்ஜரியும் செய்வார்கள்.

>> மற்ற மனிதர்களோடு சகஜமாகப் பழகுவது எப்படி என்பதை சமூக ஆர்வலர்கள் சொல்லித் தருவார்கள்.

தகவல் - டாக்டர் விகடன்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வியப்பைத் தரும் விண்டோஸ் 8. மைக்ரோசொப்ட் தரும் ஆச்சரியமான தகவல்கள்.
» தெய்வங்கள் தந்த விடை!
» இந்திய அரசின் 50000 வீடுகள்: மக்களின் நம்பிக்கையை சிதறடித்த வீட்டுத் திட்டம்!!
» பொருளாதார ரீதியாக உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது என்று தொழிலதிபர் ரத்தன் டாடா
» பிரபாகரன் உயிரோடிருப்பதாக வீணான நம்பிக்கையை பரப்பி, நீங்கள் அரசியல் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் விமர்சனங்கள் குறித்து?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum