TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அறப்போர் ஆவணப்பட வெளியீடு

Go down

அறப்போர் ஆவணப்பட வெளியீடு Empty அறப்போர் ஆவணப்பட வெளியீடு

Post by logu Thu Aug 08, 2013 8:07 am

அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் தோழர் திருமுருகன் உரை :
அறப்போர் ஆவணப்பட வெளியீடு 1000323_700152320002230_566084956_n
அனைவருக்கும் வணக்கம்

தமிழ் சமூகத்திலே எப்போதுமே இருக்கின்ற ஒரு சிக்கல் - நாம் நாற்பது ஆண்டுகளுக்கு
முன்பாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
களவுகொள்ளப்பட்டு அது வேறொரு கையில் இந்திய அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு ஆட்சியை
கைப்பற்ற பயன்பட்டது என்பதை நாம் பல்வேறு ஆவணங்களின் ஊடாகத்தான் தெரிந்துகொள்ள
முடிந்தது.ஒரு போராட்டத்தை ஆவணமாக மாற்றும்பொழுது அதில் வரலாற்ற்ரை திரித்து
பொருள்பட கூடிய ஒன்றாக பிற்காலத்தில் மாற்றப்படாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்க்கு
இப்படியான ஆவணப் படங்கள் தேவை.எனவே இந்த ஆவணப் படத்தை மிக மிக முக்கிய
ஆவணப்படமாக நாங்கள் பார்க்கிறோம். இதுபோலவே செங்கொடிக்கும் ஒரு ஆவணப்படத்தை
செய்திருந்தார். இவை மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இன்றைய
ஊடகங்களில் நாம் பார்க்கிறோம். ஒரே சமயத்தில் ஒரே காலத்தில் ஒரு இடத்தில் நடந்த
நிகழ்ச்சியை பல்வேறு ஊடகங்கள் பல்வேறு கோணத்திலே செய்திகளை வெளியிடுகின்றன. இந்த
செய்திகள் வேறொரு செய்தியாக அடுத்த நாளே மாற்றப்படுவதை நாம் பார்க்கிறோம்.

மாணவர் போராட்டத்தை ஒரு முக்கிய வரலாற்று போராட்டமாக பார்க்க வேண்டிய காரணங்களை
இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2009 க்கு பிறகு தமிழீழ விடுதலை
போராட்டத்தை சிதைப்பதற்கு இரு வேறு ஆற்றல்கள் இரு வேறு யுக்திகளை பயன்படுத்தின.
ஒன்று இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக அதற்க்கான நிகழ்ச்சி நிரலை வைத்துக்கொண்டிருக்கும்
அரசாக, அது இந்தியாவிலும் சரி இந்தியாவிற்கு வெளியிலும் சரி, தமிழீழத்திலும் சரி தனது
எதிர்ப்பு ஆற்றலை நகர்த்திக்கொண்டிருந்தது

இரண்டாவதாக இந்த தமிழீழ விடுதலை போராட்டம் என்பது பிற நாடுகளுக்கும் ஒரு
முன்மாதிரியாக அமைந்துவிடக்கூடாது என்பது மட்டுமல்லாமல் முழு இலங்கையையும்
தன்னுடைய நலனுக்காக மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதற்காக அமெரிக்க அரசாங்கமும்
மேற்குலக நாடுகளும் இந்த போராட்டத்தை சிதைப்பதற்கான வேலைகளை மேற்கொண்டன.

இதில் மேற்க்குலகத்தால் முன்வைக்கப்படும் யுக்தி என்னவென்றால், அங்கே ஒரு நீதியை
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தருகின்றோம். நீங்கள் இலங்கையர்களாக - தமிழர்களாக அல்லாமல்
- சிங்களர்களாக அல்லாமல் - இருவரும் இணைந்து இறுதியில் சிங்களர்களாக மாறக்கூடிய
அந்த நோக்கத்தை மையப்படுத்திய ஒரு வாதத்தை முன்வைத்தார்கள். அது தான் நல்லிணக்க
ஆணையம் என்பது.

இந்திய அரசு தமிழர்களுக்கு உரிமை என்ற அடிப்படையில் ஒரு சிறுபான்மையினராக - ஒரு
தேசிய இனத்தை சிறுபான்மையினராக மாற்றக்கூடிய வேலையை - அவர்களுக்கென்று ஒரு சிறு
அதிகாரம் தன்னால் பெற்று தன்னால் கட்டுப்படுத்த கூடிய ஒரு யுக்த்தியை முன்வைத்தார்கள்.
அதுதான் இப்போது 13வது சட்ட திருத்தமாக பார்கிர்ன்றோம்

இந்த இருவரும் இரண்டு வேறு யுக்திகள் ஆனால் ஒரே நோக்கம். அது தமிழீழத்தை அழிப்பதாக
இருக்கின்றது. இதில் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டு - மேற்க்குலகத்தால்
முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்கம் என்பது ஐநாவினால் ராஜபக்சேவிடம் அளிக்கப்பட்டு அவர்
நல்லிணக்க ஆணையத்தை உருவாக்கி அதை தான் அமல் படுத்த சொன்னபோது ஒட்டுமொத்த
தமிழ் சமூகமும் அதை புறக்கணித்தது.மாறாக ராஜபக்சே முன்வைத்த அந்த நல்லிணக்கத்தை -
இலங்கை அரசாங்கம் நீதி வழங்கும் என்று சொன்ன அந்த வாக்குறுதியை - இலங்கை தந்தால்
தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி அமெரிக்காவும் மேற்குலகமும் ஐநாவின்
ஊடாக முன்னெடுத்து - ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள
முன்னெடுத்ததுதான் அந்த யுக்தியின் அடிப்படையாக இருக்கின்றது.

2000 த்தின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்திலே தமிழரையும் ஒரு தரப்பாக
அங்கீகரித்து அங்கே இருந்த தமிழீழ பகுதிகளை ஒரு நாடாக அங்கீகரிக்ககூடிய Defacto
State என்ற நிலையை சர்வதேசம் அங்கீகரித்தது. அந்த பேச்சு வார்த்தையில் இலங்கை
இருக்கின்றது. தமிழர்களுடைய பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். மேற்குலகம் இருக்கின்றது.
அந்த பேச்சுவார்த்தையை நடத்திய நார்வே இருக்கின்றது. ஆக இவர்கள் ஏற்படுத்திய அந்த
ஒப்பந்தத்தில் இருந்த இந்த நான்கு தரப்பும் நேரில் இருந்து ஒன்றுபட்ட இலங்கையை நாங்கள்
ஏற்றுக்கொள்கின்றோம் என்று சொன்னால் மட்டும்தான் ஏற்றுக்கொள்ளமுடியும். தமிழர் தரப்பு
இல்லாமல் போகும் பட்சத்திலே இந்த மூன்று பேரும் சேர்ந்து இதை முடிவுக்கு கொண்டுவந்துவிட
முடியாது. அந்த தமிழீழம் என்ற இறையாண்மையுள்ள பகுதியில் வாழ்ந்த தமிழர்கள்
இலங்கையின் அரசியல் சாசனம் , இலங்கையின் நீதி பரிபாரத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்
என்பதற்காக ஒரு யுக்த்தியை கொண்டுவந்தார்கள். அதுதான் நல்லிணக்க ஆணையம்

தமிழர்கள் - தமிழீழ பகுதியிலேயே குடிமக்களாக இருந்தவர்கள் இலங்கையின் அரசியல்
சாசனத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற அளவில் இலங்கையின் நீதி பரிபாரத்தை
ஏற்றுக்கொண்டு நீதியை பெற்றுக்கொள்ள்ளவேண்டும். அமெரிக்க தீர்மானத்தை அனைவரும்
அங்கீகரித்தால் அதன் ஊடாக தமிழர்கள் தங்கள் இறையாண்மையை விட்டுவிட்டு இலங்கையை
ஏற்றுகொள்வார்கள் என்ற யுக்தியை முன்வைத்தார்கள்.

இதை முன்வைத்து விவாதித்தபோது, அதன் உள்நுனுக்கங்களை ஆராய்ந்து, இவர்கள் தரும்
தீர்வை ஏற்றுக்கொள்வதா மறுப்பதா என்றில்லாமல் நமது கோரிக்கைகள் என்ன என்பதை
அனைத்து இயக்கங்களும் ஒன்றுகூடி முன்வைத்தோம். அது - இனபடுகொளைக்கான சர்வதேச
விசாரணை வேண்டும் - மிக முக்கியமாக தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு வேண்டும்.
இந்த இரண்டு கோரிக்கைகள் வளர்ந்துவரும் அந்த தருணத்தில்தான் சர்வதேச அரசும் இந்திய
அரசும் ஒரு யுக்தியை உருவாகியது.

தமிழர்களை இரண்டாக உடைக்கவேண்டும் என்று சொல்லி உருவாக்கியது. ஒன்று அவர்கள்
தீர்வை ஏற்கக்கூடிய டெசோ வாக உருவாகியது. டெசோ தமிழீழ கோரிக்கையை கைவிட்டு
வாழ்வுரிமை என்று பேசியது. வாழ்வுரிமை என்பதற்கும் நல்லிணக்கம் என்பதற்கும் ஒரே பொருள்
தான் இருக்கிறது. இதே வாழ்வுரிமை என்ற பெயரில் மாற்று ஏமாற்றிய ஒரு நிகழ்ச்சியும் 2011
இல் மாநாடாக நிகழ்ந்தது. அது இதன்னுடைய Parallel என்று சொல்லக் கூடிய அளவில்
தொடர்ந்து வந்தது. இரண்டும் பயணிக்க ஆரம்பித்து வாழ்வுரிமை என்பதிலிருந்து நல்லிணக்கம்
என்பதை நோக்கி நகர்த்தும் பணியை டெசோ மேற்கொண்டது. அதே ஒன்றை இங்குள்ள சில
கட்சிகளும் மேற்கொண்டன. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் தமிழ் சமூகத்தின் மாபெரும்
ஆற்றலாக மாறி நின்று ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் அமெரிக்காவின் தீர்மானத்தை தான்
ஏற்றுக்கொள்ளவேண்டும். அதை ஏற்றுக்கொண்டால் தமிழீழ மக்களுக்கு தீர்வு கிட்டும் என்று நம்பும்
சூழலை உருவாகினார்கள்

கிட்டத்தட்ட 35 வருடங்களாக எதிர்கொள்ளப்பட முடியாத ஒரு குறிக்கோளை ஒரு போராட்டத்தை
மிக நுணுக்கமாக தந்திரமாக சிதைத்த வேலையைத்தான் அமெரிக்க தீர்மானத்தின் மூலம்
முன்வைத்தார்கள். அமெரிக்க தீர்மானம் என்பது இலங்கை முன்வைக்கும் நல்லிணக்க
தீர்மானம். அதை அமெரிக்க சொல்கிறது நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று. அது தான் தீர்வு
என்று இவர்கள் சொல்கிறார்கள். இதை தீர்வாக முன்வைக்கும் யுக்தி நடந்தபோது அதை
முன்னுக்கு நகர்த்த வேண்டும் என்று சொல்லி டெசோ உள்ளிட்ட பல்வேறு ஆற்றல்கள்
முன்னெடுத்தபோது மிக சிக்கலான காலகட்டமாக இருந்தது

அப்படிப்பட்ட சமயத்தில்தான் மாணவர் போராட்டம் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிரான
நிலைப்பாட்டை எடுத்தது. இந்த ஒட்டுமொத்த சதியை உடைத்து போட்டது. ஆகவேதான்
மாணவர் போராட்டம் மிக மிக முக்கிய போராட்டம். மாணவர் போராட்டத்தின் பின் இருக்கும்
அரசியல் இதுதான்.அவர்கள் அப்படிப்பட்ட ஒரு பணியை செய்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு
தெரியாமல் இருக்கலாம்.

87 இலே இதே போன்றதொரு யுக்தியை இந்த சமரச அரசியலை இந்திய அரசாங்கம்
முன்வைத்தபோது தமிழீழ விடுதலை புலிகள் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து அந்த சதியை
முறித்தார்கள். ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்கள். நிலைப்பாடு எடுப்பதற்கு அமைப்பு தேவை,
மக்கள் தேவை போராட்டம் தேவை. அது 87 இல் நிகழ்ந்தது. 2012 இல் என்ன
செய்யப்போகிறோம் என்று கையை பிசைந்துகொண்டிருந்த போது தமிழக மாணவர்கள் தங்கள்
நிலைப்பாட்டை எடுத்தார்கள். போராட்டத்தை முன்னெடுத்தார்கள். சதியை முறியடித்தார்கள் .
அதுதான் மிக முக்கிய வரலாற்று நிகழ்வாக இருக்கின்றது. அதை அப்படித்தான் புரிந்துகொள்ள
வேண்டும்

உங்களுடைய போராட்டம் என்பது சர்வதேசம் நகர்த்திக்கொண்டிருந்த ஒன்றை உடைத்துப் போட்ட
ஒரு போராட்டம். ஆகவே நீங்கள் வரலாற்றில் இடம் பெற்றவர்களாக மாறி இருக்கின்றீர்கள்.
அதை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள்.அதனால் தான் ராபட் பிளேக் என்ற அந்த அதிகாரி பதில்
பேசிய ஒரே தருணம் இதுதான். ( ராபட் பிளேக் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததை
அடுத்து அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்தே இந்த தீர்மானத்தை தயாரித்ததை
ஒப்புக்கொண்டார்) 10 ஆண்டுகளில் அமெரிக்க தெற்காசியாவை பொருத்தவரை என்ன முடிவை
எடுக்க வேண்டும் என்பதை ராபட் பிளேக்கின் ஊடாகத்தான் செயல் திட்டத்தை வகுக்கிறார்கள்.
அப்படிப்பட்ட நபர் இப்படியான கருத்தை சொன்னாரென்றால் அது தமிழகத்தின் மாணவர்களால்
தான் சாத்தியமாகி இருக்கின்றது. இது தான் இந்த போராட்டத்தின் மிக முக்கிய பின்னணியாக
இருக்கின்றது. மிக எளிதாக ஒரு ராட்சத எந்திரத்தை புரட்டி போட்டிருக்கிறீர்கள்.

இப்போது அடுத்த கட்டம் நிகழ ஆரம்பிக்கிறது. மேற்குலகின் யுக்தி முடிந்து அடுத்த கட்டமாக
இந்தியாவின் யுக்தி ஆரம்பிக்கிறது. 13வது சட்ட திருத்தத்தின் ஊடாக தமிழர்களுக்கு சிறு
அளவில் அதிகாரத்தை கொடுத்துவிட்டு சிங்களத்தை கையாளவேண்டும் என்பதே அந்த அடுத்த
கட்டம். ஏனென்றால் மேற்குலகின் யுக்தி என்பது நேரடியாக ஒட்டுமொத்த இலங்கையையும்
தங்கள் கைக்குள் கொண்டுவரவேண்டும் என்பது. ஆனால் இந்தியாவை பொருத்தவரை
சிங்களனை கையாலவேண்டுமேன்றால் தமிழன் ஊடாக கையாளவேண்டும் என்று
முடிவெடுத்துள்ளது. தமிழனை பகடை காயாக தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலமாகத்தான்
சிங்களனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்ற சாணக்கியத்தனத்தை பார்பனிய தனத்தை
தங்களிடம் வைத்திருக்கிறார்கள்.ஆகவே தமிழர்களுக்கென்று குறைந்தபட்ச அதிகாரத்தை
கொடுப்பதாக சொல்லிவிட்டு தனது கைப்பாவையாக வைத்துகொண்டு அந்த பகடை காயை
உருட்டி விளையாடவேண்டும். அதற்க்கான வேலை இப்போது நடந்துகொண்டு இருக்கின்றன.
இந்த தருணத்தில்தான் உங்கள் அடுத்த கட்ட போராட்டத்தை நீங்கள் கட்டமைக்க வேண்டியுள்ளது.

உலகின் மாபெரும் ஒரு ஆற்றலை எட்டி உதைத்த நீங்கள் அதற்க்கினையான வல்லாதிக்க இந்திய
அரசாங்கத்தின் நகர்வை எட்டி உதைக்க வேண்டும். இந்த 13 வது சட்ட திருத்தம் என்பது
மட்டுமல்ல காமன் வெல்த் மட்டுமல்ல இந்தியாவின் தற்போதைய நோக்கம் என்னவென்றால்
இலங்கையில் தங்கள் பொருளாதார நலனை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது. தங்களுடைய
நிறுவனங்களுக்கு அங்கே வணிகங்கள் நடத்த வேண்டும். அதற்காக இலங்கையை தங்கள்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக தமிழர்களுக்கு ஏதோ செய்வது போன்ற பாவனையை
செய்து கொண்டு இருக்கின்றது.

இந்தியாவின் பொருளாதாரத்தை நாம் எதிர்கொள்ள ஆரம்பித்தால் இந்திய அரசாங்கம்
இலங்கையில் தமிழர்களுடைய போராட்டத்தில் கை வைப்பதை நிறுத்திகொள்ளும். உனக்கு
இந்தியா என்ற இடத்தில் தமிழகத்தின் மார்கெட் இழக்குமானால் இலங்கை என்ற கேள்வி
தேவையாக இருக்காது. இந்தியாவினுடைய பொருட்கள் இலங்கையில் வணிகமாவதற்கு
தமிழனுடைய போராட்டத்தை முரிப்பாயென்றால் தமிழகம் உன்னை புறக்கணிக்கும் என்பதை நாம்
முன்வைக்க வேண்டும். அதாவது நாம் இலங்கையை புறக்கணிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல
இந்தியாவையும் புறக்கணிக்க வேண்டும். இந்தியாவை புறக்கணிப்பது என்பது இந்தியாவின்
பொருளாதார த்திலிருந்தும் பண்பாட்டிலிருந்தும் நாம் ஆரம்பிக்க வேண்டும்.அத்தகைய
போராட்டங்கள் தான் இந்தியாவை மண்டியிட வைக்கும். நம்புங்கள் தோழர்களே ,
பார்ப்பனியத்தை அவன் காலை நீங்கள் பிடித்தால் அவன் உன் கழுத்தை பிடிப்பான். அவன்
கழுத்தை பிடித்தால் அவன் உன் காலை பிடிப்பான்

நமது போராட்டம் என்பது இப்போது இந்தியாவை எதிர்த்து ஆரம்பிக்க வேண்டும். அந்த
போராட்டம் தீர்க்கமாக அவர்களுக்கு வலி ஏற்படுத்தக்கூடிய போராட்டமாக கூர்மை படுத்த
வேண்டியுள்ளது. இரண்டாவது கட்ட போராட்டத்திற்கு உங்களை கூர்மை படுத்திக்கொள்ள
வேண்டும். இந்த காலகட்டத்திலே தமிழீழத்திலே வாழ்வதர்க்கில்லை என்று சொல்லி உங்களை
ஏமாற்றுவார்கள் ஏற்றுகொள்ளாதீர்கள். அமெரிக்காவும் மேற்குலகமும் பெற்றுத்தரும் என்று
சொல்லி ஏமாற்றுவார்கள் ஏற்றுகொள்ளாதீர்கள். இலங்கையில் இருக்கக் கூடிய சிங்கள மக்களும்
தமிழீழ மக்களும் இணைந்து போராட்டத்தை நடத்துவதாக சொல்வார்கள். அதை விவாதத்திற்கு
உட்படுத்துங்கள். ஏனென்றால் சிங்கள ஜனநாயக சக்த்திகள் தமிழீழ சக்த்திகளோடு இணைந்து
நின்று தான் செயலாற்றிக்கொண்டிருக்கிரார்கலாம். தோழர்களே புரிந்துகொள்ளுங்கள். டப்ளின்
தீர்ப்பாயம் என்பது சிங்கள ஜனநாயக சக்திகளும் இணைந்து நடத்திய முக்கிய நகர்வு. இப்போது
இரண்டாவது டப்ளின் தீர்பாயமும் நடக்க இருக்கிறது. மறுபடியும் பூஜ்ஜியத்திலிருந்து
ஆரம்பியுங்கள் என்று பேசக் கூடிய புரட்சிகரவாதிகள் இருப்பார்கள். அவர்களிடம் ஆதாரத்தை
முன்வைத்துவிட்டு விடுதலை என்ற ஒன்றில் சமரசம் செய்துகொள்ளாமல் அதற்க்கான
போராட்டத்தை நீங்கள் முன்னெடுக்க வேண்டும்

மூன்று ஆற்றல்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். இலங்கை என்ற சிங்கள பேரினவாதம் -
இந்தியா என்கின்ற பார்ப்பனியத்தால் கட்டமைக்கப்பட்ட வல்லாதிக்க நாடு - மூன்றாவது
மேற்குலகம். இந்த மூன்றையும் வெள்ளக்கொடிய போராட்டத்தை எதிர்கொள்ள கூடிய முதற்கட்ட
பணியை நீங்கள் செய்து முடித்திருக்கிறீர்கள். சிறப்பாக செய்துகொண்டிருக்கிறீர்கள். இதில்
பலியானது திமுக - காங்கிரஸ் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒட்டு பொருக்கி
அரசியலையும் நீங்கள் கைகொள்ள வேண்டும். வாழ்த்துக்கள்

இப்படிப்பட்ட சிறப்பு மிக்க ஆவணப்படத்தை எடுத்து எங்களுக்கெல்லாம் கொடுத்த தோழர்
வெற்றிவேலுக்கு நன்றி
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» செங்கொடி ஆவணப்பட வெளியீடு!
» சென்னையில் மருத்துவகல்லூரி மாணவர்கள் மாபெரும் உண்ணாவிரத அறப்போர்!!!! - வைகோ ஆதரவு..
» மே 11 அன்று ஈரோட்டில் 'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது' ஆவணப்பட தமிழாக்கத்தின் முதல் வெளியீடு
» This Land Belongs to the Army-ஈரோட்டில் 'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது' ஆவணப்பட தமிழாக்கத்தின் முதல் வெளியீடு photos
» அறப்போர் - டிவிடி விற்பனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum